ஒரு முறை
வீட்டில் அமர்ந்து
தோழிகளோடு
பேசிக் கொண்டிருந்தாள்
ஆக்னஸ்
அதில் ஒரு தோழி
அங்கில்லாத ஒருத்தியைப் பற்றி
அவதூறை
அவிழ்த்து விட்டுக் கொண்டிருந்தாள்.
தாய் சென்று
அறையில் எரிந்துகொண்டிருந்த
விளக்கை அணைத்தாள்.
ஆக்னஸ் வியந்தாள்.
எரியும் விளக்கை
ஏனம்மா அணைக்கிறீர்கள் ?
மின்சாரத்தை
மிச்சப்படுத்தவா ?
ல்லை
எங்களைக் கொச்சைப்படுத்தவா ?
புறணி பேசும் இடத்தில்
வெளிச்சம் எதற்கு ?
குருட்டுச் செயல்களுக்கு
இருட்டே வெளிச்சம்
தாய் பதிலுரைத்தாள்.
ஆக்னஸின் பஞ்சு நெஞ்சம்
பற்றிக் கொண்டது.
இன்னொரு செய்தியைக்
கற்றுக் கொண்டது.
< தொடரும்…>








