.
கர்ப்பக் கிரகத்துக்குள்
சுற்றி வருகின்றன
சாதி வேறுபாடற்ற
சிலந்திகள்.
பூட்டிய கோயிலுக்குள்ளும்
புகுந்து விடுகின்றன
தயக்கமற்ற
தானிய எறும்புகள்.
குருக்களின்
குருதியையும் குடிக்கின்றன
தீண்டாமை துகிலுரித்த
கொசுக்கள்
ஐயப்பன் சந்நிதிக்கு
மேலேயும்
பதட்டமின்றி பறக்கின்றன
சில
பெண் புறாக்கள்.
.









உதயச்செல்வி சொன்னது,
ஆகஸ்ட் 19, 2006 இல் 6:32 பிற்பகல்
அட்டகாசம் நண்பரே!
சும்மா நச்சுன்னு இருக்கு!
CAPitalZ சொன்னது,
ஆகஸ்ட் 20, 2006 இல் 12:37 மு.பகல்
சாதியை வளர்ப்பதே அரசாங்கம் தானே.
பிறகு மக்களை குறை கூறி என்ன பயன்.
கலை அரசன் சொன்னது,
ஆகஸ்ட் 20, 2006 இல் 3:07 மு.பகல்
சூப்பரா இருக்கு.
இன்பா சொன்னது,
ஆகஸ்ட் 20, 2006 இல் 11:43 மு.பகல்
அருமையான கவிதை …
anand சொன்னது,
ஆகஸ்ட் 20, 2006 இல் 6:02 பிற்பகல்
Excellent stuff….eppadi ippadi?