.
காக்கைச் சிறகினிலே நந்தலாலா
என
நெக்குருகிப் பாடுகிறாய்
கருப்பென்று என்னை
நிராகரித்துப் போன
அதே நாவுடன்.
ஃ

எல்லோரும்
காதலை வெளிக்காட்டி இருந்தால்
உனக்கான
பட்டியல்
எத்தனை பெரிதாயிருக்கும் ?
ஃ

இப்போதெல்லாம்
கொலை செய்துவிட்டுக் கூட
சாரி சொல்லிக்
கடந்து போகலாம்.
அவளைப் போல.
ஃ

உன்னுடைய
சிரிப்புகளையெல்லாம் சேமித்து
அழியாத குடுவையில்
அடைத்து
ஆழமாய் புதைக்க வேண்டும்.
எதிர்கால சந்ததிக்கும்
ஏதேனும்
புதையல் வேண்டுமல்லவா.
ஃ

இறுக்கிப் பிடித்த
ஜீன்ஸும்,
இளமை பிரச்சாரமான
டி-சர்ட்ம் அணிந்து
கலவர வேர்களை
எனக்குள் படரவிட்டுக்
கடந்து போன அவள்
புள்ளியாய் மறைந்தபின்
போலியாய் சொன்னேன்
இந்தக் காலத்து பிள்ளைங்க…









karthick சொன்னது,
ஆகஸ்ட் 23, 2006 இல் 5:18 பிற்பகல்
chanceless ..wishes for u..
Azad சொன்னது,
ஆகஸ்ட் 23, 2006 இல் 6:36 பிற்பகல்
புதிய வீச்சு சேவியர்ஜி.
அன்புடன்
ஆசாத்
Bala சொன்னது,
ஆகஸ்ட் 23, 2006 இல் 7:40 பிற்பகல்
Xavier means “Ethartham”….All your kavithais remember the incidents in my life especially “Irukki piditha Jeans ….”
Muthu சொன்னது,
ஆகஸ்ட் 23, 2006 இல் 7:42 பிற்பகல்
Nice one Xavier.
Janaki சொன்னது,
ஆகஸ்ட் 23, 2006 இல் 7:48 பிற்பகல்
Kalakaringa Xavier, romba romba iyalbana kavithai, illa nijamana varthai!! “எல்லோரும்
காதலை வெளிக்காட்டி இருந்தால்
உனக்கான
பட்டியல்
எத்தனை பெரிதாயிருக்கும் ?
” kadhaloda azham evalavu perusunnu ellaroda karpanaike vitrukinga!!
Fantastic!
Arun சொன்னது,
ஆகஸ்ட் 23, 2006 இல் 8:07 பிற்பகல்
Lovely… Lively…
As others told… Yet another yethathamana… beauty from Xavier
Again a special hats off to the picture selection… “ethir kala sandhathikku puthayal serkkum” picture mattum… It could have been a one with some more smile…
கலை அரசன் மார்த்தாண்டம் சொன்னது,
ஆகஸ்ட் 23, 2006 இல் 9:31 பிற்பகல்
ஐந்துமே அருமை!
Prakash சொன்னது,
ஆகஸ்ட் 24, 2006 இல் 2:05 மு.பகல்
இப்போதெல்லாம்
கொலை செய்துவிட்டுக் கூட
சாரி சொல்லிக்
கடந்து போகலாம்.
அவளைப் போல.
arumai Xavier…
Prakash சொன்னது,
ஆகஸ்ட் 24, 2006 இல் 2:08 மு.பகல்
இப்போதெல்லாம்
கொலை செய்துவிட்டுக் கூட
சாரி சொல்லிக்
கடந்து போகலாம்.
அவளைப் போல.
arumai Xavier..
karthiga சொன்னது,
ஆகஸ்ட் 29, 2006 இல் 2:10 மு.பகல்
IPPOTHU KATHAL SEITHU VIDU ETHO ACCIENT. APPADI NINNACHCHKO
ENRU KODA KATRIL ORU VARTHATHAIYAI VILUNTHA NINNAIVU VARUKINRA
THU.
சென்ஷி சொன்னது,
ஜனவரி 31, 2007 இல் 6:18 பிற்பகல்
அசத்திட்டீங்க சார். இப்பவே உங்களை நேர்ல பாக்கணும் போல இருக்கு. பிரமாதம்..அனைத்துக் கவிதைகளும்… டைம் இல்லாததால google reader ல போட்டு வச்சு படிச்சுட்டு இருக்கேன். முழுசா படிச்சதும்தான் பதில் போடணும்னு நினைச்சேன். இப்படி நடுநடுவுல பதில் எழுத வச்சிடுறீங்க
//இப்போதெல்லாம்
கொலை செய்துவிட்டுக் கூட
சாரி சொல்லிக்
கடந்து போகலாம்.
அவளைப் போல.//
இது உண்மையில் மனசை பாதித்து விட்டது.
சென்ஷி