.
திருப்தியின்
படிக்கட்டு மட்டும்
தீர்ந்தபாடில்லை.
முதல் வேலைக்காய்
நான்
சூரிய உலையில் பழுத்த,
என் முகத்தைத்
அழுந்தத் துடைத்து
நடந்தபோது,
நிரந்தரமாய் ஒரு வேலை
தான்
நினைவுக்குள் சுழன்றது.
பட்டங்களைப் பார்த்து
பெருமூச்சு விடும்
மளிகைக் கடைக்
காகிதமாய்
கசங்கிக் கிடந்தது மனசு.
சில அங்குசங்கள்,
கனத்த சங்கிலிகள்,
மறைத்து வைத்த
சருகுப் பள்ளங்கள் என
போராடித் தான்
பிடிக்க வேண்டியிருந்தது
அந்த யானையை.
பிடித்த யானை
சில வருடங்களில்
சுண்டெலியாய்
சிறுத்துப் போனதற்கு
சத்தியமாய்
யானை காரணியில்லை.
முதல் அலையில் கால் நனைத்து
அடுத்த அலையில்
முட்டி துடைத்து,
மூன்றாம் அலை நோக்கி
நீச்சலடிக்கும்
மீனவச் சிறுவனாய்
என் கடல் பயணங்கள் நடந்தன.
ஒவ்வோர்
அலையைப் பிடித்தபின்னும்
கண்டேன்
பின்னாலே துரத்தி வரும்
பெரிய அலையை !
அலைகளின் முதுகு தாவி
முதுகு தாவி
முன்னேறியதில்,
அலைகளற்ற
ஆழ்பகுதியில் நிற்கிறேன்
இப்போது.
தாமதமாய் வருகிறது
ஞானம்.
அலைகளைப் பிடிக்க
மட்டுமே
ஆர்வம் காட்டாமல்,
நீச்சலும் கொஞ்சம்
பழகியிருந்திருக்க வேண்டும்.









Arun சொன்னது,
ஆகஸ்ட் 30, 2006 இல் 8:49 பிற்பகல்
பட்டங்களைப் பார்த்து
பெருமூச்சு விடும்
மளிகைக் கடைக்
காகிதமாய்
கசங்கிக் கிடந்தது மனசு.
Wonderful comparison… It took me back to my college days… Particularly the first few campus interview days…
அலைகளைப் பிடிக்க
மட்டுமே
ஆர்வம் காட்டாமல்,
நீச்சலும் கொஞ்சம்
பழகியிருந்திருக்க வேண்டும்.
You have sent a BIG messaghe in this single line…
But I do not understand the Title… and How it suits this kavithai… I know, there will be a strong link, which I am not capable of thinking abt… Please share when you find time…
Yet another feather in your cap…