
மாதவியை சந்தித்துத்
திரும்பு.
வீட்டுக் கண்ணகி
வாசல் தாண்டினால்
வெட்டு.
பாஞ்சாலியைப்
பாராட்டு
மனைவியை சந்தேகப்படு.
திருக் கல்யாணம்
போய் வா.
மகளின்
காதல் விருப்பத்தை நிராகரி.
சிவனில் பாதி
பெண் என்று பூஜி.
சாதம் தாமதமானால்
தலை கீழாய் குதி.
எதிர்த்துப் பேசாத
எல்லாவற்றுக்கும்
பெண்ணின் பெயரை வை.
பதில் பேசினால்
பெண்ணா நீ என
உரக்கச் சொல்.
கலியுகக்
கோவலர்களைச் சந்தித்து
இன்னும் சில
அறிவுரைகளை வாங்கு.
சமத்துவம் பேசும் பெண்களை
பின்
எப்படித் தான் சமாளிப்பதாம்









karthick சொன்னது,
ஆகஸ்ட் 31, 2006 இல் 4:29 பிற்பகல்
nalla iruku sir
//
பாஞ்சாலியைப்
பாராட்டு
மனைவியை சந்தேகப்படு.//
idhil yarai solreenga??