சிறு கவிதைகள் சில

q.jpg

குழந்தை
சரியாக உண்ணவில்லையென
மருத்துவரிடம்
டானிக் வாங்குபவர்களின்
காதில் விழுவதில்லை
ஒட்டிய வயிறுடன்
வீறிடும் குழந்தைகளின் குரல்
q.jpg

கைக் குழந்தையைத்
தூக்கிக் கொண்டு
கண்ணீரும் கம்பலையுமாய்
‘தாய்வீடு’ ஓடும்  தாய்
உணர வைக்கிறாள்
ஆணாதிக்கத்தின் உச்சத்தை

 q.jpg

பேருந்தில் ஏறி
சில்லறையில்லாமல் இறங்கும்
முதியவரை
இருப்பது போதாதென்று
நிராகரித்து நகரும்
நகரத்து ஆட்டோ க்கள்

 q.jpg

என்
கார் கண்ணாடியில்
எழுதிச்  செல்லும்
விரல்களை
எரிச்சலில் திட்டிக் கொண்டிருந்தேன்

என் மகளின்
மழலை விரல்கள்
கிறுக்கத்  துவங்கும் வரை

 q.jpg

எப்போதேனும் சண்டை
போடும்
நகரத்துத் தம்பதியருக்கு
விவாகரத்து
விருப்பமாயிருக்கிறது.

எப்போதுமே சண்டை
போடும்
கிராமத்துக் குடும்பத்துக்கு
சேர்ந்து வாழ்தலே
சந்தோசமாய் இருக்கிறது

-

5 மறுமொழிகள்

  1. பிரியா சொன்னது,

    மார்ச் 1, 2007 இல் 10:48 மு.பகல்

    ஒவ்வொரு
    ச்று கவிதையும்
    ஒரு பெரிய
    கருத்தை
    சொன்னது . .. .

    நல்ல
    கவிதைகள் . . .

    வாழ்த்துக்கள் .. .
    :)

  2. சேவியர் சொன்னது,

    மார்ச் 1, 2007 இல் 1:37 பிற்பகல்

    /\
    நன்றி பிரியா

  3. santhosh சொன்னது,

    ஜனவரி 11, 2009 இல் 8:28 மு.பகல்

    ithu oru kavidhai mattum alla vaazhkaiyil sirappaga seyal paduthdhum oru nerimuraiyaaga irukkirathu indha siru kavidhai. very nice

  4. SANTHOSH (pennagaram) சொன்னது,

    ஜனவரி 11, 2009 இல் 8:34 மு.பகல்

    nagara vaazhkaiyil sandai vandhal pirindhu viduvaargal,
    kiramathdhail sandai vandhal meendum onru seruvaargal ennum karuthdhu inraiya kaala kattathdhil irukkumaanaal athu aachsariyam than Sir.

  5. சேவியர் சொன்னது,

    ஜனவரி 12, 2009 இல் 7:28 பிற்பகல்

    //மிக்க நன்றி சந்தோஷ்//


மறுமொழியொன்றை வழங்குக