மரியாதை

write.jpg
எழுதப்படுவது
உயிலெனில் கிடைக்கும்
உச்ச மரியாதை.

நீதிபதியின்
தீர்ப்பெனினும்
கிடைக்கக் கூடும்
உயர் மரியாதை.

கடன் தள்ளுபடியோ
வட்டி தள்ளுபடியோ
எதுவெனினும்
சிறப்பான மரியாதை
உண்டு.

காதலி எழுதிக் கசக்கிய
எதுவும் பெறும்
தனி மரியாதை.

இதெதுவும் வாய்க்காமல்
கவிதை எழுதுகிறாய் எனில்
நான் ஒன்றும்
சொல்வதற்கில்லை…

1 மறுமொழி

  1. nalayiny சொன்னது,

    மார்ச் 12, 2007 இல் 5:21 பிற்பகல்

    உண்மைதான். நிறைய சிரித்தேன்.


மறுமொழியொன்றை வழங்குக