சிறு கவிதைகள்

kid2.jpg
உசிலம்பட்டியின்
குடிசைக்குள்
வீறிட்டழும் பெண்குழந்தையின்
அழுகுரல் அடக்க,

அவசரப்பட்டு
ஒடித்து வந்த கள்ளிச்செடியின்
தடித்த உடலில்
கசிந்து கொண்டிருந்தது
பால் மணம் வீசும்
ஓர்
காதல் ஜோடியின் பெயர்.

 beach.jpg

கடற்கரை மணலில்
மெய்யுரசி
உள்ளங்கையில்
உலகப்படம் வரையும்
காதலர்கள்
வறுத்தெடுக்கும் மதிய வேளையில்
கேட்கிறார்கள்
இன்று ஏன் வெயிலே இல்லை ?

 sad.jpg

ஒற்றைப் பறவையின்
சோகப் பாடல்,
நிசப்தம் துளைக்கும்
ஒற்றை நாயின்
ஏகாந்தக் குரைப்பு
கண் சிமிட்டிக் கதை பேசும்
நட்சத்திரங்கள்
என
நான் கவிதைகளில் சொன்ன
எதுவும் நிகழவில்லை

நீ
உண்மையிலேயே விலகிய
அந்த நாள் இரவில்

2 மறுமொழிகள்

  1. Prasanna R சொன்னது,

    செப்டம்பர் 12, 2007 இல் 12:00 பிற்பகல்

    1st and 3rd good, edarthathai pakkuvamagae kattuvadhil neer sura puli thalaivaa, vaazzthukkal.

  2. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 13, 2007 இல் 10:53 பிற்பகல்

    நன்றி நண்பா…


மறுமொழியொன்றை வழங்குக