தாள லயத்துடன்
கிணற்றில்
தண்ணீர் இறைத்த காலத்திலும்,
காற்றின் முதுகெலும்பாய்
கழுத்தை நீட்டும்
சாய்ந்த தென்னையில்
ஏறி
குளத்தில் குதித்து
நீச்சலடித்த காலத்திலும்,
உச்சிக் கொம்பு மாங்காயை
எச்சில் ஒழுக குறிபார்த்து
கல்வீசிக்
கைப்பற்றிய காலங்களிலும்
வரப்புக்கும்
நிலப் பரப்புக்கும்
ஓடி ஓடி
பொழுது போக்கிய பொழுதுகளிலும்
தெரிந்திருக்கவில்லை,
இப்போது
தொப்பையைக் குறைக்க
மூடிய அறையில்
மூன்று மணி நேரம்
மூச்சு முட்ட
இயந்திரத்தில் ஓடும்போது தான்
தெரிகிறது
அன்று
வாழ்க்கையே உடற்பயிற்சி
இன்று
வாழ்க்கையில் உடற்பயிற்சி.
அந்த நாள் ஞாபகம்…
டிசம்பர் 27, 2007 இல் 9:15 பிற்பகல் (சிறகுகள்)










John P. Benedict சொன்னது,
டிசம்பர் 27, 2007 இல் 9:31 பிற்பகல்
அழகான, அருமையான, உண்மைக் கவிதைக்கு நன்றியும், பாராட்டுகளும்.
சேவியர் சொன்னது,
டிசம்பர் 31, 2007 இல் 9:46 மு.பகல்
நன்றி ஜாண்.
Gomathi சொன்னது,
ஜனவரி 7, 2008 இல் 6:45 பிற்பகல்
Very meaningful poem…
Especially…
“அன்று
வாழ்க்கையே உடற்பயிற்சி
இன்று
வாழ்க்கையில் உடற்பயிற்சி.” is simply Superbbb…
சேவியர் சொன்னது,
ஜனவரி 7, 2008 இல் 7:16 பிற்பகல்
நன்றி தோழி.