முத்தக் கவிதைகள்

kiss2.jpg

உன் காதுகளோடு
என் உதடுகள் முத்தமிடுவதை
ரகசியம் என்று
ரசித்துக் கொள்கிறாய்.
உன் உதடுகளோடு என் உதடுகள்
ரகசியம் பேசும் போது
ஏன்
முத்தம் என்று கத்துகிறாய் ? 

kiss2.jpg

எதையும்
தடுமாறாமல்
தாங்கிக் கொள்ள முடியும்
உன்
மெல்லிய முத்தத்தைத் தவிர.

kiss2.jpg

உயிரும் உயிரும்
மேலேறி
கூடு விட்டுக் கூடுபாயும்
மந்திரம் கற்குமிடம்
நம்
உதடுகள் சந்திக்குமிடமா ?

kiss2.jpg

நீ
மழலைத் தெருவில்
முத்தம் விதைத்து நடக்கிறாய்
என்னைக் கண்டதும்
கருமியாகிறாய்.

kiss2.jpg

வல்லினம் மட்டுமே
யுத்தத்துக்குப் பயன்படுமென்று
உன்
முத்தத்துக்கு முன்பு வரை
ஒத்துக் கொண்டிருந்தேன்
நான்.

kiss2.jpg

ஒத்தடம்
காயம் தருமென்பதை
உன்
உதடுகள் தானடி
உறுதிப் படுத்தின
 kiss2.jpg

முத்தம் என்பது
உதடுகளின் ஒப்பந்தம்
என்று தான் நினைத்திருந்தேன்.
உயிரின்
தீப்பந்தம் என்பது
இப்போது தானடி புரிகிறது.

kiss2.jpg

உன் உதட்டுக் கோப்பையிலிருந்து
என்
பருகுதலை
பின்வாங்க மறுக்கிறேன்.

என்
தன்னம்பிக்கை முனையில்
தற்கொலை செய்கின்றன
தயக்கங்கள்

kiss2.jpg

முத்தப் போருக்கு
நீ
தயாரா ?
எனக்கு
புறமுதுகு பழக்கமில்லை.

kiss2.jpg

உன்
முதல் முத்தத்தின்
சுருங்கிய வடிவம் தான்
சுவர்க்கமா

kiss2.jpg
நீ
என் உதடுகளில்
போர்த்திச் சென்ற முத்த ஆடை
என்
உள்ளத்துக் குளிரை
அள்ளிக் குடித்து,
வெப்பம் ஊற்றிப் போகிறது.

கண்களில் மட்டும்,
இன்னும் விலகவில்லை
துருவத்துக் குளிரின்
பருவத் துள்ளல்.

kiss2.jpg

உனக்கான முத்தங்களை
என்
படுக்கைத் தலையணையில்
தவறாமல் இட்டு வைக்கிறேன்.
என்றேனும்
மறக்காமல் வந்து
பெற்றுப் போ,
தலையணையை.
kiss2.jpg

உன்னை மனதில் நினைத்து
எதிர் வீட்டுக் குழந்தைக்கு
அழுத்தமாய்
தருகிறேன் முத்தம்.
நீ
ஏதேனும்
குழந்தையை நினைத்தாவது
எனக்கொன்று
கொடுத்து விட்டுப் போயேன்.

8 மறுமொழிகள்

  1. Michael Joseph சொன்னது,

    பெப்ரவரி 20, 2008 இல் 6:22 பிற்பகல்

    Hello Kavignare

    Naan Arasanaga Irundal
    Pidiyum 1000 Pon Kasu

    நீ
    மழலைத் தெருவில்
    முத்தம் விதைத்து நடக்கிறாய்
    என்னைக் கண்டதும்
    கருமியாகிறாய்.

    முத்தப் போருக்கு
    நீ
    தயாரா ?
    எனக்கு
    புறமுதுகு பழக்கமில்லை.

    ada ada ada

  2. ganesh சொன்னது,

    பெப்ரவரி 20, 2008 இல் 8:40 பிற்பகல்

    //ஒத்தடம்
    காயம் தருமென்பதை
    உன்
    உதடுகள் தானடி
    உறுதிப் படுத்தின
    //

    அழகான வரிகள்

    முதல் கவிதையும் அற்புதம்..

  3. சேவியர் சொன்னது,

    பெப்ரவரி 21, 2008 இல் 9:56 நான்

    //Naan Arasanaga Irundal
    Pidiyum 1000 Pon Kasu//

    பொற்காசுகளைப் பெற்றுக் கொண்டேன் பெருந்தகையே :)

  4. சேவியர் சொன்னது,

    பெப்ரவரி 21, 2008 இல் 9:56 நான்

    //அழகான வரிகள்

    முதல் கவிதையும் அற்புதம்
    //

    நன்றி கணேஷ்.

  5. Lakshmanan சொன்னது,

    பெப்ரவரி 21, 2008 இல் 3:00 பிற்பகல்

    //முத்தப் போருக்கு
    நீ
    தயாரா ?
    எனக்கு
    புறமுதுகு பழக்கமில்லை.//

    மிகவும் ரசித்தேன்!

    வாழ்த்துக்கள் !

  6. சேவியர் சொன்னது,

    பெப்ரவரி 22, 2008 இல் 11:49 நான்

    நன்றி லக்ஸ்.

  7. nithy சொன்னது,

    மே 2, 2008 இல் 1:54 பிற்பகல்

    nandragathan erukkiradhu ungal karpanai
    romba over

  8. சேவியர் சொன்னது,

    மே 12, 2008 இல் 10:08 நான்

    நன்றி :)

மறுமொழியொன்றை வழங்குக