முத்தக் கவிதைகள்

kiss2.jpg

உன் காதுகளோடு
என் உதடுகள் முத்தமிடுவதை
ரகசியம் என்று
ரசித்துக் கொள்கிறாய்.
உன் உதடுகளோடு என் உதடுகள்
ரகசியம் பேசும் போது
ஏன்
முத்தம் என்று கத்துகிறாய் ? 

kiss2.jpg

எதையும்
தடுமாறாமல்
தாங்கிக் கொள்ள முடியும்
உன்
மெல்லிய முத்தத்தைத் தவிர.

kiss2.jpg

உயிரும் உயிரும்
மேலேறி
கூடு விட்டுக் கூடுபாயும்
மந்திரம் கற்குமிடம்
நம்
உதடுகள் சந்திக்குமிடமா ?

kiss2.jpg

நீ
மழலைத் தெருவில்
முத்தம் விதைத்து நடக்கிறாய்
என்னைக் கண்டதும்
கருமியாகிறாய்.

kiss2.jpg

வல்லினம் மட்டுமே
யுத்தத்துக்குப் பயன்படுமென்று
உன்
முத்தத்துக்கு முன்பு வரை
ஒத்துக் கொண்டிருந்தேன்
நான்.

kiss2.jpg

ஒத்தடம்
காயம் தருமென்பதை
உன்
உதடுகள் தானடி
உறுதிப் படுத்தின
 kiss2.jpg

முத்தம் என்பது
உதடுகளின் ஒப்பந்தம்
என்று தான் நினைத்திருந்தேன்.
உயிரின்
தீப்பந்தம் என்பது
இப்போது தானடி புரிகிறது.

kiss2.jpg

உன் உதட்டுக் கோப்பையிலிருந்து
என்
பருகுதலை
பின்வாங்க மறுக்கிறேன்.

என்
தன்னம்பிக்கை முனையில்
தற்கொலை செய்கின்றன
தயக்கங்கள்

kiss2.jpg

முத்தப் போருக்கு
நீ
தயாரா ?
எனக்கு
புறமுதுகு பழக்கமில்லை.

kiss2.jpg

உன்
முதல் முத்தத்தின்
சுருங்கிய வடிவம் தான்
சுவர்க்கமா

kiss2.jpg
நீ
என் உதடுகளில்
போர்த்திச் சென்ற முத்த ஆடை
என்
உள்ளத்துக் குளிரை
அள்ளிக் குடித்து,
வெப்பம் ஊற்றிப் போகிறது.

கண்களில் மட்டும்,
இன்னும் விலகவில்லை
துருவத்துக் குளிரின்
பருவத் துள்ளல்.

kiss2.jpg

உனக்கான முத்தங்களை
என்
படுக்கைத் தலையணையில்
தவறாமல் இட்டு வைக்கிறேன்.
என்றேனும்
மறக்காமல் வந்து
பெற்றுப் போ,
தலையணையை.
kiss2.jpg

உன்னை மனதில் நினைத்து
எதிர் வீட்டுக் குழந்தைக்கு
அழுத்தமாய்
தருகிறேன் முத்தம்.
நீ
ஏதேனும்
குழந்தையை நினைத்தாவது
எனக்கொன்று
கொடுத்து விட்டுப் போயேன்.

78 மறுமொழிகள்

  1. Michael Joseph சொன்னது,

    பெப்ரவரி 20, 2008 இல் 6:22 பிற்பகல்

    Hello Kavignare

    Naan Arasanaga Irundal
    Pidiyum 1000 Pon Kasu

    நீ
    மழலைத் தெருவில்
    முத்தம் விதைத்து நடக்கிறாய்
    என்னைக் கண்டதும்
    கருமியாகிறாய்.

    முத்தப் போருக்கு
    நீ
    தயாரா ?
    எனக்கு
    புறமுதுகு பழக்கமில்லை.

    ada ada ada

  2. ganesh சொன்னது,

    பெப்ரவரி 20, 2008 இல் 8:40 பிற்பகல்

    //ஒத்தடம்
    காயம் தருமென்பதை
    உன்
    உதடுகள் தானடி
    உறுதிப் படுத்தின
    //

    அழகான வரிகள்

    முதல் கவிதையும் அற்புதம்..

  3. சேவியர் சொன்னது,

    பெப்ரவரி 21, 2008 இல் 9:56 மு.பகல்

    //Naan Arasanaga Irundal
    Pidiyum 1000 Pon Kasu//

    பொற்காசுகளைப் பெற்றுக் கொண்டேன் பெருந்தகையே :)

  4. சேவியர் சொன்னது,

    பெப்ரவரி 21, 2008 இல் 9:56 மு.பகல்

    //அழகான வரிகள்

    முதல் கவிதையும் அற்புதம்
    //

    நன்றி கணேஷ்.

  5. Lakshmanan சொன்னது,

    பெப்ரவரி 21, 2008 இல் 3:00 பிற்பகல்

    //முத்தப் போருக்கு
    நீ
    தயாரா ?
    எனக்கு
    புறமுதுகு பழக்கமில்லை.//

    மிகவும் ரசித்தேன்!

    வாழ்த்துக்கள் !

  6. சேவியர் சொன்னது,

    பெப்ரவரி 22, 2008 இல் 11:49 மு.பகல்

    நன்றி லக்ஸ்.

  7. nithy சொன்னது,

    மே 2, 2008 இல் 1:54 பிற்பகல்

    nandragathan erukkiradhu ungal karpanai
    romba over

  8. சேவியர் சொன்னது,

    மே 12, 2008 இல் 10:08 மு.பகல்

    நன்றி :)

  9. samy சொன்னது,

    மே 20, 2008 இல் 2:05 பிற்பகல்

    good

  10. சேவியர் சொன்னது,

    மே 20, 2008 இல் 5:39 பிற்பகல்

    நன்றி சாமி

  11. Danasegarane சொன்னது,

    மே 20, 2008 இல் 7:49 பிற்பகல்

    உன் காதுகளோடு
    என் உதடுகள் முத்தமிடுவதை
    ரகசியம் என்று
    ரசித்துக் கொள்கிறாய்.
    உன் உதடுகளோடு என் உதடுகள்
    ரகசியம் பேசும் போது
    ஏன்
    முத்தம் என்று கத்துகிறாய் ?

    ந‌ல்லா இருக்கு

  12. சேவியர் சொன்னது,

    மே 21, 2008 இல் 2:23 பிற்பகல்

    நன்றி தனசேகர்

  13. barathi சொன்னது,

    மே 21, 2008 இல் 3:51 பிற்பகல்

    உன்னை மனதில் நினைத்து
    எதிர் வீட்டுக் குழந்தைக்கு
    அழுத்தமாய்
    தருகிறேன் முத்தம்.
    நீ
    ஏதேனும்
    குழந்தையை நினைத்தாவது
    எனக்கொன்று
    கொடுத்து விட்டுப் போயேன்.

    rompa aasai.
    sulabamaanathai neenga senjuttu, kastamaanathai avankala seyya solringala?

  14. சு.சிவா சொன்னது,

    மே 23, 2008 இல் 9:23 மு.பகல்

    வாழ்வின் உதடுகளில் முத்தமிட காதலால் மட்டுமே முடியும்.

  15. சேவியர் சொன்னது,

    மே 23, 2008 இல் 11:49 மு.பகல்

    //rompa aasai.
    sulabamaanathai neenga senjuttu, kastamaanathai avankala seyya solringala?

    //

    சுலபமானவற்றை விட கஷ்டமானவையே சுவாரஸ்யமானவை :)

  16. சேவியர் சொன்னது,

    மே 23, 2008 இல் 11:50 மு.பகல்

    //வாழ்வின் உதடுகளில் முத்தமிட காதலால் மட்டுமே முடியும்//

    வாவ் !!! அழகான வரிகள்.

  17. M.Sathiesh Anto சொன்னது,

    அக்டோபர் 21, 2008 இல் 2:09 பிற்பகல்

    Super appu

  18. சேவியர் சொன்னது,

    அக்டோபர் 21, 2008 இல் 6:41 பிற்பகல்

    நன்றி ஆண்டோ…

  19. Maha சொன்னது,

    நவம்பர் 2, 2008 இல் 11:05 மு.பகல்

    Hello Kavingarea,

    Kalakkal Kavithaigal, Thangalathu..

    Athodu ethaiyum serthukollungal , Erunthuvittu poogattum muthangalodu en muthamum.

    Mutham…
    Uthadukalal Vendam
    Ullathal….

  20. siva sathya சொன்னது,

    நவம்பர் 3, 2008 இல் 12:40 மு.பகல்

    ungalin kavithaigal mighavum alaghu anal ungal asaigalthan preasaigal.

  21. சேவியர் சொன்னது,

    நவம்பர் 9, 2008 இல் 12:12 பிற்பகல்

    நன்றி மஹா & சிவ சத்யா :)

  22. pattikattan சொன்னது,

    நவம்பர் 11, 2008 இல் 8:20 பிற்பகல்

    muthtam mattumay kadalin muthal sugam adhai unara mattumay muduyum -pattikattan

  23. sujitha சொன்னது,

    நவம்பர் 15, 2008 இல் 12:34 பிற்பகல்

    ungal kavithai konjam over entru thonukirathu

  24. K,Pandiyaraj சொன்னது,

    நவம்பர் 15, 2008 இல் 1:37 பிற்பகல்

    முத்தப் போருக்கு
    நீ
    தயாரா ?
    எனக்கு
    புறமுதுகு பழக்கமில்லை….Intha varigal enaku mikaum pidithullathu.

  25. K,Pandiyaraj சொன்னது,

    நவம்பர் 15, 2008 இல் 1:38 பிற்பகல்

    Hi Sujitha intha kavithai over entru yen thonriyathu….

  26. சூர்யா சொன்னது,

    நவம்பர் 21, 2008 இல் 11:32 மு.பகல்

    நல்லாயிருக்கு சேவியர்.

    வாழ்த்துக்கள்

  27. sujitha சொன்னது,

    டிசம்பர் 3, 2008 இல் 11:57 மு.பகல்

    HI ! pandiaraj ennakku thonichu athanala soonnen but ellam appadi ellai

  28. ponmalar சொன்னது,

    டிசம்பர் 8, 2008 இல் 3:43 பிற்பகல்

    நீ
    ஏதேனும்
    குழந்தையை நினைத்தாவது
    எனக்கொன்று
    கொடுத்து விட்டுப் போயேன்.
    ————————————ARUMAI…YAa!!

  29. சேவியர் சொன்னது,

    டிசம்பர் 8, 2008 இல் 7:35 பிற்பகல்

    நன்றி பொன்மலர் :)

  30. சேவியர் சொன்னது,

    டிசம்பர் 8, 2008 இல் 7:38 பிற்பகல்

    ??

  31. சேவியர் சொன்னது,

    டிசம்பர் 8, 2008 இல் 7:49 பிற்பகல்

    நன்றி சூர்யா

  32. சேவியர் சொன்னது,

    டிசம்பர் 8, 2008 இல் 7:53 பிற்பகல்

    நன்றி பாண்டியராஜ்

  33. சேவியர் சொன்னது,

    டிசம்பர் 8, 2008 இல் 7:56 பிற்பகல்

    :) ம்ம்ம்ம் வாழ்த்துக்கல் ;)

  34. ram சொன்னது,

    டிசம்பர் 13, 2008 இல் 10:57 மு.பகல்

    super

  35. சேவியர் சொன்னது,

    டிசம்பர் 15, 2008 இல் 7:13 பிற்பகல்

    //super//

    நன்றி ராம் :)

  36. yasodha சொன்னது,

    டிசம்பர் 25, 2008 இல் 12:16 பிற்பகல்

    superb poems… try to write more…

  37. N.Manivanan சொன்னது,

    ஜனவரி 29, 2009 இல் 3:03 பிற்பகல்

    நீ
    ஏதேனும்
    குழந்தையை நினைத்தாவது
    எனக்கொன்று
    கொடுத்து விட்டுப் போயேன்.

    Suuuuuuuuuuuuuuupeeeeeeeeerrrrrrrr

  38. சேவியர் சொன்னது,

    பெப்ரவரி 3, 2009 இல் 6:41 பிற்பகல்

    நன்றி மணிவண்ணன்

  39. Ravi சொன்னது,

    பெப்ரவரி 19, 2009 இல் 9:47 மு.பகல்

    superb dear,i wish U all the best

  40. சேவியர் சொன்னது,

    பெப்ரவரி 20, 2009 இல் 9:48 மு.பகல்

    மிக்க நன்றி ரவி…

  41. Thamizheniyan சொன்னது,

    பெப்ரவரி 24, 2009 இல் 4:26 மு.பகல்

    Hi, all the best.

    Best Regards,
    Tamil

  42. சேவியர் சொன்னது,

    பெப்ரவரி 25, 2009 இல் 6:22 பிற்பகல்

    நன்றி தமிழ்…

  43. Tamilselvi சொன்னது,

    மார்ச் 15, 2009 இல் 11:20 மு.பகல்

    hi, super

  44. Shakunthala சொன்னது,

    மார்ச் 19, 2009 இல் 1:11 பிற்பகல்

    Ilanjigappu kannathil inbathin mugavariyai ithazh pathithu ezhuthum kalaiyana muthathin ilakkanathai mothamaga padithathum etho puthayalai kanda poorippu manathukkul.

    Miga nanru.

  45. சேவியர் சொன்னது,

    மார்ச் 20, 2009 இல் 3:51 பிற்பகல்

    மிக்க நன்றி சகுந்தலா :)

  46. சேவியர் சொன்னது,

    மார்ச் 20, 2009 இல் 3:58 பிற்பகல்

    நன்றி தமிழ்ச்செல்வி !

  47. banu சொன்னது,

    ஏப்ரல் 22, 2009 இல் 6:38 பிற்பகல்

    nalla muyachi

  48. banu சொன்னது,

    ஏப்ரல் 22, 2009 இல் 6:40 பிற்பகல்

    all the best

  49. சேவியர் சொன்னது,

    ஏப்ரல் 24, 2009 இல் 4:08 மு.பகல்

    நன்றி பானு :)

  50. sathish kumar சொன்னது,

    மே 25, 2009 இல் 9:00 மு.பகல்

    tamil

  51. K.SIVA(Fr) சொன்னது,

    மே 26, 2009 இல் 4:56 மு.பகல்

    MUKAM NOOKKI NILAM NOOKKI,UHADINILEE VARUKINRA PUNAKAYAI, THANTHAAKA THUDIKKINR ULLAM, VINAI NAADAAK KALIPPUDANEE, ITHALOODU ITHAL ARUMPI, INAYAAN NAD POONRUM, VIINAAKA VIITHI YATHIL, VIDDERIUM POORUL ILLAI, PURAM KAADDI VEERE MUKAMNAADI, PURAP PURAP PADDAAL, PUTRIISAL VAALKAI YATHAAJII, CERA KOODINTHU KIDAKKAK, SAAKDAI THAVAKKALIKU IRAIYAAKUMANROO, ITHU THAAN NULAKAM, ENRUTHAAN NINATH THIDUVOOR, ETHIRKAALAM ENNAAKUM SOOLVIIROO?…… ” SOOLVIIROO ” -K.SIVA-(Fr)

  52. சேவியர் சொன்னது,

    மே 27, 2009 இல் 12:22 மு.பகல்

    /tamil//

    அதை ஆங்கிலத்தில் சொல்றீங்க :D

  53. hema சொன்னது,

    மே 31, 2009 இல் 5:41 பிற்பகல்

    ada ada ada kalakiteninga ponga

  54. சேவியர் சொன்னது,

    மே 31, 2009 இல் 6:36 பிற்பகல்

    /ada ada ada kalakiteninga ponga//

    நன்றி ஹேமா :)

  55. கவிதைக்காரன் சொன்னது,

    ஜூன் 3, 2009 இல் 1:50 மு.பகல்

    மழையல்ல..
    முத்தச் சாரல்..
    :)

  56. சேவியர் சொன்னது,

    ஜூன் 10, 2009 இல் 9:57 பிற்பகல்

    மிக்க நன்றி கவிதைக் காரரே

  57. balakrishnan சொன்னது,

    ஜூன் 12, 2009 இல் 10:54 பிற்பகல்

    nalla kavithigal muthtin sugathi naan anubavithean

  58. johnsi சொன்னது,

    ஜூன் 25, 2009 இல் 3:49 மு.பகல்

    nice

  59. சேவியர் சொன்னது,

    ஜூன் 25, 2009 இல் 1:59 பிற்பகல்

    நன்றி பாலா & ஜான்சி

  60. selvi சொன்னது,

    ஜூன் 25, 2009 இல் 10:36 பிற்பகல்

    un kavikku, kaviththalaippaiye paricilaakkuvom. aththunaiyum amuthath thulikal. cinththaatha thulikalum sinthivarattume!……….selvi.

  61. சேவியர் சொன்னது,

    ஜூன் 30, 2009 இல் 2:55 மு.பகல்

    நன்றி செல்வி :)

  62. சேவியர் சொன்னது,

    ஜூன் 30, 2009 இல் 4:00 மு.பகல்

    மிக்க நன்றி பால கிருஷ்ணன்.

  63. Rekhasri சொன்னது,

    ஜூலை 2, 2009 இல் 8:10 பிற்பகல்

    Intha kavithaikalai paditha udan,Enaku ennavan neyabagam vanthuvitathu, Muthathin azhagi unarthaen, ini “ipozhuthu vendam ayya” indru sollavaey mattaen. Nadathungal ungal iniya payanathai
    VAZHGA VALAMUDAN

  64. selva சொன்னது,

    ஜூலை 5, 2009 இல் 2:15 மு.பகல்

    ninaivi thonrum mutham kanavi kanavi marainthu

  65. nrramesh சொன்னது,

    ஜூலை 6, 2009 இல் 10:37 பிற்பகல்

    உன்னை மனதில் நினைத்து
    எதிர் வீட்டுக் குழந்தைக்கு
    அழுத்தமாய்
    தருகிறேன் முத்தம்.
    நீ
    ஏதேனும்
    குழந்தையை நினைத்தாவது
    எனக்கொன்று
    கொடுத்து விட்டுப் போயேன்.

    realy super …………………….

  66. சேவியர் சொன்னது,

    ஜூலை 7, 2009 இல் 4:30 மு.பகல்

    மிக்க நன்றி ரமேஷ் :)

  67. சேவியர் சொன்னது,

    ஜூலை 7, 2009 இல் 4:34 மு.பகல்

    //ninaivi thonrum mutham kanavi kanavi marainthu//

    நன்றி செல்வா :)

  68. சேவியர் சொன்னது,

    ஜூலை 7, 2009 இல் 4:39 மு.பகல்

    நன்றி ரேகாஸ்ரீ :) வாழ்க வளமுடன் !

  69. Rekhasri சொன்னது,

    ஜூலை 8, 2009 இல் 10:12 பிற்பகல்

    Do u have any website other than this xavier?

  70. anbu சொன்னது,

    ஜூலை 10, 2009 இல் 12:55 மு.பகல்

    aaaaaaaaaa

  71. parthasarathy சொன்னது,

    ஜூலை 10, 2009 இல் 5:32 மு.பகல்

    Ellorodaya manathayum kannadi pimpamaga kattiya ungalukku engalathu nandrigal.,
    athunai muthathukkum enathu nandi ennum oru mutham pothathu!!!
    engalathu motha muthathukkumana artham ithu— epppuudi

  72. சேவியர் சொன்னது,

    ஜூலை 18, 2009 இல் 12:12 மு.பகல்

    நன்றி பார்த்தசாரதி :)

  73. சேவியர் சொன்னது,

    ஜூலை 18, 2009 இல் 12:14 மு.பகல்

    நன்றி அன்பு :)

  74. சேவியர் சொன்னது,

    ஜூலை 18, 2009 இல் 12:16 மு.பகல்

    /Do u have any website other than this xavier?//

    http://sirippu.wordpress.com :)

  75. K.SIVA(Fr) சொன்னது,

    அக்டோபர் 11, 2009 இல் 3:53 மு.பகல்

    Thinah Thinam Mutthang Kadaththaasu, Varudamum Palavung Vanthu Poohchu, Kalvik kuudamum Thoodarnthu Seonru, Kannuk Alakukal Thoodarnthu Sella, Kaalamum Ma(A) varkku Kninthu Vanthu, Kaaladi YaThannil Thava(M) Mirukku, Muththang Koodukkum Naalkal Taanéni, Mudivaith Thidiiren Thiddampooddu Mudiththuviddaar, Athuthaan Kaathal Kooduththa Kaliyaanam, Ithanpéyar Thaanoo Kaathait Kaliyaanam. “” KAATHAIL .+.°° MUTHTHA°° .=.. KALIYAANAM “” K.SIVA (Fr)

  76. சேவியர் சொன்னது,

    அக்டோபர் 22, 2009 இல் 9:11 பிற்பகல்

    :) நன்றி சிவா…

  77. MirthonMP சொன்னது,

    நவம்பர் 2, 2009 இல் 11:26 பிற்பகல்

    உனக்கான முத்தங்களை
    என்
    படுக்கைத் தலையணையில்
    தவறாமல் இட்டு வைக்கிறேன்.
    என்றேனும்
    மறக்காமல் வந்து
    பெற்றுப் போ,
    தலையணையை.//

    ungalukku oru anbu muththam anbarey! (note: i m a man)

  78. சேவியர் சொன்னது,

    நவம்பர் 3, 2009 இல் 12:49 மு.பகல்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மிர்தோன். :)


மறுமொழியொன்றை வழங்குக