சதுரங்கக் காதல்

love2.jpg
1

வித்யாவா அது ?
கண்ணனின் கண்களுக்குள்
ஆச்சரியக் கண்வெடிகள்
ஆயிரம் ஆயிரம் வெடித்தன.

கோடிப் புறாக்கள்
கிளறிச் சென்ற
தானிய முற்றமாய்
காலங்கள் சிதறின.

குமரியின்
கிராமத்துக் கல்லூரியில்
பார்வை எறிந்து எனக்குள்
வேர்வைக் கால்வாயை
வெட்டிச் சென்றவள்.

என் கண்ணுக்குள் விழுந்த
முதல் காதலுக்கும்,
என் கன்னத்தைத் தழுவிய
முதல் கண்ணீருக்கும்
காரணமானவள்.

ஆறு வருடங்கள்
ஆறுபோல் ஓடிக் கடந்தபின்,
இங்கே
அமெரிக்காவின் விமானலையத்தில்!

ஆச்சரியம்
கனவுகளின் கரைகளை
கரையான்களாய் உருமாறிக்
கவலையின்றிக் கரைக்கின்றன.

அவள் தானா ?
சந்தேகப் பூனை ஒன்று
மனசின் மதிலிலிருந்து
உள்ளுக்குள் குதித்து
சில
பாத்திரங்களை உருட்டி விட்டு
பாய்ந்தோடியது.

அதன் விடையை,
நெற்றிமுடியை மெல்லமாய்,
மிக மிகச் செல்லமாய்
விலக்கி விட்ட அவள்
விரல்கள் விளக்கிவிட்டன.

அவளே தான்.
வித்யா !
அத்தனை பெண்களுக்கும்
கூந்தல் இருந்தாலும்
எந்தக் கூந்தல் தன்
காதலிக் கூந்தல் என்பதை மட்டும்
கண்மூடினாலும்
சொல்லிவிடும் காதலின் காற்று.

கண்ணனின் எண்ணங்கள்
தாழ்பாள் விலக்கித்
தாவி ஓடின.

சிகாகோவின் உள்ளே
குற்றாலம் வந்து
குடியேறியதுபோலவும்,
வயல்க்காற்று சட்டென்று
விமானம் விட்டிறங்கி வந்து
ற்பது போலவும்
சிந்தனைகள் சிலிர்த்தன.

பேசலாமா ?
வேண்டாமா ?

விமான லையத் தரையை
சுத்தம் வந்து
முத்தமிட்டுச் சென்றிருக்க,
விமானம் வெளியே வந்து
சத்தமிட்டுக் கொண்டிருக்க,
கண்ணனின் கேள்விகள்
சுத்தமற்றச் சத்தங்களோடு
உள்ளுக்குள் புரண்டன.

ஒரு முறை கூட
அவளைக் காதலிப்பதாய்ச்
சொன்னதில்லை.

தாமரை மீது
கோடரி வைக்கப் போகிறாயா ?
என்னும்
நண்பனின் கேள்விகள் தான்
அப்போது
தடுத்து றுத்தின.

உண்மை தான்,
மோகத்தின் முகவுரையோடு
முகம் காட்டும் காதலும்,
தேகத்தைத் திருடாத
மனம் நீட்டும் நட்பும்,
இரு வேறு மனலைகளின்
இனிய வெளிப்பாடுகள் தானே.

நட்பின் பாத்திரம்
நீட்டுபவளிடம்,
காதலின் விண்ணப்பத்தை
போட
கை நடுங்காதா என்ன ?

அதுவும்,
அவள் இன்னொருவனின்
காதல் உடைகளில்
கட்சிதமாய்க்
கலந்திருக்கும் போது ?

love41.jpg

2

சாரதி !
அவன் தான் அந்தக்
கண்ணம்மாளின் பாரதி.

சாரதியின்
இருசக்கர வாகனத்தின்
பின்னால் தான்
அந்த
வித்யா எனும் பூ
தவறாமல் பூத்தது.

திரையரங்குப் படிக்கட்டுகளில்
சாரதி எனும் செடி
சாய்ந்திருந்தால் மட்டுமே
அங்கே
வித்யா எனும் கொடி
விடாமல் சுற்றிக் கொண்டது.

காதலர்களின்
அந்தி நேரத்துச்
சந்திப்புக் கூடமான,
அந்த சத்தமிடும் கடலின் கரையில்
வித்யா எனும் அலை
சாரதி எனும் சிப்பிக்குள் மட்டுமே
றுத்தாமல்
அடித்துக் கிடந்தது.

அவர்களைக் காணும் போதெல்லாம்
பார்வைக்குள் யாரோ
பஞ்சைக் கொளுத்திப்
படுக்கப் போட்டதாய்
எரிந்தன விழிகள்.

என்ன செய்வது ?
காதல் என்னும் கல்லை
சிலையாய் வடிக்கும் பொறுப்பு
ஏதோ ஓர்
பாக்கியவானுக்குத் தானே
பரிசாய்க் கிடைக்கிறது.

கிழிக்காமல்
காதலை காகிதத்தில் எழுதிய
ஏதேனும் மனிதனை
காணக் கிடைக்குமா ?

வெட்டாமல் வரிகள் எழுதிய
காதல் கவிதை தான்
இருக்க இயலுமா ?

கண்ணனும் தன்
காதலைச் சொல்ல
மூச்சை
உள்ளிழுக்கும் போதெல்லாம்
சாரதியின் முகம் வந்து
அதை
உடைத்துப் போடும்.

சிலநேரங்களில்
வித்யாவின் மழலைச் சிரிப்பும்
அவன்
வார்த்தைகளைக் கொய்து
மடியிலே போட்டுவிட்டு
மறைந்து விடும்.

சொல்வது
நாகரீகம் தானா ?
நதியிடம் போய்
திசை மாறி ஓடச் சொல்லலாமா ?
கடலிடம் போய்
வேறு
புகலிடம் தேடு என்று
கூறல் தான் யாயமா ?

அத்தனை சுயநலவாதியா
நான் ?
அடுத்தவனின் மார்பில்
அம்பு எய்து தான்
என் காதல் படத்தை
மாட்டி விட ஆசைப்படுகிறேனே !

தன் கேள்விகளின் பற்களே
தன் பதில்களை
கொத்தித் தின்னும்
அவஸ்தைப் புற்றுக்குள்
அமிழ்ந்து கிடந்தான் அவன்.

காலம் அவனுடைய
காதல் பூவை
இலைகளுக்குள்ளிருந்து
வெளியே எடுத்து
மொட்டுக்குள் போட்டு
பூட்டி விட்டுப் போனது.

சிந்தனைகளின் ஓட்டத்தை
விமான லையப்
பரபரப்பு
மீண்டும் திசை திருப்பியது.

வித்யா இன்னும் அந்த
பைகள் பரிசோதிக்கும்
இடத்தில் தான்
கைகளை வைத்துக்
காத்திருக்கிறாள்.

இப்போதெல்லாம்
பாதுகாப்புகளின் அடர்த்தி
காது ஜிமிக்கிகளைக் கூட
கழற்றாமல் விடுவதில்லை.

கால்களின் செருப்புமுதல்
தலையின் கொண்டை வரை
தனிச் சோதனைக்குத்
தப்புவதில்லை.

வித்யாவும் அங்கே தான்
ன்றிருந்தாள்.

போய்ப் பார்த்து
பேசிவிடலாம்,
கண்ணன் முடிவெடுத்தான்.

காலங்கள் கடந்தபின்னும்
இந்த
காதலின் இழை முழுதுமாய்
அறுந்து போகவில்லை என்பது
ஆச்சரியமற்ற ஓர்
ஆச்சரியம் தான் !

அவளுக்குத் திருமணம்
ஆகியிருக்குமா ?
ஆறு வருடங்கள்
முடிந்தபின்னும் அந்த
பழைய நட்பு இருக்குமா ?

கேள்விகளோடு
வித்யாவை நெருங்கினான்
கண்ணன்.

வித்யா
பரிசோதனை முடித்து
கைப் பையோடு மெல்ல
அந்த ஆமை வரிசையை விட்டு விட்டு
வெளியே வர,
செல்ல அழுகையோடு
அவளைத் தொடர்ந்து
அழகாய் ஓடியது
அந்தக் குழந்தை !

love2.jpg

3

கண்ணனின் கால்கள்
அனிச்சைச் செயலால்
அரைவினாடி நின்றன !

வித்யாவிற்குக்
கல்யாணம் ஆகியிருக்கிறது.
ஒரு
குழந்தையும் இருக்கிறது !

கண்ணனின் சிந்தனைகள்
மீண்டும்
கல்லூரியில் விழுந்தன.

காதலின் குழப்பங்கள்தான்
ஆயிரம் ஆலோசனை கேட்டு
தன்
சுய விருப்பத்தை மட்டுமே
சம்மதிக்கும்.

காதலிக்கும் அத்தனை பேருக்கும்
ஏதோ ஓர்
நண்பன் தேவைப் படுகிறான்.

கண்ணனும் அப்படித்தான்,
மோகனைப் பிடித்து
பிராண்டி எடுப்பான்.

என் காதலை
நான் சொல்வதில் என்ன
தவறிருக்க முடியும் ?
கண்ணன் கேட்டான்.

காதலா ?
இன்னொருவனை
உயிருக்குள்
உருக்கி ஊற்றியிருக்கும்
ஓர்
பெண்ணிடமா நீ
கண்ணியம் உடைக்கப் போகிறாய் ?

சாரதிக்கும் அவளுக்கும்
காதலென்று
நீ எப்படி சொல்கிறாய் ?

மோகன் சிரித்தான்,
அதோ
அது வானமில்லை என்று சொல்,
அதன் கீழே
மிதப்பவை மேகமல்ல
காயப் போட்ட சேலை என்று சொல்
நம்புகிறேன்.

சாரதி அவளை
காதலிக்கவில்லை என்று
சொல்லாதே.

விளைந்து நிற்கும் வயலில்
போய்
விதைகள் முளைத்தனவா
என்று
விசாரிப்பவன் முட்டாள்.
மோகன் சொன்னான்.

விளைந்து நிற்பவை
களைகளா இல்லை
அறுவடைக்கான தானியமா என்று
தூரத்திலிருந்து பார்த்தால்
துல்லியமாய் தெரிவதில்லையே !

அருகில் சென்று விசாரிக்கலாமா ?
கண்ணன் கேட்டான்.

காதலின் கிளைகளை காட்டினால்
அவள்
நட்பின் இழைகளையும்
அறுக்க நேரிடலாம்.

ஏன் இந்த வேண்டாத சிந்தனை ?
அவளை நீ
தோழியாய் பார்ப்பதே தகும்.
காலம் உனக்கு
உரிய பதிலை தரும்.

இப்போது என்னுடைய
வார்த்தைகள்,
உன்னுடைய கருத்துக்களை
நேருக்கு நேர்
தலைகளால் மோதுகின்றன,

இவை எல்லாம்
உன் நன்மைக்கானவை
என்பதை
வருடங்கள் போனபின்
விளங்கிக் கொள்வாய்.

உன் மீதான அவளின்
நம்பிக்கைகளை
நீயாய் போய்
வெட்டிக் கொள்ளாதே,
ஸ்நேகப் பறவையை
வெட்டிக் கொல்லாதே.

மோகன் சொல்லிவிட்டு
நகர்ந்தான்.

காதலிப்பவனுக்குத் தானே
அதன் வலி தெரியும்.
முட்டை ஓடு
உடைய மறுத்தால்
வெளிவரும் வரை குஞ்சு
வேதனைப் படாதா ?

நிறை மாத தாய்மை,
கரங்களில்
மழலையை அள்ளும் வரை
கலங்கியே புலம்பாதா ?

அப்படித்தான் புலம்பினான்
கண்ணன்.

அப்படியே போயிற்று,
கண்ணன் எனும் கார்மேகம்
நிறம் மாற்றி
பின் தேசம் மாறிப்
போயே விட்டது.

இப்போது தான்
மீண்டும் அந்த ஈரத்தை
அவன் மேகங்கள்
மீண்டும் உணர்கின்றன.

விமான நிலையத்துக்கும்
கிராமத்துக்கும் இடையே
பறந்து கொண்டிருந்தன
சிந்தனைகள்.

வித்யாவை நெருங்கினான்
கண்ணன்.

‘வித்யா.’

இயல்பாய் கூப்பிட்டாலும்
கடைசியில் கொஞ்சமாய்
பிசிறடித்ததாய்
பிரமை பிடித்தது அவனுக்கு.

வித்யா திரும்பினாள்,
‘கண்ணன்ன்ன்ன்’ .
ஆச்சரியக் குரலோடு
அருகில் நெருங்கினாள்.

கண்ணனுக்குள் இருந்த
நட்போ காதலோ
ஏதோ ஒன்று
போர்வை விலக்கி
எட்டிப் பார்த்தது.

love41.jpg

4

வித்யாவின் விழிகள் முழுதும்
மகிழ்வின் மின்மினிகள்
மின்னின.

கண்ணன்
ஆச்சரியப் பட்டான்.

இது தான் நட்பா ?
ஆறாண்டு கடந்தபின்னும்
வினாடி நேரத்தில்
எப்படி என்பெயரை
நினைவுப் பரலிருந்து
தூசு தட்டி எடுக்க முடிகிறது ?

எப்படி இருக்கே வித்யா ?
கண்ணனின்
கண்ணுக்குள் இருந்து
கால்முளைத்த கனவுகள்
இமை மயிர்களைப் பிடித்திறங்கின.

நான் நல்லா இருக்கேன்
நீங்க ?

வித்யாவின் விழிகளும்
கேள்விகளை
மனசுக்குள்ளிருந்து
வரவழைத்துக் கொடுத்தன.

நீண்ட நாட்களுக்குப் பின்
அருவியில்
சந்தித்துக் கொண்ட
நதிகள் போல
அகம் ஆரவாரமாய் இருந்தது
இருவருக்கும்.

வருடங்களுக்குக் கொஞ்சம்
வயதாகி விட்டது
வித்யா,

கல்லூரி வாழ்க்கையில்
பருந்துகளாய் பறந்தவர்கள்
பின்
எருதுகள் போல
உருமாற வேண்டி இருக்கிறது.

காலத்தின் கட்டாயம்
வயிற்றின் கட்டளை
வாழ்க்கையின் அழைப்பு !
எப்படி வேண்டுமானாலும்
பெயரிட்டழைக்கலாம்.

எனக்கு அயல் தேச வாழ்க்கை
சிலருக்கு
தாய் மண்ணின் மீது
பாதம் பதித்து நடக்கும் பணி.

நீ.
எப்படி இங்கே ?
எப்போ திருமணம் ஆச்சு ?

வித்யா சிரித்தாள்.
கல்லூரிக்கு வெளியே
கால் வைத்ததும்
கால்க்கட்டும் வந்தது.

காதல் கல்யாணம் அல்லவா ?
அதனால்
மோதித் தான் எங்களால்
தீபம் கொளுத்த முடிந்தது.

உங்கள் காதல்
வெற்றியில் முடிந்ததில்
எனக்கு
மட்டற்ற மகிழ்ச்சி !
பொய் சொல்லி சிரித்தான்
கண்ணன்.

திருமண வாழ்க்கை எப்படி
போகிறது  வித்யா ?

வாழ்க்கைக்கு என்ன ?
பழக்கப் பட்ட பாய்மரக் கப்பல்
அது.
காற்று வீசும் திசையில்
காதல் துணிகளை
கட்டி வைக்கிறேன்.
பயணம் போகிறது.
புன்னகைத்தாள் வித்யா .

சரி,
உமா எப்படி இருக்கிறாள் ?
உங்கள் மனைவி?

எதிர்பாராத கேள்வியில்
ஒருவினாடி
உறைந்தான் கண்ணன்.

love2.jpg

5

உமா !

கண்ணனின் மாமன் மகள்.
கண்ணனை
நேசித்து வந்த
கன்னிகை.

கல்லூரி கால
நினைவுகளின் உலுக்கலால்
உதிர்ந்து போன
காதல் பூக்களை
மீண்டும் பொறுக்கி
தன் கிளைகளுக்குத் தந்தவள்
அவள் தான்.

சிறு வயதிலெல்லாம்
சின்னச் சிரிப்போடு
சந்தித்துக் கொண்டவர்கள்,
இப்படி
வாழ்வில்
சங்கமித்துக் கொள்ள
சம்மதிப்பார்கள் என்று
சத்தியமாய் யாரும்
சிந்தித்திருக்கவில்லை.

உமாவிற்கு வீட்டில்
வரன் வேண்டுமென்ற
வரம் தேடும் பிரார்த்தனைகளும்,
பயணங்களும்
நடந்தபோது,
உமாதான் மெல்லமாய்
தன் தாயின் காதுகளுக்குள்
கண்ணனை ஊற்றியிருக்கிறாள்.

வெண்ணை திருடிய
கண்ணனைக் கும்பிட்டுக் கிடந்த
தாய்,
தன் பெண்ணின் கண்களிலும்
கண்ணனே
காதல் திருடியதைக் கண்டு
கண் விரித்தாள்.

சொந்தத்தில் திருமணமா ?
அது
வியாதிகளின் விளை நிலமம்மா,
வேண்டாம்.
தடுத்தாள் தாய்.

சொந்தங்களை மீறிய
திருமணங்களுக்கு
நோய் ஒன்றுமே நேர்வதில்லையா ?
சொந்தத்தில் திருமணம்
என்றால் அது
சொர்க்கத்தில் நடப்பது போல,

திருமணங்களால் உருவாகும்
சொந்ததை ஆதரிப்பீர்கள்,
சொந்தங்களால் உருவாகும்
திருமணத்தை மட்டும்
எதிர் விசையாய் எதிர்ப்பீர்களோ ?

சரமாரிக் கேள்விகள்
அம்மாவைச் சரிக்க,
கண்ணனின் வீட்டோடு
கல்யாணப் பேச்சுகளும்
துவங்கின.

கண்ணனும் முதலில்
தயங்கினான்,
காதல் கவலைகள் ஒருபுறம்
கல்யாணக் கவலைகள்
ஒருபுறம் என்று,
இரு சிறகுகளிலும்
பாரம் இறக்கிவைத்த
பட்டாம் பூச்சியாய் படபடத்தான்.

இறுதியில்,
உமா கண்ணனைத் திருடினாள்,
திருமணம் செய்து
தாலியை வருடினாள்.

திருமணத்துக்கு
நண்பர்கள் யாரையுமே
கண்ணன் அழைக்கவில்லை.

விஷயம் எப்படி
வித்யா வரை எட்டியது ?

ஆச்சரியப் புதிருக்கு
விடை தேடி
வித்யாவின் விழி தீண்டினான்.

யார் சொன்னது ?
கல்லூரியின் படிதாண்டியபின்
நான்
நண்பர்களோடு எந்த
தொடர்பும் இல்லாமல்
துண்டிக்கப் பட்டேன்.

வேண்டுமென்றே தான் நான்
அப்படி இருந்தேன்,
ஆனால்
நண்பர்கள் வேண்டாமென்பதல்ல
அதன் விளக்கம்.

உனக்கு எப்படி
சேதி வந்தது ?
கண்ணன் மீண்டும் கேட்டான்.

என் கணவன் தான்
எனக்குச் சொன்னார்.

கண்ணனுக்கு மீண்டும் ஆச்சரியம்.
அதெப்படி ?
மூடி வைத்த
சீசாவுக்குள் இருந்து
மூவாயிரம் மைல் தூரம்
வாசம் கசிந்தது ?

சாரதிக்கு இது எப்படி
தெரியும் ?
கண்ணக் கேட்டான்.

வித்யா விழிகளில்
குழப்ப முடிச்சுகள் இறுகின.

சாரதியா ?
அவனுக்கும் தெரியுமா ?

என்னிடம் சொன்னது
என் கணவர் மோகன்.
உங்கள் நண்பர் தான்,
தெரியாதா ?

love41.jpg

6

வினாக்களின் முடிவில் இருந்த
முற்றுப் புள்ளி
ஓர்
மலையாய் மாறி
தலையில் விழுவதாய் தோன்றியது
கண்ணனுக்கு.

சாரதி தான்
காதலித்துக் கொண்டிருந்ததாய்
னைத்திருந்தான்,
இதென்ன புதுக் கரடி ?

சாரதிக்கும் வித்யாவிற்கும்
காதலென்று
கதைவிட்டவனா
இவள் கணவன் ?

தன் காதல் எண்ணங்களை
எல்லாம்
கல்லில் துவைத்துக்
காயப் போட்டவனா ?
இவள் மனசுக்குள்
காதல் போட்டான் ?

சாரதிக்கும் வித்யாவுக்கும்
காதலென்று
கதைகட்டியதெல்லாம்
என்னை
வித்யாவிடமிருந்து விலக்கவா ?

நினைக்க நினைக்க
கண்ணனுக்குள்
ஆத்திரம் மையம் கொண்டது.
அது
கரை கடக்காமல் கட்டுப்படுத்தியபடி
கதை கேட்க ஆரம்பித்தான்.

எப்போது நீங்கள்
காதலெனும்
சிங்கக் கூட்டுக்குள்
சிக்கிக் கொண்டீர்கள் ?
சிரித்தபடியே கேட்டான் கண்ணன்.

காதலொன்றும் சிங்கக் கூடல்ல
சிங்கக் கூட்டில்
எலும்புக் கூடுகள் மட்டும் தானே
மிஞ்சும்!,

அப்படியென்றால்
காதல் என்னும் சிலந்தி வலையா ?

இல்லையே.
காதல் சிலந்தி வலையுமல்ல,
அது
பல பூச்சிகளின் புகலிடமல்லவா ?
சிரித்தாள் வித்யா.

சிரிப்பிக்கிடையே கேட்டான்
கண்ணன்,
உங்களுக்குள் எப்போ
காதல் அத்யாயம் ஆரம்பமானது ?

வித்யா
சிரித்தாள்.
ஏன் கேட்கறீங்க ?
பதிலுக்கு முன்னெச்சரிக்கையாய்
ஒரு
கேள்வியை வைத்தாள்.
சதுரங்கத்தில் அரசனைக் காப்பாற்றும்
படைவீரனைப் போல,

இல்லை.
சும்மாதான் கேட்டேன்.
கல்லூரிகாலத்திலெல்லாம்
உன் காதலன்
சாரதி என்று தான்
சிந்தித்துக் கிடந்தேன்.

சாரதியா ?
அவன் என் கிராமத்து நண்பன்,
தூரத்து சொந்தமென்று கூட
அவனை
சொந்தம் கொண்டாடலாம்.

நானும் அவனும்
பள்ளிக்கூடப் பிராயத்திலேயே
பரிச்சயம்,
ஒரு
சகோதர நேசத்தின் சொந்தக்காரன்,

இத்தனையும் என்ன
அவன்
கல்லூரி கால என்
ராக்கி சகோதரன்.

வித்யாவின் வார்த்தைகள்
கண்ணனை கன்னத்தில்
அறைந்தன.

ஒரு சகோதரனையா
காதலன் என்று நினைத்தேன்,

கடற்கரைக்குச் சென்றால்
காதலன் என்று ஏன்
கற்பித்துக் கொண்டேன் ?

என் தோன்றல்களையெல்லாம்
நிஜமென்று ஏன்
நிறுத்தாமல் தின்றேன் ?

கண்ணனுக்குள்ளே
வெட்கமும் இயலாமையும்
இரு மலைகளாய் உயர்ந்தன.

பாலம் இல்லா பாதையில்
மனக் கால்கள்
முள்ளிடையே சிக்கிய
வெள்ளாடாய் தவித்தது.

வார்த்தைகள் தடுமாற
கண்ணன் கேட்டான்,

சாரதி மோகனை
சந்தித்திருக்கிறானா ?

வித்யா சிரித்தாள்.
என்னவாயிற்று கண்ணன் ?
சாரதியையே சுற்றுகிறீர்கள்.

சாரதியும் மோகனும்
கல்லூரியில் நுழையும் போதே
நண்பர்களாய்
நுழைந்தவர்கள் தான்.

சாரதிக்கு நான் கட்டிய
ராக்கி கூட,
மோகன் வாங்கி தந்ததே.

love2.jpg
7

கண்ணனுக்கு
தலை சுற்றியது.

சாரதியை
வித்யா காதலிக்கவில்லை
என்பதை
மோகன் மறைத்திருக்கிறான்.

என்
காதல் பனித்துளியை
வலுக்கட்டாயமாய் என்
இலைகளிலிருந்து
துடைத்தெறிந்திருக்கிறான்.

நான்
காதலைச் சொல்ல
காலடி வைத்தபோதெல்லாம்
கட்டுப் போட்டு
அதை முடக்கியிருக்கிறான்.

இதற்கெல்லாம் பின்னயில்
மோகனின்
காதல் எண்ணங்கள் தான்
காவலாய் நின்றிருக்கின்றன.

என்னை
தவறான முகவரிக்கு
அனுப்பி விட்டு,
அவன் அவள் முகவரிக்குள்
குடியேறியிருக்கிறானே.

ஏமாற்ற உணர்வு
கண்ணனின் கழுத்தில்
கூடாரமடித்துக் குடியேறியது.

திட்டமிட்டே
என் காதலை
வெட்டிவிட்டாயே,
தேடி வந்த சிட்டைப் பிடித்து
சமைத்து விட்டாயே,
நம்பி வந்த நண்பனை
நாகரீகமாய் நறுக்கிவிட்டாயே.

கண்ணனின் இதயம்
இயல்பை மிறி
அதிகமாய் இடித்தது.
தமனிகளுக்குள் கவனிக்காமல்
குருதிக் குதிரைகள்
தாறுமாறாய் ஓடின.

எதையும் வெளிக்காட்டாமல்
இதமாய் சிரித்தான்.

எப்போது
முதல் காதல் கடிதத்தை
கை மாற்றிக் கொண்டீர்கள்,
இதயத்தின் துடிப்புகள்
எப்போது
இடம் மாறக் கண்டீர்கள் ?
கண்ணன் வினவினான்.

வித்யா சிந்தித்தாள்.
கல்லூரி கடைசியாண்டில் தான்,
அது வரை
நண்பனாய் தான் இருந்தார்.
பலமுறை
காதல் பேச்சை எடுத்தாலும்
நான் அதற்குப் பாலம் கட்ட
பிரியப்படவில்லை.

ஆனாலும்
என்னை அளவுக்கு அதிகமாய்
நேசித்தார்,
என் இதயத்தின்
அத்தனை கனவுகளையும் வாசித்து,
வாசித்தவற்றை தேடிப்பிடித்து
எனக்கு பரிசளித்தார்.

நட்பு
காதலாய் உருமாறிய நிமிடமும்,
குரங்கு மனிதனான
பரிணாம காலமும்
சரியாய் சொல்லல் சாத்தியல்லவே.

ஆனாலும் அது
கல்லூரி கடைசியாண்டின்
கடைசி நாட்களில் தான்,

வித்யா சொல்லச் சொல்ல
கண்ணனுக்குள் மீண்டும்
கனல் அடித்தது.

love41.jpg

8

அப்படியானால்,
வித்யா மீதான
என் காதலை
தடுக்கும் மதகாக மோகன்
இருந்திருக்கிறான்.

சாரதிக்கு
வித்யா கட்டிய ராக்கி கூட
மோகன் முன்வைத்த
ஏதேனும்
முன்னெச்சரிக்கை முனையா ?

அத்தனை காதலையும்
தற்கொலை முனையில்
தள்ளிவிட்டு,
தன்மீதான நட்பை
காதலாக நிறமாற்றம் செய்திருக்கிறான்.

கடலை நோக்கிய
எனது பயணம்
அவனுடைய வாய்க்காலால்
எப்படி திசைமாறியது ?

அவன் நீட்டிய
பூக்களில் எல்லாம்
செயற்கை வாசனை தான்
செலுத்தப்பட்டிருந்ததா ?

அவன் தந்த
நட்பில் எல்லாம்
மதில் சுவர் கட்டுதல் தான்
மறைந்திருந்ததா ?

நினைக்க நினைக்க
கண்ணனால்
நம்ப முடியவில்லை.

ஆறுதலாய் தோள் தடவி,
என்
ஏமாற்றத்தில் கலங்கி
பாசமாய் பேசியவனா
என் நிழல் நீங்கியதும்
புது முகத்தைப் போட்டுக் கொண்டான் ?

கல்லூரியின்
முதல் நாளில்
நான் விதைத்த காதல் விதை,
கடைசியாண்டில்
அவன் நிலத்தில் விளைந்ததா ?

நான் தான்
முதலில் நேசித்தேனா ?
எத்தனை சாமர்த்தியமாய்
ஏமாற்றப் பட்டுவிட்டேன் ?

கண்ணன்,
இயலாமையில் விழுந்தான்.

வித்யா அவனை
மீண்டும்
நிகழ்காலத்துக்கு இழுத்தாள்.

என்ன கண்ணன் கனவா ?

இல்லை வித்யா
கல்லூரி கால நிஜங்கள்,
இப்போது தான்
மெல்ல மெல்ல வருகின்றன
கண்ணன் சொன்னான்.

என்ன நிஜங்கள் ?
வித்யா கேட்டாள்.

ஒன்றுமில்லை வித்யா.
யாருக்கு யார் என்பதெல்லாம்
இறைவன் எழுதுவது,
மனிதன் வைத்திருக்கும்
வெள்ளைக் காகிதத்தில்
வாழ்க்கையின் அடுத்த நிமிடத்தை
எழுத இயலாதே.

கணிப்புகளும்
கவனிப்புகளும் எல்லாம்
பொய்யாய் போகக் கூடும்.
சாத்தியக் கூறுகளை
சொல்வதெல்லாம்
சாமர்த்தியத்தனம் தான் இல்லையா.

சிலர்
பலிக்கும் கனவுகளை
மட்டுமே பார்க்கிறார்கள்.
பலருக்கு
பார்க்கும் கனவெதுவுமே
பலிப்பதில்லை,
எல்லாம் நிகழ்வுகளின் நியதி.

உதாரணமா பாருங்க கண்ணன்,
நீங்களும்
உமாவும்
நாலுவருஷமா காதலிச்சு
கல்யாணம் பண்ணிகிட்டீங்க.

நாலு வருஷமா ?
கண்ணனுக்குள்
இன்னொரு அதிர்ச்சி விழுந்தது.
உமாவை
தான்
காதலிக்கவே இல்லையே !
அப்படி ஒரு பொய் வேறு
வித்யா நரம்பில்
செலுத்தப்பட்டிருக்கிறதா ?

வித்யா தொடர்ந்தாள்
கல்லூரிக்கு வரும் முன்னரே
நீங்கள்
காதலில் வகுப்பெடுத்து நடந்தவராமே,
மோகன் தான்
சொல்லுவார் கல்லூரி காலத்தில்.

வித்யா
விஷயம் புரியாமல்
விளக்கிக் கொண்டிருந்தாள்.

love2.jpg

9

கண்ணனுக்கு
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.

வயலுக்கு வரும்
அத்தனை வாய்க்காலையும்
புற்களையும் கற்களையும் போட்டு
அடைத்திருக்கிறான் மோகன்.

விழுந்த மழையையும்
வடிகட்டிய பின்னே
நிலத்துக்கு வழங்கியிருக்கிறான்.

காதல் வந்தால்
நட்பு எல்லாம் சும்மா தானா ?

நட்பின் வார்த்தைகளை
நட்பின் முனகல்களை
காதலின் சிறகுகள்
கவனிப்பதில்லையா ?

கனவுகளுக்கு
சிறகு தயாரிக்கும் அவசரத்தில்
காதல்
நட்பின் கால்கள்
நடமாட முடியாமல்
முடமாகிக் கிடந்தாலும்
கவனிக்காமல் கடந்து போகுமா ?

ஆயிரம் பொய் சொல்லி
கல்யாணம் பண்ணலாம்
என்பார்கள்,
இங்கே
ஆயிரம் பொய்சொல்லி
ஒரு காதலைக் கொன்றிருக்கிறான்,
ஒரு
காதலில் வென்றிருக்கிறான்.

அவனுடைய
நந்தவனத்துக்குள்
வேறு வண்டுகளை வரவிடாமல்
தடுத்துவிட்டு
நகர முடியா பூவோடு
சமரசம் செய்திருக்கிறான்.

வலுக்கட்டாயமாய்
ரோஜாவை
இதழ் திறக்க வைத்திருக்கிறான்,
சட்டென்று கிடைத்த
மின்னல் சந்தர்ப்பத்தில்
மகரந்தம் திருடி
காதலை விளைவித்திருக்கிறான்.

தனித்தீவுக்குள் அவளைத்
தள்ளி,
சமயம் பார்த்து
தாமரையைக் கிள்ளியிருக்கிறான்,

முதலில் மறுத்தவள்
பிறகு எப்படி சம்மதித்தாள் ?
எல்லாம்
மூளைச் சலவையா ?

கேள்விகளின்
கோடிக் கால்கள்
கண்ணனின் பிரதேசங்களில்
அங்குமிங்கும்
அலைந்தன.

என்ன கண்ணன்.
அடிக்கடி அமைதியாயிடறீங்க ?
வித்யா தான் மீண்டும்
கண்ணனை இழுத்தாள்.

கண்ணன்
தலையைக் குலுக்கி
வார்த்தைகளை எடுத்தான்.

ஆமா.
உமாவோட அப்பா
என்னோட மாமா.

பால்ய சினேகிதம்
பிரியமாகி காதலாகியது,
அது பிறகு
பிரிக்க முடியா
பந்தமாகி விட்டது.

பொய் தான்.
அந்தத் திருமணம்
காதலில் துவங்கி திருமணத்தில்
முடியவில்லை,

வித்யா மீதான காதல்
முடிந்ததால்,
அல்லது
துவங்கும் முன்பே துவண்டதால்
உருவான பந்தம் அது.

நல்லது கண்ணன்,
இப்போது நினைத்தால்
சிரிப்பு தான் வருகிறது.

மோகன் தான்
நம் நட்பைக் காப்பாற்றினான்.
இல்லையேல்
உங்களிடம் வந்து
உங்களைக் காதலிப்பதாய்
சொல்லி
நம் நட்பைக்
கொச்சைப் படுத்தியிருப்பேன்.

கொஞ்சமும் எதிர்பாராத
அந்த வார்த்தைகளில்
கண்ணன்
ஏகமாய் அதிர்ந்து நிமிர்ந்தான்.

love41.jpg

10

என்ன சொல்றீங்க வித்யா ?
அதிர்ச்சியின் துளிகள்
தெறிக்க,
படபடப்பாய் கேட்டான் கண்ணன்.

வித்யா சிரித்தாள்.
இளமைக் காலத்தின்
பிள்ளைத் தவறுகள் அவை.
தப்பா நினைக்காதீர்கள் கண்ணன்.

உங்க மேலே ஒரு
ஈர்ப்பு இருந்தது,
ஆனால்
உங்கள் காதலின் நிழல்
உமாவின் தேசத்தில்
விழுவதை அறிந்தபின் நான்
என் நிழலை
தரை விழ அனுமதிக்கவில்லை.

உங்கள் காதலின் ஆழமும்,
வருடங்கள் விலகும் தோறும்
அடர்த்தியாகும்
உங்கள் அன்பும்,
வார இறுதிகளுக்காக நீங்கள்
தவமிருக்கும் வாரங்களும்
எல்லாம் எனக்குத் தெரியும்.

அடிப்பாவி,
அப்படியெல்லாம் சொன்னானா
அந்த அயோக்கியன் ?
உன்னைப் பார்க்காத வார இறுதிகள்
எனக்கு
சாபங்களடி,
அதை வரங்களென்று வர்ணித்தானா ?
உமா என்பவளை நான்
காதலிக்கவே இல்லை,
அன்பு
பாதரச அடர்த்தி என்றானா ?

தொண்டை வரைக்கும் தான்
வந்தன வார்த்தைகள்
பின்
கரைந்து போய்
புன்னகையாய் தான் வெளிவந்தன.

இப்போதெல்லாம் அவை
பிள்ளை விளையாட்டுகளாய்
தோன்றுகின்றன,
ஒரு காலத்தில்
விலக்க முடியா வலியாய் இருப்பவை
காலங்கள் கடந்தபின்
வேடிக்கை நிகழ்வுகள் ஆகின்றன.

பட்டியல் பட்டியலாய்
சேகரித்து வைக்கும் கவலைகள்,
வருடங்கள் வளர்ந்தபின்
நகைச்சுவைச் சம்பவங்கள்
ஆகிவிடுன்றன.

காதல் தோல்வியும் அப்படித் தான்,
தாடியும்,
தனிமைக் கண்ணீரும்
எல்லாம்,
அந்த தவிப்பின் மாதங்கள்
மறையும் வரை தான்.

பிறகு
தாலி, தாய்மை என்று
பயணம் தொடர்ந்தபின்
பழைய நிறுத்தங்களிலெல்லாம்
இறங்கிக் கொள்ளத்
தோன்றுவதில்லை.

வித்யா பேசிக் கொண்டே
போனாள்.

love2.jpg

11

எத்தனை இரவுகளை
மொட்டை மாடியில் படுத்து
தின்றிருக்கிறான்,

எத்தனை நாட்கள்
விண்மீன் எண்ணி எண்ணியே
கண்களை
எரித்திருக்கிறான்,

எத்தனை இரவுகள்
மேகத்தின் மீது ஓர்
காதலின்
தூக்கணாங்குருவிக் கூடு
தொங்காதா என்று
தவமிருந்திருக்கிறான்.

வரம் வந்ததை
அர்ச்சகர் தடுத்திருக்கிறார்.
பின்
வேறு முத்திரை குத்தி
பத்திரப் படுத்தியிருக்கிறார்.

என் கிளைகளைத் தேடி
நடந்த கிளியை
நான்
வேடந்தாங்கல் விருந்தாளி
என்று
தவறாய் எண்யிருக்கிறேன்.

இல்லாத கூட்டுக்குள்
இருவருமே அடைபட்டு
இருந்திருக்கிறோம்.

நினைக்க நினைக்க
கண்ணனுக்கு
ஆச்சரியமாய் இருந்தது.

காதலிப்பவர்கள் எல்லாம்
காதலைச் சொல்லுங்கள் !
எதிர்ப்பு வந்தாலும்
எதிரே பூ வந்தாலும்,
சொல்லாமல் செல்வதை விட
சிறப்பானதே.

சிந்தனைகளை
தற்காலிகமாய் நிறுத்திவிட்டு
தற்காலத்துக்கு வந்தான்
கண்ணன்.

ஆமாம் வித்யா,
நானும் உமாவும் காதலித்து
திருமணம் செய்தோம்.

மகிழ்வின் விடியல்,
புன்னகைப் பகல்,
சந்தோஷத்தின் சாயங்காலம்,
இன்பத்தின் இரவு
என்று
நாட்காட்டிகளும் கடிகாரங்களும்
வாழ்வின்
சிரிப்பை மட்டுமே தருகின்றன.

நீயும்
மகிழ்வாக இருப்பதில்
மிகவும் மகிழ்கிறேன்.
சொல்லி நிறுத்தினான் கண்ணன்.

நான்
சந்தோஷம் தான் கண்ணன்,
ஆனாலும்
கல்லூரி கால கதைகளைக்
கேட்டால்
மோகன் மௌனியாகி விடுகிறான்.

விஷயம் தெரியாமல்
வினவியிருக்கிறேன்,
எதையும் அவர் சொன்னதில்லை,
ஆனாலும்
ஏதோ கவலையின் வலையில்
சிக்கியிருக்கிறார்,
அது மட்டும் தெரிகிறது.

வித்யா சொல்ல
கண்ணன் சிரித்தான்.

சிரித்து நிமிரவும்,
அதுவரை
தொலைவில் தொலைபேசியில்
பேசி நின்ற மோகன்
வித்யாவை நெருங்கவும்,
சரியாக இருந்தது.

கண்ணனைக் கண்ட
மோகன்
அதிர்ச்சிக் கடலில் விழுந்தான்.

love41.jpg

12

எப்படி இருக்கே மோகன் ?
நலமா ?
காதல் கைகூடி விட்டது போல
தெரிகிறதே.

வார்த்தைக் கொடுக்குகளால்
கண்ணன் தீண்டினான்,
வித்யா
உள் அர்த்தம் விளங்காமல்
சிரித்தாள்.

மோகனின் உதடுகளுக்குள்
வார்த்தைகள் உலர்ந்தன,
ஈரப்பதமில்லாததால்
வார்த்தைக்குப் பதில்
எழுத்துக்களே எழுந்து வந்தன.

அ து  வ ந் து.
ஆ.மா.
மோகன் திணறினான்.

பரவாயில்லை மோகன்,
காதல்
புனிதமானது,
அது
முன் ஜென்ம பாவங்களைக் கூட
கழுவி விடும்
கவலைப் படாதே.

வித்யா எனும்
வரம் கிடைத்திருக்கிறது,
வித்யா மூலம் ஓர்
வரம் வந்திருக்கிறது,
இனியும் என்ன
கலையாத் தவங்கள் ?

சாரதி நலமாய் இருக்கிறானா ?
கண்ணன்
மோகனின் முகம் நோக்கி
கேள்வியை வைத்தான்.

தெரியவில்லை,
சாரதியைச் சந்தித்தபின்
பல
வருடங்கள் உருண்டுவிட்டன.

கண்ணன் சிரித்தான்.
அவன்
வித்யாவின் ராக்கி சகோதரனாமே !
ஆச்சரியம் மோகன்.
சுவாரஸ்யமான ஆச்சரியம்.

மோகனுக்கு
கால்களுக்குக் கீழே
நிலம் வழுக்கியது,
விமானத்தின் இறக்கை தொற்றி
பறப்பதாய் உணர்ந்தான்,
எந்நேரமும்
விழுந்து விடக் கூடும்.

மோகனின் அவஸ்தை
கண்ணனுக்கு விளங்கியது,
சரி.
எங்கே பயணம் ?
பேச்சை மாற்றினான் கண்ணன்.

ஆள்குறைப்பில் நான்
அகப்பட்டு விட்டேன்,
இப்போது
தாயகம் திரும்பும் கட்டம்.
வேலை தேடும் காலம்
மீண்டும் ஆரம்பம்.
மோகன் புன்னகைக்க முயற்சித்து
முடியாமல் போகவே
பாதியில் நிறுத்தினான்.

love2.jpg

13

வேலை கிடைக்கும் மோகன்,
கவலை எதற்கு ?

இவையெல்லாம்
தற்காலிகத் தோல்விகள் தான்.

கற்காலக் தவறுகளுக்காய்
கவலைப் படுவதும்,
தற்காலத் தோல்விகளுக்காய்
தற்கொலை செய்வதும்,
மனித வாழ்வின் பலவீனங்கள்.

உனக்குத் திறமை
இருக்கிறது,
மேகத்தை உருவாக்கியே
நீர் பிழியும் திறமைசாலி நீ.

இன்னொரு கிரகத்தைக் கூட
நீ நினைத்தால்
உருவாக்கலாம்,
வானத்தின் ஒரு துண்டை இழுத்து
அதன் மேல் போர்த்தவும் செய்யலாம்.

உனக்குத் தான்
பயிர்களைப் பாதுகாக்கும்
வித்தை தெரியுமே.

எங்கே எதை எப்படி
நகர்த்தவேண்டும் என்பதில்
உனக்கு
சதுரங்கச் சாமர்த்தியம்.

விதை முளைக்கும் வரை
மூச்சு விடாமல் காத்திருக்கும்
பூமியின்
பொறுமை உனக்கு.

வருத்தப்படாதே
வருத்தங்கள் எதையும்
வருவித்து விடாது,
நோய்களைத் தவிர.

சிந்தி,
சவால்களை சந்தி.

உன்னுடைய விவரங்களை
எனக்கும் கொடு,
தெரிந்த இடத்தில் நுழைந்து
உனக்கான வேலை வேட்டையில்
நானும் சில
அம்புகளை விடுகிறேன்

சிரித்தபடியே
கண்ணன் சொல்லச் சொல்ல
மோகனின் மனசில்
பாரம் கூடியது.

மோகன் கண்ணனின்
கரம் பற்றினான்,
விழிகளில் கண்ணீர் துளிர்த்தது.

அது சரி கண்ணன்,
நீ என்ன இங்கே ?
மோகன் கொஞ்சம் இயல்புக்கு
வந்து வினவினான்.

என் மனைவி
இன்று அமெரிக்கா வருகிறாள்.
என்
சுவாசத்தின் சரிபாதியைச் சந்திக்க
இதோ
விமானங்களின்
முதுகைப் பார்த்தபடி
நகம் கடித்துக் காத்திருக்கிறேன்.

உனக்கு
கல்யாணம் ஆயிடுச்சா
வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.
மோகன் உற்சாகமானான்.

யாருடா பொண்ணு ?

வேற யாருடா ?
நான் காதலித்துக் கொண்டிருந்த
என்
மாமன் வீட்டு மல்லிகை
உமா தான்.

கண்ணன் சொல்லி முடித்ததும்
உமாவா ???
என்று ஆச்சரியத்தில் அலறிய
மோகனை
வித்யா  வித்தியாசமாய் பார்த்தாள்.

27 மறுமொழிகள்

  1. சதீஷ் சொன்னது,

    பெப்ரவரி 22, 2008 இல் 1:07 மு.பகல்

    ஐயா…சாமி…இதெல்லாம் என்ன?
    “கதை போல தோணும்…இது கதையும் இல்ல…”

    சொந்தக் கதையா? நண்பனின் கதையா ? சூப்பர்.

    சதீஷ்

  2. selva சொன்னது,

    பெப்ரவரி 22, 2008 இல் 1:15 மு.பகல்

    a wonderful poem.

  3. Balavignesh சொன்னது,

    பெப்ரவரி 22, 2008 இல் 11:27 மு.பகல்

    நீங்கள் கண்ணனா? மோகனா? சாரதியா? உண்மையை சொல்லுங்க …

  4. சேவியர் சொன்னது,

    பெப்ரவரி 22, 2008 இல் 11:45 மு.பகல்

    //சொந்தக் கதையா? நண்பனின் கதையா ? சூப்பர்.//
    :) நண்பர்களின் கதைகளின் தொகுப்புன்னு வேணும்ன்னா வெச்சுக்கலாம் :)

  5. சேவியர் சொன்னது,

    பெப்ரவரி 22, 2008 இல் 11:45 மு.பகல்

    //a wonderful poem//

    நன்றி செல்வா !

  6. சேவியர் சொன்னது,

    பெப்ரவரி 22, 2008 இல் 11:46 மு.பகல்

    //நீங்கள் கண்ணனா? மோகனா? சாரதியா? உண்மையை சொல்லுங்க //

    சேவியர் :)

  7. ayyo சொன்னது,

    மார்ச் 1, 2008 இல் 6:40 பிற்பகல்

    mokka ayyo kappaththungale

  8. சேவியர் சொன்னது,

    மார்ச் 3, 2008 இல் 9:46 மு.பகல்

    //mokka ayyo kappaththungale//

    படிச்சுட்டீங்க இல்ல ? இனிமே உங்கள யாராலயும் காப்பாத்தவே முடியாது :)

  9. shahul சொன்னது,

    ஜூலை 3, 2008 இல் 3:29 பிற்பகல்

    Nalla Muyarchi.Nalla Karppanai (or) Unmai kathai

  10. nithya சொன்னது,

    செப்டம்பர் 12, 2008 இல் 3:34 பிற்பகல்

    the story is mind blowing.poor kannan

  11. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 12, 2008 இல் 3:44 பிற்பகல்

    மனமார்ந்த நன்றிகள் நித்யா :)

  12. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 12, 2008 இல் 3:44 பிற்பகல்

    நன்றி சாகுல்..

  13. nithya chechi சொன்னது,

    செப்டம்பர் 12, 2008 இல் 4:20 பிற்பகல்

    romba mokkaiya iruku pa.

  14. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 15, 2008 இல் 10:33 மு.பகல்

    வருகைக்கு நன்றி சேச்சி… :)

  15. ஜெயா சொன்னது,

    அக்டோபர் 25, 2008 இல் 11:21 பிற்பகல்

    vanakkam seviar anna….

    romba feel panna vachutinga……..super…

  16. சேவியர் சொன்னது,

    அக்டோபர் 28, 2008 இல் 11:22 மு.பகல்

    அப்படியா தங்கச்சி :) வருகைக்கும், கருத்துக்கும் நன்றிகள் பல

  17. Vigneshm சொன்னது,

    நவம்பர் 28, 2008 இல் 12:32 பிற்பகல்

    Sevier Annan avargaluku.

    Ennai mikavum rasikka vaitha ungaluku kodana kodi vanakkangal. Anna.

  18. சேவியர் சொன்னது,

    December 8, 2008 இல் 7:44 பிற்பகல்

    நன்றி தம்பி :)

  19. Venkat சொன்னது,

    December 9, 2008 இல் 1:05 மு.பகல்

    Neenda natkalukku piragu, intha kavithai kathaiyai padithen…muthal murai padithathu polave irunthathu. nalla thirupam

  20. Dinesh சொன்னது,

    December 11, 2008 இல் 5:17 பிற்பகல்

    remba rasithu padithen……….super kadhai…….

  21. சேவியர் சொன்னது,

    December 12, 2008 இல் 3:00 பிற்பகல்

    நன்றி தினேஷ் :)

  22. karthi சொன்னது,

    April 14, 2009 இல் 10:49 பிற்பகல்

    Hello xeviar annaa,,,

    Excellant!!!!

    Mohan evlo periya politics pannirukkaar,,, unmaiya sollunga neenga thaane andha mohan? ha ha ha

  23. சேவியர் சொன்னது,

    April 24, 2009 இல் 4:36 மு.பகல்

    /Hello xeviar annaa,,,

    Excellant!!!!

    Mohan evlo periya politics pannirukkaar,,, unmaiya sollunga neenga thaane andha mohan? ha ha ha
    //

    நன்றி கார்த்தி. “நான் அவன் இல்லை” :D

  24. soma sundaram D சொன்னது,

    மே 11, 2011 இல் 12:19 மு.பகல்

    super twist ya

  25. M.M.Anand சொன்னது,

    December 7, 2011 இல் 2:36 மு.பகல்

    வித்யாவா அது … ரொம்ப அருமை.. இது கற்பணை மாதிரி தெரியலை..உனர்வோட எழுதி இருக்கீங்க .. நீங்க தான கண்ணன்.

  26. சேவியர் சொன்னது,

    பெப்ரவரி 14, 2012 இல் 10:44 பிற்பகல்

    //வித்யாவா அது … ரொம்ப அருமை.. இது கற்பணை மாதிரி தெரியலை..உனர்வோட எழுதி இருக்கீங்க .. நீங்க தான கண்ணன்.

    //
    என்னடா, அண்ணனை இன்னும் காணோமேன்னு பாத்தேன்.

  27. சேவியர் சொன்னது,

    பெப்ரவரி 15, 2012 இல் 2:36 மு.பகல்

    super twist ya

    நன்றி சோமசுந்தரம்.


மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 73 other followers