சுஜாதாவின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பு என்பதை மீண்டும் ஒரு முறை சொல்லத் தேவையில்லை.
.
எழுத்துலகில் எழுத ஆரம்பிக்கும் பெரும்பாலானவர்களுக்கு எழுத்துப் பழக்கத்தை சுஜாதாவின் எழுத்துக்கள் வழிகாட்டியாய் அழைத்துச் செல்கின்றன என்பதை மறுக்க முடியாது.
.
அழுத்தமான புரியாத படிமங்களும், பூடகமான இறுக்கமான வாக்கியக் கட்டமைப்புகளுமே இலக்கியம் என்று நிர்ணயிக்கப்பட்ட சூழலிலும் தன்னுடைய எளிமையான எழுத்து நடையினால் சிக்கலான செய்திகளையும் பளிச்சென்று சொன்னவர் சுஜாதா.
.
எனக்கும் சுஜாதாவுக்குமான நேரில் சந்திக்காத தொடர்பு ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு அம்பலம் இதழில் சிறுகதைகளும், கவிதைகளும் எழுதத் துவங்கிய போது ஆரம்பமானது.
.
பல சிறுகதைகள், அறிவியல் புனைக் கதைகள், கவிதைகள் அம்பலம் இதழில் வெளியாகியது சுஜாதா அவர்களிடம் ஒரு இலக்கிய அறிமுகத்திற்கு வழி வகுத்தது.
.
தமிழின் சிறந்த நானூறு கவிதைகளை அவர் தேர்ந்தெடுத்துத் தொகுத்தபோது என்னுடைய கவிதை ஒன்றும் இடம்பெற்றிருந்தது ஆனந்தம் அளித்தது. அம்பலம் இணையப் படைப்புகளைத் தொகுத்தபோதும் எனது சில படைப்புகள் இடம்பெற்றிருந்தன.
.
சில வருடங்களுக்கு முன் திண்ணை – மரத்தடி இணைந்து இணையத்தில் நடத்திய அறிவியல் புனை கதைப் போட்டியில் நடுவராக அமர்ந்து “ஏலோயி ஏலோயி லாமா சபக்தானி” எனது சிறுகதைக்கு முதல் பரிசு வழங்கினார் என்பதும் என்னுடைய நினைவுகளில் பசுமையாய் இருக்கிறது.
.
இலக்கியம் என்பது சமூகத்தின் நலன்களுக்கும் பயன்படவேண்டும் எனும் நோக்கத்தில் அறிவியல் தகவல்கள் தமிழுக்குத் தந்ததும், மின்னணு இயந்திரம், கணினி மென் தமிழ், என பல தளங்களில் அவருடைய பங்களிப்பு நினைவுகளில் நிலைக்கிறது.
.
சுஜாதாவுக்கும், எழுத்துலகில் இருக்கும் அனைவருக்கும் ஏதோ ஒரு நேரில் சந்திக்காத உறவு இறுக்கமாக இருந்ததையே இந்த இழப்பு உணர்த்தியது.
.
சுஜாதாவின் மறைவு நான் எதிர்பாராதது.
மறுதலிக்க முடியாத பயணம் அனைவருக்கும் உண்டு என்பதை வாழ்க்கை நிரூபித்துக் கொண்டே இருக்கிறது.
.
துயரங்களைத் தூக்கிச் சுமந்து கொண்டே தொடர்ந்து நாம் நடக்க வேண்டியிருக்கிறது.
வாழும் ஜீவன்கள் வீழும். எழும் எழுத்துக்கள் வாழும்










haridossg சொன்னது,
பெப்ரவரி 29, 2008 இல் 8:51 பிற்பகல்
sujatha, enakku, ezhuthalar,rasigan,vinghani,tamizh computer,Ganesh&Vasanth en manasatchigal. Enakku ezhappudhan…………….!
சேவியர் சொன்னது,
மார்ச் 3, 2008 இல் 9:45 மு.பகல்
நன்றி.
கிரிஜா மணாளன். சொன்னது,
மார்ச் 5, 2008 இல் 10:33 பிற்பகல்
கடந்த 02.03.08 அன்று சென்னையில் நிகழ்ந்த உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் நூல்கள் வெளியீட்டு விழாவுக்குச் சென்றபோது, அமரர் சுஜாதாவின் இல்லம் சென்று அவரது துணைவி, மற்றும் மகன்களிடம் எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தோம். > கிரிஜா மணாளன் / சரசுவதி பஞ்சு, திருச்சிராப்பள்ளி.
சேவியர் சொன்னது,
மார்ச் 6, 2008 இல் 10:07 மு.பகல்
உண்மையான நேசத்தின் வெளிப்பாடு அது !
ரமேஷ் வைத்யா சொன்னது,
மார்ச் 6, 2008 இல் 5:40 பிற்பகல்
இறுதிப் பகுதி நெகிழ்த்துவதாக இருந்தது.
சேவியர் சொன்னது,
மார்ச் 7, 2008 இல் 8:32 பிற்பகல்
நன்றி ரமேஷ் வைத்யா !
சந்திரசேகரன் கிருஷ்ணன் சொன்னது,
மார்ச் 11, 2008 இல் 10:25 பிற்பகல்
உங்கள் Sci-fi-ஐ நான் படித்திருக்கிறேன். நல்ல கதை சேவியர். வாழ்த்துகள் (ரொம்ப சீக்கிரம் சொல்லிட்டேனோ
)
சேவியர் சொன்னது,
மார்ச் 12, 2008 இல் 11:45 மு.பகல்
மிக்க நன்றி சந்திரசேகரன். தாமதமாய் சொல்வது சொல்லாமல் இருப்பதை விட மிக மிக மிக…… மிக நல்லது தான்
பகிர்ந்ததில் ஆனந்தமடைகிறேன்.
Shankar’s Weblog சொன்னது,
மார்ச் 25, 2008 இல் 2:44 பிற்பகல்
[...] http://kadagam.blogspot.com/2008/02/blog-post_2716.html http://xavi.wordpress.com/2008/02/28/sujatha/ http://kasiblogs.blogspot.com/2008/02/1935-2008.html [...]