ஒரு தடவை பார்த்ததும்
காதல் வருமா ?
கேட்கிறாய் மெல்ல என் காதைக் கடித்து.
இல்லையே.
காதலிக்கத் துவங்கும் முன்
உன்னை
இரண்டுதடவை பார்த்திருக்கிறேனே.
அப்பாக்கு காதல் பிடிக்காதாம் !
சோகத்துடன் சொல்கிறாய்.
இந்த வயதுக்கு மேல
அப்பாக்கு எதுக்கு காதல் ?
இயல்பாய் தான் சொன்னேன்.
விழுந்து விழுந்து சிரிக்கிறாய்.
நல்லவேளை
அப்பாவுக்கு காதல் பிடிக்கவில்லை.
இதுக்கு முன்னால
யாரையாவது காதலிச்சிருக்கியாடா ?
நெஞ்சில்
கோடு கிழித்துக் கேட்கிறாய்.
உன் தோழியர் யாரும்
அந்த பட்டியலில் இல்லாததால்
பதட்டமில்லாமல் பதில் சொல்கிறேன்.
இல்லை…என்று.
வீட்ல நம்ம காதலை
ஒத்துக்கலேன்னா என்ன பண்றது ?
கலவரக் குரலில் கேட்கிறாய்.
அந்த
நம்பிக்கைல தானே காதலிக்கிறேன்.
மனசுக்குள்
ஒலிக்கும் குரலை அடக்கி,
‘நல்லதே நடக்கும் ‘ என்கிறேன்.













சதீஷ் சொன்னது,
மே 16, 2008 இல் 7:01 பிற்பகல்
ரசிகர்கள்: சேவியர் சார், நீங்க நல்லவரா கெட்டவரா?
சேவியர் : தெரியலியேப்பா !
சேவியர் சொன்னது,
மே 16, 2008 இல் 7:05 பிற்பகல்
கவிதைக்குப் பொய்யழகாமே … யாரோ சொன்னாங்க
vijaygopalswami சொன்னது,
மே 16, 2008 இல் 8:04 பிற்பகல்
அதான் சொல்லிட்டாருல்ல வரும்னு….
அப்புறம் என்ன பொய்யழகு, புண்ணாக்கு அழகு?
கவித சொன்னா அனுபவிக்கனும். ஆய்ராயக்கூடாது…. புரிஞ்சுதா…
சேவியரண்ணன் சொன்னா சரியாத்தான் இருக்கும்….
விக்னேஷ்வரன் அடைக்கலம் சொன்னது,
மே 16, 2008 இல் 8:45 பிற்பகல்
இது காம காதல்
கசமுசா காதல்
விக்னேஷ்வரன் அடைக்கலம் சொன்னது,
மே 16, 2008 இல் 8:46 பிற்பகல்
//சேவியரண்ணன் சொன்னா சரியாத்தான் இருக்கும்….//
தொடா… சொல்லிடாரு… மகா ஜனங்களே கேட்டுகுங்க…
விக்னேஷ்வரன் அடைக்கலம் சொன்னது,
மே 16, 2008 இல் 8:48 பிற்பகல்
//உன் தோழியர் யாரும்
அந்த பட்டியலில் இல்லாததால்
பதட்டமில்லாமல் பதில் சொல்கிறேன்.
இல்லை…என்று.//
கொஞ்சம் கூடவா நாக்கு கூசல… அவ்வ்வ்வ்வ்வ்வ்……
vijaygopalswami சொன்னது,
மே 17, 2008 இல் 2:39 மு.பகல்
விக்கி,
நீ படத்த மட்டும் பார்த்து பின்னூட்டம் போடுவோர் சங்கத்து ஆளுன்னு தெரியாம போச்சே!!!
kalyanakamala சொன்னது,
மே 17, 2008 இல் 9:23 மு.பகல்
அந்த
நம்பிக்கைல தானே காதலிக்கிறேன்.
மனசுக்குள்
இந்த ஜம்பமெல்லாம் இனி சாயாது. கோர்ட்டு வாசலில் நாலு வருஷம் நிக்க வச்சுருவாங்க!
ஜாக்கிரதை!
கமலா
விக்னேஷ்வரன் அடைக்கலம் சொன்னது,
மே 17, 2008 இல் 1:38 பிற்பகல்
//அந்த
நம்பிக்கைல தானே காதலிக்கிறேன்.
மனசுக்குள்
ஒலிக்கும் குரலை அடக்கி,
‘நல்லதே நடக்கும் ‘ என்கிறேன்//
யோவ் கோபாலு நான் இந்த வரிய மீன் பன்னுனேன்யா…
மகாராஜா சொன்னது,
மே 17, 2008 இல் 1:40 பிற்பகல்
ஏம்பா.. உனக்கே இந்த கவிதை எல்லாம் ஓவர் அஹ தெரியல..
ஐயோ……முடியலடா..சாமி..
uumm சொன்னது,
மே 17, 2008 இல் 2:13 பிற்பகல்
செவியர்..இதே..நகைச்சுவையுடன்..காதலி..கிடைக்க…கடவது…
vijaygopalswami சொன்னது,
மே 17, 2008 இல் 2:23 பிற்பகல்
///
செவியர்..இதே..நகைச்சுவையுடன்..காதலி..கிடைக்க…கடவது…
///
நீங்க அவர சபிக்கிறீங்களா, வாழ்த்துறீங்களா?
பு.த.செ.வி. (புரியல, தயவு செய்து விளக்கவும்)
சேவியர் சொன்னது,
மே 19, 2008 இல் 10:02 மு.பகல்
//கவித சொன்னா அனுபவிக்கனும். ஆய்ராயக்கூடாது…. புரிஞ்சுதா…
//
அதானே
சேவியர் சொன்னது,
மே 19, 2008 இல் 10:02 மு.பகல்
//இது காம காதல்
கசமுசா காதல்//
இது பதிலா, விமர்சனமா, கருத்தா, கவிதையா என்பது விளங்கும் வரை நான் மூச்சு விடப் போவதில்லை
சேவியர் சொன்னது,
மே 19, 2008 இல் 10:04 மு.பகல்
////உன் தோழியர் யாரும்
அந்த பட்டியலில் இல்லாததால்
பதட்டமில்லாமல் பதில் சொல்கிறேன்.
இல்லை…என்று.//
கொஞ்சம் கூடவா நாக்கு கூசல… அவ்வ்வ்வ்வ்வ்வ்……
—-
”இதுக்கு முன்னால
யாரையாவது காதலிச்சிருக்கியாடா ” – ன்னு தானே கேக்கறாங்க.. இப்போ காதலிக்கிறியா கேக்கலையே…
இதுல நாக்கு ஏன் கூசுது ?? மாங்கா சாப்பிட்டீங்களோ ???
சேவியர் சொன்னது,
மே 19, 2008 இல் 10:06 மு.பகல்
////அந்த
நம்பிக்கைல தானே காதலிக்கிறேன்.
மனசுக்குள்
ஒலிக்கும் குரலை அடக்கி,
‘நல்லதே நடக்கும் ‘ என்கிறேன்//
யோவ் கோபாலு நான் இந்த வரிய மீன் பன்னுனேன்யா…
//
கொஞ்சம் ஜாலியா எடுத்துக்கோங்க அண்ணாத்தே
ஹி…ஹி…
சேவியர் சொன்னது,
மே 19, 2008 இல் 10:07 மு.பகல்
//ஏம்பா.. உனக்கே இந்த கவிதை எல்லாம் ஓவர் அஹ தெரியல..
ஐயோ……முடியலடா..சாமி..//
முடிஞ்சிடுச்சு
சேவியர் சொன்னது,
மே 19, 2008 இல் 10:07 மு.பகல்
//செவியர்..இதே..நகைச்சுவையுடன்..காதலி..கிடைக்க…கடவது…//
அப்பாடா… நீங்களாவது கவிதையை சரியா புரிஞ்சுகிட்டீங்களே
சேவியர் சொன்னது,
மே 19, 2008 இல் 10:08 மு.பகல்
//கோர்ட்டு வாசலில் நாலு வருஷம் நிக்க வச்சுருவாங்க!
//
வாசல்லயே 4 வருஷம்னா கொஞ்சம் அதிகம் தான்
Geetha சொன்னது,
மே 20, 2008 இல் 5:44 பிற்பகல்
intha kathal enakku theriyathu ana en akka pappa mel uyir avlukkukkum enakkum ulla kalathali oru kavithaiyil slungal pls.
சேவியர் சொன்னது,
மே 20, 2008 இல் 5:58 பிற்பகல்
குழந்தைகள் காதல் பத்தி கவிதைகள் எழுதியிருக்கேனே
su.siva சொன்னது,
மே 20, 2008 இல் 7:25 பிற்பகல்
காதல் பத்தி கவிதைகள் அழுதுகொண்டு