கவிதை : வலியே சுவை

 

உனக்காய்
பூ பறிக்கையில்
விரலில் தைத்த முள்ளை
விலக்க மனமின்றி வைத்திருக்கிறேன்.

தீயை முத்தமிட்டு
சிதறிச் சிரிக்கும்
மத்தாப்பு போல

முள்ளின் முனையில்
முளைக்கும் வலியில்
உன்னைப்பற்றிய
நினைவுகள் பூச்சொரிகின்றன.

12 மறுமொழிகள்

  1. குகன் சொன்னது,

    செப்டம்பர் 3, 2008 இல் 7:44 பிற்பகல்

    வலியின் வரிகளில் தான் அன்பின் முகவரி ஒளிந்திருக்கிறது என்பதை நன்றாகப் பேசும் கவிதை

  2. aruna சொன்னது,

    செப்டம்பர் 3, 2008 இல் 9:50 பிற்பகல்

    வலியில் வரமா??? இது புதுசு….
    அன்புடன் அருணா

  3. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 4, 2008 இல் 2:00 பிற்பகல்

    //வலியின் வரிகளில் தான் அன்பின் முகவரி ஒளிந்திருக்கிறது என்பதை நன்றாகப் பேசும் கவிதை
    //

    நன்றி குகன். :)

  4. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 4, 2008 இல் 2:01 பிற்பகல்

    /வலியில் வரமா??? இது புதுசு//

    நன்றி அருணா :)

  5. ஹேமா சொன்னது,

    செப்டம்பர் 4, 2008 இல் 5:57 பிற்பகல்

    கவிதைக்குப் பொய் அழகு.யாரும் நம்பாதீங்கோ.
    சேவியர் அண்ணா நிறையப் பொய் சொல்றார்.

  6. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 5, 2008 இல் 10:39 மு.பகல்

    பொய் சொன்னாலும் உண்மை போலவே சொல்லணும் இல்லையா :)

  7. pirabuwin சொன்னது,

    செப்டம்பர் 5, 2008 இல் 10:55 மு.பகல்

    வைர வரிகள்

  8. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 5, 2008 இல் 11:43 மு.பகல்

    நன்றி பிரபு :)

  9. நவீன் ப்ரகாஷ் சொன்னது,

    செப்டம்பர் 6, 2008 இல் 3:31 பிற்பகல்

    //தீயை முத்தமிட்டு
    சிதறிச் சிரிக்கும்
    மத்தாப்பு போல

    முள்ளின் முனையில்
    முளைக்கும் வலியில்
    உன்னைப்பற்றிய
    நினைவுகள் பூச்சொரிகின்றன.//

    Excellent… !!!!

    இப்படி வார்த்தைகளால்
    ஓவியம் தீட்ட எனக்கும்
    கற்றுக்கொடுங்கள் சேவியர்.. :) )

  10. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 8, 2008 இல் 11:05 மு.பகல்

    //Excellent… !!!!

    இப்படி வார்த்தைகளால்
    ஓவியம் தீட்ட எனக்கும்
    கற்றுக்கொடுங்கள் சேவியர்.. :) )
    //

    நன்றி நவீன்.

    இதென்ன சின்ன புள்ள தனமா இருக்கு. காதல் கடலில் கவிதைத் தோணிகளை கையும் கணக்குமில்லாமல் இறக்கி விட்டுக் கொண்டிருக்கும் நீங்களா இப்படிப் பேசுவது :D

  11. Karthick சொன்னது,

    செப்டம்பர் 8, 2008 இல் 6:27 பிற்பகல்

    “முள்ளின் முனையில்
    முளைக்கும் வலியில்
    உன்னைப்பற்றிய
    நினைவுகள் பூச்சொரிகின்றன.”

    Nijamaana valin yezhuthu vadivam……

  12. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 9, 2008 இல் 7:01 பிற்பகல்

    நன்றி கார்த்திக்… :) வருகைக்கும், பாராட்டுக்கும்.


மறுமொழியொன்றை வழங்குக