நீ
தராத ஒன்றை
நான் எடுத்துக் கொண்ட
உறுத்தல் நிகழ்கிறது
வசீகரச் சூறாவளியில்
முகத்தின் தயக்கத்தை
மோதிச் சாத்தும்
அழகுகளை
விழிகளின் குழிகளில் நிரப்புகையில்.
எனினும்
அடுத்த உறுத்தல் தினத்துக்காய்
காத்திருப்பதே
வாடிக்கையாகி விட்டது
குறு குறுக்கும் விழிகளுக்கு.





ஹேமா சொன்னது,
ஜனவரி 16, 2009 இல் 3:05 மு.பகல்
அண்ணா,கவனம்.சூறாவளி மனசோடு எல்லாத்தையும் அள்ளிக்கொண்டு போயிடும்!
Ravi kumar ( Kuwait ) சொன்னது,
ஜனவரி 17, 2009 இல் 12:34 பிற்பகல்
/// Good word //
சேவியர் சொன்னது,
ஜனவரி 17, 2009 இல் 8:37 பிற்பகல்
நன்றி ரவி..
சேவியர் சொன்னது,
ஜனவரி 17, 2009 இல் 8:41 பிற்பகல்
நன்றி ஹேமா.. கொஞ்சம் கவனமா இருக்கப் பழகறேன்
இளங்கோவன் சொன்னது,
ஜனவரி 17, 2009 இல் 9:40 பிற்பகல்
என்ன சொல்றதுனே தெரியல… சேவியர்..
உங்கள் வரிகள்… எனக்குள்… என்ன செய்தது பாருங்கள்..
என்
இரவுகளின்
இம்சையும்
இனிமையும்
உன்னால் தான்
நிர்ணயிக்கப் படுக்கின்றது
பெண்ணே!
ஜமால் A M சொன்னது,
ஜனவரி 19, 2009 இல் 12:59 பிற்பகல்
அழகான புகைப்படம்
காதலான வரிகளோடு …
சேவியர் சொன்னது,
ஜனவரி 19, 2009 இல் 5:58 பிற்பகல்
நன்றி ஜமால்
சேவியர் சொன்னது,
ஜனவரி 20, 2009 இல் 9:20 பிற்பகல்
கலக்கறீங்க இளங்கோவன்
குகன் சொன்னது,
ஜனவரி 21, 2009 இல் 11:07 மு.பகல்
சேவியர்,
தனி மடல் ஒன்று அனுப்பி உள்ளேன்.
படித்து பார்க்கவும்.
நன்றி
குகன்
Ragavan சொன்னது,
ஜனவரி 27, 2009 இல் 9:48 பிற்பகல்
வசீகர சூறாவளியில் சிக்கிய தங்களின் வார்த்தைகள் எங்களை அருமையாக வசப்படுத்துகின்றன!