
தலைக்கு மேல்
விடாமல்
கத்திக் கொண்டிருந்ததாம்
பல்லி.
இரவில் சில நாட்களாய்
கனவுகளின்
தொந்தரவாம்.
யாரோ இரவில்
உலுக்கி எழுப்பும்
உணர்வும் வந்ததாம்.
ஊரில்
தாத்தா காலமான
தகவல் அறிந்ததும்
அடுக்கத் துவங்கினர்
ஒவ்வொருவராய்.
அப்போதும்
சத்தம் போட்டது பல்லி.




