மீண்டும் காதலிக்கலாம்…

2

1.

மெளனங்கள்
இறுகிக் கிடக்கும் பாறை போல
சுமையானவை.


உன்
கரம் கோர்த்த
மெளனத்தைத் தவிர

 

  

  

2.

எப்போதும்
உன்னுடன் இருப்பேன்
என்று
சொன்ன நினைவு மட்டும்
இப்போதும்
என்னுடன் இருக்கிறது

0

23.

உன்னுடைய
முத்தங்களின் ஒன்றைத்
திருட முடிந்தால்
என்
தனிமைகளின் உதடுகளுக்கு
தத்துக் கொடுத்திருப்பேன்.

0

4.

வயலில் இட்ட விதை நெல் போல
நடப்பட்டிருக்கிறது
உன் புன்னகை
என் இதய வயலில்.

உன் பார்வை ஈரத்தைப்
பரிமாறினால்
முளைத்து வளரும்
நீ அறியாத ஒரு கணத்தில்

0

5.

2நீ
என்னுடன் இருந்தால்
என் வாழ்க்கை
ஆனந்தமாகும்.


என் வாழ்க்கை
ஆனந்தமாய் இருந்தால்
நீ
என்னுடன் இருக்கிறாய் என்று அர்த்தம்.

0

6

நீ
விலகமாட்டாய் எனும்
என்
நம்பிக்கையின் அலட்சியமே
நீ
விலகிவிடக் காரணம்

0

7.

2

இந்தியாவின் எதிர்காலம்
இளைஞர்களின்
கையில் என்கிறார்கள்
இளைஞர்களின் எதிர்காலம்
உன் கையில்
என்பதை அறியாதவர்கள்.

0

 

 

8

உனது
மனக் கடலுக்குள் மூழ்கி
முத்தெடுக்க முனைகையில்,
நீ
கரையில் ஒதுங்கி
எனக்காய் காத்திருந்தாய்
காதல்
புரிந்தது எனக்கு.

0

9

2காதலிக்கும் இதயம்
நிலவுடன் கதை பேசும்.

காதலிக்கப்படும் இதயம்
நட்சத்திரங்களுடன் நாட்டியமாடும்.

எப்படியோ
காதலில் இருப்பவர்கள்
நிலத்தை நிராகரித்து
வானத்தில் மட்டுமே வலம் வருகிறார்கள்

0

10.

 

உன் கரம் கோர்த்து
விரல்களிடையே விரல் நுழைத்து
பரவசப் படியேறுகையில்
உணர்ந்தேன்
ஒவ்வோர் காதலுக்குள்ளும்
ஒவ்வோர்
பிரபஞ்சம் படுத்திருப்பதை

0

2

அங்கிங்கெனாதபடி
எங்கும்
உன் நினைவுகளின் உருவம்
புன்னகைத்தபோது
உளவியலார் சொன்னார்கள்
கடவுளுக்கு மட்டுமல்ல
காதலுக்கும்
உருவமில்லை என்று

 

 

பிடித்திருந்தால்…. தமிழிஷ் வாக்களியுங்கள்…

27 மறுமொழிகள்

  1. சுபானு சொன்னது,

    ஜூலை 2, 2009 இல் 5:04 பிற்பகல்

    அருமை.. அருமை… அருமை .. :)

  2. Murali சொன்னது,

    ஜூலை 2, 2009 இல் 5:46 பிற்பகல்

    Nice

  3. govindasamy சொன்னது,

    ஜூலை 3, 2009 இல் 5:00 மு.பகல்

    all kavithai it is fine

  4. K.SIVA(Fr) சொன்னது,

    ஜூலை 3, 2009 இல் 5:21 மு.பகல்

    Uruvam Milla Thonru, Akilam Thannil Iruppin, Paruvang Kannai Marikka, Pajilum Mooliyoo Puthithu, Pésum Vaarthai Puthithu, Athanaal Thaanoo Ujirkal, Kaathalai Meelaaji Jennik, Kavithaium Paadum Moliyaaji, Kavinyaruk Kenree Kaathal, Kaninthu Kaviyaajith Thoonra, Miindum Kaathali Yaanaail.”KAATHALI YAANAAL” -K.SIVA-(Fr)

  5. ஷாமா சொன்னது,

    ஜூலை 3, 2009 இல் 10:45 மு.பகல்

    //உன் கரம் கோர்த்து
    விரல்களிடையே விரல் நுழைத்து
    பரவசப் படியேறுகையில் உணர்ந்தேன்
    ஒவ்வோர் காதலுக்குள்ளும்
    ஒவ்வோர் பிரபஞ்சம் படுத்திருப்பதை//

    என்ன சொல்லி மறுமொழியிட????…. Simply superb!

  6. K.SIVA(Fr) சொன்னது,

    ஜூலை 5, 2009 இல் 5:42 மு.பகல்

    Ennum Pirapansam, Ennrum Mirukkaijilé, Kannpathu Ninavoo? – Annrik, Kaji virul Suudoo mélla, Kanavinai Kooduththidum, Kaathalennum Karuppoolthaanoo, Meijin Moolikal, Meenmai Cinnamaajii, Puthumooli Pukunthida, Kalavinai Yakatrik, Kanimooli Péésum, Kavarcith Theevathai, Enravar Ennidath, Thoonrum Mulakam, Irunthidum Poothey, Iruvarullam Inaithey ceyarppadal, Ennrum Eéthilum, Maanidar Jeejikkum, Muththam Thannaal, Mukaththinai Kaluvidum, Kaippoorul Thannaik, Kaathal Enpathaal, Muthak Kavithaiyai,Mulumaiyaaji Suvaithathaal, Puthumai Ulakam, Poolivai Kooduththidap,Makilvaip Perupavar,Maanidamanri, Ujirinam Manaithum, Thilippathu Kaathallonree. “KAATHAL ONREE” -K.Siva- (Fr)

  7. சேவியர் சொன்னது,

    ஜூலை 7, 2009 இல் 4:34 மு.பகல்

    நன்றி நண்பரே சிவா….

  8. சேவியர் சொன்னது,

    ஜூலை 7, 2009 இல் 4:37 மு.பகல்

    //என்ன சொல்லி மறுமொழியிட????…. Simply superb!//

    மிக்க நன்றி ஷாமா :)

  9. சேவியர் சொன்னது,

    ஜூலை 7, 2009 இல் 4:38 மு.பகல்

    நன்றி சிவா… சீக்கிரம் தமிழில் எழுதக் கற்றுக் கொள்க :D

  10. சேவியர் சொன்னது,

    ஜூலை 7, 2009 இல் 4:38 மு.பகல்

    நன்றி கோவிந்தசாமி.

  11. சேவியர் சொன்னது,

    ஜூலை 7, 2009 இல் 4:40 மு.பகல்

    நன்றி முரளி.

  12. சேவியர் சொன்னது,

    ஜூலை 7, 2009 இல் 4:41 மு.பகல்

    நன்றி சுபானு :)

  13. K.SIVA(Fr) சொன்னது,

    ஜூலை 7, 2009 இல் 5:01 மு.பகல்

    THAMILI Addaa VIL Eluthu kinren (thamilil eluthum sakal vasathikalum ilakuvaaka irukkum kaaranthinaal thamiliz down lode kidaithaal nidsayam INTHA Oli Peyarpuk Kavitha Vadivath thai Niikkik KOOLVEN _NANRI UNKAL AALOSANAKKU NIDSAYAM ENRUM EPPOOTHUM ENATHU MATHIPPUKKAL ENRU UNKALUKKU URITHTHAAKU KA. Anpudan Ndpukkuriya:- K.SIVA.

  14. இரவுப் பறவை சொன்னது,

    ஜூலை 11, 2009 இல் 10:21 பிற்பகல்

    சூப்பர் அப்பு……….

  15. senthilkumar சொன்னது,

    ஜூலை 12, 2009 இல் 11:38 மு.பகல்

    pattya kilapuringa sir

  16. சேவியர் சொன்னது,

    ஜூலை 18, 2009 இல் 12:08 மு.பகல்

    மனமார்ந்த நன்றிகள் செந்தில் :)

  17. சேவியர் சொன்னது,

    ஜூலை 18, 2009 இல் 12:08 மு.பகல்

    மிக்க நன்றி இரவுப் பறவை :)

  18. சேவியர் சொன்னது,

    ஜூலை 18, 2009 இல் 12:09 மு.பகல்

    நன்றி இரவுப் பறவை :)

  19. shangaran சொன்னது,

    ஜூலை 19, 2009 இல் 3:06 மு.பகல்

    sema romantic-a irrukku thala. pattaiya kilappunga.

    -SHANGARAN-

  20. jagadeeswaran சொன்னது,

    ஜூலை 23, 2009 இல் 1:09 மு.பகல்

    I AM ALSO READY….

  21. சேவியர் சொன்னது,

    ஜூலை 26, 2009 இல் 12:31 மு.பகல்

    :D

  22. சேவியர் சொன்னது,

    ஜூலை 26, 2009 இல் 12:43 மு.பகல்

    மிக்க நன்றி ஷங்கரன் :D

  23. ஆகஸ்ட் 14, 2009 இல் 12:13 மு.பகல்

    உன்னுடைய
    முத்தங்களின் ஒன்றைத்
    திருட முடிந்தால்
    என்
    தனிமைகளின் உதடுகளுக்கு
    தத்துக் கொடுத்திருப்பேன்.

    nice

  24. K.SIVA(Fr) சொன்னது,

    ஆகஸ்ட் 14, 2009 இல் 5:36 மு.பகல்

    Muththngkal Vilai Poonaal, Arththangkal Veeraaki, Pitham Pidiththaar Pool, Niththam Thadumaarum, Uthadduku Utiyavar Yaatenrunataar, Pakaditkaaji Koorik, Padunthuyaram Koodukkum Cilavuthadu, Arththathai Maatri, Avathik Kullaakaa Nalluthddai, Naadividin Muththangkal Muraiyaakum, Thaththukal Ninaivaakum, Thayangkaamat Kooduthu Vidu, Naalai Kaijiniléé Nanraakaonru,Nadamaadak Kaaththiruppaai,Inree Théédividu Ithayamkulirum, Onrallap Palamuththam,Anranree Kooduthidalaam. “ANRANREE KOODUTH THIDALAAM” –K.SIVA–(Fr)

  25. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 1, 2009 இல் 9:38 பிற்பகல்

    //உன்னுடைய
    முத்தங்களின் ஒன்றைத்
    திருட முடிந்தால்
    என்
    தனிமைகளின் உதடுகளுக்கு
    தத்துக் கொடுத்திருப்பேன்.

    nice
    //

    நன்றி யாழ் அகத்தியன் :)

  26. K.SIVA(Fr) சொன்னது,

    அக்டோபர் 11, 2009 இல் 6:19 மு.பகல்

    “” Muththail Onrai Thrudi Viddaal,Moothaththil Unnaik Kaithucejivéén. “” ++K.SIVA++(Fr)

  27. சேவியர் சொன்னது,

    அக்டோபர் 22, 2009 இல் 9:10 பிற்பகல்

    நன்றி சிவா….


மறுமொழியொன்றை வழங்குக