நன்றி…. வாங்க பழகலாம்…

IMG_0924

எனக்கு ஒரு கெட்ட பழக்கம் உண்டு. ( ஒண்ணு தானா என்று குறுக்குக் கேள்வியெல்லாம் கேட்கக் கூடாது) அது என்னண்ணா, எனக்கு வரும் இ-மெயில்களையெல்லாம் உடனடியா வாசிக்கிறதில்லை. மூட்டையா கட்டிப் போட்டு எப்போவாவது உக்காந்து படிக்கிறது. சமயத்துல சில வாரங்கள் படிக்காமலேயே கிடக்கும். அப்புறம் பார்த்தால் எக்ஸ்பயரி டேட் ஆகிப் போன பொருள் மாதிரி “அடச்..சே” போட வைக்கும்.

இதையெல்லாம் ஏன் சொல்றேன்னா, நட்சத்திரப் பதிவரா இருன்னு சொல்லி வந்த மின்னஞ்சலையும் ரொம்ப லேட்டா தான் பாத்தேன். அவசர அவசரமா நிமிர்ந்து காலண்டரைப் பார்த்தால், அதற்குள் ஒரு நாள் ஓடிப் போச்சு. சரி இருக்கிற நாட்களிலாவது கொஞ்சம் உருப்படியா ஏதாச்சும் பண்ணலாமேன்னு தான் இந்த கடிதமே !

என்னையெல்லாம் ஏன்இப்படி வம்புல மாட்டி விடறாங்க ? நாம எப்பவாவது ஏதாவது எழுதிட்டு ஓரமா கிடக்கிற பார்ட்டியாச்சே என்ற குழப்பம் இன்னும் தீரவில்லை. எவண்டா இவன்ங்கற உங்க கேள்வியும் நியாயமானது தான் ! இருந்தாலும் ஜாம்பவான்கள் ஜம்முன்னு உக்காந்த இடத்துல அப்படி என்ன தான் இருக்குன்னு பாக்கற குறு குறுப்பு பாக்கியிருக்கு !

நன்றி !

இப்படி ஒரு வார்த்தையைச் சொல்லி விட்டுப் போறதுக்குத் தான் இவ்ளோ நீட்டி முழக்கியிருக்கேன்.

தொடர்வோம்

நிலநடுக்கம் : செய்ய வேண்டியது என்ன ?

 earthquake1
சில வினாடிகள், அல்லது சில நிமிடங்கள். அவ்வளவு தான் நிலநடுக்கத்தின் வாழ்க்கை. ஆனால் அதற்குள் பல்லாயிரம் உயிர்களைக் குடித்து முடித்து விடுகிறது நிலநடுக்கம் எனும் ராட்சஸன். சில நாட்களுக்கு முன் 9.1 ரிக்டர் எனுமளவில் திகிலூட்டும் நிலநடுக்கம் அந்தமான் பகுதிகளில் நிகழ்ந்தது. இந்தியாவை சட்டென சுனாமி பீதி தொற்றிக் கொண்டது. நல்லவேளையாக அப்படி ஏதும் நடக்கவில்லை.

நிலநடுக்கங்களை எதிர்கொள்வது குறித்து போதுமான அறிவு மக்களிடம் இல்லை. அது தான் இழப்புகள் அதிகமாகக் காரணம் என்கின்றன ஆய்வுகள். நில நடுக்கம் குறித்த விழிப்புணர்வும், என்ன செய்யவேண்டும் எனும் தெளிவும் இருந்தால் நிலநடுக்கத்தை மன நடுக்கமில்லாமல் எதிர்கொள்ளலாம்.
நிலநடுக்கம் வரும் முன் கவனிக்க வேண்டியவை.

• நில நடுக்கம் போன்ற ஆபத்து எப்போது வேண்டுமானாலும் வரலாம் எனும் எண்ணம் இருக்க வேண்டும். அப்போது தான் திடீர் பதட்டங்களும், அதிர்ச்சிகளும் தவிர்க்க முடியும்.

• வீட்டை இன்சூர் செய்து விடுங்கள்.

• கண்ணாடிப் பொருட்களையும், கனமான பொருட்களையும் அலமாராக்களின் கீழ் அறைகளில் வையுங்கள். கிரைண்டரைத் தூக்கி பரணில் வைக்கும் விபரீதங்கள் வேண்டாம்

• வீட்டிலுள்ள அலமாராக்கள், கபோடுகள் இவற்றையெல்லாம் பூட்டியே வைத்திருங்கள். நிலநடுக்கம் அலமாராக்களைத் திறந்து உள்ளிருப்பதையெல்லாம் வெளியே எறியும் சிக்கல்களைத் தவிர்க்கலாம். சமையலறை கபோடுகள் ரொம்ப வழவழப்பில்லாததாய் இருந்தால் நல்லது. சிறு அதிர்வுகளுக்கெல்லாம் பொருட்கள் கீழே விழாமல் இருக்கும்.

• ஒரு பெட்டியில் முக்கியமான ஆவணங்களைப் பத்திரமாய் வையுங்கள். பிறப்பு சான்றிதழ், ரேஷன் கார்ட், அடையாள அட்டை, இன்சூரன்ஸ் பேப்பர்ஸ், மருத்துவ ரிப்போர்ட் போன்றவை அதில் இருக்கட்டும். முக்கியமாக எளிதில் எடுக்கக் கூடிய இடத்தில் இதை வையுங்கள்.

• ஒரு முதலுதவிப் பெட்டியும் தயாராய் இருக்கட்டும். டார்ச் லைட், பாட்டரி ரேடியோ, முதலுதவிப் பொருட்கள், போர்வை போன்றவை அதன் குறைந்த பட்சத் தேவைகள்.

• படுக்கையின் அருகிலோ, அமரும் இடங்களின் மேலேயோ கனமான புகைப்படங்கள், அலங்காரப் பொருட்கள் எதையும் வைக்காதீர்கள்.

• செல்போன்களை சார்ஜ் செய்து, அதற்குரிய இடத்திலேயே வைத்திருங்கள். அவசர நேரத்தில் எங்கே வைத்தோம் என பதற வேண்டி வராது. அதே போல வீட்டுச் சாவிகளையும் குறிப்பிட்ட இடத்தில் வைத்திருங்கள். அவசர நிமிடத்தில் வாசல் சாவியை எங்கே வைத்தோம் என தேடும் நிலைக்கு ஆளாகாதீர்கள்.

• அவசர உதவி எண்கள் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் தெரிந்திருக்கட்டும். குறிப்பாக டாக்டர், போலீஸ், தீயணைப்பு , மருத்துவமனை, ஆம்புலன்ஸ் போன்றவற்றுக்கான எண்கள்.

• வாட்டர் ஹீட்டர், புத்தக அலமாரி போன்றவை சரியாய் மாட்டப்பட்டிருக்கிறது என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். பெட்ரோல், மண்ணெண்ணை போன்ற எரிபொருட்களையெல்லாம் நெருப்புக்கு வெகு தூரத்தில் வையுங்கள்.

• நிலநடுக்கம் வந்தால் வீட்டுக்கு வெளியே எந்த இடத்தில் சந்திக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே வீட்டில் கலந்துரையாடுங்கள். வீட்டிலுள்ள அனைவருக்கும் குறைந்த பட்ச முதலுதவி வழிகளையும் சொல்லிக் கொடுங்கள். அதே போல நிலநடுக்கம் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதையும் பயிற்சி செய்து கொள்ளுங்கள்.

நிலநடுக்கம் நிகழும் போது கவனிக்க வேண்டியவை.

• நிலநடுக்கம் வந்து விட்டது, வீடு ஆடுகிறது எனில் பதட்டப்படாதீர்கள். தைரியம் கொள்ளுங்கள். வீட்டை விட்டு வெளியேறுவதை விட வீட்டுக்குள் இருப்பதே பாதுகாப்பானது.

• நல்ல கனமான மேஜை, பெஞ்ச், கட்டில், கிச்சன் மேடை என ஏதாவது ஒன்றின் அடியில் பதுங்கிக் கொள்ளுங்கள். சன்னலருகேயோ, கதவின் அருகேயோ நிற்காதீர்கள். கண்ணாடிகள் உடைந்து சிதறி காயம் ஏற்படலாம்.

• வீட்டை விட்டு வெளியேறுவது அதிகபட்ச பாதுகாப்பு என உறுதியாகத் தெரிந்தால் வெளியேறலாம். வெளியேறும் போது கண்களையும் பின்னந்தலையையும் பாதுகாப்பாய்ப் பிடித்துக் கொள்வது அவசியம். இல்லையேல் பறந்து கொண்டிருக்கும் ஏதேனும் பொருள் பட்டு காயம் ஏற்படலாம்.

• எப்படியானாலும் நிலநடுக்கம் நடந்து கொண்டே இருக்கும் போது, அதாவது வீடு ஆடிக்கொண்டே இருக்கும் போது ஓடவே ஓடாதீர்கள். ஒரே இடத்தில் இருங்கள். அங்கும் இங்கும் ஓடுவதால் தான் அதிக காயங்கள் ஏற்படுவதாய் ஆய்வுகள் அடித்துச் சொல்கின்றன

• சமைத்துக் கொண்டிருக்கிறீர்களெனில் உடனடியாக அடுப்பை அணைத்துவிடுங்கள்.

• நில நடுக்க காலத்தில் எக்காரணம் கொண்டும் லிப்டைப் பயன்படுத்தாதீர்கள்.

• வீட்டுக்கு வெளியே வந்துவிட்டீர்களெனில், வெட்ட வெளியில் நில்லுங்கள். அருகில் கட்டிடம், மரங்கள்,டிரான்ஸ்பார்மர், மின் கம்பங்கள் ஏதும் இல்லாமல் இருப்பது முக்கியம்.

• ஒரு வேளை நீங்கள் வண்டி ஓட்டிக் கொண்டிருக்கிறீர்களெனில், உடனடியாக பாதுகாப்பான இடத்தில் வண்டியை நிறுத்துங்கள். எஞ்சினை அணைத்து விட்டு வண்டிக்குள்ளேயே அமைதியாய் இருங்கள். எலக்ட்ரிக் கம்பங்கள், பாலங்கள், போன்ற இடங்களில் வாகனங்களை நிறுத்தாதீர்கள்.

• வீட்டில் செல்லப்பிராணி இருந்தால் அதைக் கையில் வைத்திருக்கவேண்டாம். விலங்குகள் பயந்து போய் கடித்து விட வாய்ப்பு அதிகம்.  

நிலநடுக்கம் முடிந்த பின் கவனிக்க வேண்டியவை.

• யாருக்கேனும் காயம் பட்டிருக்கிறதா என்பதைக் கவனியுங்கள். தேவையான முதலுதவி செய்வது அவசியம். படுகாயம் அடைந்தவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களை அடிக்கடி இடம் மாற்றாதீர்கள். காயமும், விளைவுகளும் விபரீதமாகிவிடக் கூடும்.

• முதியோர்களையும், குழந்தைகளையும் கவனியுங்கள். அவர்களுக்கு தெம்பூட்டுங்கள்.

• நிலநடுக்கம் மீண்டும் வரக் கூடும் எனும் எண்ணம் இருக்கட்டும். அவசரப்பட்டு வீட்டுக்குள் நுழைந்துவிடாதீர்கள். இரண்டாவது நடுக்கத்தில் வீடுகள் விரைவாய் உடையக் கூடும்.

• ஷூவோ, செருப்போ அணிந்து கொள்ளுங்கள். கண்ணாடி, கம்பி, கல் போன்றவை குத்தி காயம் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

• இடிபாடுகளைச் சுற்றி வேடிக்கைக் கூட்டம் போடுவது, சாலைகளை அடைத்துக் கொண்டு கும்பல் சேர்வது இவற்றை தவிருங்கள். மீட்பு பணிகள் தாமதமாகக் கூடும்.

• மீண்டும் வீட்டுக்குள் நுழைந்தாலும் கவனமாய் இருங்கள். கீறல்கள் இருக்கிறதா என கவனியுங்கள். வீட்டிலுள்ள பொருட்கள் எப்போது வேண்டுமானாலும் விழலாம். அதிலும் கபோடுகள் திறக்கும் போது இரட்டைக் கவனம் தேவை.

• நெருப்பு பற்ற வைக்காதீர்கள், காஸ் எங்கிருந்தாவது கசியலாம். எரிபொருட்கள் சிதறிக் கிடக்கலாம் ! கவனம் தேவை.

• மின் வயர்களைத் தொடுவதோ, மின் சுவிட்களைப் போடுவதோ, வேண்டாம்.

• ஒருவேளை நீங்கள் இடிபாடுகளிடையே மாட்டிக் கொண்டு விட்டால் பயப்படாதீர்கள். அவசரப்பட்டு வெளியே வர முயலாதீர்கள். அது ஆபத்தை அதிகரிக்கும். மிரண்டு போய் கத்தாதீர்கள். கத்தினால் நச்சுவாயுவைச் சுவாசிக்கவும், இருக்கும் சக்தியை இழக்கவும் அது காரணமாகிவிடும். அருகிலிருக்கும் சுவரில் கைகளால் தட்டி ஒலி எழுப்புங்கள். கையில் ஒருவேளை விசில் இருந்தால் நல்லது ! ஊதுங்கள் !

• ஒருவேளை நீங்கள் கடற்கரை அருகில் இருந்தால் கவனம் தேவை. பெரிய அலை வரக்கூடும்

• மிக முக்கியமாக விஷயம். எதையும் ஊதிப் பெருசாக்கி பரபரப்பையும், கிலியையும் மக்களிடையே கிளப்பி விடாதீர்கள் !

இந்த சின்னச் சின்ன விஷயங்களைக் கருத்தில் கொண்டால், பெரிய பெரிய நடுக்கங்களைக் கூட தைரியமாய் எதிர்கொள்ளலாம்.

தமிழிஷில் வாக்களிக்க…

கவிதை : உன்னை மட்டுமே பிடிக்கும் !

Meera_Jasmine__52_

 

 

 

மழையில் நனைந்தால்
ஜலதோஷம் பிடிக்குமாம்
எனக்கென்னவோ
மழையில் நனைந்தாலும்
உன்னை
மட்டுமே பிடிக்கிறது
.

o

பெண்ணே…
எத்தனை முறை துவைத்தாலும்
இன்னும்
அழுக்காகி அலைகிறது
மழை மேகக் கூட்டம்,
என்
மனசை அழுக்காக்கி நகரும்
உன் அழகைப் போல.

0

எனக்கு
உன்னைப் பிடிக்கும்,
உனக்குப் பிடிக்குமா
கவிதை ?

0

DSC_0323

 

உன்னைப் பற்றி
எத்தனை கவிதை எழுதினாலும்
அவை
அழகாய் தோன்றுவதில்லை எனக்கு.
என் நண்பர்களோ
அக் கவிதைகளை
பலமாய்
பாராட்டுகிறார்கள்.
!,
அவர்கள் என்னை
நேசிக்கிறார்கள்.
நான் உன்னை நேசிக்கிறேன்.

0

காற்றுடன் நடத்தும்
கத்திச் சண்டையாய்,
நிழலுடன் நடத்தும்
குத்துச் சண்டையாய்
கடல் நீரில்
தோண்டும் சுரங்கமாய்
தொடர்கிறது,
உன்னை நோக்கிய என் காதல்
விண்ணப்பங்கள்.

0

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்….

காமத்தின் கலம்….

 su

விரல் உரசினாலே
மின்னலடித்த காலம் உண்டு
என்
உதடுகள் உரசினால் கூட
சலனமற்றிருக்கிறாய்
இப்போது.

உன்னுடைய
மனசுக்கு வயதாகி விட்டது.
உன்னுடைய
காமத்தின் கலத்தில்
ஊற்றப்பட்டிருந்த காதல்
காலாவதியாகி விட்டிருக்கிறது.

 

உன்னுடைய
பேச்சிலிருந்த
கவிதை காணாமல் போய்
அவசர தொனியே
அலாரமடிக்கிறது எப்போதும்.

உன்னுடைய
கோபத்தின் எருதுகள்
மிருதுவான புன்னகையை
மிதித்துச் செல்கின்றன.

என்னோடு அமர்ந்து
பேசிக்கொண்டிருப்பது
உனக்கு
நேரத்தை வீணடிப்பதாகி விட்டது.

நீர்வீழ்ச்சியிலேயே
தங்கி விட முடியாத
தண்ணீர் துளியின் தவிப்புடன்
ஓடிக் கொண்டே இருக்கிறேன்.

அடுத்த
அருவியின்
வரைபடமில்லாமல்,
வெறும்
எதிர்பார்ப்புகளை ஏந்திக்கொண்டு.

கவிதை : உன் பார்வை, காதலின் கருவறை

உன்னுடம்
பேசும்போதெல்லாம்
பார்க்கவேண்டும் என்று
தவறாமல் தோன்றும்.
ஆனால்
பார்க்கும் போதெல்லாம்
பேசத் தோன்றுவதில்லை.

0

 

a-_49_என் வீட்டு
மீன் குஞ்சுகளுக்குக் கூட
இப்போதெல்லாம்
புன்னகைக்காமல்
தீனி தர இயல்வதில்லை.
நீ என்னை
நெஞ்சில் கொண்ட பின்.

 

0

உன்னை
அதிகமாய் நேசிக்க
நேரம் தேடுவதனாலேயே
என்னை
நேசிப்பதை
நிறுத்தி விட்டேன்.

0

 

2மோகம்,
உடலின் செல்கள்
உறங்கும் வரை.
காதல்
உயிர்ப் பறவை
விழித்திருக்கும் வரை.

 

 

 

 

 

 

நாண்களை
நான்
இறுக்கமாய் பின்னியிருக்கிறேன்.
நீ
ஒவ்வோர் முறை
மோதும் போதும்
இசையைத் தான்
என்னுள்
இறக்கி வைக்கிறாய்.

0

துளைகள் இல்லா
eyeபுல்லாங்குழல்
போல,
காதல் இல்லா வாழ்க்கை !
காற்று இல்லா
புல்லாங்குழலாய்
நீ
இல்லாத நான்

 

0

எது இல்லாமலும்
என்னால்
இருக்க இயலும்,
நீ இருந்தால்

0

vidisha-_9_மலரும் போதும்
உதிரும் போதும்
சத்தம் போடுவதில்லை
ரோஜாப் பூக்கள்,
நம்
காதலைப் போல.

 

 

 

 

 

 

0

அடித்துக் கொண்டே இருக்கிறது
என் காதல் காற்று
நீயோ
அதன் முதல் முனை எங்கேயென்று
வினா தொடுக்கிறாய்.
எங்கே தேடுவேன்
வட்டத்தின் மூலையை ?

0

madhu-_7_காதலுக்கு கண்ணில்லை
என்பதெல்லாம் பொய்,
உன்
கண்ணுக்குள் தான்
காதலில்லை

 

 

 

 

 

 

0

உன்
ஒவ்வோர் பார்வையும்
சாவியில்லா பூட்டொன்றை
எனக்குள்
பூட்டி நகர்கிறது.
எப்போது தான்
பூட்டு தயாரிப்பதை நிறுத்தி
சாவி தயாரிக்க சம்மதிப்பாயோ ?

0

பிடித்திருந்தால்  தமிழிஷில் வாக்களியுங்கள்

Follow

Get every new post delivered to your Inbox.

Join 65 other followers