காமத்தின் கலம்….

 su

விரல் உரசினாலே
மின்னலடித்த காலம் உண்டு
என்
உதடுகள் உரசினால் கூட
சலனமற்றிருக்கிறாய்
இப்போது.

உன்னுடைய
மனசுக்கு வயதாகி விட்டது.
உன்னுடைய
காமத்தின் கலத்தில்
ஊற்றப்பட்டிருந்த காதல்
காலாவதியாகி விட்டிருக்கிறது.

 

உன்னுடைய
பேச்சிலிருந்த
கவிதை காணாமல் போய்
அவசர தொனியே
அலாரமடிக்கிறது எப்போதும்.

உன்னுடைய
கோபத்தின் எருதுகள்
மிருதுவான புன்னகையை
மிதித்துச் செல்கின்றன.

என்னோடு அமர்ந்து
பேசிக்கொண்டிருப்பது
உனக்கு
நேரத்தை வீணடிப்பதாகி விட்டது.

நீர்வீழ்ச்சியிலேயே
தங்கி விட முடியாத
தண்ணீர் துளியின் தவிப்புடன்
ஓடிக் கொண்டே இருக்கிறேன்.

அடுத்த
அருவியின்
வரைபடமில்லாமல்,
வெறும்
எதிர்பார்ப்புகளை ஏந்திக்கொண்டு.

14 மறுமொழிகள்

  1. bashakavithaigal சொன்னது,

    ஆகஸ்ட் 14, 2009 இல் 7:47 பிற்பகல்

    superappu!!!!!!!!!!!!

    nice touching touching poem

  2. ஷாமா சொன்னது,

    ஆகஸ்ட் 15, 2009 இல் 10:20 மு.பகல்

    காதலும் நரைப்பதுண்டா?… கடந்து செல்லும் புன்னகையில் உயிர் அற்றுப் போவதுண்டா?
    மாற்றங்கள் இயல்பு எனினும், காதலுக்கு இயல்பு மாற்றம் இல்லாதிருப்பதே!
    அழகிய கவிதை, முகாரி பாடி நின்றது!

  3. kalyanakamala சொன்னது,

    ஆகஸ்ட் 15, 2009 இல் 10:30 பிற்பகல்

    தரையில் விமானம் இறங்குகிறது போலும்!
    மின்னலடித்த காலத்தை விட சலனமில்லாத காலம் நிலையானது! ந‌ம்பிக்கைக்குறியது!

    அனுபவங்களுடன்
    கமலா

  4. ஹேமா சொன்னது,

    ஆகஸ்ட் 17, 2009 இல் 2:41 மு.பகல்

    அண்ணா உங்கள் கவிதைகளுக்கு என்ன சொல்லி நான் பின்னூட்டம் தர!எப்பவும் பார்த்து மட்டும் போகிறேன்.

  5. s Kumar சொன்னது,

    ஆகஸ்ட் 24, 2009 இல் 12:01 மு.பகல்

    kavithai super. keep it up

  6. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 1, 2009 இல் 9:27 பிற்பகல்

    /kavithai super. keep it up//

    நன்றி குமார் :)

  7. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 1, 2009 இல் 9:30 பிற்பகல்

    //அண்ணா உங்கள் கவிதைகளுக்கு என்ன சொல்லி நான் பின்னூட்டம் தர!எப்பவும் பார்த்து மட்டும் போகிறேன்.

    //

    நன்றி சகோதரி….. உங்கள் வருகை எனக்கு மகிழ்ச்சி எப்போதுமே :)

  8. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 1, 2009 இல் 9:34 பிற்பகல்

    //மின்னலடித்த காலத்தை விட சலனமில்லாத காலம் நிலையானது! ந‌ம்பிக்கைக்குறியது!
    //

    அதிலென்ன சந்தேகம் :)

  9. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 1, 2009 இல் 9:36 பிற்பகல்

    //காதலும் நரைப்பதுண்டா?… கடந்து செல்லும் புன்னகையில் உயிர் அற்றுப் போவதுண்டா?
    மாற்றங்கள் இயல்பு எனினும், காதலுக்கு இயல்பு மாற்றம் இல்லாதிருப்பதே!
    அழகிய கவிதை, முகாரி பாடி நின்றது!

    //

    நரையும் அழகு என்பது புரியும் வரை முகாரி ராகம் தவிர்க்க முடியாததே :D

  10. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 1, 2009 இல் 9:37 பிற்பகல்

    /superappu!!!!!!!!!!!!

    nice touching touching poem
    //

    நன்றி நண்பரே :)

  11. Murali சொன்னது,

    செப்டம்பர் 2, 2009 இல் 6:27 பிற்பகல்

    Awesome sir,
    this poem applicable for both genders ….

  12. chenaa Saravanan சொன்னது,

    செப்டம்பர் 2, 2009 இல் 6:58 பிற்பகல்

    Exprience would become Poem?

  13. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 3, 2009 இல் 6:11 மு.பகல்

    //Exprience would become Poem?//

    பார்த்தது, கேட்டது, படித்தது, உணர்ந்தது எதிலிருந்தும் எழலாம் ஒரு கவிதை :D

  14. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 3, 2009 இல் 6:11 மு.பகல்

    //Awesome sir,
    this poem applicable for both genders ….//

    நன்றி முரளி :)


மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 68 other followers