நட்புக் கவிதைகள்

man-thinking

“எவ்ளோ வருஷமாச்சுடா பாத்து !!! “
என சிலிர்ப்புடன்
பெயர் சொல்லி அழைக்கும்
நண்பனுடன் பேசுகையில்
பயமாய் இருக்கிறது
“எம் பேரு ஞாபகமிருக்கா”
என கேட்டு விடுவானோ ?

அப்பப்போ
போன் பண்ணுடா…
எனும் சம்பிரதாய விசாரிப்புக்கு
“கண்டிப்பா”
என நகர்வான்,
நான் கொடுக்காத நம்பரை
அவன்
எழுதிக் கொள்ளாமலேயே.

பொய்கள் தான்
உண்மையாகவே
நட்பைக் காப்பாற்றுகின்றன.
“நேற்று கூட பேச நினைத்தேன்”
என
யாரோ பேசிக் கடக்கிறார்கள்
செல்போனில்

அவளா இது ?
மீன் வாங்கிச் செல்லும்
பெண்ணிடம்
கொஞ்சமும் மிச்சமில்லை
கால் நூற்றாண்டுக்கு முன்
கண்களில் சிரித்த வசீகரம்.

நட்பு இருப்பதாய்
சொல்லிக் கொள்ளவேனும்
அடிக்கடி
தேவைப்படுகின்றன
வெள்ளிக்கிழமை பார்கள்.

கிராமத்து மௌன வீட்டின்
கம்பி அளியின் ஊடாக
நண்பனின்
புன்னகை முகம் தெரிகிறது.
இறந்து
வெகு நாட்களான பின்னும்.

“ஏழாயிரம் சம்பளம் டா மச்சி”
என
குதூகலித்துச் சொல்லும் நண்பனிடம்
சொன்னதில்லை
பல மடங்கு வாங்கும் நான்.
அவனிடம் மிகுந்திருக்கிறது நட்பு.

யாரை ரொம்பப் பிடிக்கும் ?
எதிர்பார்ப்புடன்
மகளைக் கொஞ்சுகையில்,
தோழியின் பெயரைச் சொல்லி
நட்பைப் பெருமைப்படுத்துகிறது
நர்சரி !

பிடித்திருந்தால் தமிழிஷில் வாக்களிக்கலாமே…

28 மறுமொழிகள்

  1. விஜய் சொன்னது,

    அக்டோபர் 30, 2009 இல் 4:32 மு.பகல்

    நட்புக்கு மரியாதை

    மிக அழகு

    விஜய்

  2. rajan சொன்னது,

    அக்டோபர் 30, 2009 இல் 5:04 பிற்பகல்

    மிக அழகு

  3. குந்தவை சொன்னது,

    அக்டோபர் 31, 2009 இல் 4:56 மு.பகல்

    //போன் பண்ணுடா…
    எனும் சம்பிரதாய விசாரிப்புக்கு
    “கண்டிப்பா”
    என நகர்வான்,
    நான் கொடுக்காத நம்பரை
    அவன்
    எழுதிக் கொள்ளாமலேயே

    :(

  4. ஷாமா சொன்னது,

    அக்டோபர் 31, 2009 இல் 9:34 மு.பகல்

    //…பயமாய் இருக்கிறது “எம் பேரு ஞாபகமிருக்கா” என கேட்டு விடுவானோ ?//

    சேவியர்…நீங்க அடிக்கடி நண்பர்கள் பெயரை மறப்பதுண்டா?…
    சில சமயங்களில் மறந்து விடுவதாக எப்போதோ குறிப்பிட்டது போல் ஒரு ஞாபகம்…உண்மையா?

    //…நகர்வான், நான் கொடுக்காத நம்பரை அவன் எழுதிக் கொள்ளாமலேயே.//

    ஆஹாஆஆ…..

    //பொய்கள் தான் உண்மையாகவே நட்பைக் காப்பாற்றுகின்றன…//

    ம்ம்ம்ம்ம்…நண்பர்கள் மனம் நோகக் கூடாதென்பதற்காகவா?…..

    //….நண்பனின் புன்னகை முகம் தெரிகிறது.
    இறந்து வெகு நாட்களான பின்னும்.//

    மாறும் உலகில் மாறாதிருப்பது “கடந்தகால நினைவுகள்” தாம்!

    //…தோழியின் பெயரைச் சொல்லி
    நட்பைப் பெருமைப்படுத்துகிறது நர்சரி!//

    தன்னுணர்வைப் பகிர்ந்து கொள்ளும் தோழமை
    வெள்ளை மனம் கொண்ட பிள்ளைக்கும் தெரிந்திருக்கிறது!
    அழகு!…
    வாழ்த்துகள்!….
    தொடரட்டும் கவிப்பயணம்!

  5. சேவியர் சொன்னது,

    நவம்பர் 3, 2009 இல் 12:58 மு.பகல்

    சேவியர்…நீங்க அடிக்கடி நண்பர்கள் பெயரை மறப்பதுண்டா?…
    சில சமயங்களில் மறந்து விடுவதாக எப்போதோ குறிப்பிட்டது போல் ஒரு ஞாபகம்…உண்மையா?
    //
    பழைய நண்பர்களை ரொம்பவே ஞாபகம் வைத்திருப்பேன். எல்லா சமாச்சாரமும் நினைவுக்கு வரும். பெயர் மட்டும் வராது.
    அதைத் தெரிஞ்சுக்க ஒரு டெக்னிக் வெச்சிருக்கேன். உன் ஆபீஸ் மெயில் ஐடி சொல்லு மச்சி என்பேன். பெரும்பாலும் பெயர் இருக்கும் ! சட்டென நினைவுக்குள் வந்து விடும் :D

    நன்றி ஷாமா, வருகைக்கும், கருத்துக்கும்,அன்புக்கும்…

  6. சேவியர் சொன்னது,

    நவம்பர் 3, 2009 இல் 1:01 மு.பகல்

    கவலைப்படாதீங்க குந்தவை… எல்லாம் சகஜம் தான் ;)

  7. சேவியர் சொன்னது,

    நவம்பர் 3, 2009 இல் 1:02 மு.பகல்

    நன்றி ராஜன் & விஜய் !

  8. வால்பையன் சொன்னது,

    நவம்பர் 3, 2009 இல் 7:07 பிற்பகல்

    நிதர்சனம்!

  9. K.SIVA(Fr) சொன்னது,

    நவம்பர் 4, 2009 இல் 8:40 மு.பகல்

    Poojsoolli Pukaledukaa Vaalkkai,Méjorunaal Thélivaakkum Poothu, Unmaithaan Thulangki Vidumkannaa, Aathalinaal Kaathalukkup Poojpéci, Kaariyathai Niraivérum Kaathail, Poojjilai Niyamééthaan Enpathuthaan, Aathalinaal Kathalukkuk Kajikaadi, Nitrkkinréén Aathalinaal Sukamaaka, Valinthuvidu Nithamaaka Niiduniir VALLVIIR. “NIIDU NIIR VAALKA” ++K.SIVA++(Fr).

  10. உதய தாரகை சொன்னது,

    நவம்பர் 4, 2009 இல் 10:32 மு.பகல்

    //“எவ்ளோ வருஷமாச்சுடா பாத்து !!! “
    என சிலிர்ப்புடன்
    பெயர் சொல்லி அழைக்கும்
    நண்பனுடன் பேசுகையில்
    பயமாய் இருக்கிறது
    “எம் பேரு ஞாபகமிருக்கா”
    என கேட்டு விடுவானோ ?//

    நச்.

    கவிதைகளால் பெறுமதியான நட்பின் பெரும் வரலாறு சொல்லப்பட்ட விதம் அபாரம். அடிக்கடி சில வேளை நட்பினில் விரிசல்கள் சிலவேளைகளில் ஏற்பட்ட போதும், நட்பின் கனதி மாறாமல் யுகங்கள் தாண்டியும் கடத்தப்படும் நட்பின் இயல்பு அதிசயம்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    இனிய புன்னகையுடன்,
    உதய தாரகை

  11. ஹேமா சொன்னது,

    நவம்பர் 4, 2009 இல் 10:54 மு.பகல்

    அண்ணா உங்க பக்கம் அடிக்கடி வரணும்.இல்லாட்டி என்னையும் மறந்துபோவீங்க !

  12. uumm சொன்னது,

    நவம்பர் 4, 2009 இல் 8:32 பிற்பகல்

    அருமை.யதர்த்தமான நட்பின் பக்கங்கள் ரசிக்கவைக்கிறது தோழரே…

  13. பெயரிலி சொன்னது,

    நவம்பர் 5, 2009 இல் 8:12 பிற்பகல்

    ரொம்ப அருமையான, உண்மையான கவிதை…
    கேக்குறதுக்கு மன்னிக்கவும்.. என்னை ஞியாபகம் இருக்குங்களா???

  14. rathinapugazhendi சொன்னது,

    நவம்பர் 7, 2009 இல் 8:12 பிற்பகல்

    உங்கள் மீது கோபம்தான் நண்ப்ரே வருகிறது இவ்வளவு நாட்களாய் உங்கள் வலைப்பூ முகவரியை தெரிவிக்காமல் இருந்ததற்கு. மிகவும் சிறப்பாக வடிவமைத்திருக்கிறீர்கள். நட்புக் கவதை ஆர்பாட்டமில்லாத அழகான கவிதை. வாழ்த்துகள்.

  15. vijaygopalswami சொன்னது,

    நவம்பர் 8, 2009 இல் 2:51 மு.பகல்

    அண்ணே….

    இங்கே பின்னூட்டம் போட்டவங்க எல்லாம் ரொம்ப மோசமானவங்க…

    நீங்க ஒன்னும் பயப்படாதீங்க…

    :(

    என்னை மட்டும் காப்பாத்துங்கண்ணே….

    [சேவியர்: அடச் சீ... அடிக்கடி ஆதவன் ட்ரெய்லர் பாக்காதேன்னு சொன்னா கேக்கறியா நீ...]

  16. சேவியர் சொன்னது,

    நவம்பர் 9, 2009 இல் 11:10 பிற்பகல்

    //அண்ணே….

    இங்கே பின்னூட்டம் போட்டவங்க எல்லாம் ரொம்ப மோசமானவங்க…

    நீங்க ஒன்னும் பயப்படாதீங்க
    /

    என்ன தம்பி… நீ.. இன்னா பேசறேன்னு பிரியலையே… ;)

  17. சேவியர் சொன்னது,

    நவம்பர் 9, 2009 இல் 11:29 பிற்பகல்

    //உங்கள் மீது கோபம்தான் நண்ப்ரே வருகிறது இவ்வளவு நாட்களாய் உங்கள் வலைப்பூ முகவரியை தெரிவிக்காமல் இருந்ததற்கு. மிகவும் சிறப்பாக வடிவமைத்திருக்கிறீர்கள். நட்புக் கவதை ஆர்பாட்டமில்லாத அழகான கவிதை. வாழ்த்துகள்//

    வருகைக்கு நன்றி நண்பரே. உங்கள் வருகையில் மிகவும் மகிழ்கிறேன். அடிக்கடி வருகை தாருங்கள்.

  18. சேவியர் சொன்னது,

    நவம்பர் 9, 2009 இல் 11:30 பிற்பகல்

    /ரொம்ப அருமையான, உண்மையான கவிதை…
    கேக்குறதுக்கு மன்னிக்கவும்.. என்னை ஞியாபகம் இருக்குங்களா???//

    போன வாரம் தானே சந்திச்சோம். அதுக்குள்ள மறக்க முடியுமா என்ன :)

  19. சேவியர் சொன்னது,

    நவம்பர் 9, 2009 இல் 11:37 பிற்பகல்

    //அருமை.யதர்த்தமான நட்பின் பக்கங்கள் ரசிக்கவைக்கிறது தோழரே…//

    நன்றி உமா :)

  20. சேவியர் சொன்னது,

    நவம்பர் 9, 2009 இல் 11:37 பிற்பகல்

    //அண்ணா உங்க பக்கம் அடிக்கடி வரணும்.இல்லாட்டி என்னையும் மறந்துபோவீங்க //

    வாய்ப்பே இல்லை. நண்பர்களை மறந்தாலும், சகோதரியை எப்படி மறப்பேன் :)

  21. சேவியர் சொன்னது,

    நவம்பர் 10, 2009 இல் 12:00 மு.பகல்

    //கவிதைகளால் பெறுமதியான நட்பின் பெரும் வரலாறு சொல்லப்பட்ட விதம் அபாரம். அடிக்கடி சில வேளை நட்பினில் விரிசல்கள் சிலவேளைகளில் ஏற்பட்ட போதும், நட்பின் கனதி மாறாமல் யுகங்கள் தாண்டியும் கடத்தப்படும் நட்பின் இயல்பு அதிசயம்.

    பகிர்வுக்கு நன்றிகள்
    //

    நன்றி. அருமையான உரைநடை உங்களுக்கு வாய்த்திருக்கிறது !

  22. சேவியர் சொன்னது,

    நவம்பர் 10, 2009 இல் 12:02 மு.பகல்

    நன்றி சிவா…

  23. சேவியர் சொன்னது,

    நவம்பர் 10, 2009 இல் 12:03 மு.பகல்

    நன்றி வால்ப்பையா… :)

  24. நவம்பர் 10, 2009 இல் 12:31 மு.பகல்

    மீண்டும் மிர்த்தன் பேசுகிறேன்!
    தங்களின் வருகைக்கு நன்றி பல!
    உங்களின் நினைவுகளுக்கு, வார்த்தைகள் வடிவம் கொடுக்கும் விதம் மிகவும் நயமாக உள்ளது!
    உங்கள் மேல் அளவில்லாத பொறாமை கொள்கிறேன் மரியாதையுடன்! உங்களை போல் ஒருமுறை பிறக்க.
    உண்மைதான்! உங்களுக்கும் கடவுள் கை திறக்க வேண்டுமாய் வேண்டிக் கொள்கிறேன் உங்கள் விருப்பத்துடன்!

    நிச்சயம் மறுமுறை வருகிறேன் என் கடமையாய் ஒரு விசிறியாய்!!!

    (பின் குறிப்பு: தளம் அழகாக உள்ளதை சொல்லி இருக்கிறீர்கள்! கவிதைக்கு கருத்து சொல்லவில்லையே! (ஹா ஹா ஹா)

    அன்புடன்,
    மிர்த்தன்!
    (mirthonprabhu.blogspot.com)

  25. kannan சொன்னது,

    நவம்பர் 10, 2009 இல் 2:47 மு.பகல்

    NATPU SOLLAVAVATHU VENDUM VELLIKKILAMAI BARGAL………………… ANBU NANBARE KAVITHAI MIGA ARUMAI

  26. சேவியர் சொன்னது,

    நவம்பர் 10, 2009 இல் 3:05 மு.பகல்

    நன்றி மிர்த்தன். உங்களைப் போன்ற நண்பர்கள் கிடைப்பது தான் தமிழ் தரும் வரம் எனக்கு.

    உங்கள் தளம் என்பது உங்கள் கவிதையையும் சேர்த்துத் தானே நண்பரே :)

  27. sivasankar சொன்னது,

    நவம்பர் 10, 2009 இல் 8:21 பிற்பகல்

    kavithai super da machi………………………!

  28. சேவியர் சொன்னது,

    நவம்பர் 11, 2009 இல் 1:45 மு.பகல்

    நன்றி மச்சி…


மறுமொழியொன்றை வழங்குக