ஆளில்லாத தீவிலெனில்
இந்த
சில்மிஷம்
இத்தனை சுவையாய்
இருந்திருக்குமா ?
விரலில் வழியும்
தேனுக்கு இருக்கும்
சுவை
தேனில் அமிழ்ந்திருந்தால்
கிடைத்திருக்குமா ?
கவசங்களே
தேவைப்படாத காதல்
இனித்திருக்குமா ?
பின்னிருக்கைப்
பயணங்கள் தரும் பேருந்து,
கிசுகிசுப்புப்
பேச்சுக்களுக்கான
தொலைபேசி நிறுத்தங்கள்
யார் கண்ணிலும்
படாமல்
உன்னை வந்தடையும்,
பின்னிரவில் எழுதப்பட்ட
மோக மின்னலடிக்கும்
கடிதங்கள்,
இவை தானடி
இனிப்பு.
என்று தான் பேசமுடிகிறது.
படகுக் கரையில்
பயந்தபடி அமர்ந்திருக்கும்
மாலையில்.








