கவிதை : கீர கீரேய்ய்ய்….

“கீர…கீரேய்….”
தெருவில் ஒலிக்கும்
கீரை ஒலிகள்
குறைந்து விட்டன.

தள்ளு வண்டியில் வரும்
தக்காளியும்,
வேகாத வெயிலில் வரும்
வெங்காயமும்
அத்தி பூத்தார் போல் !

வாசனை விரித்துத் திரியும்
முண்டாசுக் கிழவரின்
பழ வண்டி கூட
பழைய கதையாய்.

சர்வமும்
ரிலையன்ஸ் பிரஷ்களின்
குளிர் சாதனக் கூடுகளில்
அடைகாக்கத் துவங்கியபின்
பார்க்கிங் மட்டுமே
மக்களின்
பிரச்சினையாகிப் போனது

என்ன தான்
செய்து கொண்டிருக்கிறார்களோ
கூடைத் தலைகளில்
கீரை இலைகளில்
நேசம் விற்றுத் திரிந்தவர்கள்.

 

கவிதை பிடித்திருந்தால் வாக்களியுங்கள்.

 

15 மறுமொழிகள்

  1. வித்யாசாகர் சொன்னது,

    ஆகஸ்ட் 8, 2010 இல் 9:44 பிற்பகல்

    மிக மிக அருமையான கவிதை சேவியர். சிந்திக்கவும் ரசிக்கவும் வைத்தது.

    வித்யாசாகர்

  2. சேவியர் சொன்னது,

    ஆகஸ்ட் 8, 2010 இல் 9:57 பிற்பகல்

    இவ்வளவு விரைவாய் ஒரு பின்னூட்டம் எதிர்பார்க்கவில்லை. நன்றி 

  3. seasonsali சொன்னது,

    ஆகஸ்ட் 9, 2010 இல் 6:55 மு.பகல்

    நாங்கள் தப்பித்தோம் . அதர்க்குத்தான் கிராமத்தில் வாழ வேண்டும்.

  4. சேவியர் சொன்னது,

    ஆகஸ்ட் 10, 2010 இல் 5:36 மு.பகல்

    உண்மை தான், கிராமம் சுகமானது !

  5. VIKNESHWARAN ADAKKALAM சொன்னது,

    ஆகஸ்ட் 10, 2010 இல் 1:57 பிற்பகல்

    வாவ்…. அழகான கவிதை அண்ணா… இரசித்தேன்…

  6. ஆகஸ்ட் 25, 2010 இல் 3:15 பிற்பகல்

    நேசம் விற்றுத் திரிந்தவர்களை கவிதை பாசமாய் நினைவூட்டியது. கொஞ்சமேனும் நானும் என் கிராமத்துக்கு சென்று திரும்பியதைப்போல உணர்ந்தேன், திருப்தி.

  7. PATHI சொன்னது,

    ஆகஸ்ட் 29, 2010 இல் 9:37 பிற்பகல்

    KAVITHAI
    RASANAIKKURIYADU
    NIGALVUGAL
    VARUTTHATHTITKURIADU

  8. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 1, 2010 இல் 10:07 பிற்பகல்

    நன்றி பதி.

  9. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 1, 2010 இல் 10:13 பிற்பகல்

    //நேசம் விற்றுத் திரிந்தவர்களை கவிதை பாசமாய் நினைவூட்டியது. கொஞ்சமேனும் நானும் என் கிராமத்துக்கு சென்று திரும்பியதைப்போல உணர்ந்தேன், திருப்தி//

    நன்றி சார்….

  10. naanarkaadan சொன்னது,

    செப்டம்பர் 9, 2010 இல் 9:51 பிற்பகல்

    arumaiyaana kavithai

  11. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 12, 2010 இல் 10:38 பிற்பகல்

    //arumaiyaana kavithai//

    நன்றி :)

  12. குயினி ஷாமா சொன்னது,

    செப்டம்பர் 20, 2010 இல் 5:10 மு.பகல்

    //என்ன தான்
    செய்து கொண்டிருக்கிறார்களோ
    கூடைத் தலைகளில்
    கீரை இலைகளில்
    நேசம் விற்றுத் திரிந்தவர்கள்.//

    அழகிய வரிகள்!… “நேசமே” அருகி வருகிறதென்பதென்னவோ வாஸ்தவம்தான்… கவலையைத் தூண்டி ஏங்கவும் வைக்கிறது… அற்புதம்!… வாழ்த்துகள் சேவியர்!

  13. SelvaKumar.M சொன்னது,

    மார்ச் 18, 2011 இல் 11:08 பிற்பகல்

    விவசாயக் குடும்பத்தில் பிறந்த எனக்கு இன்னமும் கிராமம் சென்றால் கீரை விற்கும் வேலை எப்போதாவது இருக்கும்.

  14. சேவியர் சொன்னது,

    மார்ச் 23, 2011 இல் 5:31 பிற்பகல்

    வாழ்வின் அடையாளங்களைத் தொலைத்து விடாமல் இருக்கும் மனநிலையே உயர்வானது. ரொம்ப நன்றி செல்வகுமார்.


மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 68 other followers