எழுத்துக்கள் மீது
நடராஜ விரல்கள்
நாட்டியமாடுவதும்,
கையடக்க மெளஸை
கை விரல்களால்
சீண்டிச் சிரிப்பதும்,
மாயப் படங்களில்
மயங்கிக் கிடக்க
இணையப் படிகளில்
தவமிருப்பதும்,
என
கணினி வேலை
எளிதென்பது
பலருடைய கணிப்பு.
உண்மையைச் சொல்வதெனில்
வயல் தேர்வு துவங்கி
அறுவடை வரை,
விவசாயமும்
மென்பொருள் தயாரிப்பும்
ஒன்று தான்.
ஒன்று
உழுது செய்வது
இன்னொன்று
எழுதி செய்வது.
ஒன்று தமிழ் பெயர்களால்
தாலாட்டப் படுவது
ஒன்று
ஆங்கிலப் பெயர்களால்
அறியப் படுவது.
வீடு சென்று சேரும்
இரவு பதினோரு மணி சொல்லும்.
கணினி வேலை என்பது
எளிதானதே அல்ல.
கவலையாய்க் கேட்பார்
காத்திருக்கும் அப்பா.
வேலை ரொம்ப கஷ்டமா ?
சிரித்துக் கொண்டே சொல்வேன்
கம்யூட்டர் வேலைல
கஷ்டம் என்னப்பா கஷ்டம்
ஃ






குயினி ஷாமா said,
February 10, 2011 at 4:54 am
//சிரித்துக் கொண்டே சொல்வேன்
கம்யூட்டர் வேலைல கஷ்டம் என்னப்பா கஷ்டம்//
“கோமாளியின் நிஜமுகத்தை யாரறிவார்?”
padmahari said,
February 10, 2011 at 10:10 pm
கவித கவித…..!!
சேவியர் said,
February 20, 2011 at 9:20 pm
//கவித கவித…..!!
//
நன்றி பத்மஹரி..
balu said,
March 22, 2011 at 11:10 pm
kavingarey ungalai vaztha enaku thaguthi ellai erunthalum enoda vazthugal nengal cenimavil oru round varalamay please try sir all the best
சேவியர் said,
March 23, 2011 at 5:19 pm
பாலு,,, நன்றி. வாய்ப்பு வந்தால் பார்க்கலாம். சினிமாவுக்காக அலையும் மனநிலையும், நேரமும் இல்லை
jensadevi said,
April 29, 2011 at 10:16 pm
xavier sir fentastic kavithai, super super super
jensadevi said,
April 29, 2011 at 10:17 pm
xavier sir kavithai super! super! super!
சேவியர் said,
May 2, 2011 at 6:09 pm
//xavier sir kavithai super! super! super//
மிக்க நன்றி
சேவியர் said,
May 2, 2011 at 6:09 pm
/xavier sir fentastic kavithai, super super super
//
மிக்க நன்றி.
SUGU said,
June 1, 2011 at 7:47 pm
UNGALIN KAVITHAI MIGAVUM MANATHAI VATHAIKKIRATHU SO GOOD LUCK FOR U!
bakyalakshmi said,
July 6, 2011 at 12:22 am
very nice………………….congrats…..
சேவியர் said,
February 15, 2012 at 12:39 am
நன்றி பாக்யா…
சேவியர் said,
February 15, 2012 at 2:24 am
UNGALIN KAVITHAI MIGAVUM MANATHAI VATHAIKKIRATHU SO GOOD LUCK FOR U!
//
நன்றி சுகு.
S.E.A.Mohamed Ali. "nidurali" said,
March 12, 2012 at 2:47 am
இனாமாக கிடைத்தால் அனைத்தும் பிடிக்கும் என்று சொல்லும் காலம் .அருமையான கவிதை. ‘கணினி’ கவிதையில் கிடைக்கும் போது தூக்கிச் செல்ல கடினமா என்ன! கஷ்டம் என்னப்பா கஷ்டம்.
சேவியர் said,
March 13, 2012 at 8:46 pm
நன்றி சார்
Praveen said,
August 31, 2012 at 3:01 am
fact fact fact…
JAYKRISHNAN said,
March 22, 2013 at 8:39 am
SUPER