வரவேற்பறையிலேயே
வைக்கப்படுகிறது
காட்சிப் பொருட்கள்
நிறைந்து வழியும்
கண்ணாடி அலமாரி.
சொல்லாமல் சொல்லும்
பெருமைப் பதக்கங்களும்,
பரிசாய்க் கிடைத்த
பஞ்சுப் பொம்மைகளும்,
வியக்க வைக்கும்
வெளிநாட்டுப் பொருட்களுமாய்.
கவனமாய் அடுக்கப்பட்டிருக்கும்
அதற்குள்
எப்போதும்
இடம்பெறுவதில்லை
தோல்விகளின் சின்னங்களோ,
அவமானங்களின் அறிவிப்புகளோ.
இடப்பற்றாக்குறை
நெருக்கியடிக்கையில்
இடம் பெயரும் பொருட்கள்
தொலைக்காட்சிக்கு மேலும்
இடம் பிடிப்பதுண்டு.
எங்கும் இட ஒதுக்கீடு
கிடைக்காதவை
படுக்கையறை பரணில்
பெட்டிகளுக்குள் பத்திரமாய்.
வரும் குழந்தைகள்
விளையாடக் கேட்பினும்
மூச்சு முட்ட
மூடிக் கிடப்பவை மட்டும்
திறக்கப் படுவதேயில்லை.
உள்ளிருந்து
ஏக்கமாய்ப் பார்த்துக் கொண்டிருக்கும்
பொம்மைகள்
இயலாமையின் உச்சத்தில்
0






pradheep சொன்னது,
மே 18, 2011 இல் 6:14 பிற்பகல்
/* எப்போதும்
இடம்பெறுவதில்லை
தோல்விகளின் சின்னங்களோ,
அவமானங்களின் அறிவிப்புகளோ */
super..
குயினி ஷாமா சொன்னது,
ஜூலை 7, 2011 இல் 1:43 மு.பகல்
//உள்ளிருந்து ஏக்கமாய்ப்
பார்த்துக் கொண்டிருக்கும் பொம்மைகள்
இயலாமையின் உச்சத்தில்//
முத்தாய்ப்பின் உச்சமாய் கவிதையின் கடைசி வரிகள்….அழகோ அழகு!
'வைகை' ரூபன் சொன்னது,
ஆகஸ்ட் 28, 2011 இல் 5:06 மு.பகல்
அழாகான, கள்ளம்கபடமற்ற கவிதை. சேவியின் சிரிப்பை போலவே.. வாழ்த்துக்கள் தோழா
Sakthi Priya சொன்னது,
நவம்பர் 24, 2011 இல் 6:02 பிற்பகல்
கவிதையை படித்தேன்….
கண் முன் விரிந்தது
வரவேற்பறை……
சூப்பர்………
vanitha சொன்னது,
ஜனவரி 11, 2012 இல் 6:18 பிற்பகல்
uyir illathavaikkuda uyir koduthal evvaaru irukumo appadi irunthathu unkal kavithai
சேவியர் சொன்னது,
பெப்ரவரி 14, 2012 இல் 10:03 பிற்பகல்
//uyir illathavaikkuda uyir koduthal evvaaru irukumo appadi irunthathu unkal kavithai
//
மிக்க நன்றி வனிதா…
சேவியர் சொன்னது,
பெப்ரவரி 14, 2012 இல் 11:04 பிற்பகல்
//கவிதையை படித்தேன்….
கண் முன் விரிந்தது
வரவேற்பறை……
சூப்பர்………
//
நன்றி சகோதரி…
சேவியர் சொன்னது,
பெப்ரவரி 15, 2012 இல் 12:14 மு.பகல்
//அழாகான, கள்ளம்கபடமற்ற கவிதை. சேவியின் சிரிப்பை போலவே.. வாழ்த்துக்கள் தோழா
//
நன்றி வைகை ரூபன்
சேவியர் சொன்னது,
பெப்ரவரி 15, 2012 இல் 12:38 மு.பகல்
//உள்ளிருந்து ஏக்கமாய்ப்
பார்த்துக் கொண்டிருக்கும் பொம்மைகள்
இயலாமையின் உச்சத்தில்//
முத்தாய்ப்பின் உச்சமாய் கவிதையின் கடைசி வரிகள்….அழகோ அழகு!
//
நன்றி ஷாமா…
சேவியர் சொன்னது,
பெப்ரவரி 15, 2012 இல் 2:31 மு.பகல்
நன்றி பிரதீப்..
நுண்மதி சொன்னது,
பெப்ரவரி 18, 2012 இல் 4:46 பிற்பகல்
நன்று தோழரே…
\\கவனமாய் அடுக்கப்பட்டிருக்கும்
அதற்குள்
எப்போதும்
இடம்பெறுவதில்லை
தோல்விகளின் சின்னங்களோ,
அவமானங்களின் அறிவிப்புகளோ.\\
ரசித்துப் படித்த வரிகள் இவை.
தங்களுக்கு பன்முகத் திறமையாளர் விருது வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், விவரங்களுக்கு எமது வலைத் தளத்தைப் பார்க்கவும்.
-நுண்மதி