<?xml version="1.0" encoding="UTF-8"?><!-- generator="WordPress.com" -->
<rss version="0.92">
<channel>
	<title>கவிதைச் சாலை</title>
	<link>http://xavi.wordpress.com</link>
	<description>கவிதைகளுக்கும் காதுகள் உண்டு</description>
	<lastBuildDate>Fri, 20 Nov 2009 15:17:24 +0000</lastBuildDate>
	<docs>http://backend.userland.com/rss092</docs>
	<language>ta</language>
	
	<item>
		<title>கவிதை : வாடகை அலைகள்</title>
		<description><![CDATA[உன் வாழ்க்கை
உனக்கான விருது,
யாரோ தைத்த
பொருந்தாத சட்டைக்குள்
நீ
நுழைய வேண்டிய
நிர்ப்பந்தம் என்ன ?
நிலம் மாறி நட்டாலும்
மல்லி
வாசம் மாறி வீசுமா ?
தோட்டக் காரன் நட்டாலும்
வீட்டுக் காரன் வைத்தாலும்
ரோஜா
பாகுபாடின்றி பூத்திடாதா ?
உன்னை நீயே
வனைந்து முடி,
உன்னை விட அதிகமாய்
உன்னை நேசிப்பவன் யார் ?
உன்னை விட அழகாய்
உன் இயல்புகள்
அறிந்தவன் யார் ?
உள்ளுக்குள்
முத்திருக்கும் உண்மையை
சிப்பியை விட அருகில்
சீக்கிரமே உணர்வது யார் ?
உன் வாழ்க்கையின்
அடித்தளத்தை
நீயே அமைப்பதே
சாலச் சிறந்தது.
பொறு,
உன் எல்லைக்கு கள்ளி வைப்பது
உன் விருப்பம்,
அப்படியே
அடுத்தவனும் முள் தான்
வைக்கவேண்டுமென்று
முரண்டும் பிடிக்காதே.
அவன்
முள் நடுவதும்,
சந்தன மரம் நடுவதும்
அவனுடைய இலட்சியக் கடல்.
அங்கே
உன் அலைகள்
அலைய வேண்டாம்
&#160;
 மனவிளிம்புகளில் நூலில் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=xavi.wordpress.com&blog=201712&post=1873&subd=xavi&ref=&feed=1" />]]></description>
		<link>http://xavi.wordpress.com/2009/11/20/kavithai_rights/</link>
			</item>
	<item>
		<title>மழைக் கவிதைகள்</title>
		<description><![CDATA[
1

 
 
 
 
பிரியமில்லா தம்பதியரையும்
குடைக்குள்
பிணைய வைக்கிறது
பிரியமான மழை.
 
 
2
 
 
ஒழுகாத கூரையும்
நனையாத படுக்கையும்
பசிக்காத வயிறும்
இருந்தால்
ரசிக்க வைக்கும்
எல்லா மழையும்.
.
.
.
3
மழைத்துளி விழுந்து
மண்ணின் மணம் எழுந்தது
எழுதினேன்,
கூவத்தின் மணம் கிளம்பும்
சென்னையில் இருந்து கொண்டு.
.
.
.

 
 
 
 
வெப்பம் தணித்த மழை
கிளப்பி விடுகிறது
பன்றிக் காய்ச்சல்
பீதியை
 
.
.

5.
 
ஜலதோஷம் பிடிக்கிறது…
என்றாலும்
குழந்தைக்கு
நனைவதே பிடிக்கிறது !
.
.
6
ஒவ்வோர் மழையும்
சில விவசாயிகளை
அழ வைக்கிறது
சில விவசாயிகளைத்
தொழ வைக்கிறது !
 
.
.
.

 
  
7
ஒவ்வோர் மழையும்
ஏதோ ஓர்
மேகத்தைப் பிரிகிறது
ஏதோ ஓர்
மோகத்தைப் பிழிகிறது
.
.
 
8
அடுத்த அடி
மரணத்தின் மடியிலா ?
டிரெயினேஜ் பயத்தில்
பாதங்கள் பதறுகின்றன
முழங்காலளவு மூழ்கிய சாலையில்
.
.
 
9
 
செல்போனில்
சிக்னல் கிடைக்காத காதலர்களும்
டிவியில்
சீரியல் தெரியாமல் பெண்களும்.
பெய்யெனப் பெய்யும் மழையை
நிறுத்தாமல் வைகிறார்கள்.
 
.
.
10
 
முதல் மழையில் நனையாதே
சுகக்கேடு வரும்.
பாட்டியின் குரல்
இன்னும் ஒலிக்கிறது
ஒவ்வோர் முதல் மழை [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=xavi.wordpress.com&blog=201712&post=1886&subd=xavi&ref=&feed=1" />]]></description>
		<link>http://xavi.wordpress.com/2009/11/18/kavithai_rain/</link>
			</item>
	<item>
		<title>ஹைடெக் ராமனும், ஹவுஸ் வைஃப் சீதையும் !</title>
		<description><![CDATA[

 
அன்று காலை
ஒரு இராமன் வந்தான்
வில்லை ஒடிக்காமலேயே
விலகிச் சென்றான்,
விசாரித்த போது
விபரம் தெரிந்தது,
சீதையின் தோழி மிக அழகாம்.
0
பிறிதொருநாள்
தனியே காத்திருந்தாள் சீதை,
இன்னோர் இராமன்
தனியே வந்தான்,
சீதையை விட
வில்லே பிரதானமென்று
வில்லோடு ஓடிவிட்டான்.
0
பிறகு வந்த
சில இராமர்கள்
கலியுக புகைபோக்கிகள்
வில்லை தூக்கும் போதே
எல்லொடிந்து போனார்கள்.
இன்னும் சிலர்
சீதை,
வில்லை ஒடித்தால் மட்டுமே
மணக்க சம்மதம் என்று
இன்னொரு ஒப்பந்தம் இட்டார்கள்.
0
கடைசியில்
ஒர் நாள்
அப்பழுக்கற்ற இராமன் வந்து
வில்லையும் ஒடித்து
சீதையின் கரத்தையும் பிடித்தான்.
சில வருடங்கள் சென்ற பின்
ஓர்
அதிகாலை அவசரத்தில்
சீதை சினந்தாள்,

இராவணனிடம் கூட
புஷ்பகவிமானம் இருந்தது
0
       <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=xavi.wordpress.com&blog=201712&post=1881&subd=xavi&ref=&feed=1" />]]></description>
		<link>http://xavi.wordpress.com/2009/11/17/love_raman/</link>
			</item>
	<item>
		<title>கவிதை : அழகாராய்ச்சி&#8230;</title>
		<description><![CDATA[
மகரந்தம் தாங்கும்
கர்ப்பப் பையாய்
மலர்களைப் பார்ப்பதும்,
பனித்துளி ஏந்தும்
மேடையாய் இதழ்களைப் பார்ப்பதும்,
கனவுகளின்
வாசனை சாலையாய்
காதலில் பார்ப்பதும்
பார்வைகளைப் பொறுத்தது.
நீ
பூவை பூவாகவேனும்
பார்.
0
சூரிய ஒளிச் சமாச்சாரங்களையும்,
கோள்களின்
சுற்றுப் பாதை சங்கதிகளையும்,
தூர அகல
அறிவியல் ஆராய்ச்சிகளையும்
மனசுக்குள் உட்கார்த்தி
உரையாடாதே.
இரவு நேரத்தில்
நிலா வீதியில் நிற்கையில்.
0
அறிவியல்,
மூளையின் செல்களுக்குள்
செல்லட்டும்.
ரசனை
மனசின் நரம்புகளுக்குள்
பாயட்டும்.
சோதனைக் குடுவை கிடைத்தாலும்
சோதனைச் சாலைக்கு வெளியே
அதை
பூந் தொட்டியாய் பயன்படுத்து.
0
அகழ்வாராச்சிகள் எல்லாம்
தேவைதான்,
ஆனாலும்
அழகாராய்ச்சிகளையும் மறுதலிக்காதே.
ரசிக்கும் கண்கள் இருந்தால்
கோபுர கலசங்கள்
மட்டுமல்ல,
கூழாங் கற்களும் கூட
இயற்கைச் சிற்பியை
உனக்கு அறிமுகப் படுத்தும்.
உளிகளில் மட்டுமல்ல
அலைகளிலும்
சிற்பத்தின் சாவிகள் இருக்கின்றன.
0
நதிகள் இல்லாத,
பௌர்ணமிகள் விழிக்காத,
நட்சத்திரங்கள் முளைக்காத,
இருட்டின் காட்டுக்குள்
இருக்க நேர்ந்தால்
வெளிச்சம் வரும் வரை
விலகி இருக்காதே.
இரவை ரசி.
கருப்புச் சாயத்தைப் பூசிய
காற்றை ரசி.
ஒற்றைக் கீற்றில்
அத்தனை [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=xavi.wordpress.com&blog=201712&post=1862&subd=xavi&ref=&feed=1" />]]></description>
		<link>http://xavi.wordpress.com/2009/11/17/kavithai_azhagu/</link>
			</item>
	<item>
		<title>கி.மு : ஏகூத் பின்னிய சதி வலை</title>
		<description><![CDATA[ 
இஸ்ராயேல் மக்களை மேசேக்குப் பின்பு திறமையாக வழிநடத்தியவர் யோசுவா. அவருடைய மறைவிற்குப் பிறகு அவர்களுக்குச் சிறப்பான வழிகாட்டிகள் இல்லாமல் போயிற்று. கானான் நாட்டில் வசித்து வந்த இஸ்ரயேலர்கள் கானானியரை முற்றிலும் விரட்டிவிடாமல் அவர்களையும் தங்களோடு தங்க வைத்திருந்தனர். அதுவே அவர்களுக்கு எதிராய் முடிந்தது. கானானியர்கள் பலுகிப் பெருகிப் பலம் கொண்டார்கள். இஸ்ரயேல் மக்களோடு கடவுள் இருந்ததால் அவர்களை கானானியரால் ஒன்றும் செய்ய இயலவில்லை.
காலப்போக்கில் இஸ்ரயேல் மக்கள் கடவுள் தங்களுக்குச் செய்த நன்மைகளையெல்லாம் மறந்து விட்டு கானானியரோடு திருமணபந்தங்களை [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=xavi.wordpress.com&blog=201712&post=1836&subd=xavi&ref=&feed=1" />]]></description>
		<link>http://xavi.wordpress.com/2009/11/15/ki-mu-19/</link>
			</item>
	<item>
		<title>கி.மு கதைகள் : ஆயி நகரமும், நின்று போன சூரியனும்</title>
		<description><![CDATA[
எரிகோ நகரத்தைப் பிடித்தபின் இஸ்ரயேலரின் பார்வை ஆயி என்னும் நகரின் மீது விழுந்தது.
ஆயி பட்டணத்தையும் கைப்பற்றவேண்டும் என்று யோசுவா திட்டமிட்டார். அதுவும் இஸ்ரயேலர்களுக்குச் சொந்தமாகும் என்று கடவுள் வாக்களித்திருந்தார்.
வழக்கம் போல உளவாளிகள் இருவர் ஆயி பட்டணத்துக்குள் அனுப்பப்பட்டனர். உளவாளிகள் ஆயி நகரத்தைச் சுற்றிப் பார்த்து விட்டு யோசுவாவிடம் தாங்கள் பார்த்தவற்றைத் தெரியப்படுத்தினர்.
&#8216;தலைவரே&#8230;. ஆயி பட்டணத்தைப் பிடிப்பது கடினமான பணி அல்ல. அதை மிக விரைவாக நாம் கைப்பற்றிவிட முடியும்&#8217; உளவாளிகள் சொன்னார்கள்.
யோசுவா ஆனந்தமடைந்தார். இஸ்ரயேல் மக்களிடையே இருந்த [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=xavi.wordpress.com&blog=201712&post=1832&subd=xavi&ref=&feed=1" />]]></description>
		<link>http://xavi.wordpress.com/2009/11/12/ki-mu-stories/</link>
			</item>
	<item>
		<title>கவிதையில் கமல்&#8230;</title>
		<description><![CDATA[கமல்&#8230;
( நடிகர்களைப் பற்றிக் கவிதையெழுதினால் கவிதையின் புனிதத்துவம் கெட்டுவிடும் என்று கருதாதவர்களுக்காக இந்தக் கவிதை….   )
 
எல்லோரும்
நடிப்புச் சாளரங்களை
எட்டிப் பார்த்துத் திகைக்கையில்
நடிப்பு
இவன் வீட்டைத் தான்
எட்டிப் பார்த்து பிரமித்தது.
தாய் வயிற்றுக்குள்
நடிப்புப் பழகிய
ஒரே மனிதன்
இவனாய்த் தான் இருக்க வேண்டும்.
அதன் முன்னேற்றமே
முதல் அழுகையாய்
அரங்கேறியிருக்க வேண்டும்.
நடிப்பை
அணிந்து பார்க்க
எல்லோரும் ஆசைப்பட்டபோது
துணிந்து பார்க்க
ஆசைப்பட்டவன் இவன்.
அதனால் தான்
வீட்டுக் கண்ணாடியில்
இவனுக்கு மட்டும்
தினம் தினம் புது பிம்பம்.
தரையில் விழும்
நிழல் கூட
ஒரே மாதிரி இருந்ததாய்
வரலாறு இல்லையாம்.
இவன் வீட்டுக்
காவல் நாய் கூட
தினம் தோறும்
திணறிப் போவது வாடிக்கையாம்.
நெருப்பு என்றால்
வாய் வேகாது என்பர்
பொய்.
அழு என்றால்
அடுத்த வினாடி
கண்ணணை திறப்பவன் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=xavi.wordpress.com&blog=201712&post=1852&subd=xavi&ref=&feed=1" />]]></description>
		<link>http://xavi.wordpress.com/2009/11/11/kamal-2/</link>
			</item>
	<item>
		<title>யோகியாரின் பருந்துப் பார்வை !</title>
		<description><![CDATA[மன விளிம்புகளில் : ஒரு பருந்துப் பார்வை (யோகியார்)
கவிதைகள் வெறும் வார்த்தைகளின் தேர்வலம் அல்ல; அவை உணர்வுகளின் ஊர்வலம்&#8211;என அட்டகாசமாகத் தனது முன்னுரையில் நம்பிக்கையுடன் ஆரம்பிக்கும் &#8216;சேவியரின்&#8217; &#8216;மன விளிம்புகளில்&#8217; என்ற கவிநூலை நிதானமாக,சொல்விடாமல் படித்தேன்.
பல கவிகளில் தேன்வரிகள்,புதிய சிந்தனைகள்,கற்பனை வளம் யாவும் மிளிரக் கண்டு மகிழ்ந்தேன்.இதுகவிதை அல்ல என ஆரம்பிக்கும் தன் முதல் பாட்டிலேயே
நம் மனத்தைக் கீழ்வரும் வரிகளால் கவர்ந்துவிடுகிறார்;
&#8216;&#8221;தோகைகளைப் பாடிவிட்டு,
மயிலைச் சூப் வைத்துக் குடிக்கச் சம்மதமில்லை எனக்கு&#8211;&#8221;
என அழகுறச்சொல்லிவிட்டு,
&#8216;விளக்குகளை ஏற்றி, வீதிகளில் வைப்பதே
பாதசாரிகட்குப் பயன்..
என்று [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=xavi.wordpress.com&blog=201712&post=1161&subd=xavi&ref=&feed=1" />]]></description>
		<link>http://xavi.wordpress.com/2009/11/11/kaviyogi_vedam/</link>
			</item>
	<item>
		<title>கவிதை : பெத்த மனசு</title>
		<description><![CDATA[
.
சும்மா சும்மா
ஊரைச் சுத்திட்டு இரு
செக்கு மாடாட்டம்.
படிப்பும் வேலையும்
லேகியம் மாதிரி
பாட்டில்ல வராதுடா
உருட்டி விழுங்க…
ஏழு கழுதை வயசாச்சு
பொறுப்பு மட்டும் வரலை
பொறுக்கிப் பசங்க சகவாசம்
இன்னும் விடலை.
அப்பாவின் திட்டுகளில்
இல்லாத தன்மானம்
சொல்லாமல் எழும்ப
வெளியேறும் மகனை,
கொல்லையில் நிறுத்தி
சொல்லுவாள் அன்னை.
‘மத்தியானம் மறக்காம
சாப்பிட வந்துடுப்பா’
ஃ
நன்றி : கல்கி
       <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=xavi.wordpress.com&blog=201712&post=1826&subd=xavi&ref=&feed=1" />]]></description>
		<link>http://xavi.wordpress.com/2009/11/10/ammaa/</link>
			</item>
	<item>
		<title>நட்புக் கவிதைகள்</title>
		<description><![CDATA[
&#8220;எவ்ளோ வருஷமாச்சுடா பாத்து !!! &#8220;
என சிலிர்ப்புடன்
பெயர் சொல்லி அழைக்கும்
நண்பனுடன் பேசுகையில்
பயமாய் இருக்கிறது
“எம் பேரு ஞாபகமிருக்கா”
என கேட்டு விடுவானோ ?
ஃ
அப்பப்போ
போன் பண்ணுடா…
எனும் சம்பிரதாய விசாரிப்புக்கு
“கண்டிப்பா”
என நகர்வான்,
நான் கொடுக்காத நம்பரை
அவன்
எழுதிக் கொள்ளாமலேயே.
ஃ
பொய்கள் தான்
உண்மையாகவே
நட்பைக் காப்பாற்றுகின்றன.
“நேற்று கூட பேச நினைத்தேன்”
என
யாரோ பேசிக் கடக்கிறார்கள்
செல்போனில்
ஃ
அவளா இது ?
மீன் வாங்கிச் செல்லும்
பெண்ணிடம்
கொஞ்சமும் மிச்சமில்லை
கால் நூற்றாண்டுக்கு முன்
கண்களில் சிரித்த வசீகரம்.
ஃ
நட்பு இருப்பதாய்
சொல்லிக் கொள்ளவேனும்
அடிக்கடி
தேவைப்படுகின்றன
வெள்ளிக்கிழமை பார்கள்.
ஃ
கிராமத்து மௌன வீட்டின்
கம்பி அளியின் ஊடாக
நண்பனின்
புன்னகை முகம் தெரிகிறது.
இறந்து
வெகு நாட்களான பின்னும்.
ஃ
“ஏழாயிரம் சம்பளம் டா மச்சி”
என
குதூகலித்துச் சொல்லும் நண்பனிடம்
சொன்னதில்லை
பல மடங்கு வாங்கும் நான்.
அவனிடம் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=xavi.wordpress.com&blog=201712&post=1818&subd=xavi&ref=&feed=1" />]]></description>
		<link>http://xavi.wordpress.com/2009/10/30/friendship/</link>
			</item>
</channel>
</rss>