<?xml version="1.0" encoding="UTF-8"?><!-- generator="WordPress.com" -->
<rss version="0.92">
<channel>
	<title>கவிதைச் சாலை</title>
	<link>http://xavi.wordpress.com</link>
	<description>கவிதைகளுக்கும் காதுகள் உண்டு</description>
	<lastBuildDate>Fri, 03 Jul 2009 14:31:20 +0000</lastBuildDate>
	<docs>http://backend.userland.com/rss092</docs>
	<language>ta</language>
	
	<item>
		<title>கேட்டானே 32 கேள்வி&#8230;</title>
		<description>1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

பிரியமாய் பெற்றோர் வைத்த பெயர் இது. தவமாய்த் தவமிருந்து ஒரு ஆண்பிள்ளை வேண்டுமென்று நாகர்கோவில் சவேரியார் கோயிலில் செபித்த போது ஒரு காட்சி தோன்றி அடுத்த ஆண்டு ஆண் குழந்தை பிறப்பான் என அருள் கிடைத்ததாய் அம்மா சொல்வது பெயர் பிறந்த கதை. சவேரியாரின் நினைவு மறையாமல் இருக்கட்டும் என சேவியர் என வைத்து விட்டார்கள்.

சேவியர்- பெயரை ...</description>
		<link>http://xavi.wordpress.com/2009/07/03/32/</link>
			</item>
	<item>
		<title>மீண்டும் காதலிக்கலாம்&#8230;</title>
		<description>

1.

மெளனங்கள்
இறுகிக் கிடக்கும் பாறை போல
சுமையானவை.


உன்
கரம் கோர்த்த
மெளனத்தைத் தவிர

 

  

  

2.

எப்போதும்
உன்னுடன் இருப்பேன்
என்று
சொன்ன நினைவு மட்டும்
இப்போதும்
என்னுடன் இருக்கிறது

0

3.

உன்னுடைய
முத்தங்களின் ஒன்றைத்
திருட முடிந்தால்
என்
தனிமைகளின் உதடுகளுக்கு
தத்துக் கொடுத்திருப்பேன்.

0

4.

வயலில் இட்ட விதை நெல் போல
நடப்பட்டிருக்கிறது
உன் புன்னகை
என் இதய வயலில்.

உன் பார்வை ஈரத்தைப்
பரிமாறினால்
முளைத்து வளரும்
நீ அறியாத ஒரு கணத்தில்

0

5.

நீ
என்னுடன் இருந்தால்
என் வாழ்க்கை
ஆனந்தமாகும்.


என் வாழ்க்கை
ஆனந்தமாய் இருந்தால்
நீ
என்னுடன் இருக்கிறாய் என்று அர்த்தம்.

0

6

நீ
விலகமாட்டாய் எனும்
என்
நம்பிக்கையின் அலட்சியமே
நீ
விலகிவிடக் காரணம்

0

7.



இந்தியாவின் எதிர்காலம்
இளைஞர்களின்
கையில் என்கிறார்கள்
இளைஞர்களின் எதிர்காலம்
உன் கையில்
என்பதை அறியாதவர்கள்.

0

 

 

8

உனது
மனக் கடலுக்குள் மூழ்கி
முத்தெடுக்க முனைகையில்,
நீ
கரையில் ஒதுங்கி
எனக்காய் காத்திருந்தாய்
காதல்
புரிந்தது எனக்கு.

0

9

காதலிக்கும் இதயம்
நிலவுடன் கதை ...</description>
		<link>http://xavi.wordpress.com/2009/07/02/love-45/</link>
			</item>
	<item>
		<title>விபத்து</title>
		<description>

வண்டி கட்டுப்பாட்டை முழுமையாய் இழந்து சரிவில் உருண்டது. வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த சரண்யா அதிர்ந்தாள். அருகில் அவளுடைய கணவன் கார்த்திக். பின் சீட்டில் தூங்கிக் கொண்டிருந்தான் அவர்களுடைய ஆறு வயது மகன் ராகுல்.

அந்த கொடூரமான வினாடியில் சரண்யாவின் பதை பதைப்பு முழுக்க ராகுலின் மீது தாவியது. பின் சீட்டில் தூங்கி கொண்டிருந்த அவன் பிடிமானம் ஏதுமின்றி வண்டி உருள உருள காருக்குள் தூக்கியடிக்கப்பட்டான்.

சரண்யா, சென்னையில் ஒரு முன்னணி கணினி நிறுவனத்தில் ...</description>
		<link>http://xavi.wordpress.com/2009/06/30/accident-2/</link>
			</item>
	<item>
		<title>குழந்தைகளைக் குறிவைக்கும் பாலியல் வன்முறை</title>
		<description>

குகை போன்ற அறைகள் நிரம்பிய பாதாள வீட்டுக்குள் தன் சொந்த மகளையே இருபத்து நான்கு வருடங்களாகப் பூட்டி வைத்து பாலியல் வன்முறை செய்து குழந்தைகளும் பெற்றுக் கொண்ட ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஒரு கொடூரமான தந்தையின் அதிர்ச்சியூட்டும் செய்தி கடந்த ஆண்டு உலகையே உலுக்கி எடுத்தது.

இந்தியாவில் சமீபத்தில் சாமியாரின் பேச்சைக் கேட்டு செல்வந்தராகவேண்டும் எனும் வெறியில் தனது மகள்களுடனேயே உறவு கொண்டு வாழ்ந்த ஒரு முட்டாள் தந்தையின் மிருக வரலாறு அதிர்ச்சியாய் ...</description>
		<link>http://xavi.wordpress.com/2009/06/24/sexual_abuse/</link>
			</item>
	<item>
		<title>கவிதை : சென்னை</title>
		<description>

அப்போதெல்லாம் 
வெறும் ஐயாயிரம் தான் 
நாலு கிரவுண்ட் வாங்கிப் போட்டிருந்தால்
நான் கோடீஸ்வரன்
அங்கலாய்த்தார் நண்பர்

அப்போதெல்லாம்
இங்கே
ஆள் நடமாட்டமே இருக்காது
பயங்களின் 
பதுங்கு குழிதான் இந்த இடம்
என்றார் இன்னொருவர்.

எங்கே மழை பெய்தாலும்
இங்கே தான்
வந்து தேங்கும்.
இது
ஏரியாய் கிடந்த இடமப்பா
என்றார் மற்றொருவர்

அதோ அந்த இடத்தில்
இருந்தது
ஒரே ஒரு ஒற்றையடிப்பாதை
சைக்கிளில் வரவே
சங்கடப்படவேண்டும் அப்போதெல்லாம்

இதோ இந்த ஏரியா
நான்கு ரவுடிகளின்
தீர்மானத் தளங்கள்னா நம்புவியா ?
இது
கொலைகளின் கூடாரமாமப்பா !

ஆளாளுக்கு
காலாட்டிக் கொண்டே
கதை பேசிக்கொண்டிருந்தார்கள்.

அப்போதெல்லாம்
கிரவுண்ட் ஐம்பது இலட்சம் தான்
நாலு வாங்கிப் போட்டிருக்கலாம் 
என
பிற்காலத்தில் பேசக் கூடும் 
நான்
என் மகனிடம்

ஃ
 </description>
		<link>http://xavi.wordpress.com/2009/06/23/chennai/</link>
			</item>
	<item>
		<title>ஆறு வயது, ஆறா மனது</title>
		<description>
சில துயரங்களை வார்த்தைகளால் நிச்சயம் சொல்ல முடியாது.
உயிரை உலுக்கிப் போடும் நிகழ்வுகளைச் சொல்ல கண்ணீரால் தான் முடியும்.
சில துயரங்களைக் கண்ணீர் கூட சொல்லிவிடாது
உறைந்து போனபின் உருகுவது கூட கடினமாகிவிடுகிறது.

நீண்டகாலக் கனவாக இருந்து, நிஜமாய் மாறிய சொந்தக் காரில் குடும்பத்துடன் ஆனந்தமாய் பாண்டிச்சேரி பயணித்தபோது,
கோர விபத்து ஒன்றில் படுகாயமடைந்து
ஆறு வயதேயான தனது தேவதை போன்ற மகன் ராகுலை
இழந்து, படுகாயமடைந்து
சொல்லொண்ணாத் துயரத்தில்  இருக்கும் உயிர்தோழியும், சகபதிவருமான ( உன்னுடன் ) ஜானகி அவர்களின் துயரத்தை ...</description>
		<link>http://xavi.wordpress.com/2009/06/14/rahul_janaki/</link>
			</item>
	<item>
		<title>12 ANGRY MEN &#8211; வியக்க வைத்த திரைப்படம் !</title>
		<description>“கருப்பு வெள்ளை திரைப்படம், படம் முழுவதும் ஒரே அறையில் எடுத்திருக்கிறார்கள். உனக்கு நிச்சயம் புடிக்கும்” எனும் பீடிகையோடு என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் என்னிடம் கொடுத்தார் இந்தத் திரைப்படத்தை.

ஒரே அறையிலா ? அதுவும் கருப்பு வெள்ளையிலா எப்படி எடுத்திருப்பார்கள் எனும் ஆர்வமே படத்தை உடனே பார்க்க வைத்தது. இந்தத் திரைப்படத்தைப் பார்க்காமல் இத்தனை நாள் தவறவிட்டேனே என நினைக்க வைத்தது இந்த 12 Angry Men எனும் திரைப்படம்.

வினாடிக்கு மூன்று ...</description>
		<link>http://xavi.wordpress.com/2009/06/09/12_angry_men/</link>
			</item>
	<item>
		<title>உனது குரல்..</title>
		<description> 

எப்போதோ
நீ விட்டுச் சென்ற
குரலின் விரல்களை
இன்னமும்
இறுகப் பற்றிக் கொண்டு நடக்கிறேன்.

பார்வையற்ற ஒருவனின்
பாதங்களுக்குக்
கீழே
பரவும் வெளிச்சம் போல
பயனற்று வழிகிறது
என் எதிர்பார்ப்பின் கதறல்.

உன் குரலில்
இப்போது
இனிமை கூடியிருக்கலாம்.
அல்லது
கரகரப்பு கலந்திருக்கலாம்.

அகழ்வாராய்ச்சியில் கிடைத்தவற்றில்
மிகப் பழமையான
சிற்பம் போல,
அதிகபட்சக் கவனத்துடனே
அன்றைய உன் குரலை
பாதுகாக்கிறேன்.

அந்தக் ஒலிக்குள் இருக்கும்
மொழி
என்னைக் காயப்படுத்திய
விலகலின் வார்த்தை தான்,
ஆனாலும்
விலக்காமல் வைத்திருக்கிறேன்.

ஒருவேளை
அந்தக் குரல் தொலைந்து
போனால்,
மீண்டும் ஒரு குரலுக்காய்
உன் வாசலுக்கு
யாசகனாய் வருவேனோ என்னும்
பயத்துடன். </description>
		<link>http://xavi.wordpress.com/2009/05/31/your_voice/</link>
			</item>
	<item>
		<title>கி.மு கதைகள் : வாழ்த்தாய் மாறிய சாபம்</title>
		<description>

அக்காலத்தில் ஆங்காங்கே குறிசொல்பவர்கள் ஏராளமானவர்கள் இருந்தார்கள். இவர்கள் கடவுளிடம் மனதால் பேசி, கடவுள் என்ன சொல்கிறாரோ அவற்றை மக்களுக்குத் தெரிவிப்பார்கள். அவர்கள் எப்போதும், யாரைக்கண்டும் அஞ்சுவதில்லை. மன்னனை சபிக்கவும், குடியானவனை வாழ்த்தவும் அவர்கள் தயங்குவதேயில்லை. பணம் பதவி செல்வாக்கு இவற்றுக்கு அவர்கள் விலைபோவதுமில்லை.

பிலேயாம் ஒரு மிகச்சிறந்த மனிதர். தெய்வ பக்தர். அவர் குறி சொல்வதில் சிறந்து விளங்கினார். அவர் கடவுளிடம் பேசி கடவுள் சொல்வதை மக்களுக்குத் தவறாமல் சொல்லிவந்தார்.

அந்த நாட்டு ...</description>
		<link>http://xavi.wordpress.com/2009/05/28/bible_stories/</link>
			</item>
	<item>
		<title>உடலைப் பேண பத்து கட்டளைகள்</title>
		<description> 
 

 
உடலை வளமாக வைத்திருக்க வேண்டும் எனும் ஆர்வம் எல்லோரிடமும் காணப்படுவது இயல்பு. அப்படிப்பட்டவர்கள் இந்த பத்து வழிமுறைகளை கடைபிடிப்பது பயனளிக்கும்.
  


	தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். உடற்பயிற்சி என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் செய்வதல்ல, தினசரி அலுவல்களுக்கிடையே வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் உடற்பயிற்சி செய்யலாம். படிகளில் ஏறி இறங்குவது, அடிக்கடி நடப்பது, கண்களுக்கு பயிற்சி கொடுப்பது, கைகால்களை நீட்டி மடக்குவது, மூச்சுப்பயிற்சி என எவ்வளவோ செய்யலாம்.
 
 

	தினமும் மூன்று வேளை மூக்கு முட்ட ...</description>
		<link>http://xavi.wordpress.com/2009/05/27/healthy_habits/</link>
			</item>
</channel>
</rss>