பேதங்கள் இல்லாமல்
கட்டப்படுகின்றன
பந்தல்கள்
திருமண வீட்டின்
கெட்டி மேளச் சத்தங்களில்
அட்சதை தூவும்
பந்தல்கள்,
தங்கள் அடுத்த பயணமாக
சாவு வீடுகளின்
விசும்பல்களை விழுங்குகின்றன.
பூப்புனித நீராட்டு விழாக்கள்
முடிந்த கையோடு
பாராட்டு விழாக்களுக்குப்
பயணப்படுகின்றன.
அரசியல் கூட்டங்களில்
காது பொத்திக் கிடப்பவை
மறு நாள்
சாதிக் கூச்சல்களுக்குக்
கூரையாகிக் கொள்கின்றன.
பந்தல்களுக்குப் பேதம் இல்லை.
துயரங்களையும், ஆனந்தங்களையும்
சுமந்து சுமந்து
மறு பேச்சு பேசாமல்
அமைதியாய் இருக்கின்றன
பந்தல்கள்.
கடவுள் சிலைகள் போல.
–
சேவியர்
You must be logged in to post a comment.