.
செல்போனின் கைகளில்
தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்
மனிதர்கள்.
ஏதோ ஓர் செல்போன்
சிணுங்குகையில்
எல்லோரின் கைகளிலும்
முளைக்கின்றன செல்போன்கள்.
இளசுகளின் விரல்கள்
குறுஞ் செய்திகளில்
குடியிருக்கின்றன.
எப்போதேனும்
சந்தித்துக் கொள்ளும்
நண்பர்களும்
பேசிக்கொள்கிறார்கள்
வேறு வேறு மனிதர்களிடம்.
தத்தம் செல்போன்களில்.
அலுவலகங்கள் முதல்
சந்தைகள் வரை
இவை
சத்தமிட்டுக் கொண்டே இருக்கின்றன
செல் பேசி இல்லாமல்
செல்லும் பயணங்களெல்லாம்
தவிப்பையே
தருகின்றன.
முன்பெல்லாம்
மனிதர்களிடம் இருந்தது
செல்போன்.
இப்போதோ
செல்போனிடம் இருக்கிறார்கள்
மனிதர்கள்.
You must be logged in to post a comment.