இன்னும் கொஞ்ச தூரம் தான்
கால்களைக் கொஞ்சம்
வலுவாக்கு.
அடுத்தவன் கனவுகளுக்குள்
படுத்துக் கிடக்கும்
உன் பார்வைகளின்
சோர்வகற்று.
அறுவடைக் காலத்தில்
நண்டு பிடிப்பதை விட
கதிர் அறுப்பதல்லவா
அவசியம்,
வா,
இன்னும் கொஞ்ச தூரம் தான்.
அதோ தெரிகிறதே
ஓர் வெளிச்ச பூமி
அங்கு தான் செல்லவேண்டும்.
பரிச்சயமான
பிரதேசமாய் தோன்றுகிறதா ?
அது வேறெங்கும் இல்லை
உன்னுள் தான் இருக்கிறது.
நீதான்
வெகுதூரம் சென்று விட்டாய்.
You must be logged in to post a comment.