சாலை நெரிசலில்
நனைந்து,
சேறு வீசிய வாகனத்தைச்
சாபமிட்டு,
சாலை நீரில்
அசுத்தமாகி,
‘மழையும் மண்ணாங்கட்டியும்’ என
எரிச்சல்பட்டு,
ஒரு வழியாய் வீடு சேர்ந்து
தலை துவட்டி
உடை மாற்றி…
தேனீரும் கையுமாய்
சன்னலோரத்தில் நிற்கையில்
அழகாய் தெரிந்தது
மழை.
Hi Xavier,
Azhakana Kavithaikal….
Aazhamana Karuthu…
Meera.
LikeLike
Hi Xavier, beautiful one…Miga rasithen…
K P Vijay
LikeLike