காதல் குறித்த கனவுகள்


நமக்கிடையே
வருடங்கள் இட்டு
நிரப்பப்பட்டிருப்பதன்
சாட்சியாய்
உன் விரல் பிடித்து நடக்கிறது
குழந்தை.

என்
கனவுகளின் கல்வெட்டுகளில்
இன்னும்
உன்
கதகதப்புக் கண்கள்
மிதக்கின்றன.

தூங்கப் பிடிக்காமக்
விழிக்கும் இரவுகளில்
என்னைப் பிடிக்காமல்
விலகிப் போன
உன் கொலுசொலியின் சத்தம்.

எதேர்ச்சையாய்
சந்தித்துக் கொண்ட
வெளியூர் பேருந்து நிலையத்தில்
கிடைத்த சில வினாடிகளில்
உன் கண்களில்
தேடுகிறேன்.

தொலைந்து போன
என் காதலின் சுவடுகள்
அங்கே மிச்சமில்லை.

பையனின் பெயர் கேட்டேன்
அது
என் பெயராய் இருக்குமெனும்
கடைசி ஆசையும்
பொய்த்துப் போகிறது,

விடைபெற்றுக் கிளம்பியபின்
திரும்பியே பார்க்காமல்
நீ நடந்ததன்
காரணம்
உன் கண்களில் வழியும் கண்ணீராய்
இருக்கலாம் என
நினைத்துக் கொள்கிறேன்

வெறுமனே.

5 comments on “காதல் குறித்த கனவுகள்

  1. கவிஞர்கள் உருவாவதற்கு காதல் தான் வித்திடுகிறது.
    நீர் அதில் விதிவிலக்கு அல்ல.

    கவிதை அருமை.

    அன்புடன்
    ராஜசேகர்

    Like

  2. திரும்பியே பார்க்காமல்
    நீ நடந்ததன்
    காரணம்
    உன் கண்களில் வழியும் கண்ணீராய்
    இருக்கலாம் என
    நினைத்துக் கொள்கிறேன்

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.