உறக்கத்தில் சிரிக்கும்
ஓர்
மழலையின் புனிதமாய் இருக்கிறது
பூக்களில் உறங்கும் மெளனம்.
இதழ்களின் இடுக்கில்
இரவில் இளைப்பாறிய இருள்
புறப்படுகையில்
பரிசளித்துச் சென்ற
பனித்துளியில் கலையாமலும்,
மகரந்தச் சலங்கை கட்டி
பூச்சிகள்
அரங்கேற்றம் நடத்தும்
சிறகு நாட்டியத்தில் சிதையாமலும்,
காலைத் தென்றல்
குளிர் சுருட்டி
காது குடைகையில் கலையாமலும்
இன்னும்
இழுத்துப் போர்த்தி
உறங்கிக் கிடக்கிறது மெளனம்
ஓர்
சத்தத்தின் முத்தத்தால்
எழுப்பி விடும் வேகத்தில்
தடதடத்து தோற்கிறது
தொலை தூர ரயில்.
பால்காரரின் குரலில்
பதட்டப்படாமலும்,
விசிறப்பட்ட செய்தித்தாளால்
விழித்து விடாமலும்
இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறது
மெளனம்.
.
சத்தங்களோடே
குடித்தனம் நடத்தும்
குடியிருப்பு வாசிகளுக்குப் புரிவதில்லை,
மெளனத்தை
மெளனத்தால் வாசிக்கும் மந்திரம்
ஃ
Pingback: தேன் » Blog Archive » ‘நச்’ கவிதைப் போட்டி - அறிவிப்பு
நன்றி கலை.
LikeLike
//சத்தங்களோடே
குடித்தனம் நடத்தும்
குடியிருப்பு வாசிகளுக்குப் புரிவதில்லை,
மெளனத்தை
மெளனத்தால் வாசிக்கும் மந்திரம்//
எதார்த்தமான வரிகள் நண்பரே.
LikeLike
நன்றி சீனா. உங்கள் தொடர் ஊக்கத்துக்கு. இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்
LikeLike
நன்றி இப்னு ஹம்துன் 🙂
LikeLike
இதுவும் நன்றாக இருக்கிறது. பாராட்டுகள். இனிய புத்தாண்டு மற்றும்
பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்.
LikeLike
“மழலையின் புனிதம்!”
நல்லா இருக்குங்க! வாழ்த்துகள்
LikeLike