அனைவருக்கும் உயிர்ப்புப் பெருவிழா நல் வாழ்த்துக்கள்
கயபா என்னும் தலைமைக் குருவின் மாளிகை முற்றத்தில் தலைமைக் குருக்கள், மக்களின் மூப்பர்கள், மறைநூல் வல்லுனர்கள் எல்லோரும் ஒன்று கூடினார்கள்.
‘இயேசுவை நாம் ஏதாவது செய்தாக வேண்டும். இந்த மூன்று ஆண்டு கால இடைவெளியில் அவனுடைய புகழ் எல்லா இடங்களிலும் பரவி விட்டது. இந்த நிலை நீடித்தால் நமக்குக் கொஞ்ச நஞ்சம் மிஞ்சியிருக்கும் பெயரும் அடியோடு போய்விடும். இப்போதே மக்கள் இயேசுவின் பின்னால் தான் அலைகிறார்கள். நாம் ஏதாவது செய்தாக வேண்டும்’
‘ஏதாவது அல்ல. அவரை ஒழித்துக் கட்ட வேண்டும். பல முறை மிரட்டிப் பார்த்தாயிற்று. மசியவில்லை’
‘பல முறை கல்லெறிய முயன்றோம் அகப்படவில்லை’
‘பல தடவை கேள்விகளால் குடைந்து அவனுடைய நற்பெயரைக் கெடுக்கப் பார்த்தோம். அது அவனுக்குப் புகழ்சேர்ப்பதாகவே முடிந்து விட்டது…’
‘இனி இந்தமாதிரி பூச்சாண்டி வேலைகளெல்லாம் பயன்படாது. நேராக அரசின் உதவியுடன் அவனை இழுத்துக் கொண்டு போய் சிறையில் தள்ள வேண்டியது தான். முடிந்தால் அங்கேயே அவன் கதையை முடிக்க வேண்டும்’
‘அரச காவலர்களைக் கொண்டே நாம் இந்த செயலைச் செய்யவேண்டும். நம்மால் இது முடியும் என்று தோன்றவில்லை.’
‘ஆமாம் அவனோடு பன்னிரண்டு பேர் இருக்கிறார்கள். அவர்கள் அவனுக்காக உயிரையும் கொடுக்கும் முரடர்கள். காவலர்கள் வந்தால் தான் அவனைப் பிடிக்கவும், அவர்களைச் சமாளிக்கவும் முடியும்’
சதி முற்றம் இயேசுவின் மீதான எரிச்சலில் சூடாகிக் கிடந்தது.
‘சரி.. அதற்கு நான் ஏற்பாடு செய்கிறேன்..’ தலைமைக் குரு சொன்னார்.
‘அவனைப் பிடிக்க நான் ஏற்பாடு செய்கிறேன். ஆனால் காவலர்களுக்கு இயேசுவை அடையாளம் தெரிந்திருக்க நியாயமில்லை. எனவே நீங்கள் யாராவது ஒருவர் சென்று இயேசுவை அடையாளம் காட்டுங்கள். மிச்சத்தை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.’
‘யா….யார் அவனை அடையாளம் காட்டுவது ? அவனைப் பிடிக்கத் தான் போகிறோம் என்று தெரிந்தால் ஏதாவது மாயம் மந்திரம் செய்து பிடிக்கப் போகின்றவர்களைக் குருடாக்கினாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. நான் மாட்டேன்…’
‘என்னாலும் முடியாது…’
‘வேறு யாரையாவது தான் தேட வேண்டும்’… ஆளாளுக்குத் தயங்கினார்கள்.
‘சரி.. நான் ஒருத்தனைப் பிடித்துக் கொண்டு வருகிறேன். அவன் இயேசுவைக் காட்டிக் கொடுப்பான். சரிதானே ?’
‘யாரவன் ?’
‘யூதா? இஸ்காரியோத்து !’
‘யூதாஸ் ? அவன் இயேசுவின் சீடனாயிற்றே ! உனக்கென்ன பைத்தியமா ?’
‘பைத்தியம் தான். ஆனால் எனக்கல்ல யூதா?தக்கு. சாதாரணப் பைத்தியமல்ல, பணப் பைத்தியம். கொஞ்சம் வெள்ளிக் காசைக் காட்டினாலே விஷயம் முடிந்து விடும்’
‘நி?மாவா சொல்றே ?’
‘அந்த கவலையை என்னிடம் விட்டு விடு. அவனுக்கு கொஞ்சம் வெள்ளிக்காசை எறிவோம். மீன் நிச்சயம் மாட்டும்’
அவர்களுடைய சதித் திட்டம் விரும்பிய திசையில் முன்னேறிக் கொண்டிருந்தது.
‘இது தான் வியூகம். பாஸ்கா விழா இன்னும் கொஞ்ச நாளில் வரப்போகிறது. அந்த விழா நமக்கு வெற்றி விழாவா இருக்கவேண்டும். அதற்கு முன்னாலேயே இயேசு சாகவேண்டும். அவர் இரவு நேரங்களில் எங்காவது செபம் செய்யப் போவது வழக்கம். அந்த நேரம் பார்த்து அவரைப் பிடிக்க வேண்டும். !’
‘ஏன் இராத்திரி ? காலையில் இங்கே தானே சுற்றிக் கொண்டிருப்பார். அப்போது பிடிக்கலாமே ?’
‘முட்டாள் தனமாக உளறாதே.. காலையில் அவனைச் சுற்றி நூற்றுக் கணக்கில் ஆட்கள் இருப்பார்கள் அவரை நெருங்குவது கடினம். இரவு வேளை தான் இந்த மாதிரி விஷயங்களுக்குக் கட்சிதம். அதிலும் குறிப்பாய் அதிகாலை வேளையென்றால் கன கட்சிதம்’
‘சரி… அப்படியே செய்வோம்.. நீ போய் யூதாசைப் புடி. நான் போய் காவலர்களைத் தயாராக்குகிறேன். சரி… அரசவையில் என்ன காரணம் சொல்லப் போகிறோம் ?’
‘இவன் தன்னைக் கடவுளின் மகனாக்கிக் கொண்டான். அது நம்முடைய யூதகுல மக்களுக்கு எதிரானது. இதனால் நகரில் மிகப்பெரிய குழப்பம் வரப் போகிறது. மக்கள் ஆளாளுக்கு வெட்டிக்கொண்டு சாகப்போகிறார்கள். இவனை உயிருடன் விட்டால் நாடு கலவர பூமியாகிவிடும். எனவே இவனை தண்டிக்கவேண்டும். எப்படி ?’ சொன்னவன் முகத்திலிருந்த குரூரப் புன்னகை அனைவர் உதடுகளிலும் ஊர்ந்தது.
ஒரு மாபெரும் சதித் திட்டம் அங்கே கன கட்சிதமாய் உருவாகியது !
அதே நேரத்தில் இயேசு தன்னுடைய சீடர்களுடன் இரவு உணவு அருந்துவதற்காக ஒரு வீட்டின் மேல் மாடியில் அமர்ந்தார்.
‘நாம் இணைந்து உண்ணும் கடைசி பாஸ்கா விருந்தல்லவா இது ! எனவே இதை மிகவும் சிறப்பானதாகக் கொண்டாடவேண்டும்’ இயேசு புன்னகையுடன் சொன்னார்.
‘கடைசி விருந்தா ? என்ன சொல்கிறீர்கள் ?’ சீடர்கள் திகைப்புடன் கேட்டார்கள்.
‘ஆம்… இன்னும் சிறிது காலமே என்னைக் காண்பீர்கள். பின்னர் சிறிது காலம் என்னைக் காண மாட்டீர்கள். பின்பு மீண்டும் என்னைக் காண்பீர்கள்’ இயேசு சொன்னார்.
‘இயேசுவே எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.. என்ன சொல்கிறீர்கள் ? எங்களை விட்டு விட்டு வேறெங்கேனும் செல்கிறீரோ ?’
‘ஆம். என் தந்தையிடம் செல்கிறேன்.’ இயேசு சொல்ல சீடர்கள் இன்னும் அதிகமாய்க் குழம்பினார்கள். ஒருவேளை இயேசு போதனைகளைக் கொஞ்ச காலம் நிறுத்தி வைத்துவிட்டு தன்னுடைய தந்தையுடன் சில நாட்கள் செலவிடப் போகிறார் போலிருக்கிறது என்று சீடர்கள் தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டனர்.
‘இன்னும் ஏன் முணுமுணுப்பு. நான் ஏற்கனவே உங்களிடம் சொல்லியிருக்கிறேன். இதோ நான் என்னுடைய உயிரை பகைவர்களின் கையில் ஒப்படைக்கும் நேரம் வந்துவிட்டது’
‘பகைவர் கையிலா ? உமது உயிரா ? அதெல்லாம் நடக்காது. நாங்கள் பன்னிரண்டு பேரும் உமக்குப் பக்க பலமாய் இருப்போம்’ சீடர்கள் சொன்னார்கள்.
‘பக்க பலமாகவா ? நீங்களா ? என்னைக் காட்டிக் கொடுப்பவனே உங்களில் ஒருவன் தானே !’ இயேசு சொல்ல சீடர்கள் அதிர்ந்தார்கள்.
‘இயேசுவே என்ன சொல்கிறீர் ? யாரைச் சொல்கிறீர் ? நானா ?’
‘நானா ?’
‘நான் காட்டிக் கொடுக்கவே மாட்டேன்…’ யூதாசும் தன் பங்குக்குச் சொல்லி வைக்க, இயேசு யூதாந?ப் பார்த்துப் புன்னகைத்தார்.
பின்பு இயேசு யாருமே எதிர்பாராத ஒரு காரியத்தைச் செய்தார். ஒரு துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து முழங்காலைத் தரையில் ஊன்றி சீடரின் பாதத்தருகே குனிந்தார். சீடர் திடுக்கிட்டார்
‘க…கடவுளே என்ன இது ? எ..என் காலருகே ….’
‘நான் உங்கள் பாதங்களைக் கழுவப் போகிறேன்..’
‘ஐயோ கடவுளே.. இதென்ன விளையாட்டு… வேண்டாம். நீர் என் பாதத்தைத் தொடக்கூடாது.’ சீடர் அதிர்ச்சியுடன் காலைப் பின்னால் இழுத்தார்.
‘இல்லை. நான் உன்னுடைய பாதங்களைக் கழுவ வேண்டும். இல்லையேல் உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை !’
சீடர்கள் ?தம்பித்தார்கள். இயேசு ஒவ்வொருவராக அனைவருடைய பாதங்களையும் கழுவி, இடையில் கட்டியிருந்த துண்டால் துடைத்தார்.
சீடர்கள் கூசினார்கள்.
யோவானின் காலருகே வந்தபோது,’ கடவுளே என் கால்களைக் கழுவ வேண்டாம். வேண்டுமானால் தலையில் தண்ணீர் ஊற்றும்.’ யோவான் உளறினார்.
‘குளித்து விட்டவன் கால்களைக் கழுவினாலே போதும்’ இயேசு சொல்லிக் கொண்டே அவருடைய காலையும் கழுவினார்.
எல்லா சீடர்களின் கால்களையும் கழுவி முடித்த இயேசு அவர்களைப் பார்த்து,’ நான் ஏன் உங்கள் பாதங்களைக் கழுவினேன் தெரியுமா ?’ என்று கேட்டார்
‘தெரியாது..’
‘பணி வாழ்வுக்கு முக்கியமானது பணிவு. உங்களில் தலைவனாக இருக்க விரும்புபவன் எல்லோருக்கும் தொண்டனாக இருக்க வேண்டும்..’ இயேசு சொன்னார்.
‘அதைச் சொன்னால் போதுமே கடவுளே.. நீரே எங்கள் கால்களைக் கழுவ வேண்டுமா ?’
‘கடவுளாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினேன் என்றால் நீங்களும் அந்தப் பணிவைக் கடைபிடியுங்கள்’ இயேசு அமைதியாய்ச் சொன்னார். பின் கைகளைச் சுத்தம் செய்துவிட்டு உணவருந்த அமர்ந்தார்.
இயேசு அப்பத்தை எடுத்து விண்ணகத் தந்தையிடம் செபித்தார். பின்பு அதைப் பிட்டு தம்முடைய சீடர்களுக்குக் கொடுத்து
‘இது என்னுடைய உடல். இதை உண்பதன் மூலம் என்னுடன் நீங்கள் ஒரு புதிய உடன்படிக்கையைச் செய்து கொள்கிறீர்கள்’ என்றார்.
பின் திராட்சை இரசம் இருந்த கிண்ணத்தை எடுத்து செபித்து சீடர்களுக்குக் கொடுத்து,’ இது என்னுடைய இரத்தம் ! இதைக் குடிப்பதன் மூலம் நீங்கள் உடன்படிக்கையை உறுதி செய்து கொள்கிறீர்கள்.’ என்றார்.
அப்பமும் இரசமும் பகிர்ந்தளிக்கப் பட்டது. அனைவரும் உண்டார்கள்.
‘யூதா?… உன்னைப் பார்த்தால் ஏதோ அவசர வேலை இருப்பது போல் இருக்கிறதே..’ இயேசு கேட்டார்.
‘ஆ..ஆம். கடவுளே… எ…எனக்கு ஒருவரைப் பார்க்க வேண்டியிருக்கிறது..’ யூதாஸ் தடுமாறினான்.
‘போ யூதா?. செய்யவேண்டியவற்றைத் தாமதப்படுத்தாமல் செய்’ இயேசு அவனை அனுப்பி வைக்க சீடர்களிடையே சலசலப்பு.
‘அமைதியாய் இருங்கள். நடக்கப் போவது எல்லாமே எனக்குத் தெரியும். இதுவரை நீங்கள் கவலையில்லாமல் இருந்தீர்கள். இனிமேல் வலிகளின் காலம். பணப்பையும், தேவையான பொருட்களும், ஆயுதங்களும் உங்களுடன் இருக்கட்டும். ஏனென்றால் இனிமேல் நீங்கள் தான் உங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்’ இயேசு சொன்னார்.
பேதுரு நடப்பவற்றையனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார். ‘இயேசுவே நீர் என்ன சொல்கிறீர் ? ஏன் இப்படியெல்லாம் பேசுகிறீர் ?’
‘பேதுரு ! எல்லோரும் என்னை விட்டு விட்டு ஓடி விடப் போகிறீர்கள். அதைத் தான் சொன்னேன்’
‘கடவுளே… எல்லோரும் உம்மைவிட்டு ஓடிப் போனாலும் நான் ஓடிப் போக மாட்டேன்’ பேதுரு உறுதியுடன் சொன்னார்.
‘பேதுரு… என்னருமை சீடனே. நாளை விடியற்காலையில் கோழி கூவும் முன் நீ என்னை மூன்று முறை மறுதலித்துப் பேசுவாய் !’ இயேசு சொல்ல பேதுரு மறுத்தார்.
‘கண்டிப்பாக அப்படி நடக்காது. உம்முடன் சேர்ந்து உயிர் விட்டாலும் விடுவேனே தவிர உம்மை மறுதலிக்கவே மாட்டேன்’
‘பேதுரு. வருந்தாதே. நீ மறுதலிப்பாய். ஆனால் அதன்பின்பு மனம் மாறி என்னுடைய பணியைத் தொடர்ந்து செய்’ இயேசு சொல்ல பேதுரு மீண்டும் மறுத்தார்
‘இல்லை கடவுளே… உம்மை மறுதலிக்கமாட்டேன். மரணமடைய நேர்ந்தாலும் மறுதலிக்கமாட்டேன்’. எல்லா சீடர்களும் அவ்வாறே சொன்னார்கள்
இயேசு புன்னகைத்தார்
0
இயேசு அங்கிருந்து கெத்சமெனி என்னும் தோட்டத்துக்கு வந்தார். அது ஒலிவமலையில் இருந்தது.
கெத்சமெனி அழகான தோட்டம். தனிமையாய் செபம் செய்வதற்கு உகந்த இடம். இயேசு தன்னுடன் பேதுரு, யாக்கோபு மற்றும் யோவானை அழைத்துக் கொண்டு தோட்டத்துக்குள் சென்றார். மற்ற எட்டு சீடர்களும் தோட்டத்தில் ஒரு இடத்தில் தங்கி இளைப்பாறினார்கள். யூதாஸ் மட்டும் அங்கே இல்லை.
யூதாஸ் அந்த நேரத்தில் பகைவர்களின் பாசறையில் இருந்தான் !
‘யூதாஸ்… நாங்கள் இயேசுவைப் பிடிக்கப் போகிறோம். நீ அவரை படை வீரர்களுக்கு அடையாளம் காட்டவேண்டும். அதற்கு என்ன கூலி எதிர்பார்க்கிறாய் ?’ தலைமைக் குரு ஒருவர் கேட்டார்.
‘எவ்வளவு தருவீர்கள் ?’
‘முப்பது வெள்ளிக்காசுகள் !’
‘போதும். நான் இயேசுவைக் காட்டித் தருகிறேன்.’
‘இரவாக இருக்கிறது. எனவே நீ அவரைத் தொட்டு இவர் தான் இயேசு என்று அடையாளம் காட்டவேண்டும். நாங்கள் அவரைப் பிடித்துக் கொள்வோம்’ அவர்கள் சொல்ல யூதா? உள்ளுக்குள் சிரித்தான். இயேசுவைப் பிடிக்கப் போகிறீர்களா ? மடையர்களே எத்தனை முறை நீங்கள் அவரைக் கொல்லப் பார்த்தீர்கள். அவர் உங்கள் கைகளுக்கு அகப்படாமல் மறைந்து போனது தெரியாதா ? நான் காட்டிக் கொடுத்தாலும் நீங்கள் அவரைப் பிடிக்கும் முன் அவர் உங்களிடமிருந்து தப்பி விடுவார்.
‘யூதா? என்ன பதிலையே காணோம் ?’
‘தொட்டு என்ன ? அவரை நான் கட்டிப் பிடித்து முத்தமிடுகிறேன். நீங்கள் அவர் தான் இயேசு என்று அறிந்து கொள்ளுங்கள்’ யூதாஸ் சொன்னான். சும்மா இவர் தான் இயேசு என்று சொல்வதற்கே எனக்கு முப்பது வெள்ளிக் காசுகளா ! அவனுடைய மனம் குதூகலித்தது.
‘ஆனால் ஒன்று…’ யூதாஸ் சொன்னான்.
‘என்ன ?’
‘பணத்தை நீங்கள் முதலிலேயே எனக்குத் தந்து விட வேண்டும். இயேசுவை காட்டிக் கொடுப்பது மட்டும் தான் என் வேலை. அவரைப் பிடிப்பது உங்கள் பாடு.’ யூதாஸ் சொல்ல அவர்கள் சம்மதித்தார்கள்.
பணம் கை மாறியது.
அதே நேரத்தில் இயேசு கெத்சமெனி தோட்டத்தில் செபித்துக் கொண்டிருந்தார். சிறிது நேரம் செபித்தபின் திரும்பி வந்து சீடர்களைப் பார்த்தார். எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள்
‘தூங்காதீர்கள். விழித்திருந்து செபியுங்கள். இந்த இரவு மிகவும் கடினமானது..’ இயேசு சொல்ல அவர்கள் கண்களைக் கசக்கினார்கள்.
இயேசு மீண்டும் செபிக்கச் சென்றார். அவருடைய மனம் கடும் போராட்டத்திலும், வலியிலும் ஆழ்ந்தது
‘தந்தையே… நீர் என்னை அனுப்பிய பணியை நான் முடித்து வைக்கும் வலிமையைத் தாரும். நீர் விரும்பினால் இந்தத் துன்பத்தின் பாத்திரம் என்னை விட்டு அகன்று போகும். ஆனாலும் என்னுடைய விருப்பமல்ல, உம்முடைய விருப்பமே நிறைவேறட்டும்’ இயேசு செபித்தார். அவருடைய வியர்வை இரத்தத் துளிகளாய் தரையில் விழுந்து தெறித்தது. வேதனையின் பாரம் கண்களில் தெரிந்தது.
திரும்பி வந்து சீடர்களைப் பார்க்க, அவர்கள் மீண்டும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களை மீண்டும் எழுப்பினார்.
‘என்னுடன் ஒருமணிநேரம் கூட விழித்திருந்து செபிக்க உங்களால் முடியவில்லையா ?’ இயேசுவின் குரலில் வருத்தம் தெரிந்தது. மீண்டும் அவர் செபிக்கச் சென்றார்.
செபித்துவிட்டு மூன்றாம் முறையாகத் திரும்பி வந்தார். இப்போது இயேசுவின் முகம் தெளிவடைந்திருந்தது. நடக்கப் போவதை எதிர்கொள்ளும் வலிமையை அவருடைய செபம் அவருக்கு வழங்கியிருந்தது. சீடர்களோ அப்போதும் தூங்கிக்கொண்டு தான் இருந்தார்கள். இயேசு அவர்களை எழுப்பினார்.
‘உங்கள் மனம் வலிமையானது தான். ஆனால் உடல் வலுவற்றது. சோதனைகளைக் கடக்க வேண்டுமானால் செபம் செய்யவேண்டியது மிகவும் அவசியம். சரி.. சரி… எழுந்திருங்கள். நாம் செல்ல வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது. மானிட மகனைக் காட்டிக் கொடுப்பவன் நெருங்கிவிட்டான்.’ இயேசு சொல்ல சீடர்கள் புரியாத முகங்களுடனும், சோர்வுற்ற இமைகளுடனும் விழித்தார்கள்.
அப்போது பெரும் மக்கள் கூட்டம் ஒன்று வாள்களோடும், தடிகளோடும் தீப்பந்தங்களோடும் அவர்களை நோக்கிவந்து கொண்டிருந்தது. அவர்களுக்கு முன்னால் வந்து கொண்டிருந்ததான் யூதாஸ்.
‘ராபி…. நீர் வாழ்க’ யூதாஸ் புன்னகையுடன் இயேசுவைக் கட்டிப் பிடித்து முத்தமிட்டான்.
‘தோழா… முத்தமிட்டா மனுமகனைக் காட்டிக் கொடுக்கிறாய் ?’ இயேசு கேட்க யூதாஸ் திடுக்கிட்டான்.
‘நீங்கள் யாரைத் தேடி வந்திருக்கிறீர்கள் ?’ இயேசு கூட்டத்தினரைப் பார்த்துக் கேட்டார்.
‘இயேசுவை ‘
‘நான் தான் அவர்’
இயேசு சொன்னதும் அவருடைய குரலில் இருந்த உறுதியைக் கண்ட படை வீரர்கள் பின் வாங்கினார்கள்.
‘என்னைத் தானே தேடி வந்திருக்கிறீர்கள். வாருங்கள். என்னைப் பிடிப்பதற்கு எதற்கு இத்தனை வாள்கள், தீப்பந்தங்கள், படை வீரர்கள். நான்தான் தினமும் கோயிலில் போதித்து வருகிறேன், மக்களோடு உரையாடுகிறேன்… ‘ இயேசு சொல்ல படைவீரர்கள் மீண்டும் தயங்கினார்கள்.
யூதா? அந்தக் கூட்டத்தை விட்டு மெல்ல நழுவினான்.
படைவீரர்களோடு வந்திருந்த தலைமைக் குருக்கள். ‘ பிடியுங்கள் அவனை… ஏன் தயங்குகிறீர்கள்’ என்று சொல்லி படைவீரர்களைத் தூண்ட படைவீரர்கள் முன்னே சென்று இயேசுவைப் பிடித்தார்கள்.
அவ்வளவுதான் இயேசுவுடன் இருந்த ஒரு சீடர் தன்னுடைய வாளை உருவி படைவீரனின் காதை வெட்டினான். வெட்டப்பட்டக் காது தரையில் தெறித்துப் போய் விழுந்தது.
இயேசு அந்தச் சீடரைக் கடிந்து கொண்டார்.
‘உன் வாளை உறையிலே போடு. வாள் எடுப்பவன் வாளால் மடிவான். இவர்களைத் தாக்க வேண்டுமென்று தான் தந்தையிடம் சொன்னால் வினாடி நேரத்தில் இவர்களைத் தவிடு பொடியாக்கும் படையை அவர் எனக்குத் தருவார். நிகழ வேண்டியவை நிகழத்தான் வேண்டும்.’ என்று சொல்லிய இயேசு, அந்தக் காதை எடுத்து வெட்டுப் பட்ட இடத்தில் வைக்க அது ஒட்டிக் கொண்டது.
படைவீரன் அதிர்ந்தான். கொலைசெய்வதற்காக வந்தோம் என்று தெரிந்தும் கூட இயேசு தன்னைக் குணமாக்கினாரே என்பதை நினைக்க நினைக்க அவன் உள்ளுக்குள் கூனிக் குறுகினான். இந்த வேலையே வேண்டாம் என்று சொல்லி வாளை வீசி விட்டு கூட்டத்தை விட்டு வெளியேறினான்.
மற்ற படை வீரகள் எல்லோருமாகச் சேர்ந்து இயேசுவைப் பிடித்துச் சங்கிலியால் பிணைத்தார்கள்.
இயேசு பிடிபட்டதைக் கண்ட சீடர்கள் சிதறி ஓடினார்கள். படை வீரர்கள் அவர்களைத் துரத்தினார்கள். மரித்தாலும் உம்முடன் வருவேன் என்று சொன்ன பேதுருவையும் அங்கே காணவில்லை ! அவரும், யோவானும் தலையில் முக்காடிட்டுக் கொண்டு தூரத்தில் நின்று இயேசுவை என்ன செய்கிறார்கள் என்று பதட்டம் வடியும் கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
தலைமைக்குரு கயபா வின் முன்னிலையில் இயேசு நிறுத்தப்பட்டார்.
நேற்றுவரை சுதந்திரப் பறவையாக போதித்துக் கொண்டிருந்த இயேசு இன்று சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு கயபாவின் முன்னிலையில் நின்று கொண்டிருக்கிறார். ஆனாலும் அவருடைய கண்களில் இருந்த உறுதி கலையவில்லை.
பேதுரு தலைக்கு முக்காடிட்டுக் கொண்டே மெல்ல மெல்ல காய்பாவின் மாளிகைக்குள் வந்து இருட்டான ஒரு இடத்தில் மக்களோடு மக்களாக அமர்ந்து நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
‘சாட்சிகளைத் தயார் செய்து விட்டீர்களா ?’ சத்தமில்லாமல் அருகிலிருந்த தலைமைச் சங்கத்தான் ஒருவனின் காதில் கிசுகிசுத்தார் காய்பா.
‘ஆட்களை அனுப்பியிருக்கிறோம். எத்தனை செலவானாலும் பரவாயில்லை என்று சொல்லியிருக்கிறோம். எப்படியும் சாட்சிக்கு ஆட்கள் கிடைத்து விடுவார்கள்’
‘காதும் காதும் வைத்த மாதிரி எல்லாம் நடக்க வேண்டும். மக்களிடையே மத வெறி அடங்கி விடாமல் பார்த்துக் கொள்வது தான் முக்கியம்.’
‘அதையெல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். அவனுடைய சீடனையே அவனுக்கு எதிராகத் திருப்பினோமே… சாட்சிகளைப் பிடிப்பதா பெரிய வி?யம் ?’
‘ம்… இரண்டு சாட்சிகள் வேண்டும். இரண்டு பேரும் ஒரே போல ஒரே குற்றச் சாட்டைச் சொல்லவேண்டும். அது தான் சட்டம். அதை நினைவில் கொள்ளுங்கள்’ காய்பா கிசுகிசுத்தான்.
‘மக்களுக்காக ஒருத்தன் சாவது நல்லது என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்களே. அது இன்று நடக்கவேண்டும். அதற்கு என்ன தேவையோ அதைத் தயாராக்கும் பொறுப்பை என்னிடம் விட்டு விடுங்கள்’ காய்பாவும் தலைமைக்குருவும் கிசுகிசுப்பாய் பேசினார்கள்.
இயேசு அமைதியாக நின்றார்.
பேதுரு முற்றத்தில் அமர்ந்து நடப்பவற்றை அனைத்தையும் நடுங்கும் உடலோடு பார்த்துக் கொண்டிருந்தார்.
‘ஏய்… நீ அவனோடு இருந்தவன் தானே ‘ திடீரென தனக்குப் பின்னால் எழுந்த குரலினால் நிலைகுலைந்து போய் நிமிர்ந்தார் பேதுரு.
‘என்ன சொன்னீர்கள் ?’
‘நீ.. இயேசுவோடு இருந்த மனிதர்களில் ஒருவன் தானே ?’
‘நானா… இயேசுவோடா ? ம்… அவர் யாரென்றே எனக்குத் தெரியாது’ பேதுரு பயத்துடன் மறுத்து தன்னுடைய தலையை வேறு பக்கமாய்த் திருப்பிக் கொண்டார்.
அப்போது இயேசுவுக்கு முன்னால் சாட்சிகள் தயாராய் வந்து நின்றார்கள்.
‘இவன் கடவுளுடைய திருக்கோயிலை இடித்து அதை மூன்று நாளில் கட்டியெழுப்ப முடியும் என்று சொன்னான். இது நாற்பது ஆண்டுகள் பாடுபட்டு இந்த ஆலயத்தைக் கட்டியவர்களுக்கு இவன் செய்யும் அவமரியாதை. கோயிலை இடியுங்கள் என்று சொன்னது அவர் கடவுளுக்கே செய்த அவமரியாதை. நம் கடவுளை இழிவு படுத்திய இவனுக்கு மரண தண்டனை தான் சரியான தீர்ப்பாக முடியும்’ ஒருவன் சொல்லி முடித்தான். மறக்காமல் கனக்கும் பையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான்.
‘இவன் கடவுளின் மகனாமே…. கடவுள் தான் இவனை மேலிருந்து கீழே அனுப்பினாராம். நம் கடவுளையும் இவனையும் ஒன்றென்று சொல்லி நம்முடைய நம்பிக்கைகளை எல்லாம் தகர்ந்து மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளான் இவன்’ பணப்பை இரண்டாமவனையும் பேச வைத்தது.
பேதுரு திக் திக் மனதுடன் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார். இயேசு திடீரென சங்கிலிகளை உடைத்துக் கொண்டு சட்டென்று மறைந்துவிடுவார் என்றே இமைகளை மூடாமல் பார்த்துக் கொண்டே இருந்தார்.
‘ஏய்ய்… நீ…’ பேதுருவின் பின்னால் ஒரு முரட்டுக் குரல்.
பேதுரு சர்வநாடியும் ஒடுங்கிப் போய் திரும்பினார்.
‘நீ… அவருடன் இருந்த சீடர்களில் ஒருவன் தானே ? உன்னை நான் அவரோடு பார்த்திருக்கிறேனே ?’ ஒருவன் பேதுருவிடம் கேட்டான்.
‘நானில்லையப்பா அது. வேறு யாராவது இருக்கும். அவர்கள் எல்லாரும் தான் ஓடிவிட்டார்களே.’ பேதுரு சமாளித்தார்.
‘ஆனால் உன்னைப் போலவே ஒருவன் அவனோடு சுற்றிக் கொண்டிருந்தான்…’
‘இ..இருக்கலாம். ஆனால் அது நானில்லை. அவனோடு சுற்றிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் வேலையற்றவர்கள். நான் அப்படியல்ல..’ பேதுரு சக?மாய் சொல்ல முயன்று தோற்றுப் போய் செயற்கையாய்ப் புன்னகைத்தார்.
அவன் சந்தேகம் அகலாதவனாகச் சென்றான்.
ஏறக்குறைய ஒரு மணி நேரம் கடந்திருக்கும். இயேசு குற்றவாளிபோல நின்று கொண்டிருந்தார். நேரம் அதிகாலையை நெருங்கிக் கொண்டிருந்தது.
மூன்றாம் முறையாக ஒரு நபர் பேதுருவின் அருகே வந்து தீப்பந்த வெளிச்சத்தில் அவரை உற்றுப் பார்த்தார்.
‘நீ கலிலேயன் தானே ? அந்த இயேசுவின் சீடர்களில் ஒருவன் தானே ? உண்மையைச் சொல்’ அவனுடைய குரலில் மெலிதான கோபம் இருந்தது.
‘நானா ? அந்த மனிதனோடா ? இல்லவே இல்லை. ‘ பேதுரு அவசர அவசரமாக மறுத்தார்.
தொலைவில் நின்றிருந்த இயேசு பேதுரு இருந்த திசை நோக்கி மெல்ல தலையைத் திருப்பினார்.
அப்போது வெளியே சேவல் கூவும் சத்தம் கேட்டது.
சேவலில் குரலைக் கேட்டதும் பேதுருவின் உள்ளம் உடைந்தது.
‘சேவல் கூவும் முன் என்னை மூன்று முறை மறுதலிப்பாய்.. ‘ என்று பேதுருவிடம் இயேசு சொல்லியிருந்த வார்த்தைகள் பேதுருவின் உள்ளத்துக்குள் ஈட்டிகளாய்ப் பாய்ந்தன. அவருடைய கண்களும், மனமும் கலங்கியது. உடனே வெளியே சென்ற பேதுரு கண்ணீர் விட்டுக் கதறி அழுதார்.
உள்ளே… இரவு முழுவதும் தலைமைக் குருக்களும், மறைநூல் அறிஞர்களும் சாட்சிகளைக் காசுகொடுத்து வாங்கியும் யாரும் உருப்படியாய் சாட்சி சொல்லவில்லை. ஒத்த சாட்சிகள் வரவேயில்லை.
அத்தனை சாட்சிகள் தனக்கு எதிராக வீசப்பட்டபோதிலும் இயேசு அமைதியாக நின்றிருந்தார். இயேசுவைப் பிடித்தாயிற்று, இந்தமுறை நழுவவிட்டால் இனிமேல் இவரைப் பிடிப்பதுகூட நடக்காமல் போகலாம் எனவே எப்படியாவது இயேசுவுக்குத் தண்டனை வாங்கித் தந்தேயாகவேண்டும் என்று முடிவெடுத்த தலைமைக்குரு மெல்ல எழுந்தார். தன் தொண்டையைக் கனைத்துக் கொண்டார்.
‘இத்தனை பேர் உனக்கு எதிராகச் சாட்சி சொல்கிறார்களே. மறுத்துச் சொல்ல எதுவும் இல்லையா ? அமைதியாய் நீ நிற்கிறாய் என்றால் எல்லா குற்றச்சாட்டுகளையும் ஒப்புக் கொள்கிறாய் என்று பொருள். தெரியும் தானே’ தலைமைக்குரு ஆரம்பித்தார்.
இயேசு அப்போதும் மெளனம் சாதித்தார்.
தலைமைக்குருவின் பொறுமை எல்லை மீறியது.
‘சரி.. ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல். நீ கடவுளின் மகனாகிய மெசியாவா ?’ தலைமைக்குரு துருப்புச் சீட்டுக் கேள்வியை எடுத்து இயேசுவின் முன்னால் விரித்தான்.
‘ஆம். நான் கடவுளின் மகனாகிய மெசியா தான். மானிட மகன் கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருப்பதையும், வானமேகங்களின் மீது வருவதையும் நீங்கள் காண்பீர்கள்’ இயேசுவின் குரல் உறுதியுடன் ஒலித்தது.
தலைமைக்குரு தன்னுடைய மேலுடையைக் கிழித்தான். ‘இதோ… நீங்களே கேட்டீர்களே. நம்முடைய கடவுளை இவன் பழித்துரைத்ததை நீங்களே கேட்டீர்களே. இனிமேல் சாட்சிகள் எதற்கு ? இவனை என்ன செய்வது ? நீங்களே சொல்லுங்கள்’ தலைமைக்குரு கொக்கரித்தான். அவனுடைய உள்ளம் இயேசுவை மாட்ட வைத்த களிப்பில் துள்ளியது.
‘கடவுளைப் பழித்தவனை வேறு என்ன செய்வது ? கொலை தான்’ கூட்டம் பதிலளித்தது.
‘பளார்…’ எங்கிருந்தோ ஒரு முரட்டுக் கரம் இயேசுவின் முகத்தைத் தாக்கியது.
‘இறைவாக்கினராகிய மெசியாவே… உம்மை அடித்தவனுடைய பெயரை தீர்க்கத் தரிசனமாய்ப் பார்த்துச் சொல்லுங்கள் பார்ப்போம்’ ஏளனக் குரல்கள் எழுந்தன.
பின்புறமிருந்து இயேசுவின் முதுகில் வலிமையான கரங்கள் தாறுமாறாய் இறங்கின. அவருடைய முகத்தின் மீது எச்சில் உமிழப்பட்டது. கால்கள் அவருடைய உடம்பின் மீது நீண்ட நாளைய வைராக்கிய வெறியுடன் உதைத்தன. இயேசு நிலை தடுமாறி விழுந்தார்.
‘இறைமகனே… விழுவது உமக்கு அழகா ?’
‘என்ன இது ? கடவுளின் மகனுக்கு தன்னுடைய கைக்கட்டை அவிழ்க்கக் கூட முடியவில்லையா ?’
‘கடவுளின் மகனுக்கு வலிக்காதே… நன்றாக அடியுங்கள்’ ஏளனக் குரல்கள் அறை முழுவதும் ஒலித்தன. காய்பாவின் முன்னிலையிலேயே இயேசு தாறுமாறாய் அடிக்கப்பட்டார். அவருடைய உதடுகள் கிழிந்து இரத்தம் வழிந்தது. உடலெங்கும் வலிமையான அடிகளை வாங்கிய வலி.
தங்கள் ஆத்திரத்தை இத்தனை நாள் அடக்கி வைத்திருந்த அத்தனை விரோதக் கைகளும் இயேசுவை அடித்தன. தங்கள் தலைமைக்கு எதிராக எச்சரிக்கைக் குரல்களை எழுப்பிய இயேசுவை அத்தனை தலைவர்களும் நையப் புடைத்தனர். இயேசு அமைதிகாத்தார்.
‘விடியும் போது இவனை ஆளுநர் பிலாத்துவிடம் கூட்டிக் கொண்டு போகவேண்டும். அதன்பின்பு இவனுக்கு என்ன தீர்ப்பு கிடைக்கும் என்பது தெரியாது. எனவே இப்போது தான் நமக்கு வாய்ப்பு. நன்றாக அடியுங்கள். இவன் ஒருவேளை விடுதலை செய்யப்பட்டால் கூட நாளை இவன் நமக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசக்கூடாது.’ தகவல் பரிமாறப்பட்டது. இயேசுவின் உடலெங்கும் இரத்தக்காயங்கள்.
‘ஏய்… விஷயம் தெரியுமா ? இயேசு நன்றாக மாட்டிக் கொண்டார். அவரை தலைமைக்குருக்களும், மற்றவர்களும் சேர்ந்து கயபாவின் முன்னிலையில் வைத்து அடித்து உதைக்கிறார்கள்’ ஒருவன் சொல்ல திடுக்கிட்டுத் திரும்பினான் அவன்.
யூதாஸ் இஸ்காரியோத்து. இயேசுவை முத்தமிட்டுக் காட்டிக் கொடுத்த இயேசுவின் சீடன்.
‘என்ன சொல்கிறாய் ? இ..இ…இயேசுவை அடிக்கிறார்களா ?’ யூதாசின் குரல் பிசிறடித்தது.
‘அடியா ? மரண அடி. இப்படி ஒரு அடியை அவன் வாழ்நாளில் வாங்கியிருக்கவே முடியாது. அப்படி ஒரு அடி ! ‘
‘அவருடைய சீடர்களெல்லாம் கூட இல்லையா ? மக்கள் யாரும் அவருக்கு ஆதரவாய் பேசவில்லையா ?’ யூதா? பதட்டமானான்.
‘ஆதரவா ? ஆதரவு அளித்தவர்களெல்லாம் பயந்து ஓடிவிட்டார்களே. நான் கொஞ்ச நேரம் தான் நின்றேன். அதற்குமேல் நிற்கமுடியவில்லை. இயேசுவை அடிப்பதைப்போல இன்னொருவரை இதுவரை யாரும் அடித்ததேயில்லை.’
‘உண்மையாகவா சொல்கிறாய் ? இயேசு தப்பிக்கவில்லையா ? அதெப்படி ? அவர்… அவர்…’ யூதாஸ் தடுமாறினான்.
‘நாளை அவர் கொல்லப்படுவது நிச்சயம் என்று பேசிக்கொள்கிறார்கள்.’
‘ஐயோ… தப்பு செய்து விட்டேனே…’ யூதாஸ் எழுந்தான்.
‘ஏய்… என்ன ஆச்சு ?’
‘இல்லை… இயேசுவை நான் தான் அடையாளம் காட்டினேன். அவர் கண்டிப்பாகத் தப்பித்து விடுவார் என்றல்லவா நினைத்தேன். ஐயோ…. பெரும் தப்பு செய்துவிட்டேன். எப்படியாவது அவரை விடுவிக்க வேண்டும்…’ யூதாஸ் லஞ்சமாய் வாங்கியிருந்த பணமுடிப்பையும் எடுத்துக் கொண்டு ஒரு தலைமைக்குருவைப் பார்க்க ஓடினான்.
யூதாசின் மனம் பதட்டத்தில் துடித்தது. தவறிழைத்துவிட்டோ மே என்று அவருடைய உள்ளம் கதறி அழுதது. இத்தனை நாள் கூடவே இருந்துவிட்டு இப்படிக் கடைசியில் நானே துரோகியாகிவிட்டேனே. அரற்றியபடியே ஓடிய யூதா? ஆலயத்தில் அமர்ந்திருந்த தலைமைக்குருவின் முன்னால் வந்து விழுந்தான்.
‘ஐயா…. இயேசு ஒரு பாவமும் அறியாதவர். அவரைக் காட்டிக் கொடுத்து நான் மிகப்பெரிய பாவம் செய்துவிட்டேன்….’ யூதா? மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க அவசர அவசரமாய்ச் சொன்னான்.
‘அதனால் எங்களுக்கென்ன ?’
‘ஐயா… அது என்னுடைய தவறு. இதோ நீங்கள் தந்த பணம் அப்படியே இருக்கிறது. இதைப் பெற்றுக் கொண்டு இயேசுவை விட்டு விடுங்கள்’ யூதாஸ் கெஞ்சினான்.
‘விட்டு விடுவதா ? உன்னுடைய வேலை முடிந்துவிட்டது. இனிமேல் உன்னுடன் எனக்கென்ன பேச்சு. போய்விடு..’ தலைமைக்குரு தலையைத் திருப்பினார்.
‘ஐயா… அப்படிச் சொல்லாதீர்கள். அவரை அடிக்கிறார்களாம், கொல்லப்போகிறார்களாம். எல்லாம் என்னால் தானே… இந்தப் பணம் எனக்கு வேண்டாம். இது பாவப்பட்ட பணம். இதை வாங்கிக் கொள்ளுங்கள். இதற்கு மேலும் பணம் வேண்டுமென்றால் நான் தருகிறேன். பெற்றுக் கொண்டு தயவு செய்து இயேசுவை விட்டு விடுங்கள்’ யூதா? விடாமல் கெஞ்சினான்.
‘யோவ்… வெளியே போகிறாயா இல்லையா ? உனக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. போய்விடு’ குரு கத்தினார்.
‘இதோ… வெள்ளிக் காசுகள். எனக்கு இவை வேண்டாம். கேவலம் பணத்துக்காக ஒரு மாமனிதனைக் காட்டிக் கொடுத்துப் பாவம் செய்துவிட்டேன்…’ அழுது கொண்டே யூதா? தன்னிடமிருந்த பணப்பையை ஆலயத்தினுள் வீசி எறிந்தான். வெள்ளிக்காசுகள் ஆலயம் முழுவதும் சிதறின.
யூதாஸ் அதற்குமேல் அங்கே நிற்கவில்லை. குற்ற உணர்வு அவனைத் துரத்தியது. இயேசுவைக் காட்டிக் கொடுத்த குற்ற உணர்வுடன் இனிமேல் வாழமுடியாது என்று முடிவெடுத்த யூதாஸ் கண்ணீர் விட்டழுதான்.
‘இயேசுவே என்னை மன்னியும்.’ அவனுடைய உதடுகள் விடாமல் முணுமுணுக்க யூதாஸ் தூக்கில் தொங்கினான் ! உயிர் விட்டான்.
நன்றாக வாழவேண்டுமென்று லஞ்சமாய் வாங்கிய பணம் ஆலயத்துக்குள் சிதறிக் கிடந்தது. தலைமைக்குரு அவற்றைப் பொறுக்கினார்.
‘இதைக் காணிக்கைப் பெட்டியில் போடாதீர்கள். ஏனென்றால் இது இரத்ததுக்கான விலை. எனவே வேறு ஏதாவது செய்யுங்கள்’ ஆலய நிர்வாகிகளிடம் தலைமைக்குரு சொன்னார்.
‘இதை வைத்து ஒரு குயவன் நிலத்தை வாங்குவோம். அன்னியரை அடக்கம் செய்வதற்குரிய ஆலய நிலமாக அது இருக்கட்டும்.’ நிர்வாகிகள் முடிவெடுத்தார்கள்.
அவர்கள் ஒரு நிலத்தை வாங்கினார்கள். அதை இரத்த நிலம் என்று அழைத்தனர்.
0
மறுநாள் விடியற்காலையில் இயேசு ஆளுநன் பிலாத்துவின் முன்னிலையில் நிறுத்தப்பட்டார்.
பிலாத்து இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தான். இயேசு பெரிய குற்றவாளியல்ல என்பதை அவன் அறிந்திருந்தான். குருக்களும், மறைநூல் வல்லுனர்களும், பரிசேயர்களும் இயேசுவிடம் வெறுப்படைந்திருப்பதையும், பொறாமை கொண்டிருப்பதையும் கூட பிலாத்து அறிந்திருந்தான். எனவே எப்படியாவது இயேசுவுக்குக் குறைந்த பட்ச தண்டனையை வழங்கி விடுவித்துவிட வேண்டும் என்று மனதில் நினைத்தான்.
‘நீ யூதர்களின் அரசனா ?’ பிலாத்து இயேசுவைப் பார்த்துக் கேட்டான்.
‘அரசன் என்பது நீர் சொல்லும் வார்த்தை. உண்மைக்குச் சான்று பகர்வதே எனது பணி’ இயேசுவின் குரலில் பயமோ நடுக்கமோ இருக்கவில்லை.
‘உன்மீது இத்தனைக் குற்றச் சாட்டுகள் கூறுகிறார்களே. அதற்கு நீ என்ன பதில் சொல்கிறாய் ?’
இயேசு மெளனமாய் இருந்தார்.
‘என்ன அமைதியாய் இருக்கிறாய் ? நான் நினைத்தால் உன்னை விடுவிக்கவும் முடியும், கொல்லவும் முடியும் தெரியாதா ?’ பிலாத்து அரச தோரணையில் சொன்னான்.
‘என் மேல் உமக்கிருக்கும் அதிகாரம் எல்லாம் விண்ணகத்தில் இருக்கும் என் தந்தை தந்தது தான். இல்லையேல் உனக்கு என்மீது எந்த அதிகாரமும் இருக்காது’ இயேசு சொன்னார்.
பிலாத்து வியப்புற்றான். அவனுக்கு முன்னால் இதுவரை வந்திருந்த கைதிகள் எல்லாம் தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக மண்டியிடுபவர்களாகவே இருந்தார்கள். இயேசு தான் மரணத்தைத் துச்சமென மதித்து அமைதி காக்கிறார். அல்லது அதிகாரமாய் பேசுகிறார். பிலாத்து யோசித்துக் கொண்டிருக்கும்போதே பிலாத்துவின் மனைவி பிலாத்துவை தனியே அழைத்தாள்.
‘இந்த மனிதனை ஒன்றும் செய்யாதீர்கள். இவனைக் குறித்து நான் கனவு கண்டேன். இவர் பெரிய இறைவாக்கினர் தான். இவர் கடவுளின் மகன் தான். இவரை விட்டு விடுங்கள்’ பிலாத்துவின் மனைவி சொல்லச் சொல்ல பிலாத்து உள்ளுக்குள் குழம்பினான்.
திரும்பி வந்து மக்கள் கூட்டத்தினரின் முன்னால் நின்ற பிலாத்து
‘இவனிடம் நான் குற்றம் ஒன்றும் காணவில்லை’ என்றான். எப்படியும் இயேசுவை விடுதலை செய்துவிட வேண்டும் என்னும் எண்ணம் இப்போது அவனுக்குள் வலுத்திருந்தது.
‘குற்றம் இல்லையா ? கலிலேயா துவங்கி, யூதேயா வரை மக்களைக் கெடுத்து மக்களை கலவரத்துக்காய்த் தூண்டி விடும் இந்த மனிதனிடம் குற்றம் இல்லையா ?’ குருக்கள் தூண்டிவிட மக்கள் கத்தினார்கள்.
‘ஓ.. இவன் கலிலேயனா ?’ பிலாத்து கேட்டான்.
‘ஆம்…’
‘அடடா.. அப்படியானால் இவன் எருசலேமில் ஆட்சிசெய்யும் ஏரோது மன்னனின் அதிகாரத்துக்கு உட்பட்டவன். இவனை அங்கே அனுப்புங்கள்’ பிலாத்து நழுவினான்.
இயேசு ஏரோதின் முன்னிலைக்கு இழுத்துச் செல்லப்பட்டார்.
ஏரோது இயேசுவைக் கண்டதும் மகிழ்ந்தான். இயேசு எருசலேம் நகரில் மிகவும் பிரபலமடைந்திருந்ததால் ஏரோது இயேசுவைப்பற்றி அதிகம் கேள்விப்பட்டிருந்தான். எப்படியாவது இயேசுவைக் காணவேண்டும், அவருடைய அற்புதங்கள் சிலவற்றைக் கண்ணால் காணவேண்டும் என்று அவன் ஆசைப்பட்டிருந்தான்.
‘நீர் தான் இயேசுவா … ‘ ஏரோது நகைப்புடன் கேட்டான்.
இயேசு மெளனமாய் இருந்தார்.
‘நீ நிறைய அற்புதங்கள் செய்தாயாமே.. கொஞ்சம் செய்து காட்டு பார்ப்போம். எனக்கும் பொழுது போகும்’ ஏரோது சிரித்தான்.
கூட வந்திருந்த மறைநூல் அறிஞர்கள், குருக்கள் எல்லோரும் இயேசுவின் மேல் குற்றம் சுமத்திக் கொண்டே இருந்தார்கள்.
இயேசு எதற்கும் பதில் சொல்லவில்லை.
‘நீ செத்தவனை உயிர்ப்பித்தாயாமே ? இங்கே உயிரோடு இருக்கும் யாரையாவது செத்துப் போகச் செய் பார்க்கலாம் ‘
‘பிசாசைத் துரத்தினாயாமே… உன் கைகளைக் கட்டியிருக்கும் சங்கிலியை உடைத்துவிடு பார்க்கலாம்’
‘என்ன கடவுளின் மகனை சங்கிலியால் கட்டமுடியுமா ?’ ஏரோதின் ஏளனப் பேச்சுகள் கூட்டத்தினரை ஆரவாரம் செய்ய வைத்தன.
‘இவன் கடவுளின் மகனல்லவா ? இவனுக்கு ஒரு நல்ல பட்டாடையை உடுத்துங்கள்’ ஏரோது சொல்ல படைவீரர்கள் அவருக்குப் பட்டாடை ஒன்றை அணிவித்தார்கள்.
இயேசு அவர்கள் முன்னிலையில் ஓர் ஏளனச் சின்னமாக நின்றார். இயேசுவின் பொறுமையும் அமைதியும் ஏரோதின் மனதைக் குழப்பின. ஒருவேளை இவர் இறைவாக்கினராய் இருப்பாரோ ? என்னும் குழப்பம் அவருக்குள் எழுந்தது. நமக்கு ஏன் வம்பு என்று ஏரோது நினைத்தான்.
‘இதோ… இவனை பிலாத்துவிடமே கூட்டிக் கொண்டு போங்கள். அவர் சொல்லும் தண்டனையை இவருக்கு வழங்குங்கள்’ ஏரோது சொன்னான்.
கூட்டத்தினர் சளைக்கவில்லை. இயேசுவை இழுத்துக் கொண்டு மீண்டும் பிலாத்துவின் முன்னிலையில் நிறுத்தினார்கள்.
இயேசு மீண்டும் தன்னிடத்தில் அழைத்துவரப்பட்டதைக் கண்ட பிலாத்து வருந்தினான். அவன் தலைமைக்குருக்களையும், ஆட்சியாளர்களையும் அழைத்தான்.
‘இதோ.. இந்த மனிதனிடத்தில் நீங்கள் சாட்டும் குற்றச் சாட்டுகள் எதையும் நான் காணவில்லை’
‘இல்லை. இவன் குற்றவாளிதான். இதோ, இத்தனை மக்கள் கூறுகிறோமே. அவர்கள் பதில் சொன்னார்கள்’
‘நீங்கள் தான் சொல்கிறீர்கள். ஆனால் என்னுடைய விசாரணையிலோ, ஏரோது மன்னனின் விசாரணையிலோ எதுவும் தெரியவில்லை. எனவே இவனைத் தண்டித்து விடுவிப்பேன்’ பிலாத்து சொன்னான்.
‘விடுவிப்பதா ? முடியாது. இவன் மரணதண்டனை அனுபவிக்க வேண்டும்’ அவர்கள் உறுதியாய்ச் சொன்னார்கள்.
அவர்கள் வெளியே சென்று மக்களிடையே இயேசுவைக் கொல்லவேண்டுமெனக் கத்துங்கள் என்று மக்களைத் தூண்டினார்கள். அவர்களுக்குத் தேவையானவற்றைக் கொடுப்பதாக வாக்களித்தார்கள். இயேசுவின் ஆதரவாளர்களை அவர்கள் கூட்டத்துக்கு வெளியே தள்ளினார்கள்.
பிலாத்து மீண்டும் இயேசுவை விசாரித்தான்.
திடீரென பிலாத்துவுக்கு ஒரு யோசனை. அவர்களுடைய வழக்கப்படி பா?கா விழாவின் போது கைதி ஒருவரை விடுதலை செய்யலாம். குறைந்த குற்றம் செய்த ஒரு மனிதனை விடுதலை செய்வது வழக்கம். அப்போது சிறையில் அதிபயங்கரக் கொலை குற்றவாளி ஒருவன் இருந்தான். அவன் பெயர் பரபா.
அவனோடு ஒப்பிட்டால் இயேசு செய்ததாகச் சொல்லப்படுபவையெல்லாம் வெறும் சாதாரண குற்றங்கள் தான். எனவே பரபாவை விடுதலை செய்யவா இயேசுவை விடுதலை செய்யவா என்று கேட்போம். மக்கள் கண்டிப்பாக இயேசுவைத் தான் கேட்பார்கள் என்று பிலாத்து நினைத்தான். அவனுடைய முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை பிறந்தது.
‘அமைதி… அமைதி…’ பிலாத்து மக்கள் முன்னிலையில் எழுந்து நின்றான்.
கூட்டம் அமைதியானது.
‘உங்களுக்கு நான் ஒரு கடைசி வாய்ப்பு தருகிறேன். நல்ல முடிவு எடுங்கள். பா?கா விழாவை முன்னிட்டு நான் ஒரு கைதியை விடுதலை செய்யப் போகிறேன். நன்றாகக் கேளுங்கள். பரபா என்னும் கொலையாளியைப் பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரியும். மாபெரும் கலகக் காரன். கொலையாளி. அவனை நான் விடுதலை செய்வதா ? இதோ இந்த குற்றமற்ற இயேசுவை விடுதலை செய்வதா ? சொல்லுங்கள்’ பிலாத்து கேட்டான்.
‘பரபாவை…. ‘ கூட்டத்தினரைக் கத்த வைத்தனர் கூட்டத்தில் கலந்திருந்த குருக்களின் ஆதரவாளர்கள்.
‘என்ன பரபாவையா ? அவன் எப்படிப்பட்ட குற்றவாளி தெரியுமா ? அவனையா விடுதலை செய்யவேண்டும்’ பிலாத்து மீண்டும் கேட்டான்.
‘ஆம். பரபாவை விடுதலை செய்தால் போதும். இயேசுவை விடுவிக்க வேண்டாம்’ கூட்டம் கத்தியது.
பிலாத்து குழம்பினார். ‘அப்படியானால் உங்கள் இயேசுவை நான் என்ன செய்வது ?’
கூட்டத்தினர் ஒருவினாடி மெளனமானார்கள்.
‘சிலுவையில் அறையும்’ ஒரு குரல் ஓரமாய் ஒலித்தது. அந்த ஒலியைப் பிடித்துக் கொண்டே பல ஒலிகள் உயர்ந்தன. சில வினாடிகளில் கூட்டத்தினர் ஒரே குரலில் கத்தத் துவங்கினார்கள்
‘சிலுவையில் அறையும்… சிலுவையில் அறையும்…. சிலுவையில் அறையும்….’
பிலாத்து தளர்ந்து போய் ஆசனத்தில் அமர்ந்தான்.
‘இவனைக் கொண்டு போய் சித்திரவதை செய்து கூட்டி வாருங்கள்’ பிலாத்து அரைமனதுடன் ஆணையிட்டான்.
படைவீரர்கள் இயேசுவைச் சித்திரவதைக் கூடத்துக்கு இழுத்துச் சென்றார்கள்.
இரும்புச் சங்கிலிகள், முள்கம்பிகள், இரும்பு உருண்டைகள் என்று கையில் கிடைத்த ஆயுதங்களயெல்லாம் வீரர்கள் கைகளில் எடுத்துக் கொண்டார்கள். இயேசு அவர்கள் முன்னிலையில் நிராயுதபாணியாய் நின்றார்.
இயேசுவைச் சங்கிலியால் கட்டி ஒரு தூணில் பிணைத்த வீரர்கள் அவரை அடிக்கத் துவங்கினார்கள். முள்கம்பிகள் அவருடைய முகத்தையும் உடம்பையும் இழுத்துக் கிழித்தன. சங்கிலிகளும் கூர்மையான முள் சாட்டைகளும் இயேசுவின் உடம்பில் இரத்தக் கோடுகளை வரைந்தன. இயேசு வலியால் துடித்தார். ஆனாலும் மனம் தளரவில்லை.
வீரர்கள் தங்கள் கை ஓயும் வரை இயேசுவை அடித்தார்கள். இயேசு இரத்த வெள்ளத்தில் மிதந்தார்.
பின் அவர்கள் அவருக்கு ஒரு சிவப்பு அங்கியை அணிவித்து
‘யூதரின் ராஜாவே வாழ்க…’ என்று சொல்லிக் கொண்டே எட்டி உதைத்தார்கள். இயேசுவின் காயமான உடம்பு மண்ணில் உருண்டது.
அவர்கள் கூர்மையான முட்களினால் ஒரு கிரீடத்தைப் பின்னி இயேசுவின் தலையில் வைத்தார்கள். தலையில் வைத்த கிரீடத்தின் மேல் தடிகளால் அடித்தார்கள். முட்கள் அவருடைய தலையைத் துளைத்தன. நெற்றியைக் கிழித்தன. தலை இரத்தத்துக்குள் அமிழ்ந்தது.
சித்திரவதை முடிந்து இயேசுவைத் தூக்கிக் கொண்டு மக்களின் முன்னிலையில் நிறுத்தினார்கள் படைவீரர்கள்.
‘பாருங்கள். இதோ மனிதன். ‘ பிலாத்து சொன்னான்.
‘சிலுவையில் அறைய ஆணையிடும்’ மக்கள் கத்தினார்கள்.
‘சிலுவையில் அறையக் கூடிய அளவுக்கு இவனிடம் நான் குற்றம் ஏதும் காணவில்லை. எனவே இவனை விட்டுவிடப் போகிறேன்’ பிலாத்து மீண்டும் சொன்னான்.
‘குற்றம் இல்லையா ? எங்களுக்கு ஒரு நியாயப் பிரமாணம் உண்டு. இவன் கடவுளின் மகன் என்று பிரகடனப் படுத்தினான். எனவே இவன் சாகவேண்டும்’ அவர்கள் குரலுயர்த்தினார்கள்.
பிலாத்து இதைக் கேட்டு இன்னும் அதிகமாக வருந்தினான். ஒருவேளை இவர் கடவுளின் மகனாக இருப்பாரோ ? என்ற கவலையும் அவரைப் பிடித்துக் கொண்டது.
‘இவன் செய்த குற்றம் என்ன ?’ பிலாத்து குரலை உயர்த்தினார்.
‘சிலுவையில் அறையும்… சிலுவையில் அறையும்…’ மக்கள் விடாமல் கத்திக் கொண்டே இருந்தார்கள்.
இயேசுவை விடுவிப்பது சாத்தியமில்லை என்பது பிலாத்துவுக்குப் புரிந்தது. இயேசுவை விடுவிக்க நினைக்கும் தன்னுடைய முயற்சி பெரும் கலவரத்தை நோக்கிப் போவதை அறிந்த பிலாத்து கூட்டத்தினர் முன்னிலையில் தண்ணீரை எடுத்து ‘இவனுடைய இரத்தப் பழியில் எனக்குப் பங்கில்லை. நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று கூறி தன்னுடைய கைகளைக் கழுவினான்.
‘இவனுடைய இரத்தப்பழி எங்கள் மேலும், எங்கள் பிள்ளைகள் மேலும் விழட்டும்’ என்று மக்கள் பதில் சொன்னார்கள்.
‘சரி… இவனை உங்கள் விருப்பம்போலச் செய்ய அனுமதிக்கிறேன்’ பிலாத்து சொல்ல மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள்.
பரபா விடுதலை செய்யப்பட்டான்.
இயேசு சிலுவை மரணத்துக்காய் தீர்ப்பிடப்பட்டார்.
அதன்பின் இயேசுவைச் சிலுவையில் அறைவதற்கான வேலைகள் மும்முரமாகின. பாரமான சிலுவை ஒன்று வாங்கிவரப்பட்டது. அதை இயேசுவின் தோள்மீது சுமத்தி கொல்கொதா என்று அழைக்கப்பட்ட மலையை நோக்கி நடக்கவைத்தார்கள். கொல்கொதா என்பதற்கு மண்டைஓடு என்பது பொருள்.
படைவீரர்கள் கூட்டத்தினரை விலக்கி வழிஏற்படுத்த, நடக்கவே வலுவில்லாத குற்றுயிரான நிலையில் இயேசு பாரமான சிலுவையைச் சுமந்து கொண்டு மலையை நோக்கி நடந்தார்.
இயேசுவால் நடக்க முடியவில்லை. தடுமாறி விழுந்தார்.
படைவீரர்கள் தங்கள் கைகளில் வைத்திருந்த சாட்டையால் அவரை அடித்தார்கள். இரண்டு பேர் அவரை எழுப்பி விட மீண்டும் சிலுவை அவருடைய தோளில் போடப்பட்டது.
இயேசு அரண்மனை வளாகத்தை விட்டு வெளியே வந்தார். வெளியே பாமரமக்கள் ஏராளமானோர் குழுமியிருந்தார்கள். இயேசுவின் தீவிர சீடர்கள் தலைமறைவாகிவிட்டிருக்க, இயேசுவின் போதனைகளில் ஈர்க்கப்பட்ட பாமர மக்கள் அவருக்காகக் கண்ணீர் விட்டார்கள்.
இயேசு தொடர்ந்து நடந்தார்.
இருபுறமும் பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதார்கள்.
இயேசு தன்னிடம் எஞ்சியிருந்த வலிமையை எல்லாம் ஒன்று திரட்டி பேசினார்.
‘எருசலேம் மகளிரே… எனக்காக அழாதீர்கள். உங்களுக்காகவும், உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்’.
சொன்ன இயேசு மீண்டும் தடுமாறித் தரையில் விழுந்தார். பூமி அவருடைய இரத்தத்தைக் கொஞ்சம் துடைத்துக் கொடுத்தது.
மீண்டும் எழுந்தார். தொடர்ந்து நடந்தார். இயேசுவால் நடக்க முடியவில்லை. கொல்கொதா மலை இன்னும் தொலைவில் இருந்தது.
இயேசு மூன்றாவது முறையாகக் கீழே விழுந்தார். இனிமேல் எழும்புவதற்கு உடம்பில் வலு இல்லை. சிலுவையை யாராவது ஒருகை தூக்கி விட்டால் நன்றாக இருக்குமே, இயேசுவின் பார்வையில் தன்னுடைய பாரத்தைச் சுமக்கும் தோள்கள் ஏதாவது தென்படுகிறதா என்ற ஏக்கம்.
‘இவனால் சிலுவையைத் தூக்கிக் கொண்டு நடக்க முடியாது. என்ன செய்யலாம் ?’
‘யாரையாவது பிடித்து சிலுவையைச் சுமக்கச் செய்வோம், இல்லையேல் இவன் மலையை அடையும் முன் மரணத்தை அடைந்துவிடுவான்’
படைவீரர்கள் பேசிக் கொண்டே சுற்றுமுற்றும் பார்த்தார்கள். சீரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் அவர்களுடைய கண்களில் தட்டுப்பட்டான்.
‘ஏய்… நீ யார்..’
‘நான் சீமோன். சீரேன் ஊரைச் சேர்ந்தவன். எனக்கு இந்த மனிதனைத் தெரியாது… நான் ஒன்றும் அறியாதவன்’ அவன் பயந்து நடுங்கினான்.
‘எங்கிருந்து வருகிறாய்’
‘வயலில் வேலை செய்துவிட்டு வருகிறேன்’
‘சரி… சரி.. வந்து இவனுடைய சிலுவையைச் சுமந்து கொண்டு வா…’
‘ஐயா… என்னை விட்டுவிடுங்கள். வேறு யாரையாவது அழையுங்கள்’ சீமோன் நழுவப் பார்த்தார்.
அவர்கள் அவரைக் கட்டாயப் படுத்தி சிலுவையைச் சுமக்க வைத்தார்கள். இயேசுவுக்காகச் சிலுவையைச் சுமந்தான் சீமோன் !.
கொல்கொத்தா மலை இயேசுவின் வருகைக்காகக் காத்திருந்தது. குற்றவாளிகளின் இரத்தம் சுமந்து சுமந்து அழுக்காகிக் கிடந்த கொல்கொதா மலையில் இயேசுவின் இரத்தத் துளிகள் விழுந்தன.
இயேசுவையும் சிலுவையையும் மலையுச்சியில் கொண்டுபோய் போட்டார்கள்.
இயேசுவை மட்டும் சிலுவையில் அறையாமல் அவருடன் இரண்டு குற்றவாளிகளையும் சிலுவையில் அறைந்து குற்றவாளிகளோடு குற்றவாளியாக அவரை நிற்கவைக்கவேண்டும் என்று ஏற்கனவே அலுவலர்கள் முடிவு செய்திருந்தார்கள். அந்த இரண்டு குற்றவாளிகளும் கூட இப்போது கொல்கொதா மலையுச்சியில் வந்து சேர்ந்தார்கள்.
இயேசுவுக்கு திராட்சை இரசத்தில் கசப்பைக் கலந்து ஒருவன் குடிக்கக் கொடுத்தான். இயேசு அதைக் குடிக்கவில்லை.
பெரிய நீளமான ஆணிகள் தயாராய் இருந்தன.
இயேசு சிலுவையில் கிடத்தப்பட்டார். அவருடைய கைகளை இழுத்து மரத்தோடு சேர்ந்து ஆணிகளால் அறைந்தார்கள்.
பார்த்துக் கொண்டிருந்த கூட்டம் வீறிட்டு அலறியது. இயேசு வலியால் துடித்தார். இயேசுவின் கால்கள் இரண்டையும் சேர்த்து பாதங்களைத் துளைத்தபடி நுழைந்தது மூன்றாவது நீளமான ஆணி. சொல்லமுடியாத வலி இயேசுவைத் துடிதுடிக்க வைத்தது. தனக்கு ஆதரவாய்ப் பேச யாராவது வருவார்களா என்று இயேசுவின் கண்கள் பார்த்தன. கடைசிவரை யாரும் வரவேயில்லை.
“யூதர்களின் அரசன்” என்னும் குறிப்பைத் தாங்கிய பலகை, சிலுவையில் இயேசுவின் தலைக்கு மேலாக அறையப்பட்டது.
சிலுவை மரம் நேராக நிமிர்த்தப்பட்டது !
‘மோசே பாலைவனத்தில் வெண்கலப் பாம்பை உயர்த்தியது போல மானிடமகனும் உயர்த்தப் படவேண்டும்’ இயேசு சொல்லியிருந்த வார்த்தைகள் அவருடைய சீடர்களின் மனதுக்குள் எதிரொலித்தன.
இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின் கழற்றி வைக்கப்பட்டிருந்த இயேசுவின் அங்கியை யார் சொந்தமாக்குவது என்று படைவீரர்களுக்குள்ளே தர்க்கம். அந்த அங்கி மேலிருந்து கீழ் வரை ஒரே துணியால் உருவாக்கப்பட்டிருந்தது.
‘நான் தான் மூத்த வீரன்.. எனக்குத் தான் இந்த ஆடை வேண்டும்’
‘நான் தான் இவனை அதிகமாய்த் துன்புறுத்தினேன். எனக்குத் தான் இந்த ஆடை !’
‘இவனை ஆணியில் அறைந்தது நான் தான்… எனக்குத் தான் இந்த ஆடை வேண்டும்’ அவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டார்கள்.
‘இந்தச் சண்டை முடியப்போவதில்லை. ஒன்று செய்யலாம். நம்முடைய பெயர்களையெல்லாம் எழுதிச் சீட்டுப் போடலாம். யாருடைய பெயர் வருகிறதோ, அவருக்கே இந்த ஆடை… என்ன சொல்கிறீர்கள் ?’ ஒருவர் கேட்க, மற்றவர்கள் வேறு வழியின்றி ஒத்துக் கொண்டார்கள்.
‘என் ஆடைகளைத் தங்களுக்குள் பகிந்து கொண்டார்கள். என் உடை மீது சீட்டுப் போட்டார்கள்’ என்று மறைநூலில் எழுதப்பட்டிருந்த வார்த்தைகள் அதைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களின் உள்ளத்துக்குள் எதிரொலித்தன.
இயேசுவின் வலப்புறமும் இடப்புறமும் இரண்டு கள்வர்கள் சிலுவையில் அறையப்பட்டு தொங்கினார்கள்.
‘திருக்கோயிலை இடித்து மூன்றாவது நாளில் கட்டுவோனே. இந்த மூன்று ஆணிகளின் கட்டுகளிலிருந்து உன்னை விடுவித்துக் கொள்’
‘பிறரை விடுவித்த மகானே… உன்னை விடுவிக்கத் தெரியவில்லையா ?’
‘இப்போது நீ சிலுவையிலிருந்து இறங்கி வா. உன்னை நாங்கள் கடவுளாக ஏற்றுக் கொள்கிறோம்’
சிலுவைக்குக் கீழே இருந்தவர்கள் இயேசுவை நோக்கி இகழ்ந்தார்கள்.
‘தந்தையே இவர்களை மன்னியும். இவர்கள் தாங்கள் செய்வது என்னவென்பதை அறியாமல் செய்கிறார்கள்’ இயேசுவின் உதடுகள் மன்னிப்பை வேண்டின.
இயேசுவின் இடப்பக்கத்தில் அறையப்பட்டிருந்த கள்ளனும் இயேசுவைப் பார்த்து,’ நீர் கடவுளின் மகனானால் நீரும் விடுதலையாகி என்னையும் விடுவியும்’ என்றான்.
அப்போது அவருடைய வலப்பக்கத்தில் அறையப்பட்டிருந்தவனோ
‘நீ இன்னும் திருந்தவில்லையா ? நாம் குற்றம் செய்தோம் தண்டனை அனுபவிக்கிறோம். இவர் குற்றமே செய்யாதவர். நாம் தண்டனை பெறுவது நியாயம். ஆனால் இவர் கடவுளின் மகன். தண்டனைக்குரியவரல்ல. எனவே நீ இயேசுவை இகழாதே.’ என்று கூறிவிட்டு இயேசுவின் பக்கமாய்த் திரும்பி
‘இயேசுவே என் தவறுகளை மன்னித்து என்னையும் உமது விண்ணரசில் சேர்த்துக் கொள்ளும்’ என்றான்.
இயேசு அவனிடம்,’ நீ என்னுடன் வான்வீட்டில் நிச்சயம் இருப்பாய்’ என்றார்.
நண்பகல்.
திடீரென நாடெங்கும் இருள் பரவியது. வெயில் கொளுத்த வேண்டிய நண்பகலில் நாடே இருண்டதைக் கண்ட மக்களும், தலைவர்களும் பதட்டமடைந்தார்கள். அந்த இருள் மூன்று மணி வரை நீடித்தது.
சிலுவை மரத்துக்குக் கீழே இயேசுவின் தாயார் சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கும் தன் அன்பு மகனை உயிருக்குள் இரத்தம் வழிய உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அவளுடைய உடலும் உள்ளமும் ஒட்டுமொத்தமாய் சோர்ந்துபோய் வலியால் துடித்துக் கொண்டிருந்தது.
இயேசு தன் தாயைப் பார்த்தார். அருகிலே நின்றிருந்த தன் சீடரைப் பார்த்தார்.
தன் தாயை நோக்கி
‘அம்மா….’ என்று அழைத்தார்.
தாய் கதறினாள். அவளால் ஏதும் பேச முடியவில்லை. மரணத்தின் விளிம்பில் தொங்கிக் கொண்டிருக்கும் மகனை ஏறிட்டுப் பார்க்கவும் அவளால் முடியவில்லை.
‘அம்மா… அதோ உன் மகன்’ என்று சீடரை நோக்கிக் கூறினார்.
பின் சீடரை நோக்கி
‘இதோ உன் தாய்…’ என்றார். சீடர் கண்ணீருடன் தலையாட்டினார்.
‘தாகமாய் இருக்கிறேன்’ இயேசுவின் குரல் சிலுவை உச்சியிலிருந்து மெல்லியதாய் விழுந்தது.
படைவீரர்கள் உடனே கடற்காளானைக் காடியிலே தோய்த்து ஒரு ஈட்டியில் குத்தி அவரிடம் நீட்டினார்கள். அவர் அதைக் குடிக்கவில்லை. அவருடைய ‘தாகமாயிருக்கிறேன்’ என்னும் வார்த்தையின் பொருளை உணர்ந்து கொள்ளுமளவுக்கு படைவீரர்கள் பக்குவமடைந்திருக்கவில்லை.
காலை ஒன்பது மணியளவில் சிலுவையில் அறையப்பட்ட இயேசு பிற்பகல் மூன்று மணிவரை சிலுவையில் தொங்கினார்.
மூன்று மணியளவில் இயேசு உரத்த குரலில் கத்தினார்
‘ஏலி…ஏலி…லெமா சபக்தானி…’. என் இறைவா என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர் ? என்பதே அதன் பொருள். சிலுவையின் கீழ் அதைக் கேட்டுக் கொண்டிருந்த இயேசுவின் சில ஆதரவாளர்கள் கண்ணீர் விட்டார்கள்.
படைவீரர்களோ சிரித்தார்கள்.
‘ஏய்.. இவன் இறைவாக்கினர் எலியாவைக் கூப்பிடுகிறானா ?’
‘ஒருவேளை எலியா வந்து இவரைக் காப்பாற்றுவாரோ ?’
‘பார்ப்போம்… ஒருவேளை ஏதாவது சுவார?யம் நிகழலாம்…’
என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள்.
‘தந்தையே… உமது கைகளில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்’ இயேசு உரத்த குரலில் மீண்டும் கத்தினார். அதைச் சொன்னதும் இயேசுவின் தலை சாய்ந்தது.
இயேசு உயிர்விட்டார் !
அதே நேரத்தில் எருசலேம் தேவாலயத்தின் திரை மேலிருந்து கீழாக இரண்டாகக் கிழிந்தது. அங்கே கூடியிருந்த குருக்களும், மறைநூல் அறிஞர்களும் அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள்.
பாறைகள் வெடித்துச் சிதறின. பெரும் மலைகள் பிளந்தன. பல கல்லறைகள் திறந்தன. இறந்த பலருடைய உடல்கள் உயிருடன் எழும்பின !
கொல்கொத்தா மலையில் சிலுவையருகே நின்றிருந்த படைத்தலைவர்களும் படைவீரர்களும் நடு நடுங்கினார்கள். மலையே கவிழ்ந்து விடுவதுபோல ஆடியது.
இயேசுவைப் பழித்தவர்கள் எல்லாம்
‘இ…இவர் உண்மையிலேயே இறைவாக்கினர் தான்’ என்று நடுக்கத்துடன் சத்தமிட்டார்கள்.
good
LikeLike
very thanks
LikeLike
வருகைக்கு நன்றி இம்மானுவேல் 🙂
LikeLike
En Devan Unmaiullavar…
Ennai Belapaduthugira krushthuvinale
Ellavatraum Seyya enaku belanundu…
God With Us…
LikeLike
மிக்க நன்றி சுவேதா. உங்கள் விரிவான பதிலுக்கும் உங்கள் ஆழமான கருத்துக்களுக்கும்.
தொடர்ந்து வருகை தாருங்கள்.
LikeLike
மிக்க நன்றி உண்மைத் தமிழன். நிச்சயமாக ஒரு பெரும் தொகையாகத் தான் இருக்க வேண்டும். எனக்குத் தெரியவில்லை, அறிந்தவர்களிடம் கேட்டுச் சொல்கிறேன்.
LikeLike
Hi Xavier,
I happened to go thru’ this article in the Good Friday …..so touching & moving it was…..couldn’t control the tears…..Very nice way of presentation….
Jesus Christ has indicated rather demonstrated to the world that , how much ever pain one gets in their life time is definitely lesser than what Jesus has suffered during crucifixion……
Inspite of the most extreme, unbearable pains undergone during crucifixion , Jesus rose alive in the third day ( Easter)…….meaning
“Any a person getting caught in the any amount of sufferings in this world will always suffer lesser than what Jesus has suffered and for sure he can raise up and come back to normalcy sooner , if he has that unshakeable FAITH in GOD …..”
Such a great TRUTH , Jesus Christ has revealed to the world by undergoing such immense pains ……..
And in this present world , we are shaken by even smaller problems rather trivial issues and get into various stress related problems, depressions etc ….
Let us be awaken to this TRUTH and follow Jesus Christ with FAITH…..his simple LOVING path with a SMILE …..!!
LikeLike
சேவியர்..
மீண்டும், மீண்டும் படிக்கத் தூண்டுகிறது..
எப்போதோ படித்தது.. முழுவதும் ஞாபகமில்லாமல் இருந்தது. இப்போது மறுபடியும் கற்றறிந்து கொண்டேன்.
ஒரு சிறிய சந்தேகம்.. யூதாஸ் வாங்கி கையூட்டுப் பணமான 30 வெள்ளி என்பது அப்போதைய இந்திய மதிப்பில் எவ்வளவாக இருந்திருக்கும்..?
விரிவான தங்களுடைய இறை நன்றிக்கு எனது வாழ்த்துக்கள்.
LikeLike
Thank you verymuch Michael
LikeLike
A very Deep Reflection
like witnessing in person
LikeLike
A very Deep Reflection
LikeLike