“நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன். எப்படிச் சாவது நல்லது என்று சொல்லுங்கள்”
இப்படி ஒரு கேள்வியை உங்களிடம் யாராவது கேட்டால் என்ன செய்வீர்கள் ? அந்த நபரை அழைத்து பேசி, தனியே அறிவுரை சொல்லி தற்கொலை எண்ணத்தை கைவிட உதவி செய்வீர்கள். அப்படித் தானே ?
ஆனால் எல்லா இடங்களிலும் இதே அரவணைப்பும், ஆறுதலும், வழிகாட்டுதலும் கிடைப்பதில்லை !
இப்படி ஒரு கேள்வி இணையதளத்தில் எழும்ப, உடனடியாக களத்தில் குதிக்கின்றன பல பதில்கள். எல்லோரும் பல்வேறு வழிமுறைகளை கைவசம் வைத்திருக்கின்றனர்.
இப்படிச் சாவது வலியற்ற சாவு. இப்படிச் சாக செய்யவேண்டியவை இவை, தற்கொலைக்குத் தேவையான இந்தப் பொருட்கள் இந்த இடங்களில் கிடைக்கின்றன. இந்த முறையில் சாக நினைப்பது உசிதம் ஏனெனில் சில மணி நேரங்களில் இறந்து விடலாம்.
இப்படி ஏராளமான அதிர்ச்சியூட்டும் வழிமுறைகள் தற்கொலையை உற்சாகப்படுத்துகின்றன. இந்தக் கட்டுரையில் நான் விளக்க விரும்பாத அந்த வழிமுறைகளில், திரைப்படங்களில் நாம் பார்த்துப் பழகிய தற்கொலை வழிகள் முதல் அதிர்ச்சியில் உறைய வைக்கும் அதி நவீன முறைகள் வரை உள்ளன என்பது பகீர் பயங்கரம்.
“நன்றி… இது தான் என் விலாசம். நான் தற்கொலை செய்யப் போகிறேன்.” சொல்லி விட்டு விடைபெறுகிறான் ஒரு பதின் வயது இளைஞன். கடமையில் கருத்தாய் இருப்பதாய் கருதிக் கொண்டு செத்துப் போகிறான்.
எல்லோரும் அவனை உற்சாகமாய் வழியனுப்பி வைக்கிறார்கள். ஒரு உயிர் அநியாயமாய் செத்துப் போகிறது. அதன் பின்னணியில் எழும் ஒரு குடும்பத்தின் அழுகுரலைப் பற்றிய எந்த விதமான உறுத்தலும் இன்றி விவாதம் தொடர்கிறது.
“நான் தனியா தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன். யாராவது சேர்ந்து தற்கொலை செய்யலாம் வருகிறீர்களா?” அழைப்பு விடப்படுகிறது. உடனே உற்சாகமாக கும்பல் சேர்ந்து விடுகிறது.
அந்த கும்பல் ஐந்து பேரோ, ஐம்பது பேரோ குவிகின்றனர். தங்களுக்குள்ளாகவே எப்படிச் சாவது ? எங்கே சாவது ? எப்போது சாவது என பேசி முடிவெடுக்கின்றனர்.
அனைவரும் கை கோர்த்துக் கொள்கிறார்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
இதெல்லாம் பரபரப்பூட்டும் திரைக்கதையோ, நாவலோ அல்ல. அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சி என்று சொன்னால் உள்ளம் பதறுகிறது அல்லவா?
உலகெங்கும் இத்தகைய இணைய தளங்கள் தற்கொலை விரும்பிகளால் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ரஷ்யாவில் மட்டும் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட இணைய தளங்கள் மும்முரமாய் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இளம் வயதினர் உறுப்பினராக இருக்கும் பல இணணய தளங்கள் உள்ளன. இத்தகைய தளங்கள் பலரை தற்கொலைக்கு வழியனுப்பி வைத்துக் கொண்டே இருக்கின்றன.
இதில் அதிர்ச்சியூட்டும் செய்தி என்னவெனில், யாரேனும் தனக்கு ஒரு பிரச்சனை இருப்பதாகச் சொன்னால் உடனே தற்கொலையே தீர்வு என பலர் அறிவுரை செய்கின்றனர்.
யாரும், தற்கொலை செய்ய வேண்டாம் என்றோ, அது தவறு என்றோ சொல்வதே இல்லை. எப்போதேனும் எழும் சிறு சிறு குரல்களும் வெளிவராமல் அடங்கிவிடுகிறது.
தற்கொலை செய்வதா ? வேண்டாமா எனும் மனநிலையில் சிக்கித் தவிக்கும் இளைஞர்கள் இத்தகைய தளங்களில் வந்தால் செத்துப் போவது உறுதி என்கின்றனர்.
சுமார் பதினொன்று முதல் இருபத்து ஐந்து வரையிலான வயதினரே இத்தகைய தளங்களில் இணைந்து விவாதிக்கின்றனர். இத்தகைய இணைய தளங்களின் கொடிய விளைவாக ரஷ்யாவில் மாதம் ஒன்றுக்கு சுமார் இருபது பதின் வயதினர் தற்கொலை செய்து கொள்கின்றனர், மிக மிக மகிழ்ச்சியுடன்.
இந்தத் தளங்களில் இணைபவர்களில் ஏற்கனவே தற்கொலைக்கு முயன்றவர்களும் உண்டு அவர்கள் தங்கள் அனுபவங்களை இதில் பதிவு செய்கின்றனர்.
இப்படிப்பட்ட தளங்கள் வேறு விதமான முகமூடி அணிந்து நல்ல பிள்ளையாய் காட்சியளிப்பதால் இதை தடை செய்யும் வழியும் தெரியாமல் விழிக்கின்றனர்.
பதின் வயது துடிப்புடனும், உற்சாகத்துடனும் செலவிட வேண்டிய வயது. இந்த வயதில் தற்கொலை செய்ய வேண்டும் எனும் எண்ணம் ஏன் இவர்களுக்கு வருகிறது என்பதற்கு உளவியலார் பல்வேறு காரணங்களைச் சொல்கின்றனர்.
முதலாவதாக, எங்கும் நிறைந்திருக்கும் பதின் வயதுக் காதல். அவனோ, அவளோ இல்லையேல் வாழ்க்கை இல்லை என நினைக்கும் முட்டாள்தனமான பாலியல் ஈர்ப்புகள் தற்கொலைக்குத் தூண்டுகின்றன. பெரும்பாலும் பெண்கள் இத்தகைய வசீகர வலையில் சிக்கி தற்கொலையே தீர்வு என முடிவெடுத்து விடுகின்றனர்.
இரண்டாவதாக பெற்றோருடன் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் பதின் வயதினரை சட்டென உணர்ச்சி பூர்வமான முடிவுக்குள் தள்ளி விடுகின்றன. தனக்குத் தண்டனை தந்த பெற்றோரைத் தண்டிக்க வேண்டும் எனும் உணர்வு நிலை உந்துதல் தற்கொலைக்குத் தூண்டுகிறது.
மூன்றாவதாக சகவயதினரின் கேலி, கிண்டல், படிப்பில் ஏற்படும் தோல்வி, இயலாமை என சிறி சிறு பலவீனங்களின் தற்கொலைக்குத் தூண்டுகின்றன.
நான்காவதாக, மரணத்துக்குப் பின் வாழ்க்கையில் ஏதோ மிக மிக அதிக சந்தோசமும், சுவர்க்கமும் இருக்கின்றன எனும் நம்பிக்கை. என்னதான் இருக்கிறது என்பதை அறிய வேண்டுமே எனும் ஆவல். பதின் வயதினரின் ஆர்வக் கோளாறு தற்கொலைக்குத் தூண்டுகிறது.
இந்த இணைய தளங்களில் சென்று தற்கொலை செய்வதாக சொன்னால் மனம் மாற வாய்ப்பே தராமல் கூடவே நின்று சாவதை உறுதி செய்து விடுகின்றனர். குறிப்பாக குழுவினராக தற்கொலை செய்ய நினைப்பவர்கள் இடையில் விட்டு விலக வாய்ப்பு மிக மிகக் குறைவு. காரணம் மற்ற தற்கொலை விரும்பிகளின் கட்டாயம்!
கடந்த முப்பது வருடங்களில் இந்த தற்கொலை விகிதம் முப்பது மடங்கு அதிகரித்திருப்பதாக ரஷ்ய இணைய தளம் ஒன்று தெரிவிக்கிறது.
நவீனயுகம் பல்வேறு வசதிகளைச் செய்து தருகிறது, அவை நன்மையின் பாதையிலும், தீமையும் பாதையிலும் தடங்களைப் பதித்துக் கொண்டே செல்கிறது. தண்ணீர் விடுத்து பாலை எடுக்கும் சங்க கால அன்னப் பறவை போல தீமை விடுத்து நல்லதை எடுக்க வேண்டியது அவசியம்.
பதின் வயதுப் பருவம் என்பது மதில் மேல் அமர்ந்திருக்கும் பூனையைப் போன்றது. அது சரியான திசையில் குதிப்பதும், குதிக்காததும் குடும்பத்தினரின் அரவணைப்பையும், வழிகாட்டுதலையும் பொறுத்தது.
( இந்த வாரம் களஞ்சியம் இதழில் வெளியான எனது கட்டுரை )
i am always thinking about suside.
LikeLike
Tharkolai enpathu oru vazhiyae alla… Mohammed enum name vaithuk kondu tharkolai seyvathu, antha kadavuLai avamaanap paduthuvathu pola brother… Dont think negatively
LikeLike
நான்…. என்ன சொல்வது? தற்கொலை செய்துகொள்ள இலேசான வழிகளை தேடி ஒவ்வொரு இணைய பக்கத்தையும் புரட்டி தேடி வந்த பொழுது தான் இந்த பகுதியை பார்த்தேன், முழுதாக வாசித்தேன், என்ன சொல்வது, எனக்கு தற்கொலையை தவிர வேறு வழி எனக்கு தெரியவில்லையே.
LikeLike
Nan valanum, nan etharku saganum,en iraivan kodutha uirai avarae edukkum varai entha thunpam vanthalum jesus saves me
LikeLike
Sir nan saga poran ennala vazha mudiyala enaku amma appa illa sinna
Vayasula irunthe rompa kasta patdu vantha oru ponna love en life ava thanu
Nenaichi nan sapathisadhu ella avalukaga jowls cash kuduthu azhichita
Ippo avaluku vera payan kuda marrige aiduchi avalum poita but enaku 26 ege agudhu
Life veruthudichi udampu sari illama poiduchi pakathula parthukarathuku all illa rompa
Thanimaiya aiten ennala vazha mudiyala sir yarume illa ippo enaku pls sir nan saga ethavadhu vazhi sollunga sir pls
LikeLike
plese tel me how to join the suicidal grouph
LikeLike
நான் சாக வேண்டும் உதவி பண்ணுங்க வாழ்கை முழுவதும் பிரச்சினை வருது.என்னாலே சமாளிக்கே முடியலை. எவ்வளவு முச்சித்தலும் பிரச்சினை தீரமாண்டகித்து
LikeLike
வாழவே சுத்தமா பிடிக்கவில்லை. வாழ வழியும் தெரியலை. எனக்கு செத்தே ஆகனும். எப்படி சாகறது என்று.சொல்லுங்கள்
LikeLike
yen magannu vayathu 15 aakirathu ippozuthu 10th padikiraan. kadantha 1 varudamagaway naangal sollum vaarthaiyai kaytpathillai. sariyaga padipathillai. oru 6 , 7 months yennai (mother) vaadi podi nnu paysuraan, adikkiran. father kitta sondai poduvaan but vaada podannu sollamaatan. konjam kuda maraiyathaiya paysa maattenkuran.
evanai yeppadi thiruthuvathu. Please ennakku konjam sollungal. enakku suicide pannanum pola irukku. yenna pannu vathu please
LikeLike
100000 times please give me ya painless death in tips please
LikeLike
pleasa yenakku vazha veruppam ellai painless tips eruntha kudunga pls
LikeLike
en life la yellame prblm than. nala amma irunthum avangala purinjikatha thittuven ammavuku niraiya sorry solanum apram saganum so pls enaku antha web site thanga.
LikeLike
Enaku Vaalkaila narai prchna iruku athukaaka tharkoolai sailajm mudivu pannan nriya thadva try pannairukan ana enna la mudiyal ennaku antha web site adress kodunka pls
LikeLike
nanum sentukuren pa
LikeLike
//sir enaku thirumanam agi 3 varudam agiradhu 6 maathangaluku munbu en kanavar saalai vibathil irandhu vittar, 1 varudathirku munbu en 6 maadha kulandhaium irandhu vittadhu nan anathaiaga nirkiren tharkolai mudivinai en kanavar irandhavudane pala murai eduthen aanal kapathapaten, innum en manathil ean vaalkiren endruthan thonuthu saavatharkuthan vali thedi kondu irukiren
//
வாழ்வின் எல்லா நிகழ்வுகளுக்கும் ஒரு பொருள் இருக்கும். இறைவனுக்கே அது வெளிச்சம். 😦 துயரமான நிலை உங்களுடையது, ஆனால் அதை உயரமாக்கும் வல்லமை தர இறைவனை வேண்டுகிறேன்.
LikeLike
en kelviku innum ean pathil illai
என்ன கேள்வி, என்ன பதில் ?
LikeLike
//you are done a wonderful job with social media its useful to youngsters
//
நன்றி…
LikeLike
you are done a wonderful job with social media its useful to youngsters
LikeLike
en kelviku innum ean pathil illai
LikeLike
sir enaku thirumanam agi 3 varudam agiradhu 6 maathangaluku munbu en kanavar saalai vibathil irandhu vittar, 1 varudathirku munbu en 6 maadha kulandhaium irandhu vittadhu nan anathaiaga nirkiren tharkolai mudivinai en kanavar irandhavudane pala murai eduthen aanal kapathapaten, innum en manathil ean vaalkiren endruthan thonuthu saavatharkuthan vali thedi kondu irukiren
LikeLike
நன்றி நந்தினி…..
LikeLike
anaivarukkum nalla vazhi kaatudhal,nanri
LikeLike
sent all massages
LikeLike
ehd; cz;ikapy; jw;nfhiy nra;Jf;nfhs;s gy jlit epidj;Njd;. ,Ue;Jk; vd;id Vnjh xd;W jLj;jJ. MdhYk; vd;id tpl;L vd; gpur;rpidfSk; NrhjidfSk; tpoftpy;iy. vd; tho;tpy; vd;id mwpe;J ehd; vtUf;Fk; ve;j ghtKk; nra;jjpy;iy. MdhYk; ,e;j cyfpNy vd;id kl;Lk; jhd; ,t;thW NrhjidfSk; NtjidfSk; gPbj;Js;sd. vd;d nra;a $ba rPf;fpuNk ehd; ,t;Tyif tpl;L gpupe;J tpLNtd; vd;gjpy; vt;tpj re;NjfKk; ,y;iy.
rh[`hd; – ,yq;if
LikeLike
//please give me suicide tips or webside adress//
என்னாச்சு ?
LikeLike
please give me suicide tips or webside adress
LikeLike
நன்றி முத்துசாமி.
LikeLike
FRIEND VERY GOODKAVITHAI.
LikeLike
Pingback: Jkrsothy's Blog
Tharkoolai Virumpi, Taranijil Iruppin, Avankoolai Tannaal,Adaium Laapam, Ennenru KEdpiir, Mmraan Thanai, Koonridal Poolee,Anaithuk Kudumpamum,Aththudan Palippeyarar, Nilaiyaajii Koodukkum, Uravuth Thurooki Avanee Enpeen, Vaalath Theriyaa muddaail, Vasaiyai Valarththal Muraiyoo??, Avanee Manithan Enraail, Yaarum Virumpa Maaddaair, Unmai Manithan Nenraallunarvaan, Tharkkoolai Ennpathu Koolaijee,Piraraik Koolvathu moonru, Avanthannaik Koolvathumoonree, Koolaiku Avnee Thalaivan Ivaneekoolaith Thalaivan.” KOOLAITH THALAVAN”-K.SIVA-(Fr)
LikeLike
dear sir / madam,
please tips of Attand suicide.
LikeLike
/hi,im parthiban from chennai.//
நன்றி பார்த்திபன், வருகைக்கு.
LikeLike
hi,im parthiban from chennai.
LikeLike
//i am always thinking about suside.//
தற்கொலை பற்றி நினைக்கிறது தப்பில்லை, தற்கொலை பண்ணணும்னு நினைக்கிறது தான் தப்பு..
LikeLike
i am always thinking about suside.
LikeLike
Pingback: தற்கொலை விரும்பிகளால் நிரம்பும் சீனா & சென்னை ! « அலசல்
இந்த மாதிரி (சுயநலவாதிகளை) மனிதர்களை ஹெய்தியில் கொண்டு விடவேண்டும். அப்போது தெரியும் நாம் எவ்வளவு கொடுத்துவைத்தவர்கள் என்று.
நமக்கு நல்ல படிப்பு, செல்வம் எல்லாம் கிடைத்தவுடன் சகிப்புதன்மை, பொறுமை எல்லாம் பழங்கால பொருளாகிவிட்டது . சின்ன விஷயங்களுக்கும் கூப்பாடுபோடுகிறதை விட்டு அறிவோடு சிந்திக்கதெரியாதவர்களின் தலையில் கம்புவைத்து இரண்டு போட்டால் எல்லாம் சரியாகும்.
LikeLike
ம்ம்ம்… குரூப் சேர்ந்துடுவீங்களே 🙂
LikeLike
உலகம் சத்தியமா உருப்புடாது!!!
LikeLike
//சேவியர் ஸார்..
நானும் இப்படியொரு இடத்தைத்தான் தேடிக்கிட்டிருக்கேன்.
எல்லாத்தையும் சொல்லிப்புட்டு அட்ரஸை சொல்லாம விட்டுப்புட்டடீங்களே.. இது நியாயமா..?
//
உண்மைத் தமிழன் ! என்னோட தளத்தைப் பார்வையிட்டதுக்கு அப்புறம் அப்படி ஒரு தற்கொலை எண்ணம் வந்ததா என்பதைத் தெரியப்படுத்தவும். 🙂
LikeLike
//எங்கே செல்லும் இந்த உலகம்…..//
இதெல்லாம் வாழ்க்கையில் ஒரு அங்கம் தான் எப்போதுமே. இணையத்தில் நிகழ்வதால் சட்டென்று உலகத்துக்குத் தெரிந்து விடுகிறது. அவ்வளவு தான். சில ஆண்டுகளுக்கு முன் ஒரு சைனீஸ் படம் பார்த்தேன் சூயிசைட் கிளப் என்று. வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள்.
LikeLike
சேவியர் ஸார்..
நானும் இப்படியொரு இடத்தைத்தான் தேடிக்கிட்டிருக்கேன்.
எல்லாத்தையும் சொல்லிப்புட்டு அட்ரஸை சொல்லாம விட்டுப்புட்டடீங்களே.. இது நியாயமா..?
LikeLike
எங்கே செல்லும் இந்த உலகம்…..
LikeLike
அட… என்ன இப்படி சட்டுன்னு சொல்லிட்டீங்க… 😦
LikeLike
உலகம் உருப்புடாது
LikeLike