மரணம் என்ன
அழுத்தமாய் வரைந்த
ஓர்
கருப்புக் கோடா ?
ஆரம்பத்துக்குள் இழுக்கும்
கண்ணாடிக்
கதவா ?
ஆழ்நிலை உறக்கத்தின்
பேழையா ?
மத நாடகங்களின்
ஒப்பனை கலைந்த
ஒப்பந்த மேடையா ?
அதற்குப் பின் கேட்கும்
ஒப்பாரிக்குப் பொருள்
என்ன ?
ஆண்டவனை
ஒத்துக் கொள்ளாததற்காகவா ?
இல்லை
ஒத்துக் கொண்டதற்காகவா ?
அங்கே நடக்கும்
அறுவை சிகிச்சை
அறிவியலின் மீதா ?
இல்லை ஆன்மீகத்தின் மீதா ?
அது
விழித்துக் கொண்டதாய்க்
கனவு கண்டு,
கனவு காண்பதாய்
விழித்துக் கிடக்கும்
மயக்க நிலையின் இயக்கமா ?
சொல்லத் தவறும்
விடைகளுக்காக,
யாரும்
கேட்கத் தவறாத கேள்விகள்.
தரித்துக் கொள்ள
ஆசை தான் உண்மையின் ஆடையை.
ஆனாலும்
மரித்துப் போக சம்மதமில்லை
ஆண்டவன் அழைக்கும் வரை.
🙂 நன்றி .. விரைவில் சந்திப்போம் !
LikeLike
அந்த ரகசியத்த எப்படி என் கையால எழுதுவேன் ????
அடுத்த முறை சந்திக்கையில் என் வாயால சொல்றேன் 🙂
LikeLike
மிக்க நன்றி குகன். 🙂 எப்படித் தான் இப்படி நிறைய கவிதைகள் ஞாபகம் வெச்சிருக்கீங்களோ !!!!!
LikeLike
கவிஞர் சேவியருக்கு ,
“ஒரு தூக்குக் கைதியின் கடைசி இரவு ” என்று தான் எழுதிய கவிதையில் கவிப்பேரரசு வைரமுத்து,
“மரணம்
இது
ஊற்றப்படாமல்
வாழ்வின் கோப்பை
நிறைவதேது ?”
என்று எழுதி இருப்பார் .
அந்த மரணத்தை அங்குலம் அங்குலமாக அலசல் செய்யும் விதம் நன்று .
“மத நாடகங்களின்
ஒப்பனை கலைந்த
ஒப்பந்த மேடையா ? ”
மயக்க நிலையின் இயக்கமா ?
“நச்” வரிகள் !!!!!!!!!!!!
அன்புடன்
குகன்
LikeLike