கவிதை : முதல் பார்வையில் காதல் வருமா ?

 

ஒரு தடவை பார்த்ததும்
காதல் வருமா ?
கேட்கிறாய் மெல்ல என் காதைக் கடித்து.

இல்லையே.
காதலிக்கத் துவங்கும் முன்
உன்னை
இரண்டுதடவை பார்த்திருக்கிறேனே.

அப்பாக்கு காதல் பிடிக்காதாம் !
சோகத்துடன் சொல்கிறாய்.

இந்த வயதுக்கு மேல
அப்பாக்கு எதுக்கு காதல் ?
இயல்பாய் தான் சொன்னேன்.
விழுந்து விழுந்து சிரிக்கிறாய்.

நல்லவேளை
அப்பாவுக்கு காதல் பிடிக்கவில்லை.

இதுக்கு முன்னால
யாரையாவது காதலிச்சிருக்கியாடா ?
நெஞ்சில்
கோடு கிழித்துக் கேட்கிறாய்.

உன் தோழியர் யாரும்
அந்த பட்டியலில் இல்லாததால்
பதட்டமில்லாமல் பதில் சொல்கிறேன்.
இல்லை…என்று.

வீட்ல நம்ம காதலை
ஒத்துக்கலேன்னா என்ன பண்றது ?
கலவரக் குரலில் கேட்கிறாய்.

அந்த
நம்பிக்கைல தானே காதலிக்கிறேன்.
மனசுக்குள்
ஒலிக்கும் குரலை அடக்கி,
‘நல்லதே நடக்கும் ‘  என்கிறேன்.

 

22 comments on “கவிதை : முதல் பார்வையில் காதல் வருமா ?

  1. intha kathal enakku theriyathu ana en akka pappa mel uyir avlukkukkum enakkum ulla kalathali oru kavithaiyil slungal pls.

    Like

  2. //கோர்ட்டு வாசலில் நாலு வருஷம் நிக்க வச்சுருவாங்க!
    //

    வாசல்லயே 4 வருஷம்னா கொஞ்சம் அதிகம் தான் 🙂

    Like

  3. //செவியர்..இதே..நகைச்சுவையுடன்..காதலி..கிடைக்க…கடவது…//

    அப்பாடா… நீங்களாவது கவிதையை சரியா புரிஞ்சுகிட்டீங்களே 🙂

    Like

  4. //ஏம்பா.. உனக்கே இந்த கவிதை எல்லாம் ஓவர் அஹ தெரியல..
    ஐயோ……முடியலடா..சாமி..//

    முடிஞ்சிடுச்சு 😦

    Like

  5. ////அந்த
    நம்பிக்கைல தானே காதலிக்கிறேன்.
    மனசுக்குள்
    ஒலிக்கும் குரலை அடக்கி,
    ‘நல்லதே நடக்கும் ‘ என்கிறேன்//

    யோவ் கோபாலு நான் இந்த வரிய மீன் பன்னுனேன்யா…
    //

    கொஞ்சம் ஜாலியா எடுத்துக்கோங்க அண்ணாத்தே 🙂

    ஹி…ஹி…

    Like

  6. ////உன் தோழியர் யாரும்
    அந்த பட்டியலில் இல்லாததால்
    பதட்டமில்லாமல் பதில் சொல்கிறேன்.
    இல்லை…என்று.//

    கொஞ்சம் கூடவா நாக்கு கூசல… அவ்வ்வ்வ்வ்வ்வ்……

    —-

    ”இதுக்கு முன்னால
    யாரையாவது காதலிச்சிருக்கியாடா ” – ன்னு தானே கேக்கறாங்க.. இப்போ காதலிக்கிறியா கேக்கலையே…

    இதுல நாக்கு ஏன் கூசுது ?? மாங்கா சாப்பிட்டீங்களோ ???

    Like

  7. //இது காம காதல்
    கசமுசா காதல்//

    இது பதிலா, விமர்சனமா, கருத்தா, கவிதையா என்பது விளங்கும் வரை நான் மூச்சு விடப் போவதில்லை 😀

    Like

  8. ///
    செவியர்..இதே..நகைச்சுவையுடன்..காதலி..கிடைக்க…கடவது…
    ///

    நீங்க அவர சபிக்கிறீங்களா, வாழ்த்துறீங்களா?

    பு.த.செ.வி. (புரியல, தயவு செய்து விளக்கவும்)

    Like

  9. செவியர்..இதே..நகைச்சுவையுடன்..காதலி..கிடைக்க…கடவது…

    Like

  10. ஏம்பா.. உனக்கே இந்த கவிதை எல்லாம் ஓவர் அஹ தெரியல..
    ஐயோ……முடியலடா..சாமி..

    Like

  11. //அந்த
    நம்பிக்கைல தானே காதலிக்கிறேன்.
    மனசுக்குள்
    ஒலிக்கும் குரலை அடக்கி,
    ‘நல்லதே நடக்கும் ‘ என்கிறேன்//

    யோவ் கோபாலு நான் இந்த வரிய மீன் பன்னுனேன்யா…

    Like

  12. அந்த
    நம்பிக்கைல தானே காதலிக்கிறேன்.
    மனசுக்குள்
    இந்த ஜம்பமெல்லாம் இனி சாயாது. கோர்ட்டு வாசலில் நாலு வருஷம் நிக்க வச்சுருவாங்க!
    ஜாக்கிரதை!
    கமலா

    Like

  13. விக்கி,

    நீ படத்த மட்டும் பார்த்து பின்னூட்டம் போடுவோர் சங்கத்து ஆளுன்னு தெரியாம போச்சே!!!

    Like

  14. //உன் தோழியர் யாரும்
    அந்த பட்டியலில் இல்லாததால்
    பதட்டமில்லாமல் பதில் சொல்கிறேன்.
    இல்லை…என்று.//

    கொஞ்சம் கூடவா நாக்கு கூசல… அவ்வ்வ்வ்வ்வ்வ்……

    Like

  15. அதான் சொல்லிட்டாருல்ல வரும்னு….

    அப்புறம் என்ன பொய்யழகு, புண்ணாக்கு அழகு?

    கவித சொன்னா அனுபவிக்கனும். ஆய்ராயக்கூடாது…. புரிஞ்சுதா…

    சேவியரண்ணன் சொன்னா சரியாத்தான் இருக்கும்….

    Like

  16. ரசிகர்கள்: சேவியர் சார், நீங்க நல்லவரா கெட்டவரா?
    சேவியர் : தெரியலியேப்பா !

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.