சொல்லாமல் சொன்னவை

1

தனிமை
வறுத்தெடுக்கும் நாளில்
சில்லிடும் பனித் துகளாய்
வானிலிருந்து
உன் நினைவுகள்
நெஞ்சில் விழுந்ததாய்
சொல்லியிருக்கிறேன்.

பிறிதொரு நாளில்
கடுங்குளிர் போர்வை விரிக்க
ஓர்
வெப்பத் துளியாய்
என்
உயிரில் விழுந்ததையும்
சொல்லியிருக்கிறேன்.

உன்
பார்வை படும் தூரங்களே
என்
வாழ்வை நடும் தூரங்களென்றும்,

உன்
வார்த்தை விழும் சமவெளிகளே
என்
வாழ்க்கை எழும் சமவெளிகள்
என்றும் சொல்லியிருக்கிறேன்.

காதலிக்கிறேன் என்று
ஏன்
சொல்லவில்லை என்கிறாய்
பிரிவின் விரல் பிடித்து

14 comments on “சொல்லாமல் சொன்னவை

  1. //பெண்ககளை நாணம் தடுக்கும்….
    ஆண்கள் சொல்லிடலாமா?//

    காதலைச் சொல்லும் பெண்களை ஆண்கள் புழுவைப் போல பார்ப்பதில்லை, திட்டுவதில்லை, செருப்பால் அடிப்பதில்லை, ஆள் வைத்து மிரட்டுவதில்லை…..
    இப்போ சொல்லுங்க…. யார் சொல்வது நல்லது 😀

    Like

  2. //ஆழமான நட்பு கூட மென்மையின் உணர்வைக் கூறும், மயில் இறகின் வருடலுக்கு ஒத்ததாக இருக்கும். எனவே, காதலைச் சொல்லி விடுவது தான் இதற்கு ஒரே வழி!//

    நச் ! வெகு அழகாய் சொல்லி விட்டீர்கள் 🙂

    Like

  3. //காதலிக்கிறேன் என்று
    ஏன் சொல்லவில்லை என்கிறாய்
    பிரிவின் விரல் பிடித்து//

    ஆழமான நட்பு கூட
    மென்மையின்
    உணர்வைக் கூறும்,
    மயில் இறகின்
    வருடலுக்கு
    ஒத்ததாக இருக்கும்.

    எனவே,
    காதலைச்
    சொல்லி விடுவது தான்
    இதற்கு ஒரே வழி!

    பெண்ககளை நாணம் தடுக்கும்….
    ஆண்கள் சொல்லிடலாமா? 😉 …. just 4 fun. 🙂

    Like

  4. Pingback: சொல்லாமல் சொன்னவை

  5. சரியாகப் புரிந்துகொள்ளவில்லையென்றால் அது உண்மையான காதல் இல்லைதானே!

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.