ஆறு வயது, ஆறா மனது

tears
சில துயரங்களை வார்த்தைகளால் நிச்சயம் சொல்ல முடியாது.
உயிரை உலுக்கிப் போடும் நிகழ்வுகளைச் சொல்ல கண்ணீரால் தான் முடியும்.
சில துயரங்களைக் கண்ணீர் கூட சொல்லிவிடாது
உறைந்து போனபின் உருகுவது கூட கடினமாகிவிடுகிறது.

நீண்டகாலக் கனவாக இருந்து, நிஜமாய் மாறிய சொந்தக் காரில் குடும்பத்துடன் ஆனந்தமாய் பாண்டிச்சேரி பயணித்தபோது,
கோர விபத்து ஒன்றில் படுகாயமடைந்து
ஆறு வயதேயான தனது தேவதை போன்ற மகன் ராகுலை
இழந்து, படுகாயமடைந்து
சொல்லொண்ணாத் துயரத்தில்  இருக்கும் உயிர்தோழியும், சகபதிவருமான ( உன்னுடன் ) ஜானகி அவர்களின் துயரத்தை என்னால் எப்படியும் சொல்லி விட முடியாது.

“வாடா ராகுல்” என மகனின் உடலருகே, அவனுடைய ஆடைகளை நெஞ்சோடணைத்து அவர் கதறிய கதறலைக் கேட்டபின் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.

வாய் திறந்தால் அழுகை வெடித்துவிடுமோ எனும் பயத்தில் பேசாமலேயே இருந்து விடுகிறேன்.
அவருடைய துயரத்தில் பங்குகொள்ளும் விதமாய் எனது இரண்டு வலைத்தளங்களும் சில நாட்களுக்கு மெளனமாய் இருக்கும்.

8 comments on “ஆறு வயது, ஆறா மனது

  1. vaa da Ragul……………

    entha oru solle kangal niraithiduchi pa neenga yeppadithan

    anga vai thirakkamal ninaingannu yenakku theriyala eppave

    yenakku sathampottu azhanum pola erukkun sir athu yen

    manasula meenum meenum olichikkitu erukku sir mounathudaln

    kanneraium angali seihiren

    Like

  2. அன்பினிய சேர்வியர்,

    நீண்ட நாட்களுக்குப்பின் இனிய நண்பர் எப்படி இருக்கிறார் என்று காண உங்கள் வலைப்பூ வந்தேன். கண்ணீரில் மூழ்கடித்துவிட்டீர்கள்.

    நிலையில்லாத உலகில்
    நிலைக்கும் என்ற நினைவில்

    உங்களோடு நானும் துக்கம் சுமக்கிறேன் என் இனிய நண்பனே!

    உங்கள் தோழிக்கு எந்த ஆறுதலையும் என்னால் தரமுடியாது.
    இழந்தவரே அன்றி இழப்பை வேறெவரும் உணருதல் இயலாது
    அவரே மீளட்டும்…. அதற்கொரு சந்தர்ப்பம் வாய்க்கட்டும்

    அன்புடன் புகாரி

    Like

  3. Xavier, I heard about the next day and to this day I want to hear somebody say that it is just a dream and Rahul and Janaki are fine. Definitely the loss is unbearable and I have no words but just prayers.

    Like

  4. நானிருந்த மன நிலையிலிருந்து விலகி, திடும்மென ஒரு அமைதி,இறுக்கம் வந்துவிட்டது அண்ணா. எதுவுமே சொல்லமுடியவில்லை.

    Like

  5. சேவியர்,
    உங்கள் மெளன அஞ்சலியில் நாங்களும் கலந்து கொள்கிறோம்…..
    ஆறுதல் கூற வார்த்தைகள் இல்லை….
    my deepest Condolences…. i’ll keep you and Rahul’s Fam. in my prayers.
    May God Rest The Soul Of Rahul.

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.