யாரோ தைத்த
பொருந்தாத சட்டைக்குள்
நீ
நுழைய வேண்டிய
நிர்ப்பந்தம் என்ன ?
நிலம் மாறி நட்டாலும்
மல்லி
வாசம் மாறி வீசுமா ?
தோட்டக் காரன் நட்டாலும்
வீட்டுக் காரன் வைத்தாலும்
ரோஜா
பாகுபாடின்றி பூத்திடாதா ?
உன்னை நீயே
வனைந்து முடி,
உன்னை விட அதிகமாய்
உன்னை நேசிப்பவன் யார் ?
உன்னை விட அழகாய்
உன் இயல்புகள்
அறிந்தவன் யார் ?
உள்ளுக்குள்
முத்திருக்கும் உண்மையை
சிப்பியை விட அருகில்
சீக்கிரமே உணர்வது யார் ?
உன் வாழ்க்கையின்
அடித்தளத்தை
நீயே அமைப்பதே
சாலச் சிறந்தது.
பொறு,
உன் எல்லைக்கு கள்ளி வைப்பது
உன் விருப்பம்,
அப்படியே
அடுத்தவனும் முள் தான்
வைக்கவேண்டுமென்று
முரண்டும் பிடிக்காதே.
அவன்
முள் நடுவதும்,
சந்தன மரம் நடுவதும்
அவனுடைய இலட்சியக் கடல்.
அங்கே
உன் அலைகள்
அலைய வேண்டாம்
மனவிளிம்புகளில் நூலில் இருந்து….
//உன்னையே அறிந்து வாழ் – அருமையான தத்துவம்
யாரோ தைத்த பொருந்தாத சட்டையில் நீ ஏன் நுழைகிறாய்
நிலம் மாறினாலும் மல்லி வாசம் மாறுமா
தோட்டக்கரானோ வீட்டுகாரனோ – வைத்த ரோஜா மனம் வீசாதா
உள்ளிருக்கும் முத்தினை சிப்பி அறியாதா
அவன் முள் வைத்தாலும் சந்தன மரம் நட்டாலும் நீ அங்கு காற்றாக வீச வேண்டாம்
நல்ல சிந்தனை – நல்ல கற்ப்னை – இறுதியாக கவிதை உணர்த்துவது உன் காலில் நில – அடுத்தவனைச் சாராதே என்பதே !
நல்வாழ்த்துகள் சேவியர்
//
இதயம் நிறைந்த நன்றிகள். நிறைய படைப்புகளைப் படித்து கருத்துக்கள் எழுதி பெருமைப்படுத்தியமைக்கு !
LikeLike
உன்னையே அறிந்து வாழ் – அருமையான தத்துவம்
யாரோ தைத்த பொருந்தாத சட்டையில் நீ ஏன் நுழைகிறாய்
நிலம் மாறினாலும் மல்லி வாசம் மாறுமா
தோட்டக்கரானோ வீட்டுகாரனோ – வைத்த ரோஜா மனம் வீசாதா
உள்ளிருக்கும் முத்தினை சிப்பி அறியாதா
அவன் முள் வைத்தாலும் சந்தன மரம் நட்டாலும் நீ அங்கு காற்றாக வீச வேண்டாம்
நல்ல சிந்தனை – நல்ல கற்ப்னை – இறுதியாக கவிதை உணர்த்துவது உன் காலில் நில – அடுத்தவனைச் சாராதே என்பதே !
நல்வாழ்த்துகள் சேவியர்
LikeLike
//தன்னை உணர தரமான கவிதை
இது கூட தெரியாமல் பிறர் சார்ந்திருக்கும் மனிதம்
******நேரமிருந்தால் என் பதிவிற்கு வருகை தரவும்
//
நன்றி நண்பரே.. நிச்சயம் வருகிறேன்..
LikeLike
//தன்னை உணர தரமான கவிதை
இது கூட தெரியாமல் பிறர் சார்ந்திருக்கும் மனிதம்
******நேரமிருந்தால் என் பதிவிற்கு வருகை தரவும்
//
நன்றி நண்பரே.. நிச்சயம் வருகிறேன்..
LikeLike
/உள்ளுக்குள்
முத்திருக்கும் உண்மையை
சிப்பியை விட அருகில்
சீக்கிரமே உணர்வது யார் /
தன்னை உணர தரமான கவிதை
இது கூட தெரியாமல் பிறர் சார்ந்திருக்கும் மனிதம்
******நேரமிருந்தால் என் பதிவிற்கு வருகை தரவும்
LikeLike
//உன்னை நீயே வனைந்து முடி//
ஆஹா… அற்புதம்!
//அவன் முள் நடுவதும்,சந்தன மரம் நடுவதும்
அவனுடைய இலட்சியக் கடல்.
அங்கே உன் அலைகள் அலைய வேண்டாம்//
ஞானம்…தத்துவம்…அறிவுறுத்தல்…நிறைந்த கவி!
ஆமாம்…
முதலில் உனக்குள் உன்னைத் தேடு… அனைத்தும் நலமாகும் என்பது அழகாகக் கூறப்பட்டுள்ளது!
LikeLike