வெற்றிகள் உனக்கு
சிற்பங்கள் பரிசளிக்கலாம்
ஆனால்
தோல்விகள் மட்டுமே உனக்கு
உளிகள் வழங்கும்
என்பதை உணர்ந்து கொள்.
ஃ
மழை
நதி
விதை
விழுவதால் எழுபவை இவை.
நீ மட்டும் ஏன்
விழுந்த இடத்தில்
உனக்கு நீயே
கல்லறை கட்டுகிறாய்.
ஃ
உன் சுவடுகள்
சிறை பிடிக்கப்படலாம்
உன் பாதைகள்
திருடப்படலாம்
பயப்படாதே
பாதங்களைப் பாதுகாத்துக் கொள்.
ஃ
நீ
வெற்றி பெற்றதாய் நினைக்கும்
பல இடங்களில்
தோல்வி தான் அடைந்திருப்பாய்
நீ
தோற்றுப் போனதாய் நினைக்கும்
பல தருணங்களில்
வெற்றி தான் பெற்றிருப்பாய்
உணர்ந்து கொள்
நீ
தோல்வியடைந்தது வாழ்க்கையிலல்ல
புரிதலில்.
ஃ
உன் வழிகளெங்கும்
தூண்டில்கள் விழித்திருக்கலாம்
நீந்த முடியாதபடி
வலைகள் விரித்திருக்கலாம்
தண்ணீராய் மாறி தப்பித்துக் கொள்
தங்கமீனாய்
தான் இருப்பேனென
தர்க்கம் செய்யாதே !
ஃ
காட்டாறு கரை புரண்டு வருகிறதா
நாணலாய் மாறு
புயல்க்காற்று புறப்படுகிறதா
புல்லாய் மாறு
தொட்டாச் சிணுங்கியாய் இருப்பதும்
பச்சோந்தியாய் மாறுவதும்
தப்பில்லை
மனித நேயத்தை
நீ
மறுதலிக்காத வரை !
ஃ
//உமக்கு நீர்தான் சமம்!
கொன்னு கொலையா பிச்சுட்டிங்க அய்யா!
இன்னும் இன்னும் எதிர்பார்த்து!
//
நன்றி நண்பரே…
LikeLike
//வாழ்க்கையென்பதே பொறுமையும்…பொறுத்தலும்…வளைந்து கொடுத்தலுமே!
அப்போதுதான் வாழ்க்கை மகிழ்வாகிறது….
அதில் தான் மனிதநேயமும் மறுதலிக்கப்படாமல் காக்கப்படுகிறதென நினைக்கிறேன்….//
பளிச் என சொல்லியிருக்கிறீர்கள்.
//
எவ்விடையம் சொல்லினும்,
கடைசியில் முத்தாய்ப்பாய் நல்லதொரு செய்தியையும் கொடுத்துச் செல்வீர்கள்!
நன்றி சேவியர்//
நன்றி ஷாமா 🙂 விரிவான கருத்துக்கும், வருகைக்கும்.
LikeLike
//ரொம்ப நல்லா இருக்கு…//
நன்றி கமலேஷ்..
LikeLike
//சேவியர்,
குறுங்கவிதைகளை மிக அருமையாக கைவரப்பெற்றிருக்கிறீர்கள். அனைத்து கவிதைகளும் நல்லதொரு உத்வேகத்தை தருகின்றன.
முதல் கவிதையின் கரு ஏற்கனவே பலரால் எழுதப்பட்டதுபோல் எனக்கு தோன்றுகிறது
//
நன்றி கிருஷ்ணசாமி. வருகைக்கும், கருத்துக்கும் நன்றிகள்.
LikeLike
//உமக்கு நீர்தான் சமம்!
கொன்னு கொலையா பிச்சுட்டிங்க அய்யா!
இன்னும் இன்னும் எதிர்பார்த்து!
(பின் குறிப்பு: கொஞ்சம் வேலை காரணமாக வர இயலவில்லை)
/
ரொம்ம்ம்ம்ப நன்றிங்க 😀
LikeLike
//உன் வழிகளெங்கும்
தூண்டில்கள் விழித்திருக்கலாம்
நீந்த முடியாதபடி
வலைகள் விரித்திருக்கலாம்
தண்ணீராய் மாறி தப்பித்துக் கொள்
தங்கமீனாய்
தான் இருப்பேனென
தர்க்கம் செய்யாதே !//
உமக்கு நீர்தான் சமம்!
கொன்னு கொலையா பிச்சுட்டிங்க அய்யா!
இன்னும் இன்னும் எதிர்பார்த்து!
(பின் குறிப்பு: கொஞ்சம் வேலை காரணமாக வர இயலவில்லை)
LikeLike
சேவியர்,
குறுங்கவிதைகளை மிக அருமையாக கைவரப்பெற்றிருக்கிறீர்கள். அனைத்து கவிதைகளும் நல்லதொரு உத்வேகத்தை தருகின்றன.
முதல் கவிதையின் கரு ஏற்கனவே பலரால் எழுதப்பட்டதுபோல் எனக்கு தோன்றுகிறது.
LikeLike
ரொம்ப நல்லா இருக்கு…
LikeLike
//தோல்விகள் மட்டுமே உனக்கு உளிகள் வழங்கும்//
அருமை சேவியர்!…..
ஆமாம்…. தோல்வி எம் வாழ்வைச் சிதைப்பதில்லை….
மாறாக உளி கொண்டு செதுக்குகிறது!…….
//தோல்வியடைந்தது வாழ்க்கையிலல்ல, புரிதலில்.//
ஆஹா…..உண்மை!……..
//தண்ணீராய் மாறி தப்பித்துக் கொள்//
நல்ல கற்பனை வளம்!……..
//காட்டாறு கரை புரண்டு வருகிறதா நாணலாய் மாறு
புயல்க்காற்று புறப்படுகிறதா புல்லாய் மாறு
தொட்டாச் சிணுங்கியாய் இருப்பதும் பச்சோந்தியாய் மாறுவதும்
தப்பில்லை
மனித நேயத்தை நீ மறுதலிக்காத வரை !//
வாழ்க்கையென்பதே பொறுமையும்…பொறுத்தலும்…வளைந்து கொடுத்தலுமே!
அப்போதுதான் வாழ்க்கை மகிழ்வாகிறது….
அதில் தான் மனிதநேயமும் மறுதலிக்கப்படாமல் காக்கப்படுகிறதென நினைக்கிறேன்….
எவ்விடையம் சொல்லினும்,
கடைசியில் முத்தாய்ப்பாய் நல்லதொரு செய்தியையும் கொடுத்துச் செல்வீர்கள்!
நன்றி சேவியர்!
LikeLike