“கீர…கீரேய்….”
தெருவில் ஒலிக்கும்
கீரை ஒலிகள்
குறைந்து விட்டன.
தள்ளு வண்டியில் வரும்
தக்காளியும்,
வேகாத வெயிலில் வரும்
வெங்காயமும்
அத்தி பூத்தார் போல் !
வாசனை விரித்துத் திரியும்
முண்டாசுக் கிழவரின்
பழ வண்டி கூட
பழைய கதையாய்.
சர்வமும்
ரிலையன்ஸ் பிரஷ்களின்
குளிர் சாதனக் கூடுகளில்
அடைகாக்கத் துவங்கியபின்
பார்க்கிங் மட்டுமே
மக்களின்
பிரச்சினையாகிப் போனது
என்ன தான்
செய்து கொண்டிருக்கிறார்களோ
கூடைத் தலைகளில்
கீரை இலைகளில்
நேசம் விற்றுத் திரிந்தவர்கள்.
கவிதை பிடித்திருந்தால் வாக்களியுங்கள்.
”…கூடைத் தலைகளில்
கீரை இலைகளில்
நேசம் விற்றுத் திரிந்தவர்கள்…..”
”…பார்க்கிங் மட்டுமே
மக்களின்
பிரச்சினையாகிப் போ…”’
sure nalla karuththu…congratz….
LikeLike
வாழ்வின் அடையாளங்களைத் தொலைத்து விடாமல் இருக்கும் மனநிலையே உயர்வானது. ரொம்ப நன்றி செல்வகுமார்.
LikeLike
விவசாயக் குடும்பத்தில் பிறந்த எனக்கு இன்னமும் கிராமம் சென்றால் கீரை விற்கும் வேலை எப்போதாவது இருக்கும்.
LikeLike
//என்ன தான்
செய்து கொண்டிருக்கிறார்களோ
கூடைத் தலைகளில்
கீரை இலைகளில்
நேசம் விற்றுத் திரிந்தவர்கள்.//
அழகிய வரிகள்!… “நேசமே” அருகி வருகிறதென்பதென்னவோ வாஸ்தவம்தான்… கவலையைத் தூண்டி ஏங்கவும் வைக்கிறது… அற்புதம்!… வாழ்த்துகள் சேவியர்!
LikeLike
//arumaiyaana kavithai//
நன்றி 🙂
LikeLike
arumaiyaana kavithai
LikeLike
//நேசம் விற்றுத் திரிந்தவர்களை கவிதை பாசமாய் நினைவூட்டியது. கொஞ்சமேனும் நானும் என் கிராமத்துக்கு சென்று திரும்பியதைப்போல உணர்ந்தேன், திருப்தி//
நன்றி சார்….
LikeLike
நன்றி பதி.
LikeLike
KAVITHAI
RASANAIKKURIYADU
NIGALVUGAL
VARUTTHATHTITKURIADU
LikeLike
நேசம் விற்றுத் திரிந்தவர்களை கவிதை பாசமாய் நினைவூட்டியது. கொஞ்சமேனும் நானும் என் கிராமத்துக்கு சென்று திரும்பியதைப்போல உணர்ந்தேன், திருப்தி.
LikeLike
வாவ்…. அழகான கவிதை அண்ணா… இரசித்தேன்…
LikeLike
உண்மை தான், கிராமம் சுகமானது !
LikeLike
நாங்கள் தப்பித்தோம் . அதர்க்குத்தான் கிராமத்தில் வாழ வேண்டும்.
LikeLike
Pingback: கவிதை : கீர கீரேய்ய்ய்…. | SEASONSNIDUR
இவ்வளவு விரைவாய் ஒரு பின்னூட்டம் எதிர்பார்க்கவில்லை. நன்றி
LikeLike
மிக மிக அருமையான கவிதை சேவியர். சிந்திக்கவும் ரசிக்கவும் வைத்தது.
வித்யாசாகர்
LikeLike