குட்டிக் குட்டிக் கவிதைகள்

 

 

 

 

 

சாரி என்றாள்
செல்லமாய்
நன்றி என்றேன் மெல்லமாய்…
சரேலென மோதிக்கொண்ட
அபாயமற்ற
வளைவு ஒன்றில்

 

 _________________________________________________________________________________

 

 

 

நீ
பொய் பேசும்போதெல்லாம்
கண்டு பிடித்து விடுகிறேன்,
எப்போதேனும்
உண்மை பேசும் போதோ
சந்தேகப்படுகிறேன்.

 _________________________________________________________________________________
 

 

 

 

 

உண்மையைக் காட்டும்
கண்ணாடிகளை
யாருமே விரும்புவதில்லை,
எல்லோருக்கும் தேவைப்படுகிறது
அழகாய்க்
காட்டும் கண்ணாடிகள்.
 

  _______________________________________________________________________

   
மொட்டை மாடியில்
தொங்கிக் கொண்டிருக்கிறது
சாயம் போன
பட்டம் ஒன்று,
ஏதோ
சிறுவர்களின் துயரங்களைச் சுமந்தபடி.

 பிடித்திருந்தால் வாக்களியுங்கள்

32 comments on “குட்டிக் குட்டிக் கவிதைகள்

  1. கவிதைகள் நலமாக உள்ளன. வாழ்த்துக்கள்.

    ஆர்.ஈஸ்வரன், வெள்ளகோவில்.

    Like

  2. UnnMai Eénpathu
    NiLai Yaaji YaaNaThu – AthaNil KaanPaThu
    AlaKéé Anri VééRu
    Thanith YaaJI OnRumMilLai – AvarAvar
    PaarkKum PaarYai YAIIH SaarnThaThu.
    ++= K.Siva(France) =++

    Like

  3. உண்மையைக் காட்டும்
    கண்ணாடிகளை
    யாருமே விரும்புவதில்லை,
    எல்லோருக்கும் தேவைப்படுகிறது
    அழகாய்க்
    காட்டும் கண்ணாடிகள்………….
    unnmai……………

    Like

  4. //நீ பொய் பேசும்போதெல்லாம்
    கண்டு பிடித்து விடுகிறேன்,
    எப்போதேனும் உண்மை பேசும் போதோ
    சந்தேகப்படுகிறேன்.//

    ஆஹா அருமையான வரிகள்!… சில வரிகளேயாயினும்…. பல எண்ணங்களை அள்ளித் தருகிறது!

    மொட்டை மாடியில் தொங்கிக் கொண்டிருக்கிறது
    சாயம் போன பட்டம் ஒன்று,
    இறந்தகாலத்தின் எண்ணங்களைச் சுமந்தவாறு….

    என்றும் எண்ணத் தோன்றியது சேவியர்…. அனைத்தும் அழகான கவிதைகள்…. வாழ்த்துகள்!

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.