தோல்வி சுகமானது

தோற்பது சுகமானது
தன் குழந்தையிடம்.

நாலுகாலால் தவழும் போதே
ஓட்டத்தில்
ஆமையாவது
அம்மாக்களுக்கு தனி சுகம்.

யார் முதலில் எனும்
சாப்பாட்டு மேஜைகளில்
தோற்றுத் தொப்பியடிப்பது
அப்பாக்களுக்குச் சுகம்.

தோற்பது சுகமானது
தன் குழந்தையிடம்.

இவன் தான் காதலன் என
பிடிக்காத ஒருவனை
அவள்
அறிமுகப் படுத்தும் வரை !

வாக்களிக்க….

29 comments on “தோல்வி சுகமானது

  1. //அதிகம் சுகம் காண்பவர் தாத்தா தான் .அதுவும் தன் மகள் வழி வந்த பிள்ளைகளிடம் மிகவும் அதிகமாக இருக்கும்

    //

    நன்தி 🙂

    Like

  2. அதிகம் சுகம் காண்பவர் தாத்தா தான் .அதுவும் தன் மகள் வழி வந்த பிள்ளைகளிடம் மிகவும் அதிகமாக இருக்கும்

    Like

  3. //இவன் தான் காதலன் என
    பிடிக்காத ஒருவனை அவள்
    அறிமுகப் படுத்தும் வரை!………//
    நிதர்சனமான கவிதை வரிகள்.. ஆம் அதுவரை தோல்வியில் சுகம் காணும் பெற்றோர் அப்போது மட்டும் கொதிப்படைவது ஏன்? அப்போதுதான் முதல் தோல்வியை உணர்கிறார்களோ?

    Like

  4. //இவன் தான் காதலன் என
    பிடிக்காத ஒருவனை அவள்
    அறிமுகப் படுத்தும் வரை!………//

    சரியாய் சொன்னிங்க போங்க

    Like

  5. Kaathal Enroor Mukang Kaaddi
    Arimugam Enroor Porul Kooduththu
    Viraththijin Vilimpin Vaasalilèè
    Pèitroor Mukaththai Sulikaijilèè
    Périthaaji OnrumSolvatharkku
    ééThum illai énkinrèèn
    ++K.Siva(France)++

    Like

  6. //இவன் தான் காதலன் என
    பிடிக்காத ஒருவனை அவள்
    அறிமுகப் படுத்தும் வரை!//

    அடடடா…….. 😉

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.