கவிதை : காதல் வேண்டுதல்

கடற்கரையில்
பூங்காக்களில்
ஆளில்லாத
பேருந்து நிறுத்தங்களில்

எங்கும் சந்திக்க முடிகிறது
காதலர்களை.

பெரும்பாலும்
வெட்கக் குமிழ்களை
உடைத்துக் கொண்டோ ,

கைரேகை
நீளங்களை
அளந்து கொண்டோ ,

கவித்துவமாய்க்
கொஞ்சிக் கொண்டோ ,

பொய்யாய்
சினந்து கொண்டோ ,
அனைவருமே
ஆனந்தமாய் இருக்கிறார்கள்.

இந்தக் காதல் எல்லாம்
தோற்றுப் போய்விடின்
எத்துணை நன்றாய் இருக்கும் ?

“சேர்ந்திருந்தால்
சுகமாய் வாழ்ந்திருப்போம்”
என்னும்
நம்பிக்கைகளாவது
மிச்சமிருக்கும்.

பிடித்திருந்தால் வாக்களிக்கலாமே !

33 comments on “கவிதை : காதல் வேண்டுதல்

  1. Excellent varikal …………… Owesome…………Great…….

    சுகமாய் வாழ்ந்திருப்போம்”
    என்னும்
    நம்பிக்கைகளாவது
    மிச்சமிருக்கும்.

    Like

  2. //உன்னை மறக்க நினைத்து
    உயிரை துறக்க நினைத்து
    கிணற்றின் மேல் ஏறி நின்றால் -உள்ளிருக்கும்
    மீன்களும் உன்னை தான் விசாரிக்கின்றன …..

    //

    அசத்தறீங்க அபர்ணா ! வாவ்…

    Like

  3. உன்னை மறக்க நினைத்து
    உயிரை துறக்க நினைத்து
    கிணற்றின் மேல் ஏறி நின்றால் -உள்ளிருக்கும்
    மீன்களும் உன்னை தான் விசாரிக்கின்றன …..

    இது என்றோ நான் எழுதிய வரிகள். உம் கவிதை வரிகள் என் பழைய கிறுக்கல்களை கிளறி பார்கின்றன… அருமை அய்யா !!

    Like

  4. உண்மையான வார்த்தைகள் நான் இந்த உணர்வை அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்
    //

    🙂 வாழ்த்துகள் 😉

    Like

  5. உண்மையான வார்த்தைகள் நான் இந்த உணர்வை அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்………..

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.