செல்லுமிடமெல்லாம்
குட்டிகளைக் கவ்விச் செல்லும்
பூனையாய்
தூக்கித் திரிகிறாய்
உன் வீர தீர பராக்கிரமங்களை.
அமைதியின் சாலையில்
அதிசயமாய் வரும்
தூரத்து நண்பன் போல
எப்போதேனும் வாய்க்கும்
சுகமான இளைப்பாறுதல்களில்
சிலுவை சாய்க்கிறாய்.
உன்னை
செயற்கைப் புன்னகையுடன்
எதிர்கொண்டு எதிர்கொண்டே
என்
நிஜமான புன்னகை
மறந்து போய் விட்டது.
எப்போது தான்
புரிந்து கொள்வாய் ?
சந்திப்பு என்பது
பெருமைகளைப் பறைசாற்றும்
பொதுக்கூட்டமல்ல என்பதை ?
You must be logged in to post a comment.