காதலர் தினம்
எனக்கு இன்னொரு
காலண்டர் தினம் தான்.
பூப்பூக்காத செடிகளுக்கு
ஏது
பூக்காரன் கவலை?
பட்டாம்பூச்சி இல்லா தேசத்தில்
வண்ணங்களுக்குள் ஏது
வழக்காடுமன்றம்.
என் கானகத்தில் மட்டும்
கனிகள்
கிளி தேடிக் காத்திருக்கின்றன,
நதிகள்
துளிதேடித் தவமிருக்கின்றன.
அழகாய் வரும் அருவிகள் எல்லாம்
பாறையின் வெப்பத்தில்
ஆவியாகி விடுகின்றன.
எப்போதேனும் மனசுக்குள்
சாரலடிக்கும்
பார்வைக் கொம்புகள்
பதியனிடுமுன் பட்டுவிடுகின்றன,
முளை விடுமுன்
விதைகள் கெட்டுவிடுகின்றன.
காதல்,
எதையோ எடுக்கும்
புடவைக்கடை புரட்டலல்ல.
அது
தேவைகளின் திரட்டலுமல்ல.
காத்திருக்கிறேன்,
இந்த கால்நூற்றாண்டு வயதின்
காலடியில்,
வால் மிதிபட்ட நாகங்கள்
கால் கடிக்கும் கலியுகத்தில்,
ஓர்
கற்பனை நிஜத்துக்காய்
காத்திருக்கிறேன்.
ஒற்றைப் புள்ளியுடன்
காகிதம் ஒன்று என்னிடமிருக்கிறது
என் கவிதை வந்து
அமரும்போது மட்டுமே
முற்றுப் பெறும் மூச்சுடன்.
ஆசனம் ஒன்று இருக்கிறது,
காதல் பாசனம் தேடி.
காதலிக்கும் கிளிகள்
கடந்து வரலாம்.
வால் மிதிபட்ட நாகங்கள்
கால் கடிக்கும் கலியுகத்தில்,
ஓர்
கற்பனை நிஜத்துக்காய்
காத்திருக்கிறேன்./// செம
LikeLike
Pingback: யார் என் காதலி ? – TamilBlogs