என்னைப் பற்றி

அன்பே முக்கியம்.

Xavier1websmall

வாழ்க்கையும் எழுத்துகளும் அன்பை மட்டும் முன்னிறுத்துகையில் வணக்கத்துக்குரியவை ஆகி விடுகின்றன. வெறுப்பையோ, பிரிவினைகளையோ உருவாக்காமல் நட்பையும், அன்பையும், தகவல்களையும் பகிரவேண்டும் என்பதே என் எழுத்துகளின் நோக்கம். காலத்தின் பாதையில் பல எழுத்துகள் தவறிழைத்திருக்கலாம், காயப்படுத்தியிருக்கலாம், பாதை விலகியிருக்கலாம். நண்பர்களாகிய உங்களிடம் அதற்கா பணிவான மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன்.

அன்னமாய் மாறி அல்லன விடுத்து நல்லன எடுத்து நட்புடன் தொடர்க என அன்புடன் வேண்டுகிறேன்.

எனது நூல்கள்

1. ஒரு மழையிரவும் ஓராயிரம் ஈசல்களும் (கவிதை)

2. மன விளிம்புகளில்(கவிதை)

3. நில் நிதானி காதலி (கவிதை)

4. கல் மனிதன். (கவிதை)

5. இயேசுவின் கதை/ஒரு புதுக்கவிதைக் காவியம். (கவிதை)

6. அன்னை ( அன்னை தெரசாவின் வாழ்க்கை ) (கவிதை)

7. கி.மு / விவிலியக் கதைகள் ( கதைகள் )

8. இயேசு என்றொரு மனிதர் இருந்தார் (வரலாறு )

9. கிறிஸ்தவம் – ஒரு முழுமையான வரலாறு

10. அலசல் – கட்டுரைத் தொகுப்பு.

11. ஷாரூக்கான் – Man of Positive Energy

12. ராஜபக்ஷே – சூழ்ச்சியும், தந்திரமும்

13. ராகுல்காந்தி – மாற்றங்களின் நாயகன்

14. டிப்ஸைப் படிங்க, லைஃப்ல ஜெயிங்க

15. வாங்க ஜெயிக்கலாம் ( கட்டுரைகள் )

16. குழந்தைகளால் பெருமையடைய வேண்டுமா ? ( கட்டுரைகள் )

17. ஐ.டி யில் வேலை வேண்டுமா ? (வழிகாட்டும் நூல் )

18. ஏன் சாப்பிட வேண்டும் மீன் ?

19. சுவரில்லாமலும் சித்திரம் வரையலாம் (தினத்தந்தி தன்னம்பிக்கைக் கட்டுரைகள் )

20. நிக் வாயிச்சஸ் : வாழ்க்கை வரலாறு.

21. நீயும் வெல்வாய் (தன்னம்பிக்கை நூல் )

22. தெரியும் ஆனா தெரியாது

23. வெள்ளக்காரன் சாமி ( சிறுகதைகள் )

24. வேலை நிச்சயம் ( வழிகாட்டும் நூல் )

25. சேவியர் கவிதைகள் காவியங்கள் ( உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை)

26. அன்னை .. வாழ்க்கை அழகானது.

27. இயேசு வரலாறு

28. சாலமோன் . நீதிமொழிக் கவிதைகள்

29. பெண் . ரகசியமற்ற ரகசியங்கள்

30. படிகளில் அமர்ந்திருக்கும் கதைகள்.

*
பயணத்தின் பாதையில் சில மலர்கள்…

1. வழியோரம் நதியூறும் – கவிதைக்குக் கிடைத்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் பாராட்டு

2. சன் பண்பலை மற்றும் சன் டிவி இணைந்து நடத்திய “வைரத்தின் நிழல்கள்” கவிதைப் போட்டியில் “என்ன சொல்லி விழுகிறது” எனும் தலைப்பில் எழுதிய கவிதைக்கு முதல் பரிசு. வைரமுத்து கையால் பரிசும், பாராட்டும்.

3. கிறிஸ்தவ தமிழ் இலக்கியப் பேரவை வழங்கிய 2006ம் ஆண்டுக்கான சிறந்த நூல் விருது இயேசுவின் கதை நூலுக்கு

4. குமரி மாவட்ட அன்னை தெரசா நற்பணி மன்றத்தினரின் பரிசு அன்னை நூலுக்கு

5. சுஜாதா அவர்களால் ‘புது நானூறு’ பகுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதை ‘வரவேற்பாளர்’.

6. மரத்தடி – திண்ணை இணைந்து நடத்திய அறிவியல் புனை கதைப் போட்டியில் சுஜாதா அவர்களால் முதல் பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘ஏலி ஏலி லாமா சபக்தானி’

7. கவிப்பேரரசு அவர்கள் தனிப்பட்ட முறையில் பாராட்டிய ‘மனசே லவ் பிளீஸ்’ கவிதைக் கதை.

8. கவிஞர் அறிவு மதி, கவிஞர் முத்துகுமார், கவிஞர் யுகபாரதி ஆகியோரால் பாராட்டப்பட்ட சில கவிதைகள்.

9. தமிழ் உலகம் நடத்திய கவிதைப் போட்டியில் பரிசு

10. உயிரெழுத்து குழுவினர் ‘அன்புடன்’ வழங்கிய கவித் தென்றல் எனும் பட்டம்.

11. லண்டனைத் தலைமையாய்க் கொண்டு இயங்கும் “டி.பி.பி” குழுவினரின் ஆல்பங்களுக்காய் எழுதிய 50க்கும் மேற்பட்ட பாடல்கள். ( ஒன்வே, காதல் வேகம், மன்மதா, யாரிவன், பைரவன், பிளாக் அன்ட் வயிட் ….. ). ஒரு பாடலைப் பாடிய ஆனந்தம் 🙂

12. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட சில கவிதைகள்

13. ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், அவள் விகடன், பசுமை விகடன், சக்தி விகடன், கல்கி, குமுதம், தமிழ் ஓசை, தை, புதிய பார்வை, த சண்டே இந்தியன், மங்கையர் மலர், பெண்ணே நீ, தேவதை, மனோரமா இயர் புக், திண்ணை, அம்பலம், தமிழோவியம், காதல், சிங்கை இணையம், அந்தி மழை, அம்பலம், தினம் ஒரு கவிதை, நிலாச்சாரல், சங்கமம், ஹெல்த்கேர், நம்ம அடையாளம், இணைய குழுக்கள்… போன்றவற்றில் படைப்புச் சுவடுகள் பதிக்கக் கிடைத்த வாய்ப்பு

14. தினத்தந்தி இதழில் தொடர்ந்து இயங்கும் வாய்ப்பு. “சுவரில்லாமலும் சித்திரம் வரையலாம்” தொடருக்குக் கிடைத்த பிரமிப்பூட்டும் வரவேற்பு. கம்ப்யூட்டர் ஜாலம் பகுதியில் தொடர்ந்து இயங்கும் ஆனந்தம்.

15. தினத்தந்தி ஆன்மீக மலரில் “பைபிள் மாந்தர்கள்” தொடர்.

16. தேசோபகாரி கிறிஸ்தவ ஆன்மீக இதழில் வேர்களை விசாரிப்போம் தொடர்.

17. ஜெர்மனியில் வெளியாகும் “வெற்றிமணி” இதழில் எழுதும் படைப்புகள்.

18. சிவத் தமிழ் இதழ் ( ஜெர்மன் ) கட்டுரைகள்.

19. ஜெயா தொலைக்காட்சி, மக்கள் தொலைக்காட்சி பேட்டிகள், பகிர்வுகள்.

20. ஜெருசலேம் பல்கலைக்கழக ‘பரம எழுத்தோவியர்’ பட்டம்.

21. கவிதை உறவு .. சிறந்த நூலுக்கான பரிசு, குழந்தைகளால் பெருமையடைய வேண்டுமா நூலுக்கு.

22. சர்வதேச அளவில் நடத்தப்பட்ட பாரதிதாசன் கவிதைப்போட்டியில் கிடைத்த இரண்டாம் பரிசு.

&
23. கவுரவ டாக்டர் பட்டம் .. எருசலேம் பல்கலைக்கழக இலக்கியப் பிரிவு.
எழுத்துக‌ளை வாசிப்போம்
இத‌ய‌ங்க‌ளை நேசிப்போம்.

:
ந‌ட்புட‌ன் ப‌ய‌ணிப்போம்.

:

writerxavier@gmail.com

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

நான் மானிடரின் மொழிகளிலும் வானதூதரின் மொழிகளிலும் பேசினாலும் அன்பு எனக்கில்லையேல் ஒலிக்கும் வெண்கலமும் ஓசையிடும் தாளமும் போலாவேன். இறைவாக்கு உரைக்கும் ஆற்றல் எனக்கு இருப்பினும், மறைபொருள்கள் அனைத்தையும் அறிந்தவனாய் இருப்பினும், அறிவெல்லாம் பெற்றிருப்பினும், மலைகளை இடம்பெயரச் செய்யும் அளவுக்கு நிறைந்த நம்பிக்கை கொண்டிருப்பினும் என்னிடம் அன்பு இல்லையேல் நான் ஒன்றுமில்லை. என் உடைமையை எல்லாம் நான் வாரி வழங்கினாலும் என் உடலையே சுட்டெரிப்பதற்கென ஒப்புவித்தாலும் என்னிடம் அன்பு இல்லையேல் எனக்குப் பயன் ஒன்றுமில்லை. அன்பு பொறுமையுள்ளது; நன்மை செய்யும்; பொறாமைப்படாது; தற்புகழ்ச்சி கொள்ளாது; இறுமாப்பு அடையாது. அன்பு இழிவானதைச் செய்யாது; தன்னலம் நாடாது; எரிச்சலுக்கு இடம் கொடாது; தீங்கு நினையாது. அன்பு தீவினையில் மகிழ்வுறாது; மாறாக உண்மையில் அது மகிழும். அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும்.
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍
.::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

75 comments on “என்னைப் பற்றி

  1. நண்பரே உங்கள் பக்கத்து ஊர்க்காரனாகிய நான் நவீன இலக்கிய வாசகன். ஆனாலும் உங்களின் படைப்புகளின் சாதனை மற்றும் பெற்ற பரிசுகளை பார்க்கிற போது பிரமிப்பாக இருக்கிறது. உங்களுக்கு இதற்கு எப்படி நேரம் கிடைக்கிறது.வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
    கே புஷ்பராஜ்
    களியக்காவிளை
    Email : keappiar@gmail.com

    Like

  2. நண்பரே உங்கள் பக்கத்து ஊர்க்காரனாகிய நான் நவீன இலக்கிய வாசகன். ஆனாலும் உங்களின் படைப்புகளின் சாதனை மற்றும் பெற்ற பரிசுகளை பார்க்கிற போது பிரமிப்பாக இருக்கிறது. உங்களுக்கு இதற்கு எப்படி நேரம் கிடைக்கிறது.வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
    கே புஷ்பராஜ்
    களியக்காவிளை
    Email : keappiar@gmail.com

    Like

  3. மனதிற்கு திருப்தி அளிக்கின்ற பதிவுகளாக தங்களது கட்டுரைகளும், விளக்கங்களும் இருக்கின்றன மிகவும் நன்றி..

    Liked by 1 person

  4. ஒரு X ன் கவிதைகள் மட்டுமே பிடித்துவந்த எனக்கு உங்களது கவிதைகளும் பிடித்து ப்போய்விட்டது.. வாழ்த்துக்கள்

    Like

  5. உலகின்
    ஓசை கேட்க
    உயிரின் தொடக்கம்
    ‘பிறப்பு’

    அந்த பிறப்புக்கு அர்த்தமுள்ளவராக வாழ்ந்துவரும் நட்புள்ளத்தின் படைப்புகள் தொடர வாழ்த்துக்கள். .

    தொடரட்டும் இந்த அலைவரிசை….

    நட்புள்ளம்
    M.P.சாலமன் சுரேஷ்குமார்.

    Like

  6. நான் சாக வேண்டும் உதவி பண்ணுங்க வாழ்கை முழுவதும் பிரச்சினை வருது.என்னாலே சமாளிக்கே முடியலை. எவ்வளவு முச்சித்தலும் பிரச்சினை தீரமாண்டகித்து

    Like

  7. அன்பின் கற்பகம். மனமார்ந்த நன்றி. அடிக்கடி வாருங்கள். உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    Like

  8. அற்புதமான கவிதைகள் சேவியர்! வாழ்த்துக்கள்!

    நான் வலைப் பதிவுகளை தடவிய் போது கண்டேன்..

    உங்கள் முயற்சிகள் மென்மேலும் வளர வாழ்த்துக்களுடன் என் பிரார்த்தனைகளை முன்வைக்கிறேன்

    Like

  9. hello sir

    unga kavithigali patri enna solla solung varthigal vara villai my dear ean theriuma

    nan oru ovian athanal
    enaku kavithi keruka kuda varum

    nan our kavingan athanal
    enaku kadhal kuda varum

    nan oru kadhalan athanal
    enaku tholvi kuda varum

    nan thovil kandavan athanal
    enaku vatri kuda varum

    yan tholvil kandathu kadhalil than
    enoda vazhikial all

    kadhali kadhalitha nan
    eppothu enoda vazhkiai kadhalikiren

    vailbathi vasapaduthu vazhki unoda vasamagu

    eppadi enaku kerukathan therium ugalai pol enaku kavithigal varathu so athanal than nan sonan ugan kavithigali patri solla enaku varthikal ellai endu

    nengal melum nalla kavithigal ezhthu vandum endru ketu kolgeran endurm enoda vazhalthukal,

    eppdiku ungal anbudan

    balu

    Like

  10. Kavithaik Kaul PéRung KaviThai Thaan PadaithThu, Thani Oor IdamThaan Nii EéDuThtha KaviYaNéé “” Xaver”” NiiDunaI ThoodarINthu , PaLa IlakKiyaNgKal PaDaiThThiDuka NanRéé…”” THOO DARN THU KAVI YAATH THIDUKA “” Anpudan:- ++ K.SIVA++(Fr)

    Like

  11. Kavithaik Kaul PéRung KaviThai Thaan PadaithThu, Thani Oor IdamThaan Nii EéDuThtha KaviYaNéé “” Xaver”” NiiDunaI ThoodarINthu , PaLa IlakKiyaNgKal PaDaiThThiDuka NanRéé. ++ K.SIVA++(Fr)

    Like

  12. //hello sir i read your kavithai’s its all in nice
    my best wiahes
    may i know how to create this type of website//

    நன்றி தனபால். wordpress.com போனீங்கன்னா, அதுவே சொல்லித் தரும் !

    Like

  13. hello sir i read your kavithai’s its all in nice
    my best wiahes
    may i know how to create this type of website

    Like

  14. ஜெய்… வாவ்… வாங்க வாங்க…. உங்களை இங்கே சந்திப்பதில் ரொம்ப மகிழ்ச்சி 🙂 அடிக்கடி வாங்க…

    Like

  15. Dear Xavier,

    Hope you can easily recognize me.

    I am not good at reading Tamil but can always proclaim that I am a good rasikan of Tamil 🙂 I had a chance some of your blog writings and they are really commendable. Good job…

    Continue to share such interesting articles in your blog. I will try to visit your blog whenever I feel so.

    Thanks,
    Jay.

    Like

  16. //கேட்பதற்குக்கஷ்டமாக இருக்கிறது…

    இதில் முதலாவதாகப்பின்னூட்டம் எழுதியிருப்பவர் நீங்கள்

    அடிக்கடி குறிப்பிடும் நவனீயா ?????
    //

    இல்லை நண்பரே..

    Like

  17. கேட்பதற்குக்கஷ்டமாக இருக்கிறது…

    இதில் முதலாவதாகப்பின்னூட்டம் எழுதியிருப்பவர் நீங்கள்

    அடிக்கடி குறிப்பிடும் நவனீயா ?????

    Like

  18. Dear Xavier.. How are you..? I am the same Surya who wished டிசம்பர் 11, 2006 from Dubai.

    Back to Chennai and joined family. Sorry for late informing. Bit tied up..

    Happy to meet you again..

    Me too a blogger now.. Writing about world cinema.. Plz visit and suggest your valuable comments. I need a comment from my adorable writer.

    Cheers

    Surya

    Like

  19. பாராட்ட எனக்கு எந்த தகுதியும் இல்லை என்றாலும், தமிழின் மேல் உள்ள உங்கள் ஆளுமை பிரம்மிக்க வைக்கிறது

    Like

  20. ILAYA THALAIMURAIHALIN VALARCHICKU, NALLINACKA PANBUHALAI VALARCHICKU,ELAYATHALAIMURAI VENADICKUM NEARAM, EVAIHALAI
    MYAMAHA VAITHU, ELUTHUNGAL .

    SBA

    Like

  21. கவிதைத் தொகுதிகள். சிறு கதைகள். பலப்பல பரிசுகள். திறமை ஆச்சரியப்பட வைக்கிறது. பாராட்டுகள். மேன் மேலும் ஒளிர வாழ்த்துகள்.

    Like

  22. vdJ jha; ehl;ilr; Nru;e;j
    rNfhjuu; Nrtpau;mtu;fNs

    cq;fspd; jkpo;g;gzpf;Fk;;
    nrhy;yhly; ty;yikf;Fk;
    vkJ tho;j;Jf;fs;

    Like

  23. i saw your poems

    its full of amazing

    i like u and ur poems

    because i also

    poet developing poet —- kavigner RAJESH

    HOW IS IT

    Like

  24. Hi Xavier

    Arumaiyana kavithaigal.. aruputhamana padaipugal.. internetel ithu ponra thamizh padiapuglai parkumpothu migavum santhoshama ulladhu.. aangilam aathikam athigam ulla intha internetel thamizhai inimaiyodu alikum ungal sevai thodara en manamaartha vazhthukkal.. Ungal padaipugalai naan padithu magizhnthathu pola, en nanbargalum inbamuratum ena avaragalukum ungalai arimugam seithullaen..

    anbudan
    ajai

    Like

  25. இப்போது தான் எட்டி பார்கிறேன்,
    அன்பே உன்னை…
    வின்னை முட்டிய மலையின் மேலே
    என் தூக்கி எறிகிராய்
    …ம் ..ம் …பொரு நேரம் கிடைக்கட்டும்
    மொத்தமாய் பருகி
    சத்தமாய் பறை சற்றுகிரேன்
    உன் புகழ்…

    Like

  26. சேவியர் (அண்ணா தேவையா எனத்தெரியவில்லை)

    இத்துணை விஷயங்களுக்குப் பின்னால் உங்கள் உழைப்பு, முயற்சி, ஆர்வம் என்ற பல விதைகள் பொதிந்துள்ளதால் தான் இன்று உங்களின் வெளிச்சம் இன்று உலகெங்கும் கிளைபரப்பித் திளைத்திருக்கிறது என்பதை நன்கு உணர்ந்து அதில் ஆனந்தமும் அடைகிறேன்.

    உங்கள் முயற்சிகள் மென்மேலும் வளர வாழ்த்துக்களுடன் என் பிரார்த்தனைகளை முன்வைக்கிறேன்.

    தோழமையுடன்,
    இராகவன் என்ற சரவணன் மு.

    Like

  27. Hi Xavier,
    Getting a chance to read your creations after a long time… The last time I read was all your kavitahis from Dhinam Oru Kavithai yahoo group.
    Will continue to read.. Vaazhthukkal

    Manoj

    Like

  28. Dear Mr.Xavior

    how are you, realy im proud of my work.

    because im working in Kizhakku Pathippagam

    my team members went to church for Yesu endroru manithar irundhar book promotion

    Thay are asking me to know about you

    I met Mr.muthuraman he gave this address

    after i seen this webpage realy i admire to promote this book

    Thanks to this opportunity

    regards
    Nandhu(Vimal &Pandian)
    Asst manager(marketing and logistics)
    9941005889
    New Horizon media pvt ltd

    Like

  29. நல்ல கவிதைகள், படித்து ரசித்தேன். நன்றி.

    Like

  30. Excellent!!!!
    I dont have words to wish you as my words say only few about U.
    I developed reading habit by reading ur poems.
    I am happy and proud to be a friend of U.

    Like

  31. முழுமையாய் உங்கள் பதிவை வாசித்து பின் வருகிறேன்

    சென்ஷி

    Like

  32. i guess long back i used to read ur kavithais in Dhinum oru kavithai yahoo-groups( i am right).. now i got ur link. superb.. will read and comment it..

    வளர்க உங்கள் தமிழ் புகழ்

    Like

  33. I AM EXCITED SO MUCH TO READ YOUR SO MANY PAGES OF POEMS, SMALL STORIES ETC. I LIKE YOU FOR YOUR GREAT EFFORTS TOWARDS THESE MANY THINGS . WITH BEST LOVE N REGARDS …….LEO

    Like

  34. ..

    அற்புதம்.. ஆன்ந்தம்…

    வாழ்க…..

    வளர்க..

    அன்புடன்

    சூர்யா
    துபாய்..

    Like

  35. அற்புதமான கவிதைகள் சேவியர்! வாழ்த்துக்கள்!

    நான் வலைப் பதிவுகளை தடவிய் போது கண்டேன்..

    அற்புதம்.. ஆன்ந்தம்…

    வாழ்க…..

    வளர்க..

    அன்புடன்

    சூர்யா
    துபாய்..

    Like

  36. அற்புதமான கவிதைகள் சேவியர்! வாழ்த்துக்கள்!
    நான் வலைப் பதிவுகளை மேய்வது உண்டே தவிர, பின்னூட்டம் போடுவதில்லை!
    பட், உங்கள் கவிதைகளுக்கு மரியாதை தர வேண்டும்போல் இருந்தது அதான்.
    குறிப்பாக,

    “இத்தனை
    வருடங்களுக்குப் பிறகும்
    நான்
    பேசினால்
    கண்டு பிடித்து விடுகிறார்கள்
    என் ஊரை.”
    -இது சூப்பர்!
    உங்கள் கவிதைகள் எல்லாவற்றையும் படிக்க வேண்டும்.. அனால், இப்போது நேரம் இல்லை! அடுத்தமுறை சிஸ்டத்தில் உட்கார்ந்தால் அதுதான் வேலை!

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.