ஓ ரீங்காரமா

இசை : சஞ்சே, பாடல் : சேவியர்

 

ஓ.

ரீங்காரமா

ம‌ன‌ தீர‌த்திலே சுரமா

ஸ்ருங்காரமா

இரு பாதத்திலே வரமா

இது தாம் தோம் எனும்

புது நர்த்தனமோ

இனி மேடைகளின் தடமோ

இது சாந் தம் எனும்

புது கீர்த்தனமோ

இசை ஓடைக‌ளின் இட‌மோ

நாத‌ வ‌டிவ‌மோ

இறையே நீ

பாத‌ வ‌டிவ‌மோ

உருவே நீ

வேத‌ வ‌டிவ‌மோ

எதுவாகிலும் பாத வந்தனம் யாம் த‌ந்தோம்

ச‌ப்த‌ம் ஆடினோம்

சேர்ந்தொரு

வ‌ர்ண‌ம் ஆடினோம்

ப‌த‌மும் தில்

லானா ஆடினோம்

இருபாத‌மும் வாட‌ ஆடினோம் நாடி ஆடினோம்

கால் ச‌ல‌ங்கையில்

ஸ்ருங்கார‌ம் சிரிக்கும்

ஹாஸ்ய‌ங்க‌ள் தெறிக்கும்

கண்

பாவத்தில் வியக்கும்.

கை அசைகையில்

பதாகம் பிறக்கும்

வராகம் நடக்கும்

காங் கூலமும் முறைக்கும்.

ந‌ர்த்த‌மாட‌ வ‌ர‌வா

விரலால் அர்த்த‌மாட‌ வ‌ரவா

விழியால் ச‌த்த‌மாட‌ வ‌ர‌வா

முத்ர‌ மொத்தமாட‌‌ வ‌ர‌வா

கூத்து ஆட‌ வ‌ர‌வா

துடி கொட‌க் கூத்து ஆட‌ வ‌ரவா

அல்லிய ஆட்டமாட வரவா

இசையைக் க‌ட்டியாட‌ வ‌ர‌வா ?

ஆட‌ல் கலைதனில் யாவும் அடக்கம்

பூமி அடங்குமே

மேளம் முடிகையில் தேகம் முடியும்

ஜீவன் ம‌டியுமே

கையின் வழி தனிலே ந‌ய‌ன‌மாய்

க‌ண்ணின் வழி தனிலே ம‌ன‌முமாய்

ம‌ன‌தின் வ‌ழியினிலே ப்பாவ‌மாய்

ப்பாவ‌ வ‌ழி த‌னில் ர‌ச‌முமாய்

வேலானதே..

 

ஆம்பல் கொடி நாகம் ஆகுமடி
தேகம் தடுமாறுதே – அடி
வேலாய் விரல் நீளாய் 
வெகு
நாளாய் தேடினேன்

இசை : சஞ்சே

பாடல் : சேவியர்

தாயே….

இசை : சஞ்சே

வரிகள் : சேவியர்

——————————–

நானாக நானும் இல்லையே

எங்கு சென்ற போதும்

ஏதேதோ எண்ணம் கொல்லும்

 

தாயான தாயும் இல்லையே

இங்கு இந்த நேரம்

நியாயமா….

 

ஆயிரம் ஆயிரம் ஞாபகம் நெஞ்சினில்

நாளுமே நீங்காதே

என் அன்னையே

 

ஆரிரோ பாடிய ஞாபகம் நெஞ்சில்

என்றுமே நீங்காதே

என் அன்னையே

 

*

 

பாசமா நேசமா

உன் பாதம் கட்டிக் கொண்டேன் நான்

வாழவா நான் ஆள‌வா

பசி அள்ளித் தின்றாய் நீ

 

தந்தையா அன்னையா

என் சொந்த பந்தம் எல்லாமே நீ

கந்தையா கண்ணீரா

அந் நாட்கள் சொர்க்கம் தானா ?

 

 

எங்கே

நெற்றி தனைத் தொடும் அந்த விரல்

காண

நெஞ்சம் தவிக்கிறதோ

 

எங்கே

என்னைக் கொஞ்சு கின்ற செல்லக் குரல்

மீண்டும் அது ஒலித்திடுமோ

 

*

 

பஞ்சணை மெத்தையும் வந்திடலாம்

அன்னையின் சேலையைப் போல் வருமா

 

அறுசுவை உணவுகள் வந்திடலாம்

அன்னையின் கைப்பிடி போல் வருமா ?

 

பேர் புகழ் தேசமும் தந்திடலாம்

அன்னையின் வார்த்தையைப் போல் வருமா ?

 

ஆயிரம் நேசங்கள் பூத்திடலாம்

அன்னையின் புன்னகை போல் வருமா ?

 

தாயே

வெற்றி பெற்றேன் நானே

 

என் தாயே

என்னைக் காண வாயேன்.

 

நீயே

எந்தன் ஜீவன் தாயே..

இன்று

நீயும் இல்லா வாழ்க்கை கொல்லுதே

TBB : பைரவா

ஆறடிப் புயலும் நீ தான், அதிரடிப் பயலும் நீ தான் !

ஒரு அழகிய காதல் பாடல், வசீகரிக்கும் குரலில்… லண்டன் டிபிபி இசைக்குழுவினரின் உருவாக்கம் !

பைரவா உன் கையை கொஞ்சம் காட்டு…

TBB : இயேசுவின் நாமம்

இயேசுவின் நாமம் வாழ்வைக் கொடுக்கும்

வேண்டிடும் யார்க்கும் மீட்பைக் கொடுக்கும் ! 

TBB : காதல் பம்பரம்

இளசுகளைக் கொள்ளை கொள்ளும் ஒரு காதல் பாடல்!

கெஞ்சிக் கெஞ்சிப் பார்த்தேன்

தூக்கம் வரவில்லை,

பஞ்சணைக்குக் கொஞ்சம் கூட

கூச்சம் வரவில்லை

TBB – அகம் நீயே, வீடியோ

அகம் நீயே, யுகம் நீயே

கடும் புனலாய் காதல் வளர்த்தேன்

சுடும் அனலாய் தேகம் கொதித்தேன்

 

How to Win Interviews ( இன்டர்வியூவில் வெல்லலாம் )

இன்டர்வியூகளில் வெற்றி பெறுவது எப்படி என்பதை என்பதை எளிமையான தமிழில் விளக்கும் வீடியோ.

பாருங்கள்..பகிருங்கள்.

 

 

Group Discussion ( குழு உரையாடல் )

குரூப் டிஸ்கஷன் எனப்படும் குழு உரையாடல் மிக முக்கியமான ஒரு தேர்வு முறை. இந்த கட்டத்தில் வெற்றி பெறுவது மிகவும் எளிது ! அதற்கு சில வழிகள் இருக்கின்றன. அவை என்ன என்பதை அனுபவ பாடத்திலிருந்து விளக்கும் ஒரு வீடியோ இது ! தமிழில் !

பாருங்கள்..பயனடையுங்கள்..பகிருங்கள்