கீழ்ப்படிதல் -a Christian skit

கீழ்ப்படிதல்

https://youtu.be/ygVf33K8V9s

காட்சி 1

( அம்மா & மகன் )

அம்மா : தம்பி.. என்னப்பா… படிச்சிட்டு புக்ஸை எல்லாம் அங்கேயும் இங்கேயும் போட்டு வெச்சிருக்கே… எல்லாத்தையும் எடுத்து அடுக்கி வை

மகன் : வெக்கிறேன்ம்மா.. ஃபைவ் மினிட்ஸ்..

அம்மா : என்ன சொன்னாலும் டூ மினிட்ஸ், ஃபைவ் மினிட்ஸ் ந்னே சொல்லிட்டிரு.. கடைசில எதையுமே பண்றதில்லை

மகன் : அம்மா, இதெல்லாம் ஒரு விஷயமா… வைக்கலாம் விடுங்க

அம்மா : கீழ்ப்படிதல் ரொம்ப முக்கியம்ப்பா…. எது சொன்னாலும் உடனே கீழ்ப்படியணும்.. அதான் நல்ல பிள்ளைக்கு அடையாளம்

மகன் : சரி.. சரி.. விடுங்க. டெய்லி இதே பாட்டு தானா ?

அம்மா : டெய்லி இதே பாட்டுன்னா, இன்னும் நீ திருந்தலேன்னு அர்த்தம்

மகன் : ஷப்பா… ஆளை விடுங்க.. அப்புறம் பாத்துக்கலாம்.

காட்சி 2

( அம்மா & மகள் )

அம்மா : ஏம்மா ஸ்னோலின்… என்ன மறுபடியும் செடிக்கு தண்ணி ஊத்தினியா ?

மகள் : ஆமாம்மா…. ஏம்மா ?

அம்மா : காலைல மட்டும் தானே ஊத்த சொன்னேன் ?

மகள் : ஆமா, ஆனா ஈவ்னிங் கூட ஊத்தினா இன்னும் நல்லா இருக்கும்ன்னு நினைச்சேன்.

அம்மா : சொல்றதை மட்டும் செய்யணும்ன்னு தெரியாதா ? நான் நட்டு வெச்ச வெத எல்லாம் வெளியே வந்துச்சு. போட்ட உரம் எல்லாம் தண்ணில கரைஞ்சு எங்கயோ போயிடுச்சு… செடி மூட்ல குளம் மாதிரி தண்ணி கிடக்கு… அது அழுகிப் போகுமான்னும் தெரியல.

மகள் : ஓ… சாரிம்மா.. இவ்ளோ பிரச்சினை இருக்கா ?

அம்மா : என்ன சாரி.. சொல்றதை மட்டும் செய்யணும்ன்னு சொன்னா கேக்கறியா ? அதிகப்பிரசங்கித் தனம் உனக்கு ஜாஸ்தி. சொன்னதை செய்றதுக்காக பாராட்டறதா ? சொல்லாததையும் சேத்து செஞ்சதுக்காக திட்றதான்னே தெரியல…

மகள் : ஏம்மா.. நல்ல இண்டன்ஷன்ல தானே பண்ணினேன்…

அம்மா : உன் பார்வைக்கு நல்லதா இருக்கலாம், ஆனா கீழ்ப்படிதல்ங்கறது சொல்றதை அப்படியே செய்றது தான்.. சரியா ?

மகள் : ஓக்கேம்மா

<< சிறிது நாட்களுக்குப் பின் >>

காட்சி 3

( பள்ளிக்கூடத்தில் )

( ஆசிரியர் & மகன் )

ஆசிரியர் : என்னப்பா…அசைன்மெண்ட் பண்ண சொன்னா, அதை சரியான நேரத்துக்கு பண்ண மாட்டியா ? இத பாரு.. நீ மட்டும் தான் பாக்கி

பையன் : சாரி சார்.. நான் பண்ணிட்டேன்.. பட்.. எடுத்துட்டு வர மறந்துட்டேன்.

ஆசிரியர் : எல்லாத்துக்கும் ஒரு சாக்குப் போக்கு வெச்சிருப்பியே… நாளைக்கு காலைல 9.30 க்கு முன்னாடி ஆபீஸ் ரூம்ல கொண்டு வைக்கணும்…. அதான் லாஸ்ட் சேன்ஸ்.. இல்லேன்னா உனக்கு அசைன்மெண்ட்ல கோழி முட்டை தான்.

பையன் ; கண்டிப்பா வைக்கிறேன் சார்.

ஆசிரியர் : கீழ்ப்படிதல் ரொம்ப முக்கியம்பா.. லைஃப்ல… இல்லேன்னா கீழ தான் கிடக்கணும்….

காட்சி 4

( ஆசிரியர் & மகள் )

ஆசிரியர் : ஸ்னோலின்.. இந்த எக்ஸாம் பேப்பரை எல்லாம் கொண்டு போய் என் டேபிள்ல வை.

மகள் : கண்டிப்பா சார்…

( மகள் பேப்பரை ரூமில் வைக்கிறாள் )

மகள் ( மனசுக்குள் ) – பேப்பரை அப்படியே வைக்காம ரோல் நம்பர் படி அடுக்கி வைப்போம். அப்போ டீச்சருக்கு ஹெல்ப்பா இருக்கும்.

( சிறிது நேரம் கழித்து அடுக்கி முடிக்கிறாள் )

(வெளியே வரும்போது ஆசிரியர் வருகிறார் )

ஆசிரியர் : நீ என்ன பண்றே…. ஆபீஸ் ரூம்ல ? இவ்ளோ நேரம் ?

மகள் : சார் நீங்க பேப்பரை கொண்டு வைக்க சொன்னீங்க..

ஆசிரியர் : ஆமா… அது சொல்லி ரொம்ப நேரம் ஆச்சே ! பேப்பர்ல ஏதாச்சும் கரெக்‌ஷன் பண்ணினியா ?

மகள் : சார்.. நோ..நோ.. நான்… ரோல் நம்பர் படி அடுக்கி வெச்சேன்

ஆசிரியர் : நெஜமாவா ? நான் அப்படி அடுக்கி வைக்க சொல்லவே இல்லையே ! லெட் மி செக்…. ஏதாச்சும் திருத்தியிருந்துச்சுன்னா முட்டை. மார்க் தான்

மகள் : சார்… உங்களுக்கு ஹெல்ப் பண்றதுக்கு தான் சார்..

ஆசிரியர் : சொன்னதை செஞ்சா போதும்… பூனையை புடிக்க சொன்னா, யானையை புடிக்க தேவையில்லை.

<<< சில வருடங்களுக்குப் பின் >>

அலுவலகம்

காட்சி 5

( அதிகாரி & பையன் )

அதிகாரி : என்னப்பா… சிங்கப்பூர் கஸ்டமர் புராஜக்ட் என்னாச்சு ? டெட் லைன் எதுவுமே மீட் பண்ணல… கீப் சேஞ்சிங் த டெலிவரி டேட்.. என்னாச்சு ?

பையன் : சார்.. அது வந்து…. அதர் பிரையாரிட்டி வர்க் வந்துச்சு.. சோ.. இது கொஞ்சம் ஹோல்ட் ல போயிடுச்சு

அதிகாரி : வாட்… ? அதர் வர்க்கா ? நாம கமிட் பண்ணியிருக்கோம்.. வீ நீட் டு டெலிவர்… சொன்ன டைம்ல டெலிவர் பண்ணணும்

பையன் : ஓக்கே சார்… வில் டூ

அதிகார் : என்ன வில் டூ.. அம்பு டூ.. ந்னு… ஐ வாண்ட் டு ரிவ்யூ த ப்ராஜக்ட்… கமிட்மெண்ட் மிஸ்ஸிங், டைம்லைன் மிஸ்ஸிங், இட்ஸ் இன் ரெட் ஸோன்

பையன் : எப்படியாச்சும் டெலிவரி டேட் மீட் பண்ண டிரை பண்றேன் சார்..

அதிகாரி : ஐம்.. நான் கான்பிடண்ட்…. உங்க கிட்டே குடுக்கிற வர்க் எதுவுமே சரியான டைம்ல முடியறதில்லை… ஐம் டிசப்பாயிண்ட்டட்.

காட்சி 6

( மகள் & கஸ்டமர் சைட் )

மகள் : சார்…. திஸ் ஈஸ் த டெலிவரி மாடல் சார்… ஹோப் யூ ஆர் ஃபைன். வித் இட்…

கஸ்டமர் : எஸ்.. வெரி குட்.. வெரிகுட்..

மகள் : எங்க கம்பெனி டெலிவரில எக்ஸ்பர்ட்… இதே மாடல்ல நாங்க ஏ ஐ/ எம் எல் கூட இம்பிளிமெண்ட் பண்ணியிருக்கோம்…

கஸ்டமர் : வாவ்.. தட்ஸ் கிரேட். அப்போ இந்த ஆர்கிடெக்சர்ல அதை இன்க்ளூட் பண்ணுங்க… ஆட்டோமேஷன் வித் ஏஐ.. அதான் பெட்டர்..

மகள் : சார்.. அது வந்து கொஞ்சம் காம்ப்ளிகேட்டட்

கஸ்டமர் : நோ..நோ.. ஐ வாண்ட் தேட். அதான் ஒரு டிபரன்ஷியேட்டர்… உங்க பாஸ் கிட்டே நான் சொல்றேன்… ஐ வில் மெயில் ஹிம்.. சொன்ன டைம்லைன், காஸ்ட்ல அதையும் இன்க்ளூட் பண்ணணும்.

காட்சி 7

( மாலையின் மேலதிகாரி போன் பண்ணுகிறார் )

மேலதிகாரி : என்ன பண்ணிட்டு வந்திருக்கீங்க ஸ்நோலின்… நான் பிரசண்ட் பண்ண சொன்னதை. மட்டும் பிரசண்ட் பண்ணாம எக்ஸ்றா பிட் எல்லாம் போட்டிருக்கீங்க.

மகள் : சார், ஒரு வேல்யூ ஆடட் ஆ இருக்கட்டும்ன்னு தான்

மேலதிகாரி : வாட்.. வேல்யூ.. இப்போ நமக்கு எவ்ளோ பெரிய நஷ்டம் தெரியுமா ? மார்ஜின் ஹெவியா அடி வாங்கும். லாபம் போச்சு…. ஆள் புடிக்கணும்… காஸ்ட் எகிறும்.

மகள் : ஓ.. ஐம் சாரி சார்..

மேலதிகாரி : என்ன சாரி… இந்த வருஷம் உங்களுக்கு நோ போனஸ், நோ இன்கிரிமெண்ட்…

மகள் : சார்…

மேலதிகாரி : சொன்னதை மட்டும் செய்ய கத்துக்கோங்க… இது உங்க நாவல் இல்ல, உங்க விருப்பத்துக்கு எதை வேணும்ன்னாலும் எழுத.

மகள் : சார்… ஐம்… சாரி…

மேலதிகாரி : நாளைக்கு காலைல என்னை ஆபீஸ்ல வந்து மீட் பண்ணுங்க… வில் கிவ் யூ எ மெமோ.

காட்சி 8

( மகள் சோகமாய் & அம்மா + மகன் )

அம்மா : என்னம்மா, ரொம்ப டல்லா இருக்கே ?

மகள் : நல்லதுக்கு செய்ற எல்லாமே தப்பா போவுது.. இப்பல்லாம், நல்லதுக்கே காலமில்லை

அம்மா : புரியும்படியா சொல்லு…

மகள் : கம்பெனியைப் பற்றி நாலு வார்த்தை நல்லதா பேசினதுல மேனேஜர் கடுப்பாயிட்டாரு..

அம்மா : நல்லதா பேசினா ஏன் கடுப்பாகணும் ?

மகள் : அவரு சொன்னதை விட கொஞ்சம் எக்ஸ்றா பேசிட்டேன்.. அது தப்பாயிடுச்சு

அம்மா : சொன்னதை விட அதிகமா ஏன் பேசினே ? அப்படி என்ன தப்பாச்சு ?

மகள் : புதிய டெக்னாலஜி விஷயம் எல்லாம் இருக்கு ந்னு கிளையண்ட் கிட்டே சொன்னேன். அப்போ அதெல்லாம் எங்களுக்கு குடுங்கன்னு அவங்க சொன்னாங்க. அது நமக்கு நஷ்டம்ன்னு மேனேஜர் கடுப்பாயிட்டாரு. போனஸ், ஹைக் ஏதும் தரமாட்டேன்னு சொல்லிட்டாரு…

அம்மா : உன் கிட்டே சின்ன வயசுல இருந்தே சொல்றேன்… அளவுக்கு அதிகமா பேசக் கூடாதுன்னு…. ஒபீடியன்ஸ் ங்கறது ஓவரா பேசறதில்லை … பேச வேண்டியதை மட்டும் பேசறதுன்னு…

மகள் : கம்பெனிக்கு நல்ல பெயர் கிடைக்கட்டும்ன்னு தாம்மா நான் பண்ணினேன்

அம்மா : கீழ்ப்படிதல்ங்கறது சொன்னதை அப்படியே செய்றது தான். நமக்கு அதை விட அதிகம் தெரியும்ன்னு அதிகப்பிரசிங்கித்தனம் பண்றதில்லை. உதாரணமா நோவா கிட்டே கடவுள் பேழை செய்யச் சொன்னப்போ கடவுள் சொன்னதை அப்படியே செஞ்சாரு. தனக்கு எல்லாம் தெரியும்ன்னு நாலு ஃப்ரஞ்ச் விண்டோவும், எட்டு பால்கனியும் எக்ஸ்றா வெச்சு கட்டல.

மகன் : நல்லா சொல்லுங்கம்மா… இவ குடுத்த காசுக்கு மேலயே நடிப்பா

அம்மா : அவளை மட்டும் ஏன் சொல்றே…. நீ குடுக்கிற காசுக்கே நடிக்கிறதில்லையே. எப்பவும் கீழ்ப்படியறதே இல்லை. அது ரொம்ப ரொம்ப தப்பு. கீழ்ப்படியாம இருக்கிறதும், சொல்றதுக்கு அதிகமா பண்றதும் – இரண்டுமே தப்பு தான்.

மகன் : என்ன திட்டு ரூட் மாறி இந்தப் பக்கம் வருது ?

அம்மா : கடவுளோட கட்டளைக்கு கீழ்ப்படியாத இஸ்ரேல் மக்களுக்கு என்ன நடந்துதுன்னு நீ படிச்சதில்லையா ? கீழ்ப்படியாதவன் சொர்க்கத்துக்குள்ள போகவே முடியாது. கீழ்ப்படியாதவன் அழிவான் ந்னு பைபிள் சொல்லுது.

மகள் : கீழ்ப்படியாமை தப்பு தான்மா…. ஐம் டிரையிங் பட்….

அம்மா : கீழ்ப்படியாமையைப் போல, சொல்லாததை செய்றதும் தப்பு தான். ஆதாம் கிட்டே கடவுள் பழத்தை உண்ணக் கூடாதுன்னு சொன்னாரு. தொடவும் கூடாதுன்னு மனுஷன் அதுல கூட்டிச் சேர்த்தான்… அது தப்பு… மோசே கிட்டே மலையில பேசுன்னு சொல்வாரு கடவுள்.. ஆனா அவரு அடிச்சாரு…. அதுவும் தப்பு. கடவுள் சொல்றதுக்கு மேல செய்யவே கூடாது. அதே நேரம் கடவுள் சொல்றதை செய்யாம இருக்கவும் கூடாது.

மகள் : ம்ம்.. புரியுதும்மா…..

அம்மா : கீழ்ப்படியாத பிள்ளைகள் மேல் கடவுளோட சினம் வரும் தம்பி.. ரொம்ப கவனமா இருக்கணும்…. சின்னச் சின்ன விஷயத்துல கீழ்ப்படியாதவங்களால பெரிய பெரிய விஷயங்கள்ல கீழ்ப்படியவே முடியாது.

மகன் : ம்ம்ம் உண்மை தான்ம்மா.. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் ந்னு சொல்றது உண்மை தான்.

அம்மா : ஆமா.. யோசிச்சு பாருங்க.. சின்ன வயசுல செய்த விஷயங்கள் தான் அப்படியே தொடருது…. மேஷ்மில்லோ எஃபக்ட் மாதிரி… ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது. ஆனா, கடவுள் நினைச்சா எல்லாத்தையும் மாற்ற முடியும். தப்பை உணர்ந்து கடவுள் கிட்டே மன்னிப்பு கேளுங்க. கடவுளோட வார்த்தையை அப்படியே கீழ்ப்படியுங்க. அப்படியே கீழ்ப்படியறதுன்னா எப்படின்னு தெரியுமா ?

மகன் : ம்ம்.. வரைஞ்ச கோட்டை தாண்டாத கடல் மாதிரி..

மகள் : எல்லைக் கோட்டை மீறாத கோள்கள் மாதிரி, அப்படித் தானே

அம்மா : எஸ்.. வெரிகுட்…

மகள் : சரிம்மா, இனிமே அப்படியே பண்றேன்…

மகன் : நானும் கண்டிப்பா இனிமே அப்படியே பண்றேன்ம்மா

காட்சி 9

( மகன் மகள் செபிக்கிறார்கள், கீழ்ப்படிய முடிவெடுக்கிறார்கள் )

இயேசுவே.. இனிமே உங்க வார்த்தைகளை நீட்டாமலும், குறுக்காமலும் அப்படியே கீழ்ப்படிவேன்…

*

கீழ்ப்படிதல் ஆன்மிக வாழ்க்கையின் அடிப்படைத் தேவை. சிலர் கீழ்ப்படிவதே இல்லை, சிலரோ அதிகப்பிரசங்கித் தனமாய் தேவைக்கு அதிகமாகவே செய்து சிக்கலில் சிக்கிக் கொள்வார்கள். அப்படிப்பட்ட இரண்டு பேரோட வாழ்க்கை தான் இது….

நீ.. நான்..அவன்..

Image result for hindu christian muslim

 

 

மதங்களின்
தீப்பந்தங்களில்
தேனீக்களை தீய்க்கும்
தலைமுறைத் தவறுகள்
தொடரத்தான் வேண்டுமா ?

உனக்கும் எனக்கும்
சில நம்பிக்கைகள்.
உன்
சம்பிரதாயக் கிளைகளின்
வண்ணங்கள் வேறுதான்
ஆனாலும் நம்
ஆணி வேர் மையங்கள்
அன்பெனும் ஒன்று தானே.

நீ
பூணூல் போடுகிறாய்,
நான்
ஞானஸ்நானம் பெறுகிறேன்,
அவன்
விருத்தசேதனம் செய்கிறான்
இதில்
ஆயுதப் போதனை
எந்தப்பக்கத்தில் அச்சானது ?

அருவிகள்
எப்போதுமே மலையேறிச்
செல்வதில்லை,
அது கடல் நோக்கிய பயணம்.
நீயும் நானும்
நதியின் மீன்கள் தானே.
பின் ஏன்
தூண்டில் தயாரிக்க துடிக்கிறாய் ?

அத்தனை நதிகளையும்
கடல்
மார்போடணைத்து
தாலாட்டவில்லையா ?

உன்
கைக்கடிகாரமும்,
என் கைக்கடிகாரமும்
ஒரே சீராய் தானே ஓடுகின்றன
நாம் மட்டும் ஏன்
மூச்சிரைத்துக் கொண்டே
முன்னேறுகிறோம்.

உன் நம்பிக்கைகளுக்கு
நீ நீரூற்று,
என் கிளைகளில்
நான் ஊஞ்சல் ஆடுகிறேன்,
அவன் வாசலில்
அவன் தோரணம் கட்டட்டும்,
விட்டு விடு
கண்ணி வெடிகளின் கழுத்தில்
கால் மிதிக்கும்
அழுத்தம் இனி வேண்டாமே.

நோய் அண்டாத மதம்
இன்று வரை
பிறக்கவில்லை.

எந்த மருந்தும்,
மதத்தின்
புட்டிகளில் பயிராவதில்லை.

நம்பிக்கைகளை
வளர விடு,
அதில் அடுத்தவனைப்
புதைப்பதை மட்டும்
வெட்டி விடு.

அவரவர் வேலை அவரவற்கு.

Image result for working on computer

 

இந்த
கணிப்பொறி வேலை
பாடாய்ப் படுத்துகிறது.

எழுத்துக்களின் மேல்
ஓடி ஓடி
கை விரல்களுக்குக்
கால் வலிக்கிறது.

எத்தனை நேரம் தான்
வெளிச்ச முகம் பார்ப்பது ?
கண்களுக்குள் பார்வை கொஞ்சம்
பழுதடையும் வாசனை.

உட்கார்ந்து உட்கார்ந்தே
என்
முதுகெலும்புக்கும்
முதுகு வலி.

எல்லாம் எழுதியபின்
அவ்வப்போது
தொலைந்துபோகும் மின்சாரம்,
எரிச்சலின் உச்சிக்கு
என்னை எறியும்.

வேண்டுமென்றே
பிடிவாதம் பிடிக்கும்
சில சில்லறை வேலைகள்.

நிம்மதியை
நறுக்குவதற்காகவே
கத்தியோடு அலையும் வைரஸ்கள்.

அவ்வப்போது எட்டிப்பார்த்து
நிலமை கேட்கும் மேலதிகாரி.
முரண்டுபிடித்து ஸ்தம்பிக்கும்
என் கணினி.
தேனீர் தேடச்சொல்லும் தளர்வு.

அப்பப்பா.
இந்த கணிப்பொறி வேலை
பாடாய்ப் படுத்துகிறது.

சோர்வில் சுற்றப்பட்டு
மாலையில்,
வீடுவந்ததும்
மனைவி சொல்வாள்

“உங்களுக்கென்ன
உக்காந்து பாக்கிற உத்யோகம்”

 

உன் ஒரு பார்வைக்காய்…

Related image

உன்னைக் காத்து
கண்களுக்குள் நான்
ஏற்றி வைத்த
மெழுகுவர்த்திகள்
கண்ணீ­ராய் வழிகின்றன.

உன் குரலுக்காகவே
கைத்தடி ஊன்றிக்
காத்திருக்கின்றன
என் காதுகள்.

ஒரே ஒரு முறை
நீ
பார்வை பூசுவாய் என
பார்த்திருக்கிறது
மொட்டுக்குள்
பாறை இறக்கிய பாரமாய்
என் இதயம்.

நீ,
நிராகரிக்க மாட்டாய் எனும்
நம்பிக்கையில் தான்
விண்ணப்பங்களை அனுப்புகிறேன்.
அவை
சேர்ந்து விட்டதா எனும்
சேதியே எனைச் சேரவில்லை

இரவின் நீளலிலும்,
பகலின்
தொடர் பயணத்திலும்
என்
நம்பிக்கைப் பள்ளங்கள்
உலர மறுத்து ஊறுகின்றன.

எப்போதெனக்கு வரமருள்வாய்
பிரபஞ்சத்தின்
பரம் பொருளே…

என் தவறால் தவறியவை.

Image result for two friends break up

நான்
கேட்டிருந்திருக்க வேண்டும்
மன்னிப்பு.

நீ கேட்டால் என்னவாம் ?
என்று தான்
நேற்று வரை இருந்தேன்.

நீயும்
அப்படித் தான் இருந்தாய்
என்பதை
காலம் உணர்த்தியபோது,

மன்னிப்பு
தோல்வியல்ல
ஒருவித வெற்றி என்பதை
காயம் உணர்த்திய போது,

நீயும் நானும் உதிர்த்த
மௌனம்
பாறையாய் இறுகி
இடையே சில
வருடங்களை இறக்கி
நம்மை
இரு பக்கமாய் நிறுத்தி இருந்தது.

கற்களைப் பொறுக்க
மனமற்றிருந்த இதயம்,
இப்போது
பாறைகளைப் புரட்ட
வலுவின்றிக் கிடக்கிறது.

நினைவுகள்
கட்டி அணைத்துக் கொள்ள
மெய்
தனித் தனியே
மெய் வருத்தி நடக்கிறது.

ஓர்
மன்னிப்பின்
தண்டனையாய்.

0

சிலுவையில் ஓர் சிவப்புப் புறா

Image result for church mass

என்ன செய்வது ?
இங்கே,
அர்த்தங்களைவிட
அர்த்தப்படுத்தப் பட்டவை தான்
அதிகமாய்
விலை போகின்றன.

இரவல் கண்­ணீரை
கண்களுக்கு வழங்கி
மரச் சிலுவைமுன் மண்டியிட்டுக் கிடக்கும்,
மதக்கூட்டம்.
மதிப்பிழந்த மதிப்பீடுகளை
மனசுக்குள் உயிர்ப்பித்துக் கொண்டு.

எனக்குப்
புனிதநூல்கள் பிடிக்கும்
கடவுளர்களையும் பிடிக்கும்
அதற்குப் பிறகு பிடிப்பதெல்லாம்
மதச் சாயம் வடியாத
மனித முகங்கள் தான்.

சிலுவையில்
இரண்டு கரம் விரித்த இயேசு
சிலுவை நிழலில்
இரு கரத்தையும் இறுக்கக் கட்டி
மனசை
விரிக்க மறுக்கும் மதக்கூட்டம்.

வலக்கரம் செய்வது
இடக்கரம் அறிய வேண்டாம்,
ஜெபிக்கும் போது
தனிமை போதும்,
விளக்கைக் கொளுத்தி
மரக்காலுக்குள் மறைக்காதீர்கள்,
இவையெல்லாம்
இன்னும்
விவிலியத்தின் வார்த்தைகளில் மட்டும் தான்
வாழ்க்கைக்கு வரவில்லை.

கழுத்துச் சங்கிலியில்
தங்கச் சிலுவை சுமப்பவர்களுக்கு
மரச் சிலுவையின்
பாரம் புரிவதில்லை.

மத விற்பன்னர்கள்
புனித நூல்களைப் படிப்பதைவிட
விற்பதையே அதிகம் விரும்புகிறார்கள்..

ஆன்மீகவாதிகளோ
ஆயிரம் பேருக்குத் தெரிவித்துத் தான்
ஆறு பேருக்கு
அன்னதானம் செய்கிறார்கள்.

பாவம் பரமன்,
இன்னும் சிலுவையில்
பாவிகளை மன்னிக்கச் சொல்லி
தொடர்ந்து மனுச்செய்கிறார்.
மதமோ
பாவிகளை உற்பத்தி செய்துகொண்டிருக்கிறது.

மனிதமும், மன்னிப்பும்
ஆலயத்துள் பெறப்பட்டு
ஆலயத்துக்குள் விவாதிக்கப்பட்டு
ஆலயத்துக்குளே விட்டுச் செல்லப் படுகிறது.

காய்கள் கனியாகும்
எனும் நம்பிக்கையில்
சிலுவை மட்டும் இன்னும் காயவில்லை.

கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்,
இன்னும்
சிலுவை கதறிக் கொண்டிருக்கிறது
காதுகளைக் கழற்றிவிட்ட மனிதர்களைப் பார்த்து.

விதைக்குள் ஒளிந்தவை

Related image

ஆயிரம் மைலுக்கு
அப்பால் இருந்தாலும்
என் குரல் கேட்பாய் என்று
சில நூற்றாண்டுகளுக்கு
முன் யாரேனும் சொல்லியிருந்தால்
அவனுக்குப்
பைத்தியக்காரப் பட்டம்
கிடைத்திருக்கும்.

எங்கே இருந்தாலும்
பார்த்துக் கொண்டே பேசலாம்
என
கடந்த நூற்றாண்டின்
முதல் படியில் யாரேனும்
முனகியிருந்தால்,
மனநிலை மருத்துவமனை
அவனை அனுமதித்திருக்கும்.

பூமிக்கு வெளியே போய்
பூமியை
படமெடுப்பேன் என்றவனை
ஈசல் கூட சீண்டியிருக்காது.

நிரூபிக்கப் பட்டபின்பே
நம்புவேன் என
பிடிவாதம் பிடிக்கும் பழக்கம்,
கடிவாளம் போட்டாலும்
நமக்குள் அடங்கி விடாது.

நேற்றைய கேலிகளில்
விளைந்திருக்கின்றன
இன்றைய
வியப்பின் விரல் நுனிகள்.

இன்றைய கேலிப் பேச்சுகள்
நாளை சில
ஆச்சரியங்களை
உச்சரிக்கும்.

புரியாவிட்டாலும் நம்பும்
நிலையில் நானும் நீயும்.

யாரோ சிரிக்கிறார்கள்,
கடவுள் தான்
மனிதனைப் படைத்தாராமே ?.

0

 

பாவம்…

Image result for sin

முண்டியடிக்கும்
குழப்பக் கண்களோடு
கேட்டேன்….
பாவம் என்றால் என்ன ?

சட்டத்தின் முதுகெலும்புடைத்து
சமுதாயத்தைக் குழப்பி
சச்சரவு செய்வது பாவம்
என்றான்
அரசு ஊழிய நண்பன்.

ஆண்டவனின்
வார்த்தைகளை வாழாமல்,
கேட்டுவிட்டுக் கடப்பவன்
பாவி என்றார்
மரியாதைக்குரிய மதகுரு ஒருவர்.

கத்தி வீசாமல்
பிறர் மனம் காயம் செய்வதும்
வார்த்தை வாளெடுத்து
இதயம் சொருகுவதும் பாவம்,
என்றாள் குடும்பத் தலைவி ஒருத்தி.

பாவமில்லா இதயங்களை
பாவத்துக்குள் விழத்தாட்டுவது பாவம்,
படித்ததைச் சொன்னான்
பெரியவன் ஒருவன்.

நீ
என்ற ஒன்றே இல்லாத போது
பாவம் என்பதெல்லாம் இல்லை.
பார்வையில் தான் பழுது.
உன்னைச் சுற்றி இருப்பதெல்லாம்
நீர்க்குமிழிகளின் நிரந்தர அரங்கம்.
மேதாவித்தன குழப்பவாதி சொன்னான்.

உன் பார்வையில் தவறாய் தெரிவது
இன்னொரு பார்வையில்
பழுதாயில்லை என்றால்
பாவம் என்பதை எப்படி
பட்டியல் படுத்துவாய் ?
கேள்விக்குக் கேள்வியை பதிலாய் சொன்னார்
பேராசிரியர் ஒருவர்.

எந்தப் பதிலும் பதிலாய் முடியாமல்
கேள்வியோடு கேள்விகள்
கேள்விகள் தொடுக்க,
பதிலாய் நான் படுக்கையில் விழுந்தேன்…

மனசாட்சியின் தூங்காக் கண்கள்
உங்களை
தூங்கவிடாமல் செய்கிறதென்றால்,
நீங்கள் செய்தது பாவம் என்றாள்
கிசுகிசுப்பாய்
காதருகே என் மனைவி.
திரும்பிப் படுத்தேன்.

கனவுகளோடு சிரித்துப் பேசி
தூங்கிக் கொண்டிருந்தது
என் குழந்தை.

ஒரு தேவாலயம்

Image result for church mass

ஆலயத்தில் பெரும்பாலும்
ஆட்கள்
குறைவாகத் தான் இருப்பார்கள்.

பலர்
வெளிப்பக்கப் படிக்கட்டுகளில்
இளைப்பாறிக் கிடப்பார்கள்.

காற்றில் பறக்கும்
காகிதங்களை கவனித்துக் கொண்டோ,
விளையாடித் திரியும்
அணில்களை ஆராய்ந்து கொண்டோ,
சிறு சிறு
கற்களை எண்ணிக் கொண்டோ
வெளிப்பக்க மணல் திடலில்
சிதறிக் கிடப்பவர்களே அதிகம்.

நலம் விசாரிப்புகளுக்காகவும்,
சந்திப்புகளுக்காகவும்
தொடரும்
பலருடைய தேவாலயப் பயணம்.

சிலருக்கு ஞாயிறு காலை
திருப்பலி
கட்டாயமாகிப் போன
ஒரு வலி.

கடன் பாக்கி கேட்கவும்,
பொருட்கள் கை மாற்றவும் கூட
அந்த
ஆலய வளாகம் அவசியமானது
அனேகருக்கு.

சுவரில் கிறுக்கும்
சிறுவர்களை
மிரட்டி விரட்டி விட்டு
மீண்டும் விட்ட இடத்திலிருந்து
கதை தொடர்கிறார்கள்
சுவரில் சாய்ந்திருக்கும் பெண்கள்.

ஏலக் கணக்கை
எழுதிக் கொண்டிருக்கிறார் ஒருவர்,
அடுத்த வார அறிவிப்புகளை
ஆராய்ந்து கொண்டிருக்கிறார்
இன்னொருவர்.

இத்துடன் இத்திருப்பலி
நிறைவுற்றது என்கிறார்
பாதிரியார்.

வாரங்கள் தொடர்கின்றன,
அர்த்தங்களற்ற அடையாளங்களோடு.

 

மதம்

 

Image result for religion

என் மதத்தை
நான்
தாக்கிப் பேசினால்,
மதச்சார்பற்றவன் என்கிறீர்கள்,

உன்
மதத்தைத் தாக்கினால்
மத வெறியன் என்கிறீர்கள்,

இரண்டையுமே
எதிர்த்துப் பேசினால்
நெற்றிக்கு நாத்திக நாமம்
பூசுகிறீர்கள்.

என்ன தான் செய்வது ?

மாற்றுக் கருத்துகளை
மறைத்து வைத்துச்
சிரித்தால் மட்டுமே
என்னை
நானாய்
ஏற்றுக் கொள்வீர்கள்
போலிருக்கிறதே.