
வரலாற்றில் சில தலைவர்களும், சில மனிதர்களும் மாபெரும் வில்லன்களாக உருவெடுப்பதுண்டு. ஒரு குழுவுக்கு ஹீரோவாக இருப்பவர்கள், இன்னொரு குழுவுக்கு வில்லனாக மாறிவிடுகிறார்கள். இன்னும் சிலர் எல்லோருக்குமே வில்லன்கள் தான். இப்படிப்பட்ட வில்லன்களில் ஒரு டாப் 10 பார்வை இந்த வாரம்.
- இடி அமீன்
ரொம்பவே அராஜகம் செய்பவர்களுக்கு நாம் இடும் பட்டப் பெயர் இடி அமீன்! 1951ம் ஆண்டு உகாண்டாவின் குத்துச் சண்டைச் சாம்பியனானவர், 1960 வரை தொடர்ந்து சாம்பியனாகவே இருந்தார்.
1925ல் பிறந்த இவர், 1971 முதல் 1979 வரையிலான காலகட்டத்தில் உகாண்டா பிரதமராக இருந்தார். அடக்குமுறை, சர்வாதிகாரம், மனித உரிமை மீறல் என நீங்கள் அதை நினைக்கிறீர்களோ எதையும் விட்டு வைக்காமல் செய்தவர் இவர்.
இவர் குறைந்த பட்சம் ஒரு 5 இலட்சம் பேரையாவது கொன்றிருப்பார் என்பது பொதுவாக ஒத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. இவர் மனிதர்களைத் தின்னும் அகோரி டைப் ஆசாமி. இவருடைய ஒரு மனைவியை இவரே தின்று விட்டார் என்றெல்லாம் திடுக் கதைகள் உலவுகின்றன.
வெகு சமீபத்தில் 2003ம் ஆண்டு சவுதி அரேபியாவில் வைத்து இவர் மரணமடைந்தார்,. இடி அமீன் ஹிட்லரின் தீவிர ரசிகராம் !. ஜாடிக்கேத்த மூடி !
- இரண்டாம் லியோபோல்ட்
இருபதாம் நூற்றாண்டின் கொடுமையான கொலையாளிகளில் ஒருவர் இவர். தனது ஆட்சிக் காலத்தில் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட காங்கோலியன் இன மக்களைக் கொன்று குவித்தவர் இவர்.
அவருடைய தந்தை முதலாம் லியோபோல்ட் மண்டையைப் போட்டபின் 1865ல் பெல்ஜியம் மன்னராகி தனது கடைசி காலம் வரை அதே நிலையில் வாழ்ந்தார். இங்கிலாந்தின் விக்டோரியா மகாராணியின் சொந்தக்காரன் என்பது கொசுறு செய்தி.
மனித உரிமை மீறல்கள் பற்றியெல்லாம் சற்றும் அலட்டிக் கொள்ளாத சுபாவம் இவருக்கு. மக்களுடைய கைகளையும் கால்களையும் வெட்டுவதை ஏதோ நகம் வெட்டுவது போலச் செய்தார். 1885க்கும் 1908 க்கும் இடையேயான இவரது காலத்தில் கொல்லப்பட்டவர்கள் சுமார் 10 இலட்சம் காங்கோலியன்கள் .
ஒருவழியாக, 1909 டிசம்பர் 17ம் தியதி இறந்து போனார். அப்பாடா !
- மாக்ஸ்மில்லன் ராபெஸ்பியர்
நாட்டுக்காக படுகொலை செய்வதெல்லாம் புண்ணியம் எனும் கொள்கையுடையவர். பல்லாயிரம் பேருடைய சாவுக்குக் காரணமாகி மனுக்குலத்தின் வில்லன்களில் ஒருவராக பார்க்கப்படுகிறார்.
1978 மேய் மாதம் 6ம் தியதி பிறந்தவர் மேக்ஸ்மில்லன் ராபெச்பியர். மன்னன் பதினாறாம் லூயியைக் கொல்லவேண்டும் எனும் கடுமையான பிரச்சாரத்தினால் இவருடைய பெயர் பிரபலமடைந்தது. தப்பி ஓட முயன்ற மன்னன் பிடிபட்டு பின்னர் சாவுக்கும் கையளிக்கப்பட்டான்.
அரசியல் வாழ்க்கைக்குள் நுழைந்த இவருடைய உண்மைக் குணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது பிரஞ்சுப் புரட்சி. புரட்சி முடிவுக்கு வந்த பத்து மாதங்களில் மட்டும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,000 என்கிறது வரலாறு. இவருடைய தலைமையில் அமைந்த புரட்சிப் படையினரால் கொல்லப்பட்டவர்கள் இவர்கள்.
மன்னிப்பைத் தூக்கி தூர எறி, ஆயுதத்தை கைகளில் ஏந்து என்பது இவருடைய மாபெரும் முழக்கம். 1794ம் ஆண்டு ஜூலை 28 ம் தேதி கொல்லப்பட்டார்.
- மூன்றாம் விலாட்
குரூரத்தின் உச்சமாய் விளங்கிய ரொமானியாவின் மூன்றாம் விலாட் டுக்கு டிராகுலா என்று பெயர் உண்டு. ரொமானியாவின் வாலாசியாவிலுள்ள மன்னர் இவர். 1431ல் பிறந்து எல்லா கொடுமைகளையும் செய்துவிட்டு 1476ல் உயிரையும் விட்டார்.
இவருடைய ஆட்சிக் காலத்தில் கொல்லப்பட்டவர்கள் நாற்பதாயிரம் முதல் ஒரு இலட்சம் பேர் வரை. எதிரிகளை சித்திரவதை செய்து ரசிக்கும் குரூரமான சைக்கோ மனம் இவருக்கு. கைகளையும் கால்களையும் கூர்மையில்லாத ஆயுதங்களால் வெட்டுவது, உயிருடன் தோலை உரித்து எறிவது, எரியும் நெருப்பில் எறிவது, தலையில் நீளமான ஆணிகளை அடிப்பது, இரண்டு கால்களையும் இரண்டு குதிரைகளில் கட்டி எதிரியைப் பிய்ப்பது, கொதிக்கும் எண்ணையில் போட்டு பொரிப்பது, கண்களை நோண்டி எடுப்பது என அத்தனை கொடுமைகளையும் செய்தார் இவர்.
கொல்வதற்காகவே ஏதேனும் புதுப் புது ஆயுதங்களையும், வழிமுறைகளையும் கண்டுபிடித்துக் கொண்டிருந்தார் இவர். பத்தாயிரம், முப்பதாயிரம் என இவன் கொத்துக் கொத்தாகக் கொன்று குவித்த வரலாறு குருதி வாசம் வீசுகிறது
ஒரு வழியாக 1976ல் துருக்கியருக்கு எதிரான போரில் இவர் கொல்லப்பட்டார்.
- அடால்ஃப் ஹிட்லர்
உலக வில்லன்களில் எல்லோருக்கும் தெரிந்தவர் ஹிட்லர். இவரைப் பற்றிச் சொல்ல எதுவுமே இல்லை எனுமளவுக்கு வரலாறு இவரை அலசிக் காயப் போட்டு விட்டது.
ஏறக்குறைய ஒன்றே முக்கால் கோடி பேருடைய சாவுக்குக் காரணமாய் இருக்கிறது ஹிட்லரின் பெயர். அதிலும் யூதர்களுக்குப் பிடிக்காத பெயர்களின் முதலிடம் ஹிட்லருக்குத் தான். ஹிட்லருடைய “ஹிட்” லிஸ்டில் எப்போதுமே யூதர்கள் உண்டு. இவர் கொன்ற யூதர்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் அறுபது இலட்சம்.
1889ம் ஆண்டு ஏப்ரல் 20ல் ஆஸ்திரியாவில் பிறந்த ஜெர்மன் அரசியல்வாதி ஹிட்லர்.. 1920ல் நாசி படையில் சேர்ந்து 1921ல் அதன் தலைவரானான். 1933 முதல் 1945 வரை ஜெர்மனியை ஆண்டார்.
1945ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தியதி ஹிட்லர் தன் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டு செத்துப் போனார். துப்பாக்கியால் சுட்டால் எங்கே செத்துப் போகமாட்டோமோ எனும் பயத்தில் வாயில் சயனைடைப் போட்டு, கூடவே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டும் செத்துப் போனார் என்கிறது இவருடைய வரலாறு.
- ஜோசப் ஸ்டாலின்
சிலருக்கு ஸ்டாலின் ஒரு ஹீரோ. பலருக்கு ஸ்டாலின் ஒரு வில்லன். இவர் ஹீரோ ஆகக் காரணம் உலகின் பின்னணியில் இருந்த ரஷ்யாவை முன்னணி நாடாகக் கொண்டு வந்த பெருமை இவருக்கு உண்டு. ஆனால் அதற்கு அவர் அளித்த விலை பல இலட்சம் அப்பாவிகளின் உயிர் என்பது தான் அவரை வில்லனாகவும் பார்க்க வைக்கிறது.
ஸ்டாலினின் இளம் வயது விருப்பம் சாமியாராய் போவது என்பது சுவாரஸ்யமான தகவல். 1922 முதல் 1953 வரை சோவியத் யூனியனின் கம்யூனிச கட்சியின் ஜெனரல் செக்கரட்டரி அவர் தான். 1924ம் ஆண்டு லெனின் மறைந்ததும் சோவியத் யூனியனின் தலைவரானார்.
இவருடைய காலத்தில் எதிரிகள் எனும் பெயரில் கொல்லப்பட்டவர்கள் பல இலட்சம் பேர். போலந்து மக்களை மட்டும் கணக்கில் கொண்டாலே சுமார் இரண்டரை இலட்சம் வரும் என்கிறது போலந்து நாட்டு வரலாற்றுக் குறிப்பு ஒன்று.
கொள்கைக்காகக் கொலை செய்வது தவறில்லை எனும் கொள்கை கொண்டவர் என ஸ்டாலினைக் குறித்த தகவல்கள் பன்முகம் கொண்டவை. 1953ம் ஆண்டு மார்ச் 5ம் தேதி தனது 74வது வயதில் இறந்தார்.
- ஹிரோகிடோ
ஜப்பானின் மன்னனாக 1926ல் முடிசூட்டப்பட்ட இவருடைய பல முடிவுகள் உலக வரலாற்றிலிருந்து அழிக்க முடியாதவை. சீனாவுடனான போரைத் தீவிரமாக ஆதரித்தவர் இவர். இரண்டாம் உலகப்போருக்கு தீ மூட்டி விட்ட பியர்ல் ஹார்பர் தாக்குதலுக்கு அனுமதி வழங்கியவரும் இவர் தான். ஜப்பானில் அணுகுண்டு போடப்பட்ட உலகத் துயரத்துக்கு ஒருவகையில் இவரும் பொறுப்பாளி ! என இவரைக் குறித்த தகவல்கள் வரலாற்றுச் சிறப்பு மிக்கவை.
1937ம் ஆண்டு ஜப்பான் ராணுவ வீரர்கள் நடத்திய அட்டகாசம் இவரை வில்லாதி வில்லனாக்கியது. ஆறு வார காலங்கள் நீடித்த இந்த ராணுவக் கொடுமை “ரேப் ஆஃப் நான்கிங்” என்று அழைக்கப்படுகிறது.
இராணுவ வீரர்கள் எல்லோரும் சாவி கொடுத்த வில்லன் ரோபோக்களாகிப் போனார்கள். கொலை, கொள்ளை, கற்பழிப்பு என எல்லா அட்டகாசங்களையும் ராணுவம் செய்தது. குழந்தைகள், பெண்கள் என குவியல் குவியலாக மக்கள் கொல்லப்பட்டனர். எப்படியும் ஒன்றரை இலட்சம் முதல் 3 இலட்சம் பேர் வரை இறந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.
- போல் போட்
1928 ஆண்டு மேய் மாதம் கம்போடியத் தலைநகர் பக்கத்திலுள்ள ஒரு கிராமத்தில் பிறந்தார்.
போல் போட் 1953ல் கம்பூச்சியன் மக்கள் புரட்சி இயக்கத்தில் சேர்ந்தார். 1975ல் கம்போடியா போல் போட்டின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
அப்போது ஆரம்பித்தது கம்போடியர்களின் கஷ்ட காலம். . முந்தைய அரசு தொடர்பான பணியில் இருந்த அனைவருமே ஈவு இரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டனர். சுமார் பதினைந்து இலட்சம் மக்கள் பசியினாலும், நோயினாலும் செத்துப் போனார்கள்.
இவர் ஆரம்பித்த S- 21 எனும் சித்திரவதைக் கூடம் பஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பாகுபாடின்றி சுமார் 20000 பேரை சித்திரவதை செய்து கொலை செய்தது
இப்படி கொடுமையின் உச்சமாய் இருந்த போல் போட் 1998ல் உயிரிழந்தார்.
9 ராஜபக்ஷே
தீவிரவாத ஒழிப்பு என ராஜபக்ஷே பெயரிட்டழைக்கும் போரை, இன அழிப்பு என தமிழினம் அழைக்கிறது. இலட்சக்கணக்கான தமிழர்களை ரசாயன ஆயுதங்களால் கொன்று குவித்ததாகவும், வெள்ளைக் கொடி காட்டி வந்தவர்களை போர் விதிகளை மீறி கொன்று குவித்ததாகவும், சின்னக் குழந்தைகளையும் பெண்களையும் கொன்று குவித்ததாகவும் இவர் மீது சர்வதேச மன்றத்தில் குற்றச்சாட்டுகள் ஏராளம்.
இவருடைய போர்க்குற்றங்களை நிரூபிக்கும் வீடியோக்கள் சர்வதேச அரங்கிலும், உலகத் தொலைக்காட்சிகளிலும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியவை. இன்றும் தமிழர்கள் மீது விஷ ஊசி உட்பட பல்வேறு வன்முறைகள் நிகழ்வதாய் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. சமீபகாலத்தில் உலக அரங்கில் நிகழ்ந்த மாபெரும் படுகொலை இது என்பது குறிப்பிடத்தக்கது.
- டோஜோ ஹிடேகி
கொடுங்கோலன் எனும் பட்டியலில் இவரது பெயருக்கு எப்போதுமே டாப் லிஸ்டில் இடம் உண்டு. 1884ல் பிறந்தவர் இவர். ஜப்பானில் ராணுவ ஜெனரலாக பதவயேற்றபின் இவர் சொல்வதெல்லாம் தான் சட்டமானது. பெயரளவுக்கு ராணுவ ஜெனரல் என்றாலும் ஒட்டு மொத்த நாட்டின் கட்டுப்பாடே இவரிடம் தான் இருந்தது.
பிரதமர், அத்தனை அமைச்சரவைகள் எல்லாமே இவருடைய சொற்படி ஆடும் இடங்களாயின. நாஸிகளோடு தொடர்பு வைத்திருந்தவர். ஹிட்லரின் கீழ் உலகமே அடிபணியும் எனும் கனவு அவருக்கு இருந்தது. ஜப்பானுக்கு வெளியே இருந்த ஆசிய நாடுகளோடு இவர் செய்த தேவையற்ற யுத்தங்களில் இறந்து போனவர்கள் சுமார் 50 இலட்சம் !
- இரண்டாம் நிக்கோலஸ்
ரஷ்யாவின் கடைசி மன்னர் இவர் தான். 1868ம் ஆண்டு பிறந்த இவர், 1894 முதல் 1917 வரை மன்னராக இருந்தார். இவருடைய செல்லப்பெயரே “பிளடி நிக்கோலஸ்” என்பதை வைத்து இவருடைய குணத்தைப் புரிந்து கொள்ளலாம். வன்முறையின் உச்சகட்டமானவர். உயிர்கள் இவருக்கு கிள்ளுக் கீரைகள் போல.
அரசியலில் தனக்கு எதிராய் முளைப்பவர்கள் யாராய் இருந்தாலும் அவர்களை கிள்ளி எறிவதில் இவருடைய கொடூரமும் ராஜ தந்திரமும் வெளிப்படும். சுமார் 33 இலட்சம் ரஷ்யர்களுடைய மரணத்துக்கு இவருடைய தவறான அணுகுமுறைகளே காரணம் என வரலாறு இவரை குற்றம்சாட்டுகிறது.
- ஹோ சி மின்.
வடக்கு வியட்னாமின் ஜனாதிபதியாக இருந்தவர். வன்முறையினாலும், மக்களிடையே அச்சத்தை உருவாக்கியதாலும் அவர் அந்த பதவியை அடைந்தார் என்கிறது வரலாறு. நாட்டை சரிசெய்கிறேன் என இவர் செய்த வேலைகளில் கொல்லப்பட்டவர்கள் சுமார் ஒரு இலட்சத்துக்கும் மேல். இதன் விளைவாக பட்டினியினால் வாடி வதங்கியவர்கள் பத்து இலட்சத்துக்கும் மேல்.
1965ம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக பதவியிலிருந்து இறங்கினார். 1969ம் ஆண்டு மரணமடைந்தார். அரசியல்வாதி என்பது இவருடைய ஒரு முகம் தான். எழுத்தாளர், பத்திரிகையாளர், கவிஞர் என இவருக்கு பல முகம் உண்டு.
Like this:
Like Loading...