ஆல்பம் : பைரவன்
இசை : சஞ்சே
பாடல் : சேவியர்
குரல் : சதீஷ் & நான்சி
தயாரிப்பு : TBB Entertaninment, London
————————————————————–
ஆண் :
கனவே
மனமே
அழகே
நினைவே
நிஜமே
வரமே
தேன் சிந்தும் நட்சத்திரம் நீ தானா
பூச் சிந்தும் முத்துச் சரம் நீ தானா
தித் திக்கும் தெள் அமுதும் நீ தானா
என்னென்பேன் ?
பெண் :
கனவே
மனமே
அழகே
நினைவே
நிஜமே
வரமே
நேசங்கள் ஒன்றை ஒன்று சேராதா ?
நீயென்னைத் தேடி வரக் கூடாதா ?
தேகத்தில் பூப்பறித்தல் ஆகாதா ?
சொல் அன்பே
பெண்
ஏ நெஞ்சே
நான் சொட்டுச் சொட்டாய் நனைந்தேனே
ஏ கண்ணே
ஏன் தொடு வானமாகிறாய்
ஆண்
ஓர் ஆசைக் கடலின் அலையாய் அலைந்தேன்
பேராசைக் கரையில் நுரையாய்க் கிடந்தேன்
தேசத்தின் திசைகள் முழுதும் அளந்தேன்
காதலில் விழுந்தேன்
பெண்
நீருக்குள் மழையாய் காதல் பொழிந்தேன்
வேருக்கும் தெரியா பூக்கள் வளர்த்தேன்
காற்றோடு காற்றாய் நானும் நடந்தேன்
காதலில் எழுந்தேன்
ஆண்
காதல் என்பது முழுநிலவு
பெண்
அதை மறைத்தல் என்பது பகல்கனவு
அது இரவல் ஒளியில் வாழுவது
ஆண்
காதல் என்பது கடலன்பே…..
ஆண்
நீரில் பிம்பம் அலைந்தாலும் – அதைக்
கையால் பிடிக்க முடியாது
பெண்
கனவில் அடைமழை பொழிந்தாலும்
நிலம் நினையாது
ஆண்
தேன் சிந்தும் நட்சத்திரம் நீ தானா
பூச் சிந்தும் முத்துச் சரம் நீ தானா
தித் திக்கும் தெள் அமுதும் நீ தானா
என்னென்பேன் ?
பெண்
நேசங்கள் ஒன்றை ஒன்று சேராதா ?
நீயென்னைத் தேடி வரக் கூடாதா ?
தேகத்தில் பூப்பறித்தல் ஆகாதா ?
சொல் அன்பே
*